Subscribe:

செவ்வாய், 15 நவம்பர், 2011

ஆட்சி மாற்றங்களும்... அரசியல் மாற்றமும்...

தமிழகம் பல்வேறு குணநலன்களை கொண்ட பல முதல்வர்களை ஆட்சிகட்டிலில் அமர்த்தி அழகு பார்த்துள்ளது...


அமரர் எம்.ஜி.ஆர் அவர்களுக்குப் பிறகு தமிழகத்தை ஆட்சி செய்த எந்த முதல்வரும் தொடர்ந்து இரண்டுமுறை வெற்றி பெற இயலவில்லை... அது ஏன்...? ஒவ்வொரு ஐந்தாண்டுகளும் கடந்த 1991 தமிழகம் ஆட்சி மாற்றத்தை


சந்த்திதே வந்துள்ளது... இதோ தற்போது இவ்வாண்டின் மத்தியில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தல் மூலமாக கடந்த ஐந்தாண்டுகள் ஆட்சியில் இருந்த கலைஞர் கருணாநிதி அவர்களின் தலைமையிலான திமுக வீழ்த்தப்பட்டுமீண்டும் செல்வி ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அதிமுக ஆட்சியில் அமர்ந்துள்ளது... திமுக அதிமுக என்று மாறி மாறி ஆட்சியில் அமரும் இவ்விரண்டு பிரதான திராவிட கட்சிகளுமே மக்களின் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் பெற தவறிவிட்டார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை...



மக்கள் மாற்றத்தை மட்டுமல்ல நல்லாட்சியையும் விரும்புகிறார்கள் என்பதை இவ்விரண்டு திராவிட கட்சிகளுமே உணரவில்லை அல்லது உணர மறுக்கிறார்கள்... அல்லது உணராததுபோல நடிக்கிறார்கள்...



அமரர் எம்ஜீஆர் மறைவிற்குப் பிறகு அவரது மனைவியார் மறைந்த ஜானகி அம்மையார் முதல்வரானார்... அவருக்கு பக்கபலமாக நாவலர் நெடுஞ்செழியன் ஆர்.எம்.வீரப்பன், கா.காளிமுத்து போன்றோர் இருந்தனர் அப்போதே அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக மேலவை உறுப்பினராக இருந்துவந்த செல்வி ஜெயலலிதா அதிமுகவை கைப்பற்ற பல முனைப்புகளைகாட்டினார் அப்போது அதிமுகவின் இளைய தலைவர்களாக தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவுடன் வலையவந்த எஸ்.திருநாவுக்கரசு மற்றும் சாத்தூர் இராமச்சந்திரன் போன்றோர் செல்வி ஜெயலலிதாவை ஆதரித்தனர்...



அதிமுக இரு வேறு பிரிவுகளாக செயல்பட ஆரம்பித்தது. தேர்தல் ஆணையம் அதிமுகவின் வெற்றி சின்னமான "இரட்டை இலை"சின்னத்தை முடக்கிவைத்தது... தொடர்ந்து நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக ஜா அணி ஜே அணி என இருபிரிவாக போட்டியிட்டது அத்தேர்தலில் ஜானகி அம்மையார் தலைமையிலான அதிமுக ஒரு இடத்தில்கூட வெற்றிபெற இயலாமல் படுதோல்வியடைந்தது... செல்வி ஜெயலலிதா தலைமையிலான அதிமுக சுமார் இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிகண்டு செல்வி ஜெயலலிதாவை மறுக்கமுடியாத அரசியல் தலைமையாக அடையாளப்படுத்தியது... கருணாநிதி அவர்களின் தலைமையிலான திமுக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆட்சியில் அமர்ந்தது கலைஞர் கருணாநிதி முதல்வரானார்...



அதன்பிறகு நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற தேர்தலின்போது பிரச்சாரதிற்க்காக தமிழகம் வந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு.இராஜீவ் காந்தி அவர்கள் படுகொலை செய்யபட்டார் அதன் தொடர்பில் சட்ட ஒழுங்கை காரணமாக கொண்டு திமுக ஆட்சி மத்தியரசால் கலைக்கப்பட்டது... பிறகு நாடாளுமன்ற தேர்தலோடு தமிழகம் சட்டமன்ற தேர்தலையும் சந்திக்ககூடிய சூழ்நிலை ஏற்பட்டது... தமிழகம் முழுமையாக வீசப்பட்ட இராஜீவ் காந்தி அவர்களுக்கான அனுதாப அலையால் செல்வி ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான ஒருங்கிணைந்த அதிமுக காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றியடைந்தது... திமுக வரலாறுகாணாத தோல்வியை தழுவியது...



மக்களின் மாற்றத்தைவிரும்பிய மனநிலையும் அமரர் இராஜீவ் காந்தி அவர்களின் மரணத்தால் ஏற்பட்ட அனுதாப அலையும் பெரும்பான்மை பலத்துடன் செல்வி ஜெயலலிதாவை முதல்வராக்கியது... ஊழல்... அராஜகம்... பழிவாங்கல்... என்பதற்கான முழு உதாரனங்களும் அம்மையார் ஆட்சியில்தான் மக்களுக்கு முழுமையாக உணர்த்தப்பட்டது... மக்களுக்கான எந்த திட்டங்களும் செயல்படுத்தபடாத நிலையில் அம்மையார் அவர்களின் தோழியின் குடும்பத்தார்களின் பிடியில் தமிழகம் முழுமையாக கொண்டு செல்லப்பட்டது... தோழியின் குடும்பதில் இருந்தே திடீரென ஒரு வளர்ப்புமகன் உதித்தார் உடணடியாக வளர்ப்புமகனுக்கு மறைந்த செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் குடும்பத்தில் இருந்து பெண் பார்த்து இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் டயானா ஆகியோரின் திருமணதிற்கு இணையாக திருமணமும் நடத்திவைக்கபட்டது. தமிழகத்தில் இருக்கும் பெரும்பான்மையான நகைகடைகளே தமிழகத்தின் வீதிகளுக்கு வீதி உலா வந்ததுபோல இருந்தது அம்மையார் அவர்களும் அவர்தம் தோழியாரும்


நடந்துவந்தது...



மக்களின் ஒருமித்த வெறுப்புணர்வும் அம்மையாரின் பக்கம் திரும்பியது அது மட்டுமில்லாது அதிமுகவை சார்ந்த அமைச்சர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை கடைபிடித்த அராஜகம் மக்களை ஆட்சி மாற்றத்திற்கான நிலைக்கு தள்ளியது. 1996 ல் தமிழகம் சட்டப்பேரவை தேர்தலை சந்தித்தது அதற்காகவே காத்திருந்தபோல மக்கள் அதிமுகவை படுதோல்வியடைய செய்து திமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினார்கள்... அத்தேர்தலில் அதிமுகவின் தலைவியாகிய அம்மையார் தான் போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலும் மக்களால் வீழ்த்தபட்டார்... அரியணை ஏறிய திமுக கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை கண்டறிந்து முன்னாள் முதல்வரான அம்மையார் ஜெயலலிதா உட்பட ஏறக்குறைய அவரது அமைச்சரவையில் அமைச்சர்களாக பாதையில் இருந்த அனைவருமே கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கபட்டனர்... அம்மையாரின் ஊழல் வழக்கில்


அவர் பயன்படுத்திய நூறு ஜோடி செருப்புகள்கூட சாட்ச்சிக்கு கொண்டுவரப்பட்டது...



பொறுப்பேற்ற திமுக அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிக்கைகள் மூலமாக மட்டுமே நடத்திகொண்டிருந்தது. அப்போதைய திமுக ஆட்சியில்தான் பல மேம்பாலங்கள் கட்டப்பட்டது சமத்துவபுர குடியமைப்புகள் கட்டப்பட்டது, உழவர் சந்தை கட்டிடங்கள் கட்டப்பட்டது...இதுதவிர மக்களுக்கான எத்தகைய அடிபடை வசதிகளும் முன்னெடுக்கப்படவில்லை. ஆக திமுக அரசும் மக்களின் வெறுப்பை சம்பாதிக்க வெகுநாட்கள் ஆகவில்லை... வழக்கம்போல திமுகவை சார்ந்தவர்களின் அடாவடித்தனமும் கட்டவில்க்கப்பட்டது. அத்தகைய சூழலை சாதகமாகி கொண்ட எதிர்கட்சிகள் மீண்டும் உயிர்பெற்றன... திமுக ஆட்சியில் நடந்துள்ள ஊழல்களை மக்கள் ஏய்ப்பு நிகழ்வுகளை மக்களுக்கு தெரியபடுத்தின... திமுக ஆட்சியில் போடப்பட்டு நடைமுறைபடுத்தபட்ட அனைத்து திட்டங்களுமே சிமென்ட்டை அடிபடையாக கொண்டு செயல்படுதபட்டவை என்பதை மக்கள் கவனிக்க துவங்கினார்கள்...அதில் நிகழ்ந்துள்ள ஊழலை மக்கள் உணர்ந்தார்கள் மீண்டுமொரு ஆட்சி மாற்றத்திற்கான மனநிலைக்கு மக்கள் இயல்பாகவே வந்தார்கள்...



2001 ல் சட்டப்பேரவை தேர்தல் மக்கள் மாற்றி வாக்களித்தார்கள் திமுக வீட்டுக்கு அனுப்பப்பட்டு மீண்டும் அதிமுக அரியணை ஏறியது... இயல்பாகவே பழிவாங்கல் நடவடிக்கைகளை பெரிதும் விரும்பும் ஜெயலலிதா அம்மையார் தன்னையும் தனது சகாக்களையும் சிறைவைத்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்து சிறையிலடைத்தார்... அப்போதைய


அதிமுக ஆட்சியிலும் மக்கள் நல பணிகள் எதுவுமே நிறைவேற்ற படவில்லை என்பதுதான் கவலைக்குறியது... இடையில் கடந்த ஆட்சியாளர்களால் அம்மையார் மீது போடப்பட்ட டான்சி வழக்கிற்காக சிலகாலம் முதல்வர் பதவியை துறந்தார் ஓ.பன்னீர் செல்வம் பொம்மை முதல்வரானார்.. ஆறுமாத காலத்திற்கு பிறகு மீண்டும் அம்மையாரே மீண்டும் முதல்வரானார்... ஆட்சிகள் மாறினாலும் மக்களின் நிலையில் எவ்விதமான மாதரமும் நிகழ்ந்துவிடவில்லை... அதே ஊழல்... அதே அராஜகம்... ஆடு,மாட்டு,கோழி பலியிட தடை சிறுபான்மை மக்களை அச்சுறுத்துவதர்க்காக மதமாற்ற தடை சட்டம், அரசு ஊழியர்களின் உரிமைகளை பறித்த எஸ்மா டெஸ்மா போன்ற அடக்குமுறைகள் தமிழுணர்வாலர்களின் மீது போடப்பட்ட பொடா சட்டம் இதுபோன்ற மக்கள் விரோதபோக்கை மட்டுமே அதிமுக ஆட்சி நிகழ்த்தியது... மீண்டுமொரு ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்பினார்கள்...



2006 ல் சட்டப்பேரவை தேர்தல் அதிமுக ஆட்சியை அகற்றியது சிறுபான்மையரசாக காங்கிரஸ்,பாமக,விசிக போன்ற கட்சிகளின் ஆதரவுடன் கலைஞர் கருணாநிதி மீண்டும் முதல்வராக்கப்பட்டார்... வரலாறு காணாத இலவசங்கள் வாரி இறைக்கப்பட்டது மக்களின் கவனத்தை இலவசங்களின்பால் திருப்பிவிட்டு ஊழல் வரலாற்றை திமுக விட்ட இடத்தில் இருந்து மீண்டும் தொடர்ந்தது... காவல்நிலையங்கள் திமுகவினரின் கட்டபஞ்சாயத்து கூடங்கலானது... மக்களின் சராசரியான இயல்பு வாழ்க்கை திமுக ரௌடிகளால் பெரிதும் பாதிக்கப்பட்டது... சாயாக்குடிக்க சல்லிகாசு இல்லாமல் இருந்த கிளை நிர்வாகிகளமுதல் கவுன்சிலர்கள் வரை ஸ்கார்பியோக்களில் வலம்வந்தார்கள்... ஊழல்களுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல உலக நாடுகளே ஆச்சரியப்படும் வகையில் திமுகவின் மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சராக பதவியில் இருந்த ஆ.ராசா 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைகற்றை ஒதுக்கீடு ஊழலில் கைது செய்யப்பட்டு இன்றுவரை ஜாமீனுக்காக போராடி வருகிறார்... இதுவரை இலைமறைக்காயாக இருந்து வந்த திமுகவின் குடும்ப அரசியல் இந்த ஆட்சிகாலத்தில் வெளிபடையானது... அனைத்துதுறைகளிலும் திமுகவின் கலைஞர் கருணாநிதியின் குடும்பம் கால்பதித்தது... பல தொழில் நிறுவனங்கள் இதனால் மிகப்பெரிய சரிவை சந்தித்தது... அத்துடன் மட்டுமில்லாது ஈழத்தில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது மத்திய அரசில் அங்கம் வகித்தும் தமிழர்களின் உயிரை பற்றி கவலைகொள்ளாத திமுக ஆட்சியை மக்கள் ரசிக்கவில்லை... கிராமப்புற காப்பிகடைகளில் இருந்து நகர்புற கணிணித் துறைவரை கருணாநிதியின் குடும்ப ஆதிக்கம் பெரியளவில் தாக்கத்தை விதைத்தது... அதன் விளைவு...



இதோ தமிழகத்தில் மீண்டுமொரு ஆட்சி மாற்றம்...!!!? கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக படுதோல்வியடைந்து முடிவுரை எழுதபட்டுவிட்டதாக தேர்தலுக்கு ஆறுமாத காலம் முன்புவரை பேசப்பட்ட அதிமுக எவரும் எதிர்பார்க்காத வகையில் அசுரபலத்துடன் வெற்றிகண்டது... திமுக மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டது... மக்களின் தேவைகளை உடணடியாக நிறைவேற்றுவேன்...இனி மக்கள் நிம்மதியாக வாழலாம் என அரியணை அமர்ந்ததும் செய்தி வெளியிட்ட அம்மையார் வழக்கமாக தனது பழிவாங்கும் நடவடிக்கைகளை துவங்கிவிட்டார்.. தவறு இளைத்தவர்கள் தண்டனை பெறவேண்டும் தண்டிக்கப்படவேண்டும்... இதில் மாற்றுக்கருத்தில்லை... அதே வேளையில் மக்களுக்கான திட்டங்களும் முடக்கபடுவது அதிமுக ஆட்சியின் ஆரம்பமே மக்களை வருத்தத்தில் தள்ளியுள்ளது என்பதை மறுக்க இயலாது... சமசீர் கல்வி திட்டத்தை தடுத்து சுமார் இரண்டுமாதகாலம் மாணவர்களின் கல்வி பாழடைந்தது.... சிறப்பான முறையில் ஏழைகளுக்கு நம்பிக்கையூட்டிய கலைஞர் காப்பீட்டு திட்டம் நிறுத்தபட்டவிட்டது... இப்படியாக சொல்லிகொண்டே போகும் வகையில்தான் மக்கள் மாற்றத்தை விரும்பி ஏற்றுக்கொண்ட அதிமுகவின் ஆட்சியையும் நடந்துவருகிறது...



ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு பிறகும் மக்கள் தங்களுக்கான நல்லாட்சியை தருவார்கள் என்கிற நம்பிக்கையில் திமுக மற்றும் அதிமுகவை அவர்களின் கடந்தகால ஊழல்களையும் அராஜகங்களையும் மறந்து மன்னித்து ஆட்சியில் அமரவைக்கிறார்கள்... மக்களின் எதிர்பார்ப்பு நாட்டில் பாலாரும் தேனாறும் ஓடவேண்டும் என்பதல்ல குறைந்தபட்சம் காவிரி ஆறாவது ஓடவேண்டும் என்பதுதான்..



அப்பாவி தமிழ் மக்களின் அறியாமைகளை பயன்படுத்திக்கொண்டு அரசியல் கட்சிகள் ஆட்சி அதிகாரத்தை தங்களின் வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள்... ஒவ்வொரு தேர்தலின்போதும் தங்களை ஒழுக்கசீலர்களாக காட்டிக்கொள்ளும் இவர்கள் ஆட்சியில் அமர்ந்தவுடன் ஊழல்களுக்கான அடுத்தகட்ட நகர்வுகளையும் பழிவாங்கல் நடவடிக்கைகளையும் மட்டுமே முன்னெடுக்கிறார்கள் தவிர எவருக்கும் தங்களுக்கு மீண்டுமொரு வாய்ப்பை தந்துள்ள மக்களுக்கு உழைக்கவேண்டும் என்கிற எண்ணமில்லை...






அதிமுக ஆட்சிகாலத்தில் ஊழல் புரிந்தவர்களாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் திமுக ஆட்சிக்கு வந்ததும் கட்சிதாவி மீண்டும் பதவி சுகம் அனுபவிக்கிறார்கள்... எப்படியாகினும் மக்கள் பழையவற்றை மறந்து மீண்டும் மீண்டும் நம்மைதான் தேர்வு செய்வார்கள் என்கிற மமதை இவர்களிடம் புரையோடி உள்ளது... ஆக ஆட்சி மாற்றங்களால் மக்களுக்கு எந்தவிதமான நன்மைகளும் ஏற்படபோவதில்லை என்கிற உண்மை நிலையை கடந்த இருபதாண்டுகால திமுக அதிமுக இரு கட்சிகளின் ஆட்சிகளின் மூலமாக


மக்கள் இனியாவது உணர வேண்டும்... ஆம் ஆட்சி மாற்றங்கள் ஒருபோதும் மக்களின் நிலையை மாறா செய்யாது மாறாக மக்கள் முன்னெடுக்க வேண்டியது "அரசியல் மாற்றம்" ஆம் அரசியலில் மாற்றம் ஏற்பட்டால்தான் அனைத்திலும் மாற்றம் ஏற்படும்...



இதுவரை மாறி மாறி மக்களை சுரண்டி வரும் அதிமுக திமுக இரண்டு கட்சிகளுமே தமிழக மக்களால் ஒதுக்கப்பட்ட வேண்டும்... மாற்றாக புதியவர்களின் அரசியல் தலைமை தமிழகத்தில் ஏற்பட்டாக வேண்டும்... நமது தமிழகத்திலேயே எததனையோ நல்ல சிறப்பான அரசியல் தலைமைகள் உண்டு அத்தகைய தலைமைகள் ஆதிக்க சக்திகளாலும் அதிகாரவர்கத்தினாலும் சாதிகளாலும் பொருளாதாரத்தாலும் அடக்குமுறைகளாலும் ஒதுக்கிவைக்கபட்டுல்லார்கள்... அவர்களை அடையாளம் காணவேண்டியது மக்களின் கடமை... சாமானிய மக்கள் நினைத்தால் மட்டுமே இத்தகைய மாற்றங்கள் சாத்தியமாகும்... நீங்கள் கேட்கலாம் சாமானியர்களால் எப்படி அதிகாரத்தில் உள்ளவர்களை மாற்றமுடியும் என்று... ஏன் முடியாது திருவாரூரில் இருந்து சென்னைக்கு பயணிக்க பயணசீட்டே வாங்க முடியாத நிலையில் இருந்த கலைஞர் கருணாநிதியால் எப்படி இன்று ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராகவும்


உலக கோடீஸ்வரர்களில் ஒருவராகவும் வரமுடிந்தது.... இதே சாமானிய மக்கள் அளித்த வாக்குகளாள்தானே... ஒரு சாதாரண நடிகையாக தனது வாழ்க்கையை துவங்கிய இன்றைய முதல்வர் செல்வி ஜெயலலிதா அம்மையார் அவர்களால் எப்படி இந்த நிலையை அடைய முடிந்தது இதே சாமானிய மக்கள் வாரிவழங்கிய வாக்குகளாள்தானே...



ஆக சாமானியர்கலாள்தான் கடந்தகால மாற்றங்கள் நடந்துள்ளது அந்த மாற்றம் மீண்டும் நடக்க வேண்டும் தமிழக மக்கள் மாற்று அரசியலை கட்டமைக்க நல்லவர்களை நாடாள செய்ய முன்வரவேண்டும்... அரசியல் மாற்றம் ஒன்றே அத்துணை பிரச்சனைகளுக்கும் நிவாரணம் என்பத தமிழ் சமூகம் உணரவேண்டும்...








புதன், 9 நவம்பர், 2011

நகர்மன்றம் முதல்... நாடாளுமன்றம் வரை...







தமிழகத்தின் உள்ளாட்சித்தேர்தல்கள் முடிவடைந்து புதிய உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள்
பதவி ஏற்றுவரும் தருவாயில் என் சமுதாயம் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் என்ன சாதித்துள்ளது...?
அதுதான் இந்த கட்டுரையின் கேள்வி..

கடந்த உள்ளாட்சி தேர்தலில் பெருவாரியான அரசியல் கட்சிகள் தனித்து போட்டியிட்டது
அதில் முஸ்லிம்களின் அரசியல் கட்சிகளும் அடக்கம்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு இராமநாதபுரம்,
ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் வெற்றிகண்ட மமக, திமுக கூட்டணியில் மூன்று தொகுத்களில்
திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டு படுதோல்வியடைந்த முஸ்லிம்லீக்... முதல் தேர்தல் என்றாலும்
தனித்தே களமிறங்கிய எஸ்.டி.பி.ஐ. ஆகிய அனைத்து கட்சிகளும் தனித்தே போட்டியிட்டது.

தமிழகத்தை பொறுத்தவரை இருக்கின்ற அனைத்து இஸ்லாமிய கட்சிகள் மற்றும் இயக்கங்கள் அனைத்துமே
தாங்கள்தான் ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களின் பிரதிநிதிகள் என பிரகட்டனபடுத்திகொண்டு சமுதாயத்தை பின்னோக்கி
அழைத்து செல்கிறார்கள் என்பதற்கு இந்த நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் சாட்சி...

மமக 600 இடங்களில் போட்டியிட்டு சுமார் 140 இடங்களில் வெற்றி கண்டுள்ளது... அந்த வெற்றியை அக்கட்சியின் அதிகாரபூர்வ
இணையதளமும் பத்திரிக்கையும் தொடர்ந்து எழுதி வருகிறது... அதேபோல முஸ்லிம்களின் அரசியல் தாய்ச்சபை என
வர்ணிக்கப்படும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சுமார் 390 இடங்களில் போட்டியிட்டு 115 இடங்களில் வென்றுள்ளது...
எஸ்.டி.பி.ஐ எனப்படும் சோசியல் டெமோக்ரடி பார்ட்டி ஆப் இந்தியா விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் கிருத்துவ இயக்கங்கள் ஆகியவற்றின் ஆதரவுடன் போட்டியிட்டு சுமார் 62 இடங்களில் வென்றி பெற்றுள்ளது... மாநகர மேயர் தேர்தலில் சென்னை மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐ இன்
வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளார்கள்...

இதுதவிர கோவை மாநகராட்சிக்கான மேயர் தேர்தலில் ஐக்கிய ஜமாஅத் வேட்பாளராக அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் தலித் இயக்கங்களின் ஆதவுடன் போட்டியிட்ட சகோ.அமீர் அல்தாப் முப்பதாயிரம் வாக்குகளுக்கு மேலாக பெற்று மூன்றாம் இடத்திற்கு வந்துள்ளார்....

மேலே குறிபிட்டபட்டிருப்பவைகள் கடந்த உள்ளாட்சித்தேர்தலில் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக தங்களை சொல்லிகொள்ளும் இஸ்லாமிய கட்சிகள் வாங்கி இருக்கும் வாக்கு விகிதம்... ஒவ்வொருவரும் தாங்கள் அளப்பரிய வெற்றிகண்டுள்ளதாக பெருமைபட்டுகொண்டிருக்கும் இந்த தருவாயில் இவைகள்
எவ்வளவு எவ்வளவு பெரிய அரசியல் பின்னடைவு என்பதை நாம் கவனிக்கவேண்டும்... அதேபோல பலம்பெரும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களை பின்னுக்குத்தள்ளி கோவை மாநகர மேயர் தேர்தலில் ஐக்கிய ஜமாஅத் வேட்பாளர் சகோ.அமீர் அல்தாப் அவர்களால் எப்படி மூன்றாம் இடத்தை பிடிக்க முடிந்தது என்பதையும் கவனிக்க வேண்டும்... கோவையை போல ஏன் மற்ற இடங்களில் நமது சமூக வேட்பாளர்களால் கவுரவமான வாக்குகள் வாங்க முடியவில்லை
இந்த தோல்விகளுக்கு யார் காரணம்...?

வேறு யாருமல்ல வேறு எந்த அரசியல் கட்சியும் அல்ல... நாம்தான் இத்தகைய பின்னடைவிற்கு காரணம் பல இடங்களில் முஸ்லிம்களின் தோல்விக்கு முஸ்லிம்களே காரணமாக இருப்பதை ஆய்வு செய்வது அவசியம்...
உதாரணமாக திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை பேரூராட்சி தலைவர் தேர்தலை குறிபிடலாம்... முத்துபேட்டை முஸ்லிம்கள் கணிசமாக வாழக்கூடிய பேரூர் முத்துபேட்டை முஸ்லிம்களின் வளர்ச்சி இன்றைக்கும் சங்பரிவார்களின்
தூக்கத்தை கெடுத்துவருகிறது என்பதை நாம் அறிவோம்... ஒவ்வொரு ஆண்டும் முத்துபேட்டையில் கலவரங்களை களமிறக்க சில கறுப்பாடுகள் அலைவதையும் முத்துபேட்டை முஸ்லிம்கள் நன்கு உணர்ந்தே உள்ளார்கள் இப்படியாக
எதிர்வினைகள் மிக்க முத்துபேட்டை பேரூராட்சியை முஸ்லிம்கள் கைப்பற்றி இருக்க வேண்டும் கைகூடி வந்த வெற்றியை முஸ்லிம்களே கோட்டைவிட்டுல்லார்கள்...

18 வார்டுகளை உள்ளடக்கிய முத்துபேட்டை பேரூராட்சியில் சுமார் 9 வார்டுகளில் முஸ்லிம்களும் எஞ்சியுள்ள 9 வார்டுகளில் மற்ற சமூக மக்களும் நிரம்பி வாழ்கிறார்கள்... இப்படி சமமாக மற்றவர்களும் வாழக்கூடிய முத்துபேட்டை பேரூராட்சித் தேர்தலில் மற்ற சமூக வேட்பாளர்கள் நால்வர் மட்டுமே களமிறங்கினார்கள் ஆனால் முஸ்லிம்கள் ஒன்பது வேட்பாளர்கள் களம்கண்டார்கள்...

பல அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும் போட்டியிட்டிருந்தாலும் எஸ்.டி.பி.ஐ வேட்பாளராக போட்டியிட்ட சகோ.அபூபக்கர் சித்தீக் சுமார் 1926 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளார் வெற்றிகண்ட அதிமுக வேட்பாளர் அருணாச்சலத்திற்கும் இரண்டாம் இடம் பெற்று தோல்விகண்ட சகோ.அபூபக்கர் சித்தீக் அவர்களுக்குமான
வாக்குவித்தியாசம் வெறும் 402 வாக்குகள்தான் ஆம் வெற்றிபெறவேண்டிய அபூபக்கர் சித்தீக் மற்ற முஸ்லிம் வேட்பாளர்களால் தோல்வியடைந்துள்ளார்... முஸ்லிம்களுக்கான அதிகாரத்தை பெறவேண்டி போராடிவரும் இஸ்லாமிய அமைப்புகள் கட்சிகள் இந்த தோல்வியை தவிர்த்திருக்கலாம் இல்லையா...? மற்ற முஸ்லிம் வேட்பாளர்களைவிடவும் அதிகமான வாக்குகள் வாங்கியுள்ள எஸ்.டி.பி.ஐ வேட்பாளரை இவர்கள் விரும்பி இருந்தால் பொது வேட்பாளராக நிறுத்தி வெற்றிபெற செய்திருக்கலாமே... ஏன் அப்படி செய்யவில்லை காரணம் இஸ்லாமிய இயக்கங்கள் மத்தியில் புரையோடியுள்ள ஈகோ தான்... முத்துபேட்டை தோல்வி ஒரு உதாரணம்தான் இதேபோல பல இடங்களில் முஸ்லிம்கள்
வெற்றி வாய்ப்பை சொந்த சமூகத்தினாலேயே இழந்துள்ளார்கள் என்பது கவனிக்கவேண்டிய கவலை...

இன்றைக்கு மூன்றாம் தரக்குடிமக்களாக முஸ்லிம்கள் அரசுகளால் அதிகாரிகளால் தரம்தாழ்த்தபட்டுவருகிறோம்... எத்தனை வலிமை இருந்தும் நம்மால் ஏன் பெரும் அதிகார பதவிகளை பெறமுடியவில்லை...? இந்த கேள்வி ஒவ்வொரு இஸ்லாமிய அமைப்புகளிலும் அங்கம் வகிக்கும் கடைநிலை முதல் உயர்நிலைவரை உள்ள உறுப்பினர்களும் தங்களை தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய தருணம் இது... முஸ்லிம்களின் வாக்குகளை இஸ்லாமிய கட்சிகளே பிரிப்பதால் யாருக்கு என்ன நன்மை விளைய போகிறது என்பதை உணரவேண்டுமில்லையா?

நம்மைவிட வலிமைகுரைந்தவர்கள் அதிகாரங்களை கைப்பற்ற முடிகிறது என்றால் நம்மிடமில்லாத ஒருங்கிணைப்பு அவர்களிடம் உள்ளதுதான்
காரணம் இந்த உண்மையை அறிந்தும் அறியாததுபோல செயல்பாடுகள் தொடருமேயானால் நாம் இன்னும் பின்னுக்கு
தள்ளபடுவதை தடுக்கமுடியாது...

அரசியல் என்பது மிக சமயோசிதமாக கையாளப்படவேண்டிய துறை அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தரக்கூடிய துறை... உரிமைகளை மீட்க்க போகிறோம் என்று மேடைதோறும் முழங்குவதால் மட்டும் எதையும் சாதிக்க முடியாது
இஸ்லாமிய இயக்கங்கள் வீறுகொண்டு எழுவதற்கு முன்பாக அதாவது 1995 முன்பாக இருந்த முஸ்லிம்களின் அரசியல் நிலை என்பது இன்று இஸ்லாமிய இயக்கங்களின் அபரிமிதமான வளர்ச்சிக்குப் பிறகு பின்தள்ளப்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது... தமிழக சட்டப்பேரவையில் சுமார் 20 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கவேண்டியது முஸ்லிம்களின் விகிதாச்சாரம் ஆனால் இப்போதைய உறுப்பினர்கள் வெறும் ஐவர் மட்டும் என்பது பின்னடைவில்லையா...?

ஆரம்ப காலத்தில் கண்ணியதலைவர் காயிதேமில்லத் போன்றவர்களால் அரசியல் கற்பிக்கப்பட்டது இப்போது நாம் அரசியலை கற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்... நாம் வாழக்கூடிய நாடு பல்வேறு சமூக மக்களையும் உள்ளடக்கிய கூட்டமைப்பு அதற்க்கேற்றவாருதான் முஸ்லிம்களின் அரசியல் நிலையும் அமையவேண்டும் அப்போதுதான் வெற்றிகள் நமக்காணதாகும் கண்ணியமான அரசியல்வாதிகளை அடையாளம்கண்டு
கூட்டணிகள் உருவாக வேண்டும் அதற்கும் முன்னதாக வீதிகொன்றாக பிரிந்துள்ள இஸ்லாமிய இயக்கங்கள் ஒருங்கிணைக்க படவேண்டும்... இவைகள் யாரால் சாத்தியமாகும் நிச்சயமாக அனைத்து அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் நினைத்தால் மட்டுமே இது சாத்தியமாகும்...

கடந்த உள்ளாட்சித் தேர்தல் களத்தில் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர்.தொல்.திருமாவளவன் அவர்களின் முயற்சியில் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு
உருவானது அது வெற்றிகண்டதா இல்லையா என்பது தேவையற்றது ஆனால் அதுபோன்ற கூட்டமைப்பு அவசரமான
அவசியம் என்பதை நாம் உணர்ந்தே ஆகவேண்டியது கட்டாயம்... விரல்விட்டு எண்ணக்கூடிய வகையிலான உறுப்பினர்களை வைத்துள்ள பாரதிய ஜனதா கட்சி மூன்று நகர் மன்றங்களை கைப்பற்றியுள்ளது ஆனால் லட்சோப லட்ச தொண்டர்களை கொண்ட இஸ்லாமிய கட்சிகள் ஒரு
நகர்மன்றத்தையோ குறிபிடும்படியான பேரூராட்சிகளையோ கைப்பற்ற முடியவில்லை ஏன்? சிந்திக்கவேண்டியது கட்டாயம் மட்டுமல்ல கடமையும்கூட...

தோழர்.திருமா உருவாக்கிய கூட்டமைப்பு சிறப்பானது வெற்றிக்கான காரணி.. அத்தகைய கூட்டமைப்பை முன்னெடுக்க வேண்டியது தமிழக முஸ்லிம்களின் முக்கிய அமைப்புகளான தமுமுக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்றவர்களின் கடமை... சமூகத்தின் மேம்பாட்டிற்காக மேற்கண்டவர்கள் செயலாற்றுவது உண்மையானால் தங்களுக்கான சுய விருப்பு வெறுப்புகளை விட்டுவிட்டு ஒருங்கிணைய வேண்டும்... அத்தகைய ஒருங்கிணைப்பின் மூலமாவே நமது பலம் பிரியாமல் வளமான வெற்றிகளை தரும்...

முஸ்லிம்களை பொறுத்தவரை வலிமையான கட்டமைப்பு முஹல்லாஹ் ஜமாத்துக்கள் ஆக முஹல்லாஹ் ஜமாத்துக்களும் இயக்கங்களும் ஒருங்கிணைத்து செயல்கண்டாலே கோவையில் சாதிக்க முடிந்ததை தமிழகம் முழுமையும் சாதிக்க முடியும்... ஆம் அந்த சாதனை நகர்மன்றங்களை மட்டுமல்ல நாடாளுமன்றத்தையுமே நம் வசமாக்கும்... இன்ஷாஅல்லாஹ்




வியாழன், 29 செப்டம்பர், 2011

உள்ளாட்சித்தேர்தல்; இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கூட்டமைப்பு...!!!

தமிழகத்தின் உள்ளாட்சி தேர்தல்களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. தமிழகத்தின் அனைத்து
பிரதான கட்சிகள் முதல் சிறிய கட்சிகள் வரை அனைத்துமே ஏறக்குறைய இந்த உள்ளாட்சி தேர்தல் களத்தை தனித்தே களம் காண்கிறார்கள்.

கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது அதிமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றிகண்டு
செல்வி ஜெயலலிதா அவர்கள் மீண்டும் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுகொண்டார்... ஆக இந்த வலிமையான கூட்டணியே தமிழகத்தின் உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிடுமென பலரும் நம்பிகொண்டிருந்த வேளையில் வழக்கப்படி முதல்வர் ஜெயலலிதா தன்னிச்சையாக தமிழகத்தில் உள்ள பத்து மாநகராட்சிகள் உட்பட பெருவாரியான நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு அதிமுக சார்பிலான வேட்பாளர்களை அறிவித்து அதன் கூட்டணிக்கட்சிகளை மட்டுமல்லாது எதிர்கட்சிகள் மற்றும் அரசியல் பார்வையாளர்கள் ஊடகவியலாளர்கள் என அனைவரையுமே வியப்பிலால்தினார்.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் பாமக விசிக கொமுக மு.லீக் போன்ற கட்சிகளுடன் களம்கண்டு பெரும் தோல்வியை தழுவிய திமுக இம்முறை உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுமென அறிவித்தது. பல ஆண்டுகளாக திமுகவின் ஒரு கிளை அமைப்பாகவே இயங்கி சமுதாயமக்கள் மத்தியில் தனக்கென இருந்த நற்பெயரை காப்பற்றிக்கொள்ள தவறிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் திமுக கூட்டணியில் இருந்து கலட்டிவிடபட்டது. அதேபோல கடந்த சட்டப்பேரவை தேர்தலை அதிமுக கூட்டணியில் சந்தித்து மூன்று இடங்களில் போட்டியிட்டு இரண்டு இடங்களில் வெற்றிகண்ட மனிதநேய மக்கள் கட்சியும் இந்த உள்ளாட்சித் தேர்தலை தனித்தே களம் காண்கிறது.

பிரதான கட்சிகள் அனைத்துமே தனித்து போட்டியிடுவது என்பது வரவேற்க்கத்தக்கது காரணம் மக்கள் அவர்களை பற்றிய எத்தகைய ஒப்பீட்டில் உள்ளார்கள் என்பதை அறியக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். இதில் முஸ்லிம்களின் நிலை எப்படி இருக்கபோகிறது...?

பொதுவாக உள்ளாட்சித் தேர்தல்களம் என்பது அரசியல் கட்சிகளைவிட தனிமனித செல்வாக்கிற்க்கே முக்கியத்துவம் கொடுக்ககூடியதாக இருக்கும். அந்த வகையில் தமிழ்நாட்டில் செயலாற்றிவரும் இஸ்லாமிய இயக்கங்கள் பரவலாக தங்களின் மனிதநேய சேவைகள் மூலமாக வெகுஜன மக்களை வெகுவாக சென்றடைந்து இருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்... இருப்பினும் அந்த செல்வாக்கை அதிகாரத்தை வென்றேடுக்ககூடிய கருவியாக அவர்கள் பயன்படுத்துவதில் வெல்வார்களா...? இந்த கேள்விதான் இந்த காலகட்டத்தில் நம் முன்னாள் எழுந்து நிற்கும் சவாலாக இருக்கிறது... தமிழகத்தின் பல பகுதிகளில் பரவி வாழக்கூடிய ஒரே சமுதாயம் முஸ்லிம்கள்தான்... பல நகராட்சிகள் பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் வரை எளிதாக வெல்லக்கூடிய வாய்ப்புள்ளவர்களும் முஸ்லிம்கள்தான்...

வெகுஜன மக்களையும் சமுதாய இளைஞர்களையும் வென்றெடுப்பதில் வெற்றிகண்ட சமுதாய அமைப்புகள் சமுதாய மக்களை முஸ்லிம்களின் வலிமையான கட்டமைப்பாகிய முஹல்லா ஜமாத்துகளை ஒருங்கிணைப்பதில் தவறிவிட்டார்கள் என்பதுதான் நிதர்சன உண்மை... தாங்கள் இதுநாள் வரை தூக்கிபிடித்த அரசியல்கட்சிகள் அலட்சியபடுத்தியவுடன் சமுதாய அமைப்புகளை ஒருங்கிணைத்து ஓரணியாக இந்த உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பதற்கான முயற்சிகளையாவது முன்னணி சமுதாய அமைப்புகள் முன்னெடுத்திற்க்க வேண்டும் ஆனால் இந்த சிந்தனையைகூட யாரும் முன்மொழியவில்லை...

இது குறித்து எந்த அமைப்பின் நிர்வாகியிடமாவது வினா எழுப்பினால் நாங்கள் முயற்சித்தோம் யாரும் எங்கள் முயற்ச்சிக்கு உடன்படவில்லை என்கிற "ரெடிமேட்" பதிலைத்தான் சொல்வார்கள் முஸ்லிம்கள் தனிமைப்பட்டு வாழ்ந்தே பழகிவிட்டவர்கள் தங்கள் குடும்பம் வியாபாரம் என குறுகிய வட்டதிற்க்குள்ளே
வாழ்ந்தே பொதுத்தளமான எவற்றிலும் பங்கெடுக்க தவறிவிட்டார்கள்... ஆக இவர்களை உடணடியாக மாற்றிவிட முடியாது... அதற்க்கான தொடர்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய கடமை தங்களை மக்களின் பிரதிநிதிகளாக காட்டிக்கொள்ளும் சமுதாய அமைப்புகளுக்கு உள்ளது என்பதை முதலில் சமுதாய அமைப்புகளின் தலைமைகள் உணரவேண்டும்.

இவர்களை கடந்து நம் சமூகம் சமூக பொருளாதாரம் சமூக கல்வி சமூக அரசியல் போன்ற பொதுத்தளங்களில் பயணிக்க துவங்கிவிட்ட இஸ்லாமிய சமுதாய இளைஞர்கள் தாங்கள் சார்ந்துள்ள அமைப்புகளின் தலைமைகள் மீது கொண்ட அபரிமிதமான பற்றின்காரனமாக "சகோதரச் சண்டைகள்" மூலமாக சொந்த சமுதாயத்திற்க்குள்ளேயே பிளவுகளை ஏற்படுத்தி வருகிறார்கள் என்பது மறுக்கமுடியாத கவலைக்குரிய உண்மை...

இப்படிப்பட்ட பின்னடைவுகளுடந்தான் தமிழக உள்ளாட்சித் தேர்தலை முஸ்லிம்கள் எதிர்க்கொண்டுள்ளார்கள்... இந்த காலகட்டத்தில் ஒரு ஆறுதலான செய்தி என்னவெனில் தமிழகத்தின் பிரதான கட்சிகளுள் ஒன்றான கடந்த சட்டப்பேரவை தேர்தலில் நூறு சதவிகித தோல்வியை தழுவிய போதும் சிதறாத கட்டமைப்பாக இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர்.தொல்.திருமாவளவன் அவர்களின் முயற்சியால் சுமார் 14 இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பாக இணைந்து இந்த தேர்தலை சந்திக்க இருக்கிறார்கள்... இது வரவேற்க்ககூடிய நல்ல முயற்சி தேர்தலில் வெற்றி வருகிறதோ இல்லையோ எதிர்காலத்தில் அதிகாரத்தை வெல்வதற்கான அடித்தளமாக இம்முயற்சி அமையும் என்பதில் சந்தேகமில்லை...

தமிழகத்தின் அனைத்து அதிகார மையங்களையும் வெல்லக்கூடிய வலிமை படைத்தவர்கள் முஸ்லிம்களும் தலித்துகளும் என்கிற வரலாற்று உண்மையை தோழர்.திருமா தமிழகத்தின் அனைதுதரப்பினருக்கும் அறிவித்திருக்கிறார்... சென்னை உட்பட மூன்று மாநகராட்சிகளில் மேயர் வேட்பாளர்களாக முஸ்லிம் கூட்டமைப்பினர் அறிவிக்கப்பட்டுள்ளனர்...

இந்த நிகழ்வுகளில் இருந்து முஸ்லிம்கள் சில மறுக்கமுடியாத உண்மைகளை உணரவேண்டும்... என்னவெனில் விசிக தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளை ஓன்று. குறிப்பாக சுமார் நாற்பது லட்சம் அதிகாரபூர்வ உறுப்பினர்களை தன்னகத்தே கொண்டது அரசியல் கட்சிகளுக்கு அதிகார பதவிகள் என்பது மிக முக்கியமானது. அதிகாரத்தில் இல்லாதபோது பல கட்சிகள் தங்களது அடிமட்ட உறுப்பினர்கள் முதல் மேல்மட்ட நிர்வாகிகள் வரை இழக்க நேரிடும் அது விசிகவிற்கும் பொருந்தும் இருந்தபோதும் அரசியல் ஆதாயத்தை முன்னிலைபடுத்தாத அரசியல் தலைவனாக தோழர்.தொல்.திருமாவளவன் இருக்கிறார் என்பதற்கு இந்த உள்ளாட்சித் தேர்தல் ஒரு நிரூபணம்... திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய பாமக இந்த தேர்தலை சிறுத்தைகளுடன் இணைந்து சந்திக்க விரும்பியது அதனை வெளிபடையாகவே அதன் தலைமை ஊடகங்கள் வாயிலாக அறிவித்தது ஆனால் அந்த வரவேற்ப்பை எல்லாம் விட்டு விட்டு சிறுத்தைகளுக்கு அரசியல் ஆதாயத்தை தரக்கூடிய நிலையை ஒதுக்கிவிட்டு பெரும் வாக்குவங்கிகள் இல்லாத இஸ்லாமிய இயக்களுடன் கைகோர்த்திருப்பது நிச்சயமாக ஒரு அரசியல் அதிசயம் என்பதில் மிகையல்ல...

தமிழக அரசியல் தலைமைகளில் தங்களுக்கான நல்ல நண்பன் யார் என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும்... சாதி ஒழிப்பு, மக்களின் ஜீவாதார உரிமைகள் மீட்பு, கல்வி பொருளாதார அதிகார கையகபடுதுதல் ஆகியவற்றில் முன்னெடுப்பு இவற்றில் ஒரே அலைவரிசையில் பயணிக்கும் முஸ்லிம்களும் தலித்துகளும் ஓரணியில் திரள வேண்டும் இந்த அற்புதமான தருணத்தை தோழர்.திருமா அவர்களின் காலத்திலேயே நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்... இன்றைக்கு தோழர் திருமா அவர்களின் முயற்சியால் ஒருங்கினைதுள்ள இஸ்லாமிய அமைப்புகள் வலிமையில் வேண்டுமானால் குறைந்தவர்களாக இருக்கலாம் ஆனால் அவர்கள் முன்னெடுத்துள்ள இந்த முயற்சி நிச்சயமாக எதிர்கால சமுதாயத்தின் வரலாற்றில் பதிவு பெரும். என்பதில் எள்முனையளவும் சந்தேகமில்லை...

எதிர்காலத்தில் வலிமையான இஸ்லாமிய அமைப்புகள் இதுபோன்ற ஒருங்கிணைப்புகளை மேம்படுத்தி அரசியல் போன்ற ஆளுமைதளங்களை கைப்பற்ற வேண்டும் தோழர்.தொல்.திருமா போன்றவர்கள் அதற்க்கு உண்மையாக உளபூர்வமாக உடன் இருப்பார்கள்...

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

பயங்கரவாதிகளின் உண்மைகதை...

குண்டு வெடிப்புகளுக்காக அப்பாவி முஸ்லிம்களை போலீசு கைது செய்கின்றது. இந்துத்துவா திட்டத்திற்காக முஸ்லிம்களை ஆர்.எஸ்.எஸ் கொல்கின்றது. மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி போல ஆகிவிட்டது முஸ்லிம் மக்களின் நிலைமை

ஒரு முசுலீமின் வீட்டுக்கதவை போலீசோ அல்லது ஆர்.எஸ்.எஸ் குண்டர்களோ தட்டிக் கொண்டே இருக்கிறார்கள். குண்டு வெடிப்புகளுக்காக அப்பாவி முசுலீம்களை போலீசு கைது செய்கின்றது. இந்துத்துவா திட்டத்திற்காக அப்பாவி முசுலீம்களை ஆர்.எஸ்.எஸ் கொல்கின்றது. மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி போல ஆகிவிட்டது இசுலாமிய மக்களின் நிலைமை.

வீடு, வேலை, கல்வி அனைத்திலும் முசுலீம் என்பதற்காகவே வாய்ப்புகள் மறுக்கப்படும் அளவுக்கு அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டிருக்கின்றார்கள். அவ்வளவு ஏன் இரண்டாம் காட்சி சினிமாவைப் பார்ப்பதற்குக்கூட ஒரு முசுலீமுக்கு சுதந்திரம் இல்லை.

ஒவ்வொரு குண்டு வெடிப்பின் போதும் ஓராயிரம் முசுலீம் மக்களின் நிம்மதி குலைக்கப்படுகின்றது. குண்டு வைத்த தீவிரவாதிகளை உடனே கைதுசெய்து ரிசல்ட் காட்ட வேண்டுமென்ற இயல்பான பொது நிர்ப்பந்தம் காரணமாக எண்ணிறந்த முசுலீம் மக்கள் எந்தக் குற்றமுமிழைக்காமல் ஆண்டுக்கணக்கில் சிறையில் வாடுகின்றார்கள். இது அப்படிப்பட்டவர்களின் கதை. தெகல்கா ஏடு இந்தியாவெங்கும் புலனாய்வு செய்து இந்த உண்மைகளை வெளியிட்டிருக்கின்றது. தொந்தரவில்லாமல் நிம்மதியாக வாழும் இந்து மனத்தை இந்த கண்ணீர்க்கதைகள் சற்று நேரமாவது குறுக்கீடு செய்யட்டும்.

···

அகமதாபாத் பள்ளிவாசல் ஒன்றில் ஜூமா நமாஸில் நிதானமாக அமைதியாக ஜூலை 25, 2008, வெள்ளியன்று தொழுகை நடத்தி “இந்துக்களோடு பரஸ்பரம் நேசமான வாழ்க்கை வாழவேண்டும்; அடுத்தவன் பசியோடு இருக்க நாம் மட்டும் வயிறுமுட்டச் சாப்படுவது அநீதி” என்று போதித்த ஒல்லியான இசுலாமியக் கல்விமான் அப்துல் அலீம் — அடுத்தநாள் ஜூலை 26 அகமதாபாத் குண்டுவெடிப்புக்குப் பிறகு சில நிமிசங்களுக்குள்ளாகவே போலீசால் கைது செய்யப்பட்டார். வீட்டில், தெருவில் எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து நிற்க, தடதடவென வீட்டுக்குள்ளிருந்து அலீம் இழுத்துச் செல்லப்பட்டார்.

ஞாயிறு ஜூலை 27 அன்று டி.வி., செய்தித்தாள்களில் அப்துல் அலீம் புழுதிவாரித் தூற்றப்படுகின்றார். ரகசிய சதிவேலை செய்த தீவிரவாதி என்று வர்ணிக்கப்பட்ட அலீம் நெரிசல்மிக்க சந்தடிமிகுந்த முசுலீம் பகுதிகளில் மக்களால் மதிக்கப்பட்டவர்தான். இரண்டு மாதங்களுக்கு முன்புகூட உள்ளூர் இன்ஸ்பெக்டர் அலீமின் அமைப்பான “அஹ்பே ஹதீஸ்’ இசுலாமியப் பிரிவின் டிரஸ்டுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்; அவரது உறுப்பினர்கள் பட்டியல் தனக்கு உடனே வேண்டும் எனக் கோரியிருந்தார். அப்போதுகூட, போலீசாரின் தகவலின்படி, அலீம் ஒரு முகவரியில் டிரஸ்டு நடத்துபவர்தான்; தவிர, அலீம் சட்ட விரோதமானவரோ, ரகசிய நபரோ அல்ல.

2006 இல் அலீமின் அமைப்பு புதுடெல்லியில் நடத்திய தேசியக் கருத்தரங்கத்திற்குத் தலைமை விருந்தினராக வந்தவர் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் என்பது குறிப்பிடப்பட வேண்டிய சிறப்புச்செய்தி. குஜராத் இனப்படுகொலைக்குப் பிறகு, அலீம் ஏராளமான நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். அப்போது, நிராதரவாக விடப்பட்ட 34 முசுலீம் குழந்தைகளுக்கு குவைத்தில் வசிக்கும் ஒரு பணக்காரரிடம் உதவி கோரினார். ஆனால் திட்டம் நிறைவேறவில்லை, கைவிடப்பட்டது. குழந்தைகளும் அந்தப் பணக்காரரிடம் அனுப்பப்படவில்லை. இதையெல்லாம் காரணம் காட்டி அலீமின் மீது தீவிரவாதக் குற்றச்சாட்டு தொடுக்கப்பட்டது. தீவிரவாதப்பயிற்சி எடுப்பதற்காக அகமதாபாத்திலிருந்து இளைஞர்களை உ.பி.க்கு அனுப்பினார்; 2002லிருந்து தலைமறைவாகி விட்டார்” என்றெல்லாம் ஜோடித்து, அவரைப் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்ததாகச் சித்தரித்து குற்றவாளியாக்கினார்கள்.

சட்டத்துக்கு உட்பட்ட குடிமகனாய் வலம்வந்த ஒரு இசுலாமிய மதநம்பிக்கையாளரான அலீமை சட்டவிரோதமாகத் தீவிரவாதியாய்க் காட்டி இப்போது 2008 இல் கைதுசெய்து உள்ளே தள்ளிவிட்டது போலீசு. நமக்கு எழும் கேள்வி: முன்பு அலீமின் டெல்லி கருத்தரங்கில் கலந்து கொண்ட சிவராஜ் பாட்டீலை விசாரித்து விட்டார்களா?

நம்முள் எழும் வேதனை: அலீம் சிறையில் வாடுகின்றார்; அலீமின் குடும்பமோ அடுத்தவேளைச் சோற்றுக்கே பரிதவிக்கின்றது. அலீம் இருந்த வரை கடைச்சிறுவன் உதவியோடு பழைய இரும்புக் கடை ஒன்றை நடத்தி வந்தார்; இப்போது சிறுவன் மட்டுமே கடையைக் கவனிக்கின்றான்; அதிக வருவாயில்லை. ஒவ்வொரு மாதமும் வீட்டுவாடகைக்கு அலீமின் மனைவி ரூ. 2500 தேற்ற வேண்டும்; 5 குழந்தைகளுக்குச் சோறு போட்டுக் காப்பாற்ற வேண்டும்.

···

ஐதராபாத்தில் மவுலானா மொகம்மது நசீருதீன் மற்றும் அவரது இரு மகன்களான யாசிர், நசீர் ஆகிய மூவரையும் “தீவிரவாதிகளின் குடும்பம்’ என்று போலீஸ் அழைத்தது. நசீருதீன் முப்பதாண்டுகளுக்கு முன்னால் தெருவோரக் கடைகளில் தான் கற்ற மோட்டார்பைக் ரிப்பேர், வேலைத்திறன், நண்பர்களிடம் வாங்கிய கடன் இவற்றை வைத்து என்ஜினீயரிங் ஒர்க்ஷாப் வைத்திருந்தார்.

நசீருதீன் இசுலாமியக் கல்விமான். பாபர் மசூதி இடிப்பு, குஜராத் 2002 முசுலீம் படுகொலைகள் இரண்டிலும் அரசை வெட்டவெளிச்சமாக விமரிசித்தவர்; “குஜராத்தில் கலவரம் செய்தார்; 2003 மார்ச்சில் குஜராத் உள்துறை அமைச்சர் ஹரேன் பான்டியாவைக் கொலை செய்த சதியில் ஈடுபட்டார்” என்ற சொல்லி 4 ஆண்டுகள் சிறையில் தள்ளப்பட்டார்.

செப் 2001ல் “சிமி’ தடை செய்யப்பட்ட சமயத்தில் யாசிர் இதில் உறுப்பினர். பிறகு பல பொய்வழக்குகளில் அவர் சேர்க்கப்பட்டபோதும் “சிமி’ உறுப்பினர் என்பதிலிருந்து தொடங்கியே வழக்கு சோடித்தது போலீசு. முதலில் 2001இல் “சிமி’ தடைசெய்யப்பட்டபோது கைது; கைதான மறுநாளே பிணை கிடைத்தது; ஆனால் “அரசை எதிர்த்துப் பேசினார்’ என்று அடுத்தநாளே மறுபடியும் கைது, 29 நாள் சிறை. இப்போது ஏழாண்டுகளாகி விட்டன. ஆனாலும் எந்த வழக்குமே நடக்கவில்லை.

அண்மையில் ஜூலை 15, 2008 இல் மறுபடி கைது பெங்களூருவைக் குலுக்கிய குண்டு வெடிப்புக்கள் ஜூலை 25இல் நடந்தபோது, குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளைக் கர்நாடகாவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்தவர் என்று பின்னால் வந்த வழக்குடன் பிணைக்கப்பட்டார். ஆதாரம் விசாரணையில் யாசிரே கொடுத்த வாக்குமூலம் என்றார் கமிஷனர் பிரசன்னராவ். போலீசு சொன்னது பொய் என்று தனது தாய் உதாய் பாத்திமா மூலம் வெளி உலகுக்குத் தெரிவித்தார் யாசிர். தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு அடித்துச் சித்திரவதை செய்து கையெழுத்து வாங்கிவிட்டார்கள் என்று அதனது குரூரத்தை அம்பலமாக்கினார் பாத்திமா.

யாசிரின் தம்பி நசீர் இருபதே வயது நிரம்பியவர். ஜனவரி 11, 2008 இல் கர்நாடகாவில் நண்பர் ஒருவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது மறித்து நிறுத்திக் கைதுசெய்யப்பட்டார். மோட்டார் சைக்கிளைத் திருடி ஓட்டுவதாகவும், இருவரும் கைவசம் சிறுகத்தி வைத்திருப்பதாகவும், “அரசுக்கெதிராகப் போர்செய்ய இருப்பதாகவும்’, தாங்கள் “சிமி’ உறுப்பினர்கள் என வாக்குமூலம் கொடுத்ததாகவும் போலீசு கூறியது. ஆனால் 90 நாட்களுக்குப் பிறகும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததால், நசீரின் வழக்குரைஞர் பிணை பெற்றார். ஆனால் உடனே அவர் மீது சதிவழக்கொன்றைப் போட்டு சிறையிலிருந்து வெளியே வராதவாறு போலீசு செய்து விட்டது.

அக், 2004 இல் மவுலானா நசீருதீன் கைது செய்யப்பட்டபோது அதை எதிர்த்து மக்கள் காவல்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது ஐதராபாத் வந்திருந்த குஜராத் போலீசு அதிகாரி நரேந்திர அமீன் தனது துப்பாக்கியால் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரைச் சுட்டுக் கொன்றுவிட்டார். இறந்தவர் உடலை வைத்துக்கொண்டு, அமீன் மீது வழக்குப் போட்டால்தான் நகருவோம் என்று மக்கள் உறுதியாக அங்கேயே மறியல் செய்தனர். போலீசு மக்கள் மீது ஒரு வழக்கும் அமீன் மீது ஒரு வழக்குமாகப் பதிவுசெய்தது. அமீன் கைது செய்யப்படவில்லை. பிறகு அமீன் மீதான வழக்கு ஒர் அங்குலம் கூட நகரவில்லை. அன்று மவுலானாவுடன் அமீன் அகமதாபாத்துக்குப் பறந்தான்; அவனுடைய உடையில் சிறு கசங்கல் கூட இல்லை. அவனுக்கு எதிரான வழக்கு எப்போதோ செத்துப் போய் விட்டது.

மவுலானா நசீருதீன் மற்றும் இரு மகன்களும் கொடுஞ்சிறையில். அந்த மகன்களைப்பெற்ற தாய் கதறுகின்றாள்: “எங்கள் குடும்பத்திலிருந்து மூன்று பேர் மீது பொய்வழக்கு. என்னையும் சேர்த்துச் சிறையில் தள்ளட்டும். பிறகு, எங்களை ஒன்றாகவே சேர்த்து சுட்டுக் கொன்று விடட்டும், வசதியாக இருக்கும்.”

···

அப்துல் முபீன், உத்திரப் பிரதேச மாநிலம் பக்வா கிராமம். இவர் மீது ஒன்றன் பின் ஒன்றாகப் பொய்யாக 4 கிரிமினல் தீவிரவாத வழக்குகள். முதல் வழக்கு செப் 2000 இல் போடப்பட்டது. பிறகு அடுத்தடுத்து வழக்குகள். ஒவ்வொரு வழக்கையும் அது பொய் என்று நிரூபிக்க இரண்டு, மூன்று ஆண்டுகள் எடுத்தன. நான்காவது வழக்கு மட்டுமே எட்டு நீண்ட ஆண்டுகளாக நடந்தது. முதல் இரு வழக்குகளிலுமே அவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டது. ஆகஸ்டு 6, 2008 இல்தான் முபீன் விடுதலை ஆனார்.

மேலே சொன்ன நான்கு வழக்குகளிலுமே “இவர் சிமி உறுப்பினர்’ என்று பொய் சொல்லப்பட்டது எப்படியாவது “சிமி’ யைத் தடைசெய்ய வேண்டும் என்பதற்காக. சாட்சி: அப்துல் முபீன் போலீசில் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட வாக்குமூலம்.

முதல் வழக்கில் முபீன் சிறை சென்றபோது அவரது கடைசிக் குழந்தையான மகள் ஜைனாவுக்கு வயது ஆறேமாதம். இப்போது 2008 இல் முபீன் விடுதலையாகி வந்து பார்க்கும்போது அவளுக்கு அப்பாவைப் பார்க்க ஒரே வெட்கம். இந்த முபீன் விடுதலையான நான்காம் நாள், “இந்துஸ்தான் டைம்ஸ்’ நாளேடு ஆகஸ்டு 10, 2008 அன்று சிமியைப் பற்றி முழுப்பக்கக் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. முபீன் சிமியின் முதல் தீவிரவாதி என்று எழுதியது; குற்றம் நிரூபிக்கப்படாத போதும் அவர்தான் முதல் தீவிரவாதி என்று எழுத இந்துஸ்தான் டைம்ஸ் வெட்கப்படவில்லை. முபீனுக்கும் “சிமி’க்கும் ஜனநாயக மறுப்பு, சித்திரவதைகள், பலப்பல பொய் வழக்குகள்; “இந்துஸ்தான் டைம்ஸூ’க்கோ பொய்களை இரைத்துக் கதைகள் விற்க வானளாவிய உரிமை.

···

அபுல் பஷார் குவாஸ்மி உ.பி.யைச் சேர்ந்த இசுலாமியக் கல்விமான். 23 வயதே நிரம்பிய இளைஞர். ஒராண்டுக்கு முன் தனது திருமணத்தை முடித்திருந்த குவாஸ்மி தம்பிக்கும் திருமணம் செய்து வைக்க அங்கங்கே சொல்லி வைத்திருந்தார். இதை மோப்பம் பிடித்த போலீசு தரப்பு கடந்த ஆகஸ்டில் பெண்வீட்டார் என்று சொல்லிக் கொண்டு குவாஸ்மியின் வீட்டுக்குள்ளே நுழைந்தது. வெளியே அவர்கள் மாருதி வேனை நிறுத்தியிருந்தார்கள். உள்ளே தடதடவென நுழைந்த இரண்டு போலீசோ குவாஸ்மியைத் தரதரவென்று இழுத்துச் சென்று மாருதி வேனில் திணித்துக் கொண்டு பறந்து போனார்கள்.

இரண்டு நாள் கழித்து, குஜராத் போலீசு அதிகாரி பி.சி. பாண்டே அகமதாபாத் குண்டு வெடிப்பைத் திட்டமிட்டவன் குவாஸ்மிதான் என்று அறிவித்தான். “பாண்டே’ கேள்விப்பட்ட பெயராகத் தெரிகின்றதா? ஆமாம், குஜராத்தில் 2000 அப்பாவி முசுலீம்களின் படுகொலைகளில் ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, பஜ்ரங் தள் மூன்றோடும் தீவிரமாக இறங்கி நரவேட்டையாடியவன்தான் பாண்டே. இதற்காக அவன் பதவி உயர்வும் வாங்கிக் கொண்டான்.

ஆனால் குவாஸ்மி ஒரு அப்பாவி; கிழக்கு உ.பி.யிலுள்ள அசாம்கர் நகரத்தின் அருகே ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த கூச்ச சுபாவமுள்ள அப்பாவி. போலீசோ அவனைச் “சிமி’யின் தலைவன், குஜராத் படுகொலைகளுக்குப் பழிவாங்கத் துடித்த “புனிதப் போராளி’ (ஜிகாதி) என்று விவரித்தது. ஊடகங்கள் தங்களது பங்குக்கு குவாஸ்மி இந்தியா முழுக்கப் பயணம்செய்து தீவிரவாத வலைப்பின்னலை உருவாக்கியவன் என்றும், கேரளத்தில் செயல் வீரர்களை வடிவமைத்தவன் என்றும் கலர்கலராகச் செய்திகளை விற்றன.

ஆகஸ்டு 14இல் குவாஸ்மியை இழுத்துச் சென்ற போலீசு இரண்டுநாள் கழித்து மறுபடியும் அவரது வீட்டுக்கு வந்தது. அவரது தந்தை, தம்பி, தங்கைகளை வெளியே பிடித்துத் தள்ளிவிட்டு வீட்டைச் சல்லடை போட்டுச் சலித்து சோதனை போட்டது. வீட்டிலிருந்த மூட்டைப் பூச்சி மருந்து மற்றும் ஒரு மெட்டல் கிளீனிங் பிரஷ்ஷைக் கவனமாகப் பொட்டலம் கட்டி எடுத்துச் சென்றது. அபு பக்கீர் பயத்தோடு கேட்டார்: “இவற்றை என் பையன் குண்டு தயாரிக்கத்தான் பயன்படுத்தினான் என்று போலீசு சொல்லி விடுவார்களோ?”

குவாஸ்மி “சிமி’ உறுப்பினர் அல்ல; இசுலாமிய இறையியல் முடித்துள்ள, வழக்குகள் ஏதுமில்லாத எளிய இளைஞர். இவரைப் போலீசு கடத்திச் சென்றது என்று உள்ளூர் மக்கள் போலீசிடமே முறையிட்டார்கள். அக்குடும்பத்துக்கே இப்போது ஊரார்தான் சோறு போடுகின்றார்கள்.

தந்தை அபுபக்கீர் சொல்கிறார்: “நாங்கள் செய்த ஒரே தவறு முசுலீம்களாக இருப்பதுதான்.”

______________________________________________

நன்றி:

குப்பண்ணன், புதிய கலாச்சாரம் அக்டோபர் 2008



திங்கள், 4 ஜூலை, 2011

ஹிந்துக்களுக்கு அநீதி...! ஹிந்துஸ்தானத்திற்கு ஆபத்து...!?? ராமகோபாலனுக்கு சமூகபுரட்சியாளர் பழனிபாபா அவர்களின் மறுப்பு...

எண்பதுகளின் இறுதியில் ஹிந்து முன்னணி தலைவன் இராமகோபாலையர் இஸ்லாமிய மக்களுக்கு எதிராகா "ஹிந்துக்களுக்கு அநீதி... ஹிந்துஸ்தானத்திற்கு ஆபத்து" என்கிற தலைப்பில் வெளியிட்ட புத்த்ககத்திற்கு
சமூகபுரட்சியாளர் ஷஹீத் பழனிபாபா அவர்கள் வெளியிட்ட மறுப்புரையின் தொகுப்பு நமது நிகழ்கால சமுதாயசொந்தங்களின் சகோதர சமுதாய உறவுகளின் மேலான பார்வைக்கு...

அன்புடன்
வேங்கை.சு.செ.இப்ராஹீம்

ஹிந்துக்களுக்கு (?) அநீதி!

யாரால்?

ஹிந்துஸ்தானத்திற்கு (?) ஆபத்து!

எங்கு உள்ளது ஹிந்துஸ்தான்?

எப்போது இருந்தது?

அதன் எல்லைகள் என்ன?

தலைப்பே கற்பனை. இந்துக்கள் யார் -யார்? அத்தனை இந்துக்களும் உன்னை ஏற்றுக்கொள்கிறார்களா?

பிராமணீயத்திற்கு ஆபத்து என்று வெளிப்படையாகச் சொல்லத் துணிவில்லை.

இந்தியா என்ற நாடு உள்ளது! ஹிந்துஸ்தான் எங்கே உள்ளது? எப்போது இருந்தது? யார் ஸ்தாபித்தது? இந்து என்பதே அரேபியர் இட்ட பெயர்தானே!

முதல் பக்கம் முதல் வரி

2 "யுகயுகமாய் பாரதம் ஹிந்துக்களின் தாயகமாக விளங்கி வந்தது"

பாரதம் என்ற பெயர் 1947-க்கு முன்பு இருந்ததா? இந்திரா (பிராமணர்) கற்பனையில் உதித்ததுதானே பாரதம்! இந்தியா காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என்றாவது ஒருகுடை கீழ் இருந்ததற்கு ஆதாரம் கொண்டுவா!

3 "இதற்கு ஆபத்து நேர்ந்த போதெல்லாம் தமது ரத்தத்தை ஆறாகப்பாய்ச்சி லட்சக்கணக்கானோர் தம்மை பலிகொடுத்து இந்த சுதந்திரத்தை காப்பாற்றி வந்துள்ளனர்"

1947க்கு முன் சுதந்திரம் இருந்ததா? இருந்திருந்தால் எதற்கு சுதந்திரப் போராட்டம்? லட்சக்கணக்கில் இறந்திருந்தால் குறைந்தது ஆயிரக்கணக்கிலாவது நினைவுக் கற்களை 50 வருடங்களாய் ஏன் உண்டாக்கவில்லை? இறந்தது எத்தனை லட்சம்? எந்த ஊரில்? இன்று அவர்களது வாரிசுகள் கோடிக்கணக்கில் இருக்க வேண்டுமே - எங்கே உள்ளனர்? ஒரு வரலாற்றுக்குறிப்பை 1947க்கு முன் கூறவும்.

5 "ஹிந்துக்கள் ஒற்றுமையுடன் இருந்த போதெல்லாம் நமது நாடு உலகம் எங்கும் தனது ஆன்மீக கலாச்சார முத்திரை பதித்தது"

உனது கலாச்சாரம் எது? (சனாதனம் வர்ணாசிரமம் தானே!) என்று இந்துக்கள் ஒற்றுமையுடன் இருந்தனர்? வரலாற்றின் எந்தக்காலம்? சேர, சோழ, பாண்டியரே ஒன்று படவில்லையே? வந்தேரி உனக்கு ஏது நாடு? உலகமெங்கும் உனது கலாச்சாரம் பரவியிருந்தால் சங்கர மடங்கள் எத்தனை நாடுகளில் உள்ளன? பட்டியல் தரமுடியுமா? அப்படி பரப்பப்பட்டு அங்கு இருந்திருந்தால்- இப்போது அவைகள் எங்கே ? யார் அங்கு அழித்தது? ஏதோ இந்தியாவில் முஸ்லிம்கள் அழித்தனரென்று புளுகவாவது உனக்கு வாய்ப்புண்டு- அதை சொல்லியே வயிறு வளர்த்து வாழ்வை உண்டு செய்தாய்- அன்னிய நாடுகளில் அது அழியக் காரணம் என்ன? போலி சரக்கையே மக்கள் எங்கும் நிராகரிப்பர் என்கிற வியாபாரத்தத்துவம் தெரியுமா?

6 " ஏறத்தாழ 1000 ஆண்டுகள் நாம் சுதந்திரத்திற்குப் போராடினோம்"

அப்படியா! முதல் சுதந்திரப்போரை ஆரம்பித்தது யார்? யாரோடெல்லாம் போராடினாய்?

7 " நமது புனிதமான (?) ஹிந்து தர்மத்தின் ஆன்மீகப் பண்பாட்டை காப்பாற்றுவதற்குத்தான் போராடினோம்"

உண்மையை ஒத்துக்கொண்டாயே - இதை ஏன் உன் சுதந்திர பிரகடனத்தில் சொல்லவில்லை? நீ இந்துதர்மத்தை காப்பாற்றப் போராடியதாகச் சொல்வது நியாயமானால்- பாகிஸ்தானுக்கு ஜின்னா செய்தது நியாயம்தானே!

8 " காங்கிரஸ் இயக்கம் துவக்கப்பட்ட பிறகு ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமை கானல் நீர்"

உண்மையை உன்னையுமறியாது ஒத்துக்கொண்டு உன் வாயினாலேயே உளறினாயே! நன்றி.

இரண்டாம் பக்கம்

9 "கல்வித்துறை: ஹிந்துக்கள் கல்விக்கூடங்களைத் திறக்க அரசிடம் இருந்து முன் அனுமதி பெறவேண்டும். மாற்று மதத்தினர் அப்படி செய்யத் தேவையில்லை - கல்விக் கூடங்களை திறந்துவிட்டு பிறகு அங்கீகாரத்துக்கு மனுச் செய்ய வேண்டும்"

ஆக அங்கீகாரம் பெற 2 பேருமே அரசிடம் அனுமதி வாங்கியாக வேண்டும். "போத்திக்கிட்டு படுத்தாலும் படுத்துக்கிட்டு போத்திக்கொண்டாலும் இரண்டும் ஒன்றே" ஏதோ நாங்கள் அனுமதி இல்லாமலேயே திறந்து கொள்ள லைசன் ஸ் உள்ளது போலல்லவா குறை கூறுகிறார். அனுமதி என்று போனால் உனக்கும் எனக்கும் ஒரே விதிமுறைகள் - பாடத்திட்டங்களே! உடல் ஊனமுற்றோர் பஸ்ஸில் முன்பக்கம் ஏறலாம் என்றால் என்ன அர்த்தம்? அவனை விட நீ திடகாத்திரமாய் கொழுத்து உள்ளாய் என்றுதானே! உன்னை ஏதோ ஏறவே கூடாது என்று சொன்னது போலல்லவா சொல்கிறாய். இப்படி இருந்தும் இன்று முஸ்லிம்களின் கல்வி தகுதி (0.2%)யும் கல்வி ஸ்தாபனத்தகுதி (0.01%)யும் என்ன விகிதாச்சாரம்?

10 "ஹிந்துக்கள் துவக்கப் பள்ளிக்கு டெபாசிட் ரூ.25000 நடுநிலைப்பள்ளிக்கு ரூ.50000 - உயர்நிலைப்பள்ளிக்கு ரூ. 1லட்சம் கட்ட வேண்டும். ஆனால் முஸ்லிம்களுக்கு தேவையில்லை"

முன் பணம் எதற்கு? மோசடியைத் தவிர்க்கவே! உன்யோக்கியத்தை புரிகிறதா? அப்படியே முஸ்லிம் - கிறிஸ்துவர் பள்ளிகளில் முஸ்லிம்களை மட்டுமோ கிறிஸ்துவர்களை மட்டுமோ சேர்க்கக்கூடாது. அனைவருக்கும் (OPEN TO ALL ) என்ற விதியை புகுத்தி கொக்குக்கு நரி விருந்து வைத்த கதை செய்துள்ளீர்களே. முஸ்லிம் - கிறிஸ்துவ பள்ளிகளில் 90% மாற்று மதத்தினருக்குத்தான் பயன்படுகிறது என்பதை மறுக்க முடியுமா?

11 "ஆசிரியர் நியமன விஷயத்தில் ஹிந்துப் பள்ளிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் 68 சதவீதம் நியமிக்கப்பட வேண்டும். மாற்று மதத்திபருக்கு தேவையில்லை."

ராம கோபாலய்யரே! மாற்று மதத்தில் அப்படி தாழ்த்தப்பட்டவருண்டா? ( நீ தரும் சதவீதம் பொய் 20 சதவீதமே உண்மை. அது எங்களுக்கும் உண்டு) ஆக தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்கள் இல்லை என நீ உன் வர்ணாசிரமக் கொள்கையை ஒத்துக்கொண்டதற்கு நன்றி. அவர்களைத் தாழ்த்தியதே நீ தானே! அவர்களிடத்தை ஆசியாவிலிருந்து வந்தேறிய நாடோடியாய் ஆக்கிரமிப்பு செய்தவனே நீ தானே. எனது ஆண்டவர் தொழிற்பயிற்சி நிலையம், ஆஸரா ஆசிரியர் பயிற்சி பள்ளியில் அனைத்துமே உன்னால் தாழ்த்தப்பட்டவரையே நியமித்துள்ளேன். வேண்டுமானால் ஈரோடு முதன்மைக் கல்வி அதிகாரிக்கு எழுதிக் கேட்டுக்கொள்.

12 "ஹிந்து கல்வி நிறுவனம் ஆசிரியரை நியமிக்க வேலைவாய்ப்புத்துறையிடம் கேட்டு அவர்கள் தரும் விகிதாச்சாரப்படித்தான் நியமிக்க வேண்டும். மற்றவருக்கு இல்லை."

காரணம் என்ன? உனது சனாதன வர்ணாசிரம சாதி வெறிதானே! உன்னை சுயமாய் நியமிக்கவிட்டதன் விளைவே மண்டல் கமிஷனும் - மண்டைக்காடுகளும். கவுண்டர் கவுண்டரையே, ஐயர் ஐயரயே, ஐயங்கார் ஐயங்காரையே நியமித்தால் அடுத்த இனத்திற்கு யார் தருவது வாய்ப்பு? உன்னால் அனைவரையும் ஒரே குலன் - ஒரே இனமாய் ஜீரணிக்க முடியாதே!

13 தேர்தல் தேதி விவகாரம்: " நாகாலாந்திலும், மிஜோரமிலும் ஏறத்தாழ (?) கிறிஸ்துவ ராஜ்ஜியங்கள். கிறிஸ்துமஸ் அன்று தேர்தல் வைத்தால் ஓட்டுப் போட முடியாது - அதனால் தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டில் ஜனவரி 21ல் தைப்பூசம். அன்று தேர்தலை தள்ளிவைக்க தேர்தல் கமிஷன் ஒத்துக்கொள்ளவில்லை"

ஐயரே! தேர்தல் கமிஷனர் பெரி சாஸ்திரி ஐயர்தானே! அவரது விதியில் உச்சநீதிமன்றம் கூட தலையிட முடியாதே! நாகாலாந்திலும், மிஜோரமிலும் மலைமக்கள் கிறிஸ்துவை ஏற்க யார் காரணம்? அங்கு போய் இதைச் சொன்னால் உனக்கு என்ன கிடைக்கும்? நீ சொல்வது பாராளுமன்றத் தேர்தல், தைப்பூசம் தமிழகத்தில் மட்டுமே. இதற்காக இந்தியா முழுவதும் தள்ளிவைக்க முடியாது. மாறாக கிறிஸ்துமஸ் உலகம் முழுவதும் - அனைத்து இந்திய கிறிஸ்துவரும் வருடம் ஒரே நாள் கொண்டாடி முடிக்கின்றனர். உனக்கோ வருடம் முழுவதும் திருவிழா! காரணம் உன்மாதிரி பண்டாரப் பரதேசிக்கு பணம் செய்ய மாதம் 2 திருவிழாவை உண்டாக்கி ஊரை உறிஞ்சி உண்டு வருகிறீர்கள். ஊரில் நோன்பு என்றால் உனக்குத்தானே படையலும் அவியலும் உண்டியலும்! தமிழ்நாட்டில் தைப்பூசம் என்று தள்ளிவைத்தால் நாளை கேரளாவில் ஓண்ம் என்பார் - ராஜஸ்தானிலும் குஜராத்திலும் "போகி" என்பார் - ஆந்திராவில் தெலுங்கு வருடப்பிறப்பு, மராத்தி டெல்லியில் ராக்கி, கிருஷ்ண ஜெயந்தி - பீகாரில் மராட்டவில் ஹோலி மற்றும் நாக வழிப்பாடு, கணேஷ் உற்சவம் - இப்படி லட்சம் நோன்பு இருப்பவரும் தள்ளி வைக்கச் சொன்னால் 10 யுகத்துக்கு தேர்தலே இல்லையே! தைப்பூசத்தை ஐயர்கள் ஒத்துக் கொள்வதில்லை. அதனால் தான் தலைமை தேர்தல் பிராமண அதிகாரி அதை நிராகரித்தார் (உனக்கு ஏகாதசி, வைகுண்டமே) இன்று தைப்பூசம் - அடுத்து மாசி மகம் - பங்குனியில் உத்திரம் - சித்திரையில் வருடப்பிறப்பு, சித்ரா பவுர்ணமி - வைகாசியில் விசாகம் - ஆனியில் நோன்பு - ஆடி அமாவாசை கிருத்திகை - ஆவணி ஞாயிற்றுக்கிழமை விரதம் - புரட்டாசி விரதம் - மகரதீபம் - ஐயப்ப பூஜை - இப்படி நாளொரு பூஜை வைத்து என் இனமக்களின் வியர்வை ரத்தத்தை காணிக்கை என்று உறிஞ்சி வாழ்கிறாய்! உன்னை மதிக்காதது நாங்களா?

14 "குழாய் ஒலிபெருக்கி வைத்து முஸ்லிம்கள் 6 வேளை பாங்கு சொல்லலாம். மற்றவருக்கு இல்லை"

முஸ்லிம்களுக்கு 5 வேளைத்தான் - அதுவும் 210 வினாடிகள் அதாவது 3.5 நிமிடம். உனக்கு எங்கே மறுக்கப்பட்டுள்ளது? விடிய விடிய சாமிபாட்டும், சினிமாக் கூத்தும் யார் தடுத்தார்? மைக்செட்டுக்காரன் உன்னை நம்பித்தானே பிழைக்கின்றான்.

15 "மசூதிக்கும், சர்ச்சுக்கும் போகும் பிரதமர் (ராஜீவ்) அவரவர் மரபுப்படி போகிறார்; ஆனால் திருச்செந்தூரில் மரபை மீறி சட்டையுடனும் மனைவியுடனும் அதுவும் கத்தோலிக்க மனைவியுடன் சென்றார்."

பிரதமரே (ராஜீவ்) பிராமணர். சங்கராச்சாரியை சந்தித்த அளவு யாரை சந்தித்துள்ளார்? கோவிலுக்குள் அவர் வரத் தடை போடக் காரணம் உன் உண்டியல் திருட்டு விவகாரம் வெளியே வந்துவிடும் என்பதால் உண்டியல் உழலே உன் கோவிலில்தானே நடக்கிறது. மசூதியில் உண்டியலே இல்லையே. பிரதமரையே தீண்டாமைக்குப் பலியாக்க நினைக்கிறாயே! விதியை மீறியதும் இந்துக்களே கோர்ட்டுக்குப் போவதுதானே?

16 ஹிந்து கோவில் வீதியில் முஸ்லிம் ஊர்வலம் நடத்தலாம் - முஸ்லிம் மசூதி வழியே ஹிந்து ஊர்வலம் போகக் கூடாதா?

போகமலா இருக்கிறாய்? உன் முலதனமே அது தானே! முஸ்லிம் ஊர்வலம் ஒழுக்கக் கட்டுப்பாடு; ஒரு ராணுவ அமைப்பு உன்னுடையது விடிய விடிய டிராபிக்கை இடையூறு செய்து- குடி, கும்மாளம், நையான்டி மேளம், கொட்டு நயனம், புலிவேடம், தடி விளையாட்டு, மயிலாட்டம், கரக ஆட்டம் என்று செல்கிறாய். அரசியல், அரசு ஊழியர், ஏனைய குறை கேட்கும் அமைப்புகள் ஊர்வலம் போகும்போது பள்ளிவாசல் வழியே போகிறார்கள்- யாராவது எதிர்க்கிறார்களா? நீ போனால் தப்பு ஐயரே - நீ சிண்டு முடிவாய் - சீண்டுவாய்! ஊற்றைக் கெடுத்தது நீ, ஆற்றில் நின்று அலறுவது அயோக்கியத்தனம் ஐயரே!

17 "அரபு நாடுகளிலிருந்து பணம் வருகிறது. அது தடை செய்யப்படவில்லை. மாறாக, விஷ்வ இந்து பரீஷத் போபால் விஷ வாயுவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாட்டிலிருந்து வசூலிக்க இருந்ததை அரசு தடை செய்தது."

அப்படியா ஐயரே - அடடா! என்ன கரிசனம்? இது உண்மையானால் அப்படி தடை செய்யப்பட்ட உத்தரவின் நகலை கொண்டுவா. அல்லது உனக்கு எடுபிடியாய் இருக்கும் எத்தனையோ "தின" ஏடுகளுண்டு. அதில் போட்டு விடு. ஒரு வாரத்தில் உச்சநீதிமன்றத்தில் உத்தரவை எனது செலவில் நான் வாங்கித்தருகிறேன். அல்லது கோர்ட்டுக்குப் போகப் போவதாகச் சொல் உனது செலவை நான் ஏற்கிறேன். இப்பொது கூட ராமனுக்கு கோவில் கட்ட ரூ.700 கோடி வசூலித்து வைத்துள்ளதில் கொஞ்சம் தரலாம் ஐயரே. இப்போது வி.பி.சிங் சர்க்கார் உங்களுக்கு சட்டவிரோதமாய் வருமான வரி நடவடிக்கைகளை நீக்கி உள்ளதே! உன் "படுதா" வேலைக்குத்தான் பாரதீய ஜனதா உள்ளதே! ஐயரே அளந்து விடுமய்யா! போபால் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி விசேஷ சிகிச்சை தர பெரிய ஆஸ்பத்திரி வேண்டும். அதுவும் 30 ஆண்டு ஆய்வுப் பணியாற்ற வேண்டும். காரணம் பல வாரிசுகள் வாயுக்கசிவினால் பாதிக்கப்படுவர். எனவே இந்திலையை சவூதி அரசுக்கு எழுதி - நேரில் சென்று - இந்திய தூதுவர் மூலம் முதல் தவணையாக ரூ. 20 கோடியும் அடுத்து ரூ. 40 கோடியும் ஆக ரூ60 கோடியை அன்றைய பிரதமர் ராஜீவ் வசம் தர வைத்தது நா- ந் தான் வேண்டுமானால் ஐயரே - மத்திய அரசு உன் கையில் தானே! பிரதமருக்கு எழுதி கேள். உண்மையாக இல்லாவிடில் உன் எடுபிடி ஏடுகளில் பகிரங்கமாக வெளியிடு. நிருபிக்கின்றோம். அல்லது நாங்கள் எடுத்துவைக்கும் ஆதாரங்களையும் உனது ஆதாரங்களையும் தினமனி, தனமலரின் முதல் பக்கத்தில் வெளியிட நீ தயாரா? ஒரு நாள்- ஒரு வாரம் ஆகும் செலவை பேப்பருக்கு நான் கட்டத்தயார்! அரபு நாடுகள் நாசவேலைக்கு பணம் தந்ததாக காலணாவாக இருப்பினும் ஆதாரப்பூர்வமாய் வெளியிட தயாரா? அப்படி நீ வெளியிட்டால் உன் கக்கூஸ்களை நாங்கள் கழுவத்தயார்! நீ நிருபிக்காது விட்டுவிட்டால் -? குறைந்தபட்சம் உண்மை பேசும் மனிதனாக இரு! ஆலய அநியாயம் பற்றி சில பிதற்றல்- அதற்கும் முஸ்லிம்களுக்கும் சம்பந்தமில்லை - அது உன் பாடு; உன் சமுகத்தின் பாடு.

18 " உங்கள் கோவில் வரிப்பணத்தில் மெளலவிகளுக்கு ஓய்வு ஊதியம் வழங்குவதாக குற்றம் இருபொருள்படும்படி கடைசி இரண்டு பாராவிலும் எழுதி உள்ளாய்."

அளவாய் புளுகும் ஐயரே! மெளவிகள் வட்டிக்காசு - சிலை வணக்கக்காசில் உண்பது தவிர்க்கப்பட்டது. அவர்களுக்கு பணம் வக்பு போர்டில் தருகிறார்கள்.

19 " சினிமா- நாடகங்களில் இந்துக்களை கேவலப்படுத்தியும் முஸ்லிம்களை உயர்வாகவும் காட்டி இருப்பதாகக் கூறுகிறாய்."

ஐயர்வாள்! இந்துக்கள் விஷயமாய் கோர்ட்வரை சென்று மூஞ்சியில் கரியைப் பூசிக்கொண்ட உங்கள் பலரின் வரலாறு எங்களுக்கு மனப்பாடம். முஸ்லிம்களை உயர்வாக எத்தனைப் படத்தில் காட்டி உள்ளார்கள் ஐயரே? ஏன் நீ தான் அப்படி எடுத்துப்பாரேன்! படம் எந்த தியேட்டரில் ஓடும் என்று பாரேன்!

20 இராமேஸ்வரம் உலக முழுவதும் உள்ள இந்துக்களுக்கு புனித யாத்திரை ஸ்தலம். அதை மெக்கா-வாடிகன் - அமிர்தசரஸ் போல் அறிவித்து அங்குள்ள முஸ்லிம் - கிறிஸ்துவரை வெளியேற்ற வேண்டும்."

ஐடியா அற்புதம் ஐயரே! உங்களவர் பழமொழி உண்டு "கந்தனுக்கு கவனம் கவட்டைக்கடியே"ன்னு. மக்கா -வாடிகன் - அமிர்தசரஸ் இவை முறையே முஸ்லிம் - கிறிஸ்துவ (கத்தோலிக்கர்)- சீக்கியர்களின் புனித யாத்திரை ஸ்தலம் என்று கூறுகிறாயே! வேறு எதையாவது அவர்களது புனித யாத்திரை ஸ்தலமாகக் கூறமுடியுமா? கிறிஸ்துவர் 200 கோடி பேருக்கு ஒரு யாத்திரை ஸ்தலம். முஸ்லிம்கள் 140 கோடி பேருக்கு ஒரே ஒரு யாத்திரை ஸ்தலம். ஆனால் உனது டூர் புரோகிராம்கள் பேப்பரில் வருகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை (நல்லவேளை லெமூரியா நீரில் மூழ்கியது) உனக்கு காசு வரும் இடமெல்லாம் காசியாக்கி புனிதமாக்கி மக்கள் (பணத்துடன்) புறப்பட வைத்துவிடுவாய். அதற்கு புராணக்கதையும் புளுகி வைப்பாய்.

ராமேஸ்வரம் யாருக்குப் புனிதஸ்தலம்? உன் மாதிரி 2.5% உள்ள விஷ்னு பக்தனுக்கு அது புனித இடம்தானே! மறைந்த எம்.ஜி,ஆர் முதல்வராய் இருந்தபோது அமெரிக்கா சென்றுவிட்டு வந்ததும் ஹானலூலூ போல் இராமேஸ்வரத்தை ஆக்குவேன் என்று அறிவார்ந்த(?) அறிவியல் அறிக்கை விட்டாரே! ஐயரே நீர் அப்போது மெளனம் சாதித்தாயே! என்ன பொருள்? ஹானலூலூ (ஆண்களும் பெண்களும் அம்மணத்தோடு இருக்கும் கடற்கரை) என்றவுடன் உனக்கு இளமை தட்டியதோ? புனித இடத்தை (?) பொழுதுபோக்கும் போக இடமாக்குவதாக அறிவித்தபோது நீ பொங்கி எழவில்லை. காரணம் நீ அதைகூட போகயோகம் - அப்சரஸ்களின் சங்கமம்- அதுவும் அஜந்தா, எல்லோரா போல் ஆழ்ந்த ஆன்மீகம்- பரியங்கயோகம்- (கட்டில்யோகம்) ரசலீலை- பவுந்தரியாகம் காமராஜன் கோஷல் என்று கூறி காசு பறிக்கத் திட்டமிட்டீரோ? நீ விஷ்ணு பக்தன் - சிவனடியார்களின் எதிரி! எப்படி அவர்களை (தென்னாட்டவரை) ஏமாற்றி விஷ்ணு பக்தர்களாக்குவது என்பது உன் கவலை. உனக்கிருக்கும் மூளையே மூளை, அய்யரே! ஆயிரம் இருந்தாலும் உன் இறக்குமதி கடவுளின் மேல் உன் விசுவாசத்தை பாராட்ட வேண்டும்.

21 "26- 7- 83 டென்மார்க்கில் விஷ்வ ஹிந்து பரீஷத் சார்பில் அகில உலக இந்து மாநாட்டுக்கு பாரதத் தூதரகம் உதவவில்லை."

தூதருக்கு இதுவல்ல வேலை. மேலும் உமது வி.இ.ப நாட்டின் சமூக அங்கமல்ல. மாறாக, அரசு பைலில் அது தேச ஒற்றுமைக்கு வெடிவைக்கும் தீவிரவாத இயக்கம். வெகுஜன ஆதரவற்ற பார்ப்பன இயக்கம். இது டென்மார்க்கில் இம்மாநாட்டை அதிகாரப்பூர்வமாய் அனுமதி பெற்று நடத்தவில்லை. மாறாக, ஏதோ "கல்சுரல் புரோகிராம்" என்று புளுகி வாங்கிய அனுமதி - காரணம் டேனிஷ் அரசு மதக் கூட்டங்களுக்கு அனுமதி தராது. அது கத்தோலிக்க நாடு அய்யரே! தொழுநோய் இல்லம், பள்ளி, முதியோர் இல்லம் போன்ற சமூக சேவையை உலகெங்கும் செய்து புகழ் பெற்ற புனித நாடு அய்யரே! உன்னை உள்ளே விட்டதே தவறு. உன் சப்ஜக்ட் எங்கோ ஆரம்பித்து எங்கோ கூனிக்குறுகிப் போகிறது ஐயரே!

22 " 1987ல் நேபாளத் தலைநகர் காட்மண்டுவில் நடந்த உலக இந்து மாநாட்டுக்கு பாகிஸ்தான் - பங்களாதேஷ் போன்ற முஸ்லிம் நாடுகள் கூட தங்களது பிரதிநிதிகளை அனுப்பின. இந்தியா அனுப்ப மறுத்தது."

உண்மையை உன் வாயினாலேயே உளறி விட்டீரே! பாகிஸ்தான் பங்களாதேஷிலிருந்து இந்து பிரதிநிதிகளை அனுப்பும் அளவுக்கு உன் சுதந்திரத்தில் தலையிடுவதில்லை. பார்த்தாயா, முஸ்லிம்களின் பெருந்தன்மையை! இந்த இரு நாடுகளுடன் மலேசியா, இந்தோனேசியாவை ஏன் ஐயரே மறைத்தீர்? மேலும், உன் குற்றச்சாட்டு தேவையற்றது. "சார்க் குழுவில்" மெம்பராய் உள்ள நாடுகளில் நேபாளம் ஒன்றுக்குத்தான் விசா இல்லாது இந்தியர் சென்று வரலாம். இதற்கு இந்தியா ஒன்றும் அனுமதி தர வேண்டியதில்லை. இந்தியர் எப்போது வேண்டுமானாலும் நேபாளம் போகலாம். இந்திய அரசுக்கு நேபாள அரசு எழுதி இந்துக்கள் சார்பாக ஒரு ஆளை அனுப்பச் சொன்னார்கள். இங்கே ஒரு பண்டாரப் பரதேசிப் பட்டாளமே (பார்ப்பனர்) இந்து என்ற பெயரில் கொள்ளை அடித்து வாழ்வது அவனுக்குத் தெரிய நியாயமில்லை. ஐயரே! இந்திய அரசு நெளிவு சுளிவு தெரிந்தவர்கள். யாரை ஐயா அனுப்புவது? சங்கராச்சாரிகளே ஐவர் உள்ளனரே! இந்துக்களுக்கு மொத்தமான கூட்டமைப்புக் கூவியம் ( CENTERFOCUS POINT ) இல்லை - யாரை இந்துக்களின் ஏகபோகத் தலைவராக்குவது? யார் இந்து என்பதே பிரச்சினை. இதில் தலைவரா? அதுவும் மதத்துக்கு (?) 20 கோடி மடாதிபதிகள்- 20 கோடி சாதிச் சன்னிதிகள்- 20 கோடி பிரிவுகள் (60 கோடி சரியாயிற்று) அவ்வளவு பேரும் இந்துக்களின் மதத் தலைவர்தானே? போதாக்குறைக்கு ரோமியோ சாமியான ரஜனஷ்- ரொமான்ஸ் சாமியான சந்திர சாமி, தீரேந்திரரிலிருந்து ஜெயெந்திரர் சாயிபாபாக்கள் வரை! ஊரையே கூட்டி வாந்தி எடுத்த இடத்தில் எது யாரோடது என்று எப்படியய்யா எடுத்து பரிசோதிப்பது? உனக்கு ஒரு அமைப்பு இல்லாத அனாதைத்தனந்தானே உன்னையே இந்து முன்னணி என்ற ஒன்றை ஏற்படுத்த வைத்தது. நீயே உன்னுடைய நூலின் 21ம் பக்கத்தில் "என்ன செய்யவேண்டும்" என்ற தலைப்பில் எழுதியுள்ள முதல் கட்டளை என்ன?- "ஒவ்வொரு ஊரிலும் R.S.S - ஹிந்து முன்னணி- விஸ்வ இந்து பரீஷத் கிளைகளைத் துவங்குவது" என்று செயல் திட்டம். ஏன்யா ஒன்றைக்கூட உருப்படியா விடாம மூன்று உண்டாக்கணுமா? ஏன்? ஐயர் தலைவனாக இருக்கும் இடத்தில் ஐயங்கார் இருக்கமாட்டான் - ஐயரை விஸ்வகர்மா ஏற்றுக்கொள்ளமாட்டார்- செட்டியார்கள் நாயக்கரை ஏற்றுக்கொள்ளமாட்டார். உனக்குள் இருக்கும் சாதிப் பாகுபாடுதான் ஒரு அமைப்பை உருவாக்குவது மிகமிகக் கடினம் என்பது உனக்குப் புரியும். இது நீ போட்ட விஷம்தான் - அருந்து- அனுபவி! ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் உன்னால் சிறக்க முடியாது ஐயரே!

வள்ளுவர் கூற்று தெரியுமா?

"பிறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்."


உன் வேஷத்தை சரியாய் தோலுரித்தவர் லாலா லஜபதி ராய். அவர் கூற்றுப்படி-

" இந்தியாவில் ஏற்பட்ட சமுதாய சீர்திருத்தங்களெல்லாம் சென்னயிலுல்ள பார்ப்பன பாறையில் மோதி நொறுங்கின. தென்னாட்டில் ஒரு விதமான வகுப்புவாதிகள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் வகுப்புவாத உணர்ச்சியை மறைத்துக் கொண்டு மற்றவர்களை வகுப்புவாதிகள் என அழைப்பர்."
- லாலா லஜபதி ராய்

" புலி தன் மேலுள்ள புள்ளிகளை மாற்றினாலும், எத்தியோப்பியன் (அபிசினியன்) தன் தோலின் நிறம் மாற்றிக் கொண்டாலும் பார்ப்பான் தன் இனப்பற்றை எப்போதும் மாற்றிக்கொள்ள மாட்டான்." - D.M நாயர்

சூத்திரனுக் கொருநீதி;- தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொருநீதி;
சாத்திரம் சொல்லிடுமாயின் - அது
சாத்திரமன்று சதியென்று கண்டோம்."

- பாரதியார்

" ஊர்பானை தன்னை
உருட்டி உயிர்வாழும்
பார்ப்பானை நீக்கி
பழிகள் தீர்ப்பானை
கையும் சடங்கு
அகற்றி நற்றமிழர்
ஒப்புமணம் செய்வாயோ?"

- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

23 " நமது நாட்டில் முஸ்லிம் ஒருவர் ஜனாதிபதி உட்பட இராணுவ தளபதியாகக்கூட அமர்கின்றனர். ஆனால் முஸ்லிம் நாடுகளில் ஹிந்துக்களுக்கு கெளரவமான பதவி உத்யோகம் உண்டா?"

ஐயரே! ஐம்பது ஆண்டுகளில் 2 ஜனாதிபதி - 21% முஸ்லிம்கள் சார்பில். நீ சார்ந்துள்ள பார்ப்பனர் 2.5% ; ஆயினும் இதுவரை வந்த பிரதமர்களில் சரண்சிங், வி.பி.சிங் தவிர அனைவருமே பார்ப்பனர்கள்தானே? ஏன் தாழ்த்தப்பட்ட குடிமகனுக்கு பிரதமர் பதவி தருவதுதானே- எதோ உங்கப்பன் வீட்டுச் சொத்தை தருவதாக அல்லவா பிரமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். உன் அடிப்படை வாதமே தவறு. இருப்பினும் பதில் அளிக்கின்றோம். மலேசியா முஸ்லிம்கள் நாடு, அதில் டத்தோ சாமிவேலு முழு சுதந்திரத்துடன் உள்ளாரே மற்ற நாடுகளில் இந்துக்கள் குடியுரிமையுடன் வாழ்வதில்லை. குடியேறிகளாகவே உள்ளனர். உளறாதே ஔஐயரே!

24 இஸ்லாம் துவங்கி 1400வது ஆண்டு விழாவை பாரத அரசு கொண்டாடியது. ஆனால் இந்து தர்ம விழாவை கொண்டாடியதா?

இந்து தர்ம விழாவா? இன்னும் ஒரு புதிய கண்டு பிடிப்பா? நல்ல வருமானம் ஐயரே! இஸ்லாத்துக்கு வரலாறு உண்டு. இந்தியாவுக்கு வரலாறு உண்டு. உனக்கு என்ன ஐயரே உண்டு? இந்து மதம் யாரால் எப்போது எங்கு உண்டானது? சொல். கொண்டாட ஏற்பாடு செய்வோம்.. ஒரு நாள் கொண்டாடிவிட்டால் ஏதோ இஸ்லாமியர் அனைவருக்கும் ஆளுக்கு 10 ஏக்கர் பட்டா கிட்டிவிட்டதைப்போல் கூத்தடிக்கிறாயே! உனது விடுமுறை நாட்களையும் எனது விடுமுறை நாட்களையும் கீழேயுள்ள பட்டியலில் பார்! யார் அரசை உறிஞ்சி வாழ்வது என்று பார்! இன்றுள்ள கவர்னர்கள் 23 பேரில் 1 ஆள் மட்டுமே முஸ்லிம், மீதியுள்ள 22ல் 17 பேர் பார்ப்பனர். உச்சநீதிமன்ற நீதிபதிகளில் 12பேர் பார்ப்பனர். இன்னும் கணக்கு வேண்டுமா?
இந்துக்களின் விடுமுறை நாட்கள்: வைகுண்ட ஏகாதசி, போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், கன்னிப் பொங்கல், தை அமாவாசை, தை கிருத்திகை, தைப்பூசம், மகா சிவ ராத்திரி, மாசி மகம், ராம நவமி, பங்குனி உத்திரம், தமிழ் வருடப்பிறப்பு, சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆடி 18, ஆவணி அவிட்டம், கோகுலாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, மஹாளய அமாவாசை, சரஸ்வதி பூஜை, விஜய தசமி, தீபாவளி, திருவண்ணாமலை தீபம், ஓணம், குருநானக் ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி, சந்திரயுகாதி, திருக்கார்த்திகை இன்னும் எத்தனையோ.

முஸ்லிம் விடுமுறை நாட்கள்: ரம்ஜான், பக்ரீத், முஹர்ரம், மீலாது நபி.

கிறிஸ்துவர் விடுமுறை நாட்கள்: ஆங்கிலப் புத்தாண்டு, நல்ல வெள்ளி, கிறிஸ்திமஸ், ஈஸ்டர் தினம்.

ஏய்யா ஐயரே! இது போதுமா இல்லை இன்னும் வேணுமா? கொஞ்சமா குடித்தா அறிவு தடுமாறாது. புலியைப் பார்த்து பூனை சூடு போட்ட கதை ஆயிடும் ஐயரே!

25 "மராட்டியத்தில் முஸ்லிம்கள் 10% அங்கு அப்துல் ரகுமான் முதல்வராகலாம். பீகாரில் அப்துல் கஃபூரும் புதுவை மாநிலத்தில் பரூக் மரைக்காயரும் முதல்வராக முடியும். ஆனால் 30% இந்துக்கள் வாழும் ஜம்முவில் இந்து முதல்வராக முடியுமா?"

கெட்டிக்காரனய்யா நீ! முதல்வர்களை என்றாவது 5 வருடம் விட்டு வைத்தாயா? உன் பார்ப்பனக் கவர்னர் ஆட்சி இருக்க வேண்டும். அதற்காகவே டிஸ்மிஸ் செய்து எப்போதும் ஜக்மோகப் பார்ப்ப்பான்களுக்கு காஷ்மீரத்து கட்டழகு மீது கள்ளக்காதல்.

ஏனய்யரே! 10 சதவீதம் பேர் உள்ளவன் முதல்வராகக் கூடாது- வருவது பாவம். ஆனால் 2 சதவீதம் கூட இல்லாத உன் அவாள் எப்படி ஜனாதிபதியாகவும், பிரதமராகவும் உயர்நீதிபதியாகவும், ராணுவ தளபதியாகவும் (மேனக்ஷா தவிர) கவர்னர்களாகவும் வரலாம்? பேசாமல் பார்ப்பனர்கள் ராஜினாமா செய்து அதிக சதவீதம் உள்ள அரிஜன சகோதரர்களை அங்கு பதவியில் அமர்த்தி வழிகாட்டு. நாங்களும் விட்டு விடுகிறோம். ஊருக்கு நியாயம் சொல்வதைப் போல் உன் தவறுகளையும் மறைக்காதே.

26 " சீனாவிலோ, ரஷியாவிலோ ஏன் முன்னேறிய எந்த நாட்டிலும் ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனி சட்டங்கள் கிடையாது. ஆனால் இந்தியாவில் மட்டும் உண்டு."

ஐயர்வாள்! சீனா- ரஷியாவில் உன் மாதிரி பத்தாம் பசலி பஞ்சாங்க பரதேசி, பண்டார சன்னதிகள்- குருமாகன்கள்- ஞானபீடங்கள்- சாதி துவேஷிகள்- சனாதனங்கள்- வர்ணாசிரமங்கள் கிடையாது. மேலும், அது ஒரே நாடாக (Nation) உள்ளது. இந்தியா ஒரு நாடல்ல ஐயரே! வேண்டுமானால் இந்திய சாஸனத்தை (Constitution) எடுத்துப் பாரய்யரே! Indian Nation என்ற வார்த்தையை காட்டு. Indian Union தானிருக்கும். இது ஒரு தேசம்- நாடல்ல! India is a country but not a nation but group of Nationalities. உன் பண்டாரச் சன்னதி படையெடுப்பால்தான் ஒரு திராவிட இனம் சிதறி இப்படியானது. ஆமை நுழைஞ்ச வீடும் ஐயர் நுழைஞ்ச வீடும் மாதிரி!

27 "மத அடிப்படையில் ஜனத்தொகை விகிதாச்சார அடிப்படையில் ராணுவத்தில் ஆள் சேர்க்க வேண்டும் என அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இப்படி சேர்த்தால் என்ன நடக்கும்? 1947ல் கல்கத்தாவில் நடந்த கலவரத்தில் உயர்மட்ட அதிகாரிகள் 24பேரில் 22பேர் முஸ்லிம்களாய் இருந்ததில் 10 ஆயிரம் பேர் படுகொலை; 15 பேர் வீடிழந்தனர். ஆயிரக்கணக்கான ஹிந்து விதவைகள் கடத்தி செல்லப்பட்டனர்."

அருமையான கற்பனை ஐயரே! அரசு கூட இந்தப் புள்ளி விவரத்தை இவ்வளவு அழகாய் வெளியிட முடியுமா? நீங்கள் இதை பாராளுமன்றத்தில் RSS மூலம் தந்து, அன்றே நேருவால் மறுக்கப்பட்ட கதையை ஏனய்யா மறைக்கிறீர்?

பாகல்பூரில் உனது ஜாதி போலிஸ் நடத்திய வேட்டை மீரட் ஜோத்பூர் பிவண்டி, டாடா நகர் இப்படி பல ஊரில் நடந்த கலவரத்திற்கும் தூண்டுதலுக்கும் அரசும்- போலீசுமே காரணம் எனக்கூறி பல பேரை சஸ்பென்ட் செய்தனரே- இதை ஏன் மூடிமறைக்கிறாய்? ராமாயணப் புளுகு விட்டுப் பழகிவிட்ட உன்னைத் திருத்தவே முடியாது.

28 "அரசு அலுவலகங்களில் வேலை பார்க்கும் முஸ்லிம்களுக்கு வெள்ளி தொழுகை நடத்த நேரம் ஒதுக்கப்படுகிறது. இந்துக்களுக்கு இல்லை."

உனக்கு எந்த நேரத்தை ஒதுக்குவது? நீ மலடன் என்பதற்காக மற்றவர் பிள்ளையே பெறக்கூடாது- 'காயடி' என்று கூறுவது போலுள்ளது. அரசு அலுவலகங்களில் அப்படி ஒரு நேரம் ஒதுக்கி உள்ளதாக நிருபி பார்க்கலாம். முஸ்லிம்கள் 1- 15க்கு தொழுது 1- 30க்கு சாப்பிட்டு, 2 மணிக்கு அலுவலகம் செல்கிறார்கள். அந்த தொழுகையையும்- அட்ஜஸ்ட் செய்து லன்ச் (LUNCH) பிரேக்கில் நடத்துகிறோம். உனக்கு குறித்த நேரத்தில் தொழுகை இல்லையே! கூட்டுத் தொழுகையும் இல்லை- அதுதான் எல்லா அலுவலகத்திலும் ரவிவர்மா கைவண்ணம் உள்ளதே- போதாதா?- நீயும் வாழமாட்டாய்- ஊரானையும் வாழவிடமாட்டாஎ. உன் புத்தி ஊர் அறிந்ததுதானே!

29 "குர் ஆனிலும் பைபிளிலும் உள்ள வசனங்கள் வன்முறையைத் தூண்டுவதாக உள்ளன. பிற மதங்களின் மீது வெறுப்பை வளர்ப்பதாகவும் உள்ளன. ஆயினும் அரசு தடை செய்யவில்லை."

இதே குர் ஆன் ஐரோப்பாவிலும் பைபிள் அரேபியாவிலும் உண்டு மாறாக முஸ்லிம் பைபிளையோ கிறிஸ்துவன் குர் ஆனையோ தடை செய்ய கடந்த 15 நூற்றாண்டுகளில் ஒரு முறை கூட கூறியது இல்லை. இருந்தும் அந்த நாடுகள் வளர்ச்சியுற்றன. இருப்பினும் பைபிளை நாங்கள் விமர்சிப்பது ஆரோக்கியமாகவே மாற்றாரால் எடுத்துக்கொள்ளப்படுகிறது. உனக்கு அலர்ஜி, அச்சம்- திருடனே திருடன் என்று கூவினால்தானே யாரும் அவனை சந்தேகிக்கமாட்டார்கள். ஏதோ குர் ஆனில் மட்டும் வன்முறை உள்ளதாகவும் நீ அன்பின் நிருற்றாகவும் கூறியுள்ளாய். குசலம் விசாரித்தே கோடிக்கணக்கான சமணர்களை கழுவிலேற்றிக் கொன்ற கொலைக்கார வம்சமல்லவா நீ! உன் கல்கத்தா காளி கையில் ஆயுதங்கள்- கழுத்தில் மண்டை ஓடுகள்- வாயில் ரத்தம்- ஒன்றுக்கு 10 கைகள்- காலுக்கடியில் மனித உயிர்களை மிதித்தவண்ணம்- பார்த்தாலே குழந்தைகள் கூட பயப்படும்படி இருக்கிறதே உலகிலேயே ஆயுதத்துக்கு பூஜை போட ஆண்டுக்கொருமுறை அரசு விடுமுறை விடும் அக்கிரமம் எங்காவது உண்டா? ஆயுதமேந்தாத அவதாரப் புருஷன் உண்டா? அம்மன் கையில் கூட சூலாயுதம்! உனது (RSS) ஊர்வலங்களில் அதனை ஏந்திக்கொண்டு ஜெய்காளி- ஓய்காளி என்ற காட்டுக்கூச்சல்! அம்மன் கையில் சூலம்! முருகன் கையில் வேல்! அய்யனார் கையில் அரிவாள், குத்துவாள், வெட்டுவாள், பிச்சுவாள்! ராமனுக்கு வில்லும் அம்பும்! (எதற்கு கண்ணாமூச்சி விளையாடவா?) கிருஷ்ணன் கையில் பல் கொண்ட சக்கரம்- கடாயுதம்! அனுமன் கையிலேன்ன அவலா இருக்கிறது?

ஆயுதந்தாங்காத சாமிகள் உண்டா ஐயரே! அன்பே சிவமென்கிறாய்! அவன் கையில் என்ன ஆப்பிளா இருக்கிறது? ஒன்று அம்மணத்தோடு நிறுத்தியிருப்பாய் அல்லது ஆயுதத்தோடு நிறுத்தியிருப்பாய். இதுதானே உனது காட்டுமிராண்டிப் பண்பாடு? அனாச்சாரத்தையும் அசிங்கத்தையும் தவிர உன்னிடம் அழகிய முன்மாதிரி ஏதாவது உண்டா?

எண்ணாயிரம் சமணர்களை கழுவிலேற்றிக் கொன்ற திருஞானசம்பந்தனும் ஒரு ஐயனே! அவன் மட்டுமா? ஆழ்வார்களும் சமணர்களை- பெளத்தர்களைக் கொன்றுள்ள வரலாறு பாலர் பள்ளிகளில்கூட உண்டு. போய்ப் பார்! தொண்டரடிப்பொடியாழ்வாரின் பாடல்களனைத்தும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் சமணர்களையும் பெள்த்தர்களையும் கொல்லச் சொல்லி இருக்கிறதே! என்ன அர்த்தம்? கூன்பாண்டியன், பல்லவன், மங்கையர்க்கரசி அனைவருமே சமணத்துறவிகளைக் கொன்ர கொலைகாரர்களே! நீயா வன்முறை பற்றிப் பேசுகிறாய்? இதோ உன் இந்து மதம் கூறுவதைக் கேள்! நான் சொல்வது கோடியில் ஒரு பங்கு.

1. ரிக்வேதம்:

காற்று, நீர், இடி, மழை (இந்திரன்) போன்ற இயற்கை சக்திகளைக் கடவுளாகக் கருதி, அவற்றைப் போற்றவும், அவற்றின் சினத்தை ஆற்றவும் எண்ணி, இயற்றப்பட்ட பாடல்களே ரிக்வேதம் ஆகும். தங்களைக் காக்கும்படியும் பகைவர்களை (பிராமணரல்லாதவர்களை) அழிக்கும்படியும் இந்த இயற்கை சக்திகளைப் பார்த்து, ஆரியர்கள் பாடிய பாடல்களே இவ்வேதத்தில் அடங்கியுள்ளன.

2. சாமவேதம்:

பிற்காலத்தில் ரிக்வேதப் பாடல்களில் பல எளிய இலக்கணம் அமைந்த ஓர் இசையைப் புகுத்தி பாடப்பட்டதே சாமவேதம் ஆகும். சாமவேதம் தோன்றிய விதம்பற்றி வரலாறு கூறும் உண்மை இது. ஆனால், வேதம் இறைவனால் தோற்றுவிக்கப்பட்டது என்று இந்து மதம் கூறுகிறது. அதே இந்து மதத்தின் ஒரு பகுதியாகிய வால்மீகி இராமாயணத்தில், உத்திரகாண்டம் 16வது சருக்கத்தில், கைலாயமலையில் சிக்குண்ட ராவணன் சிவனை நினைத்து, மனம் உருகிப் பாடிய பாடல்கள்தான் சாமவேதம் என்று குறிப்பிடப்பெறுகிறது. இந்துமதம் கூறும் இந்த இரண்டு கருத்துகளில் எது உண்மை? இந்து மதமே ஒரே உளறல் மயமான மதம் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு.

3. யஜுர்வேதம்:

இயற்கை சக்திகளை வணங்கிய ஆரியர்கள், சமயச்சடங்குகளைச் செய்யும் பழக்கங்களைப் பின்னாளில் உண்டாக்கினர். சடங்குகளையும் யாகங்களையும் செய்யும் முறைகளை விளக்குவதே யாஜுர்வேதம்.

4. அதர்வண வேதம்:

ஆரியர்களின் முற்கால வாழ்வையும், பிரார்த்தனை மந்திரப் பாடல்களையும் கூறுவது அதர்வண வேதமாகும்.

இதுதான் வேதங்கள் பற்றிய விளக்கம். இந்த வேதங்களில் என்ன சிறப்பு உள்ளது? இவைகளால் நாட்டிற்கும், வாழ்விற்கும் என்ன நன்மை? நன்மை இல்லாமல் போனால் போகட்டும். தீமையாவது இல்லாமல் இருந்தால் பரவாயில்லை. மனிதனை மடையனாக்கி, சடங்கு சங்கிலிகளால் அவனுக்கு விலங்கிட்டு, பொருட்களை வீணடித்து, யாகம் செய்யச் சொல்லி விபரீதம் புரிகின்றன.

ஆம், வேதங்களை ஆராய்ந்தால் இந்த உண்மை நன்கு புலப்படும். இனி, வேதங்களில் காணப்படும் அநியாய ஆபாசப் போதனைகளில் ஒரு சிலவற்றை இங்கு விளக்குகிறேன்.

"ஸுமித்ரிய ந ஆப ஒஷதய ஸந்து துர்மித்ரியா
ஸதஸ்மை ஸந்து யோஸ் மான் த்வேஷ்டியம் சவயம் த்விஷ்ம"
(யஜுர்வேதம்)

பார்ப்பனர்கள் நாள்தோறும் பாடுகின்ற யஜுர்வேதப் பாடல் பகுதியே இது இதன் பொருள் என்ன தெரியுமா?

கண்ணீர், தானிய வகைகள், பிராணவாயு முதலிய உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருட்கள் யாவும் எங்களுக்கு (பிராமணர்களுக்கு) நன்மை பயப்பனவாகவும் எங்களால் வெறுக்கப்படுகின்ற மனிதர்களுக்குத் தீமையைச் செய்வனவாகவும் ஆகவேண்டும். வேத ஸ்மிருதிக்கு இணங்கி நடக்காத பகுத்தறிவுவாதிகளுக்கு இவ்வுலகம் விஷமாகப் போகட்டும் என்பதே.

ஆரியர்களின் நலன் கருதி எழுதப்பட்டவையே வேதங்கள் என்பது இதிலிருந்து புரியவில்லையா? வேதங்கள் மட்டும் அல்ல, வேதங்களுக்கு விளக்கம் தர வந்த ஸ்மிருதிகளின் போதனைகளை ஆராய்ந்தால் ஒரே அபத்தம்.

வாயால் சொல்லவும், நூல்களில் எழுதவும் முடியாத எண்ணற்ற அநியாய, ஆபாசக் கருத்துக்களை அவை போதிக்கின்றன. அவற்றைக் கூறவே எனக்கு வெட்கமாக இருப்பினும் வேறுவழியின்றி அவைகளும் சிலவற்றை இங்குக் குறிப்பிடுகிறேன்.

" பிராஹ்மணோ ஜாயமானோ ஹிப்ருதிஸ் யாம் அபியாஜதே ஈஸ்வா ஸர்வ பூதானாம் ப்ரஹ்ம கோசஸ்யகுப்த யே"

" ஸர்வஸ்வம்ப் ராஹ்மணஸ்யேதம், யத்கிஞ் சிஜ்ஜகதீகதம் ஸ்ரைஷ்டைனா பிஜனேனேதம் ஸர்வம் வைப்பிராஹ் மணோர் ஹதி"

" ஸ்வமேவப் ராஹ்மணோ புங்க்தேஸ்வம் ததால்ச; ஆன்ருமிம்ஸ்யாத் பிராஹ்மண ஸ்யயுஞ்ஸதே ஹிதரே ஜனா" என்று மனு ஸ்மிருதி கூறுகிறது.

அதாவது, சகல பிராணிகளுக்கும் தலைவனாயும், வேதமாகிய களஞ்சியத்தின் காவலனாயும், பிராமணன் படைக்கப்பட்டிருப்பதால், இப்பூமியிலுள்ள ஒவ்வொரு பொருளுக்கும் பிராமணன் உரிமையுள்ளவனாவான். பிராமணன் பிச்சை எடுத்து உண்பானாயினும், பிறர் உண்பதும், கொடுப்பதும் அவன் பொருளே ஆகும் என்பதே மனு கூறுவதற்கு அர்த்தம்.

" தாதவ்வம் ப்ரத்யஹம் பாத்ரே நிமித்தேஷு விசேஷத் யாசிதேனா பிதாதவ்யம், ஸ்ரத்தா பூதத்து சக்தித்;" என்று யாக்ஞ வல்கியர் கூறுகிறார்.

அதாவது, பிராமணனுக்கு தினமும் நாணயமும் கொடுக்க வேண்டும். கையில் ஒன்றுமில்லாவிடில் பிச்சை எடுத்தோ அல்லது மற்ற எந்த வகையிலோ கொடுத்தே தீர வேண்டும் என்பதே யாக்ஞ வல்கியர் கூறுவதற்கு அர்த்தம்.

இதே கருத்தை "அஹாஹர்தம் யாதுத பரத்ராதி" என்ற வேதவாக்கியம் கூறுகிறது. அதாவது பிராமணனுக்கு பசு தானம் வழங்கியவன், அப்பசுவிற்கு எத்தனை மயிர்கள் இருக்கின்றனவோ அவ்வளவு காலம் சுகத்தை அனுபவிப்பான் என்பது இதற்குப் பொருள்.

" அதா நருணாமாத்னம வரருத்வாயோ ததாதீக தர்த்தீனே;
ஸ்வைபோஷண ஜாத்பாபாத் முக்தோ பவதி தத்ஷனம்" என்றும் யாக்ஞ வல்கியர் கூறுகிறார்.

அதாவது பிறருக்குக் கொடுக்காத லோபியின் பொருளை கொள்ளையிட்டு பிராமணனுக்கு கொடுக்கிறவன் அக்கணமே திருட்டினாலுண்டான பாபத்தினின்றும் விடுபடுகிறான் என்பதே அவர் கூறுவதற்கு அர்த்தம்.

கோதம ஸ்மிருதியில்,
" தேனே சோத்தரஸ்ததர்த் தோஹ்ஸ்ய நிசய"

என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது, சூத்திரன் ஏதாவது ஒரு வகையில் பொருளீட்டினால் அது பிராமணனுக்குரியது என்பது இதன் பொருள்.

" மெளண்ட்யம் ப்ரணாந்தி கோதண்டப்ராஹ்மணானாம் விதீயதே இதரேஷாம்து, வர்ணானமதண்ட; ப்ராணாந்தி;கோபவேத" என்று மனு கூறுகிறார்.

கொலைத் தொழில் புரிந்த பிற சாதிக்காரர்களைத் தூக்கிலிட வேண்டும். ஆனால் பிராமணன் கொலைக் குற்றம் செய்தால், அவனது தலைமயிரை மொட்டையடித்து விடுதலே அதற்குரிய தண்டனையாகும் என்பதே மனு கூறுவதற்கு அர்த்தம். இப்படிப்பட்ட மனு ஸ்மிருதிதான் இந்து மதத்தின் நீதி நூலாகும். அப்படியென்றால் இந்து மதத்தின் லட்சணம் எப்படியிருக்கும் என்று நீங்கள் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.

" சூத்ரந்து காரயேத் தாஸ்யம் க்ரீதமக்ரீ தமேவவா;
தஸ்யாயைய ஹீஸ்ரூஷ்டோஸெளப்ராஹே மணஸ்ய ஸ்வம்புவா"
என்று மனு கூறுகிறார்.

அதாவது, கூலி கொடுத்தாகிலும் அல்லது கூலி கொடுக்காமலும், சூத்திரனைப் பிராமணன் வேலை வாங்கலாம். ஏனென்றால் பிராமணனுக்குப் பணிவிடை செய்யும் பொருட்டே சூத்திரன் பிரம்மாவால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறான் என்பதே மனு கூறுவதற்கு அர்த்தம்.

" ஸுத்ருசோ மதனாவஸம் பஸ்யன்ய: ப்ரஜபேன்மனும்;
அயுதம் ஸோசிராதேவ வாக்பதே; ஸமதாமியாத்"

அதாவது, ஒரு அழகிய பெண்ணின் குறியைப் பார்த்துக் கொண்டு பாத்தாயிரம் முறை மந்திரம் செபம் பண்ணுகிறவன் தேவகுருவுக்கு சமமானவன் என்றும்,

" திகம்பரோ முக்தகேச; ஸ்மசானஸ்தோ தியாமினி;
ஜபேத்யோ யுதமெலஸ்ய பவேயு; சர்வகாமனா"


அதாவது, இரவு சுடுக்காட்டில் நிர்வாணமாக இருந்துகொண்டு தலைமயிரை அவிழ்த்துவிட்டு, பதினாயிரம் உரு செபிக்கிறவனுக்கு, அவன் விரும்பிய பலனெல்லாம் கிடைக்கும் என்றும் இந்துமத ஸ்மிருதிகள் கூறுகின்றன.

மேலும், அரசனாக விரும்புகிறவன் செய்ய வேண்டிய செயல்பற்றி "மஹோததி" கீழ்கண்டவாறு கூறுகிறது.

"சாவம் ஹ்ருதய மாருஹ்ய நிர்வாஸா, ப்ரேட்த பூகத:

அர்க்கபுஷ்ப ஹைஸ்ரேணாப்யக்தேன ஸவீயரேதஸா
தேவீம் ய; பூஜ யேத் மக்த்யா ஜபன்னே கைக சோமனும்
ஸோசிரேனைவ காலனே தரணீப்ரபுதாம் வ்ரஜேத்"
(மஹோததி)


அதாவது, சுடுகாட்டில் யானிர்வாணமாகப் பிணத்தின் மார்பில் உட்கார்ந்து கொண்டு தனது வீரியத்தில் (விந்து) தோய்க்கப்பட்ட ஆயிரம் எருக்கம் பூக்களினால் ஒவ்வொரு தடவையும் மந்திரம் சொல்லி தேவியைச் பூஜை செய்கிறவன் வெகு சீக்கிரத்தில் அரசனாவான் என்பதே இதற்கு அர்த்தம்.

ஒரு ஆடவனுக்கு எவ்வளவு விந்து சுரக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆயிரம் எருக்கம் பூக்களைத் தனது விந்திலே தோய்த்து (இரவல் வாங்கக் கூடாது) அதைக் கொண்டு தேவியைப் பூஜை செய்ய வேண்டுமாம்! ஆயிரம் பூக்களை நனைக்கு வேண்டுமானால் குறைந்தது ஐந்து லிட்டர் விந்தாவது வேண்டும். யாருக்கையா ஐந்து லிட்டர் சுரக்கும்? ஒருவேளை ராம. கோபாலப் பார்ப்பனர்களுக்கு சுரக்குமோ என்னவோ? அரசனாவதற்கு இந்து மதம் கூறுகின்ற வழியைப் பார்த்தீர்களா!

- சவஸ்யஹ்ருதி ஸமஸ்திதாம்;
மஹா கலேன தேவனே மாரபுத்தம் ப்ரகுர் வதீம்,
தாம் த்யாயேத் ஸ்மோவதனாம் விதத்ஸுரதம் ஸவயம்
ஜபேத் ஹைஸ்ரமமிய; ஸசங்கரஸமோ பவேந்

இதுவும் மஹோததி என்ற நூல் கூறுவதேயாகும்.

அதாவது, பிணத்தின் மார்பில் இருந்து மகாகாலனைப் புணர்ந்து கொண்டிருப்பவளும், புன்சிரிப்போடு கூடிய முகத்தை உடையவளுமான தேவியைத் தியானித்துக்கொண்டு ஒரு பெண்னுடன் போகம் செய்து கொண்டே ஆயிரம் உருவேனும் ஜெபிக்கிறவன் சிவனுக்கு ஒப்பாவான் என்பதே இதற்கு அர்த்தம்.

"கிருஷ்ணபட்சத்து சதுர்த்தசி நடு இரவில், ஆகாயம் மேகத்தால் மரைக்கப்பட்டு இருட்டாயிருக்கும்போது நீராடி சந்தனம், சிவந்தமாலை, சிவந்த உடை இவைகளை அணிந்து ஒரு தனியிடத்தில் இருந்து கொண்டு, இளமையும் அழகும் நிறைந்தவளும், ஐந்து ஆண்களை புணர்ச்சி செய்யத்தக்க ஆற்றல் படைத்தவளும் (பாஞ்சாலியைப்போன்று) அவிழ்த்து விட்ட கூந்தலையும், புன்சிரிப்போடு கூடிய முகத்தையும் உடையவளாகிய ஒருத்திக்கு, ஆடைகளும் அணிகளும் கொடுத்து, மகிழ்ச்சியுண்டாக்கி, பிறகு அவளுடைய ஆடைகளை அவிழ்த்து விட்டு, அவளை நிர்வாணமாகப் பூசிக்க வேண்டும். பிறகு அவளைப் புணர்ந்துகொண்டே பத்தாயிரம் உருமந்திரம் ஜெபிக்க வேண்டும். இவ்விதம் செய்கிற மகானுக்கு செல்வம், ஆயுள், புத்திரப்பேறு, சுகம், நல்ல மனைவி முதலிய விரும்பிய பொருட்லள் அனைத்தும் கைகூடும், பாவங்கள் இவனை அணுகாது. நாள்தோறும் காலையில் எழுந்து நூறு உருஜெபித்தால் ஆறு மாதங்களுக்குள் சுக்கிராச்சாரியைவிடச் சிறந்த கவியாவான்" என்று பூஜாவிதியையும், அதன் பலன்களையும் இந்துமதம் கூறுகிறது.

வாயினால் சொல்லவும், காதினால் கேட்கவும் தகாத சொற்குவியல்களின் தொகுப்பே இந்துமத நூல்கள்.

இனி, யஜுர் வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் புத்திர காமேஷ்டி யாகத்தைப் பற்றிச் சிறிது கூறுகிறேன்.

புத்திரகாமேஷ்டி யாகம்:

வேதங்களிலும் இதிகாசங்களிலும் கூறப்படுகுன்ற புத்திர காமேஷ்டி யாகத்தின் உண்மைப் பொருள் விளங்காதவர்கள் அதைப் பெருமயாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது தவறு என்பதையும், புத்திரகாமேஷ்டி யாகம் சொல்லவும், கேட்கவும் தகுதியற்ற ஆபாசச் செயல்கள் பல நிறைந்தது என்பதையும் விளக்க சுவாமி சிவானந்த சரஸ்வதி எழுதிய "ஞானசூரியன்" என்ற நூலிலிருந்து ஒரு சிறு பகுதியை இங்கே கூறுகிறேன்.

புத்திரகாமேஷ்டி யாகம் செய்கிற அரசன் தன் மனைவியைக் குதிரையுடன் அனுப்பி வைப்பான்.

அவள் குதிரை அருகில் சென்று,
1. கணானாம் த்வா, கணபதிம் ஹவாமஹே (வஸோமம)
2. ப்ரியாணாம் த்வா, ப்ரியாபதிம் ஹவாமஹே (வஸோமம)
3. நி தீனாம் த்வா, நிதிபதிம் ஹவாமஹே ( சோமம)

என்ற மந்திரத்தைச் சொல்லிக்கொண்டே குதிரைச் சுற்றிச் சுற்றி வருவாள்.

"ஒ குதிரையே! கணங்களின் தலைவனும், விருப்பத்தை நிறைவேற்றும் தலைவனும், பொருட்களின் தலைவனுமாகிய உன்னை அழைக்கிறேன். நீ எனது கணவனாக இருக்க வேண்டும்" என்பதுதான் இதற்குப் பொருள்.

பிறகு அரசி, குதிரையின் அருகில் சென்று படுத்துக் கொண்டு "ஒ குதிரையே! கர்ப்பத்தை உண்டு பண்ணுகிற வீரியத்தை இழுத்து யோனியில் இடுகிறேம், அதைப்போல் நீயும் செய்ய வேண்டும்" என்று சொல்லுவாள்.
(ஆஹமஜானி கர்ப்பத் மாத்வ மாஜஸி கர்ப்பதம்)

இவ்வாறு அரசி சொன்னதும், ஒரு துணியைப் போட்டு அரசியையும் குதிரையையும் மூடிவிடுவார்கள்.

அதன்பின் அரசியானவள், "விந்துவைத் தன்னுள் வைத்துக் கொண்டிருக்கின்ற குதிரை அதை என்னிடத்தில் வைக்கட்டும்" என்பாள் ( வருஷா வாஜி ரேதோதா ரெதோ ததாது)

பிறகு அரசியானவாள், குதிரையின் ஆண் குறியைக் கையினால் பிடித்துத் தன் யோனி துவாரத்திற்குள் வைப்பாள். பிறகு அரசன், குதிரையும் அரசியும் படுத்திருக்கும் இடத்திற்குச் சென்று குதிரையைத் தொட்டு,

"குதிரையே! புணர்ச்சி வேளையில் என் மனைவியாகிய இவளிடத்தில் நான் செய்யும் காரியங்களை எனக்குப்பதிலாக நீ செய்ய வேண்டும்" என்பான்.

(உத்ஸக்த்யா அவகுதம் தேஹி ஸமஞ்ஜிம் சாரயா வ்ருஷன் யா; ஸத்திரீணாம் ஜீவபோஜன;) அரசன் அனுமதியளித்தபின் என்ன நடக்கும் என்பதைக் கூடவா நான் சொல்ல வேண்டும்?

நான்கு வேதங்களுள் ஒன்றாகிய யஜுர்வேதத்தில் கூறப்பட்டுள்ள புத்திரகாமேஷ்டி யாகம் செய்யும் முறையே இது.

தசரதன் செய்த புத்திரகாமேஷ்டி யாகத்தில் ராமன் பிறந்தான் என்றால், அவன் குதிரைக்குப் பிறந்தான் என்று அர்த்தமா? குதிரைக்கு மனிதன் பிறப்பானா?

அர்த்தமுள்ள இந்துமதம் எழுதிய ஆஸ்தான கவிஞர்கள்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

வயது முதிர்ந்தவர்கள் மத்தியிலும் பெண்கள் மத்தியிலும் சொல்ல இயலாத ஆபாசங்களின் களஞ்சியமே இந்து மத நூல்கள்

வேதங்கள் மட்டுமின்றி, இதிகாசங்களும் இழிநூல்களே, இராமாயணத்திலுள்ள ஆபாசங்களை வடிகட்டி, அறிஞர் அண்ணா அவர்கள் "கம்பரசம்" என்னும் நூலின் மூலம் நமக்குத் தந்துள்ளார். ஐந்து ஆண்களை அனுபவித்தவளைப் (பாஞ்சாலியை) பெருமைப்படுத்திக் கூறுகின்ற காவியந்தான் மகாபாரதம்!

இவையன்றி, இந்து மதப் புராணங்கள் பெரும்பாலும் ஆபாசக்களஞ்சியங்களேயாகும். அவற்றையெல்லாம் விரிவாக எடுத்துக் கூறினால் வாசகர்களுக்கு வாந்தியே வந்துவிடும்!

இந்துமதக் கடவுள்களின் இழிநிலை:

இந்து மதக் கடவுள்களில் மிகவும் முக்கியமானவர்கள் சிவனும், விஷ்ணுவும் ஆவார். அவர்களின் இழிசெயல்கள் ஏராளாமாய் உள்ளன. அவற்றுள் ஒரு சிலதை மட்டும் இங்கு குறிப்பிடிகிறேம்.

சிவனின் இழிநிலை:

பண்டிதர் இஞ்சிக்கொல்லை, ஆர் சிவராம சாஸ்திரியார் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட "பாகவத தமிழ் வசனம்" என்னும் புத்தகத்தில் 8வது ஸ்கந்தம் 12வது அத்தியாயத்தில் "பரமசிவன் விஷ்ணுவின் மோகினி ரூபத்தைப் பார்க்க விரும்பியது" என்ற தலைப்பில் எழுதியிருப்பதை அப்படியே கூறுகிறேன்.

" மகாவிஷ்ணு மோகினி வேஷங்கொண்டு அசுரர்களை மோகிக்குபடிச் செய்து தேவர்களுக்கு அமிர்தத்தை கொடுத்தார் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட பரமசிவன் கைலாயத்திலிருந்து பார்வதியுடன் விஷ்ணுவிடம் வந்தார்.

சிவன், மகாவிஷ்ணுவின் மோகினி வடிவத்தைப் பார்க்க விரும்பி மோகினி வடிவை மீண்டும் எடுக்கும்படி மகாவிஷ்ணுவை வேண்டினார்.

அதைக் கேட்ட மகாவிஷ்ணு "அது அசுரர்களை ஏமாற்ற எடுத்த வேஷமானதால், அதைக் காண்பவர்களை மோகிக்கச் செய்யும் மன்மதனை அதிகப்படுத்தும் காமுகர்கள்தான் அதை தோத்திரம் செய்வார்கள்" என்று சொல்லி மறைந்து, ஒரு நந்தவனத்தில் பந்தாடிக் கொண்டிருக்கும் அழகிய பெண்ணாகத் தோன்றினார்.

சிவனும்,பார்வதியும் நான்கு புறமும் விஷ்ணுவைத் தேடிப் பார்த்துக் காணாமையால் நந்தவனத்திற்குச் சென்றனர். அங்கு ஒரு பெண் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தனர். சிவன் புத்தி கலங்கி பார்வதியும், சிவகணங்களும் பக்கத்தில் இருப்பதைக்கூட நினைக்காமல் அவள் மீது மோகங்கொண்டார்.

மோகினி வேஷத்துடன் இருந்த பெண் பந்தடிக்கும் கவனத்தில் தனது ஆடையை (சேலையை) நழுவவிட்டாள். அதைப்பார்த்த பரமசிவனுக்குக் காமம் அதிகரித்துவிட்டது. பார்வதி பார்க்கிறாளே என்ற வெட்கங்கூட இல்லாமல் மோகினிக்கு அருகில் சென்றார் சிவன்.

மோகினி ஒரு மரத்தடியில் மறைந்து கொண்டாள். சிவன் ஓடோடி அவளைப் பிடித்தான். அவள் திமிறக்கொண்டு வேகமாக ஓடினாள்.

சிவன் வேகமாக ஓடி அவள் மயிரைப் பிடித்து இழுத்து இரு கைகளால் ஆலிங்கணம் செய்துகொண்டு பலவந்தம் செய்தான்.

அவள் அவிழ்ந்த தலைமயிருடன் ஆடையின்றி சிவனிடமிருந்து நழுவி ஓட்ட்மெடுத்தாள்.

சிவன் புத்தியிழந்து, காமங்கொண்ட ஆண் யாணையின் விந்து கீழே சிந்துவதுபோல், தன்னுடைய விந்தை நிலத்தில் சிந்தவிட்டுக்கொண்டே பின்னே ஓடினான்.

சிவனுக்கு விந்து வெளிப்பட்டவுடன், மோகினி வடிவில் இருந்த மகாவிஷ்ணு மறைந்தார். சிவன் ஏமாந்துவிட்டான்.

சிவனின் இந்திரியம் நிலத்தில் எங்கெங்கு விழுந்ததோ அந்த இடமெல்லாம் தங்கம், வெள்ளி விளையும் சுரங்கங்கள் ஆகிவிட்டனவாம்!

அந்த விந்து எங்கெங்கு காடுகளிலும், மலைகளிலும், நதிகளிலும், குளங்களிலும் விழுந்ததோ அங்கெல்லாம் சிவனின் சன்னித்தனம் விளங்குகிறது. மகரிஷிகளும், தேவர்களும் அங்கு விளங்குகிறார்களாம்!

சிவனின் கதை எப்படியிருக்கிறது பார்த்தீர்களா!

சிவனின் அயோக்கியத்தனத்தை நினைக்கும்போதே நமக்கு வெறுப்பாகவும், சிரிப்பாகவும் இருக்கிறது. அப்படியிருக்க சிவன் விந்து சிந்திய இடமெல்லாம் வளமாகவும் தெய்வ அம்சமாகவும் மாறின என்று வேறு வேடிக்கை காட்டுகிறார்கள்!

இதுமட்டுமல்ல, "லிங்கபுராணம்" என்ற நூலில் சிவனின் சின்ன புத்தி மேலும் படம்பிடித்துக் காட்டப்படுகிறது. அதையும் சுருக்கமாக இங்கே கூறுகிறேன்.

சிவன் ஒருநாள் ரிஷிபத்தினி தங்கியிருக்கும் இடத்துக்கு வந்தான். அப்போது ரிஷி வெளியில் சென்றிருந்தான். சிவன் ரிஷிபத்தினியைக் கண்டு காமங்கொண்டு, அவளை நெருங்கினான்; வலுக்கட்டாயமாக அவளைப் புணர்ந்து இன்பம் அனுபவித்திக் கொண்டிருக்கும்போது, ரிஷி அங்கே வந்து விட்டான்.

அக்காட்சியைக் கண்ட ரிஷி கோபமடைந்து சிவனைச் சீற்றத்தோடு நோக்கினான்.

"என் பத்தினியைத் தகாத முறையில் புணர்ந்த உன் ஆண் உறுப்பு அறுந்து விழக்கடவது" என்று சிவனுக்கு சாபம் இட்டான்.

ரிஷியின் சாபப்படி சிவனின் ஆன் உறுப்பு அறுந்து விழுந்தது. இந்த செய்தியை அறிந்த பார்வதி பதறினாள். சிவனின் ஆண் உறுப்பு பூமியில் விழுந்தால் விபரீத விளைவு ஏற்படும் என்று எண்ணிய அவள், தன் பெண் உறுப்பிலே அதை தாங்கிக்கொண்டாள்.

அந்த அமைப்புதான் சிவலிங்கம் என்று லிங்கபுராணம் கூறுகிறது.

அதாவது சிவனின் ஆண் உறுப்பும், பார்வதியின் பெண் உறுப்பும் பொருத்தப்பட்ட நிலையே சிவலிங்கம் என்கிறது இந்துமதம்.

ஐயரே! இந்த அளவிற்கு ஆபாசமாகவும் அறிவில்லாமலும் உன் 'அவாள்'களால் உருவாக்கப்பட்ட கதைகளையே இந்துமதத்தின் வேதங்கள்- புனித நூல்கள்- புராணங்கள்- இதிகாசங்கள்- தர்மங்கள் என்று வெட்கமில்லாமல் சொல்லித் திரிகிற நீ, ஒழுக்கத்தையும் உயர்வையும் போதிக்கின்ற குர்ஆனை தடை செய்யச் சொல்வது வேடிக்கையானது.

30."முஸ்லிம் நாடுகளில் வாழும் ஹிந்துக்கள் வெளிப்படையாக தசரா, தீபாவளி கொண்டாட முடியாது. ஹிந்து மத நூல்களை விற்கவோ முடியாது. இறந்தவர்களை எரிக்கக் கூடாது. இதைப் பாரத அரசு கண்டிப்பது இல்லை."

தசரா கொண்டாட யானை கேட்பாய்! யானைக்கு நாமம் வடகலையா தென்கலையா என்று உனக்குள்ளேயே தகராறு வரும்! இங்காவது சுப்ரீம் கோர்ட்டுக்குப் போனாய். அங்கே எங்கு போவாய்? அத்தோடு போகுமா? நீ அந்த நாட்டு மக்களிடம் கோஷ்டி சேர்ப்பாய்! சட்டம் - ஒழுங்கு - பொது அமைதி கெடும்! பின்னர் யானைக்குப் பூஜை என்பாய்; கஜேந்திரன் கணபதி இப்படிப் பல சிலைகள் வரும்! அங்குள்ளவன் ஏற்கனவே இதனால் தானய்யா பல கோத்திரங்களாகி - கிளைகளாகிக் குருடாய் இருக்கிறான். பின்னர் இஸ்லாம் வந்து, சிலைகள் வீசப்பட்டு, சமதர்ம சமுதாயம் சகோதரத்துவம், சமாதானம், சமநீதி போன்ற நீ அறிய மறுக்கும் - அறிந்தே இராத மனித நேயங்களைக் கற்று இப்போது சுத்தமாயிருக்கிறான். மீண்டும் நீ போய் மணியடித்து மங்களநாள் பூட்டி படையனாக்க நினைப்பது, உன் வியாபார விஸ்தீரணம். உன்னை இந்தியாவுக்குள் விட்டதால்தான் திராவிடன் ஆனாதையானான்! நீ ஆள்பவனாய்! அகதியான நீ ஆள்கிறாய்! ஆண்டவனான அவன் அலைகிறான்! இது உலகறிந்த உண்மை ஹிந்து நூல்களை விற்க அனுமதித்தால் விபச்சாரம் பெருகும் - எயிட்ஸ் வரும்! காரணம், நீயே முன்பக்கங்களில் படியேன் உனது புனித நூல்களின் யோக்கியதையை!

31. "நமது நாட்டின் உண்மை வரலாறு மறைக்கப்படுகிறது; திரித்து எழுதப்படுகிறது! ஹிந்துக்களின் விஞ்ஞானச் சாதனைகள் (?) புகழோங்கிய பொற்காலங்கள் ஆகியன எழுதப்படுவதோ கற்பிக்கப்படுவதோ இல்லை. மாறாக நம்மை ஆக்கிரமித்தவர் - அடிமைப்படுத்தியவர் வரலாறு முலாம் பூசி கெளரவிக்கப்படுகிறது."

நீயும் ஆசியாவிலிருந்து வந்து எங்கள் தாயகத்தை ஆக்கிரமித்து அடிமைப்படுத்தியவந்தானே! வரலாற்றைத் திரிக்க நினைத்தது நீ! இன்றும் அதன் திரிபு உண்டு! வேண்டுமானால் உன் பார்ப்பனத் தலைவர் ராஜீவ், நரசிம்மராவ் ஒப்புதல் அளித்து ரஷ்ய அரசால் தமிழ் உட்பட 18 மொழிகளிலும் வெளியான இந்திய வரலாறு பார்!

உனது விஞ்ஞான சாதனை என்ன ஐயரே? ராவணனாவது புஷ்பக விமானத்தில் பறந்த புலிக் கொடி கொண்ட பாண்டியன்! உனது விஞ்ஞானத்தை TV-யில் இராமாயண வடிவில் போட்டாயே! அதில் வாலி, சுக்ரீவன் போன்றோர் குரங்கு போல் வாலுடன் இருக்க அவர்களது மனைவிகள் (குலப் பெண்கள்) நல்ல மார்டன் "நாயுடு ஹால்" (BRA BRAND)டுடன் அழகிய பெண்களாக இருப்பது கண்டு ஒரு அமெரிக்க பெண் டாக்டர் என்னிடம் " How this Cross Breed Came?"- எப்படி இந்தக் கலப்பினம் வந்தது என்று கேட்டாரே! பதில் சொல்லும் ஐயரே! உன் புகழ் ஓங்கிய பொற்காலம் என்று கூறுகிறாயே! அது எந்தக்காலம்? மீறிப் போனால் அந்த சாணக்கியப் பார்ப்பான் கெளடில்யனைத்தானே கூறுவாய்! அந்தப் பார்ப்பானின் அர்த்தசாஸ்திர வரிகளைப் பார்! சோவியத்தில் அச்சேற்றி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட "இந்திய வரலாறு" நூலில்

அண்டை நாட்டின் அண்டை நாட்டை நண்பனாக கருத வேண்டும் (அதனால்தான் ஆப்கானிஸ்தானை நட்பாக்கினாய்) நட்பு நாட்டின் அண்டை நாடோ பகை நாடாகக் கருத வேண்டும் (அதனால்தான் நேபாளம், பூட்டானுக்கு அருகே சீனப் பகை - பங்களாதேஷுக்கு அருகே பர்மா உனக்கு எதிரணி)
- அர்த்தசாஸ்திரம் பக்கம் 145

கெளடில்யன் (சாணக்யன்) கூறுகிறான்: "அரசனுக்கு ஒற்றாடல் பணித்துறை கண்காணிப்பு, அரசியலில் ரகசிய முறைகளை கையாளுதல் ஆகியவற்றின் மீது சிறப்பான கவனம் செலுத்த வேண்டும். உயர்பதவியாளர்களுக்கு லஞ்சம் தந்து பார்க்க வேண்டும். அதற்கு ஒற்றர்கள் ( Rawபோல்) நியமிக்க வேண்டும் ஒற்றர்கள் மூலமாக அதிகாரிகளிடையே கருத்து வேற்றுமைகளை பரப்ப வேண்டும். தன் தரப்பாளர்களையும் சரி, எதிர்த்தரப்பாளர்களையும் சரி வெளிப்படையாக மட்டுமன்றி ரகசியமாகவும் தண்டிக்கும் உத்திகளை கையாள வேண்டும்." - அர்த்தசாஸ்திரம் பக்கம் 144

ஏனய்யரே! I.A.S அதிகாரிகளுக்கும், I.P.S அதிகாரிகளுக்கும் சண்டை மூட்டி குளிர் காய்வது - போனை ஒட்டுக் கேட்பது - தபாலைப் பிரிப்பது - இதைத்தானே இன்று இந்திய அரசு செய்கிறது. அண்டை நாட்டைப் பகையில் வைக்க பாகிஸ்தான் கூச்சல்; படையெடுப்பு பீதி - தினமும் TV-யில்; இப்போதும் குபேர குப்தர்கள் ஆட்சி. உன்னைப் போல் எடுப்பிடிப்பார்ப்பான் ஊரில் இந்து வேஷம் போட்டு, இனத்துவேஷம் கூறி இடிமுழக்கம் செய்து, கலவரமூட்டுவது! இதுதான் பொற்காலமா ஐயரே! இன்னும் கேள், உன் அர்த்த சாஸ்திரம் கூறுவதை!

அண்டைநாட்டுக் குடிகள் தமது அரசின் மீது வெறுப்புற்றிருக்கும் போது அதன் மீது படையெடுத்து துண்டாட வேண்டும் (இதனால் தான் பாகிஸ்தான் மீது படை நடத்தி பங்களாதேஷைப் பிரித்தாய்; இலங்கையின் உட்பகையைப் பயன்படுத்தி ராணுவத்தை அனுப்பினாய்; மாலத்தீவு ஆக்கிரமிப்பு இப்படி சில)

குடிகள் அரசனுக்கு எதிராய் திரண்டுவிடாமல் குடிகளுக்கிடையே வம்ஸ சண்டைகளை மூட்டிவிவேண்டும் (இதனால்தான் பஞ்சாப், அரியானா, அஸ்ஸாம், நாகலாந்து கலவரம்; ஏகமாய் இந்து - முஸ்லிம் கலவரம்! வெள்ளையன் ஆண்ட 200 வருடம், முஸ்லிம் ஆட்சி 800 வருடம் ஆக 1000 வருடங்களாய் இல்லாத மதக்கலவரம் ஐயனாட்சி (நேரு) ஏற்பட்ட பின் அன்றாட நிகழ்க்கி)

உன் வேலையே வேலை ஐயரே! உன் அயோக்கியத்தனத்தால் அன்பான எம் நாட்டுமக்கள் எத்தனைபேர் பலியாயினர்! அறுபட்ட அப்பாவி மங்கைகளின் தாலிகள் எத்தனை! இத்தனை கொலைகளுக்கும் காரணம் வந்தேரி நாடோடி நீ! நீ! நீயேதான்.

32."1985 ஏப்ரல் மாதம் அணிசேரா நாடுகள் மாநாட்டில் பலரும் தென்னாப்ரிக்கா, பாலஸ்தீனம் போன்ற நாடுகளில் நடக்கும் அட்டூழியங்கள் பற்றி விவாதித்தனர். ஆனால் இலங்கை, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இந்துக்கள் மீது நடத்தப்படும் கொடும் தாக்குதல் குறித்து பாரதம் வாய் திறக்கவில்லை."


நீ மட்டும் இந்தியாவில் வாய் கிழித்தாயாக்கும்! ஈழத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை ராணுவக் கொடுமைகளை எதிர்த்து தனியாகவும், தி.க - தி.மு.க.வுடன் சேர்ந்து பல கூட்டங்கள் போட்டு மறியல்களில் ஈடுபட்டு - பலருடனும் தனியாகவும் பலமுறை M.G.R ஆல் கைது செய்யப்பட்டு 82 முதல் 89 முடிய எத்தனையோ கஷ்டங்களை அனுபவித்த முஸ்லிம் நான்! நீ ஒரு கூட்டமாவது நடத்தினாயா ஐயரே? நான் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டபோது ஆகஸ்டு 25 குட்டிமணி, ஜெகனுக்கு இலங்கை சுப்ரீம்கோர்ட் தூக்குத்தண்டனை தந்ததை எதிர்த்து எனது வேட்டியை சிறைக்கதவு மசியில் கறுப்பாக்கி- காலையில் மரத்தின் உயரே கறுப்புக்கொடி பறக்கவிட்டு- சிறைவிதிகளை மீறியதற்காக சிறை சூப்ரண்ட் அட்கின்சனும் மாவட்ட நீதிபதியும் உள்விசாரனை நடத்தி எனக்கு தனிமைச் சிறை தந்தும், பலநாள் பட்டினி போட்டும், என்மீது தீயனைப்பு என் ஜினில் நீர்நிறைத்து அடித்தும்- நான் என் எதிர்ப்பில் உறுதியாயிருந்தேன். அப்போது நீ அவ்வளவு பிரபலமற்றவன். இன்று இலங்கைக்கு அழுகின்றாய்! பாகிஸ்தானிலும் இந்துக்கு ஆபத்து என்பாய்! இலங்கையில் தாக்குதலில் இந்திய ராணுவத்தினரால் அழிக்கப்பட்டது 5000 உயிர்கள் என தனது எதிர்ப்பைக் காட்ட தமிழக முதல்வர் கலைஞர் ராணுவத்தை வரவேற்கச் செல்லவில்லை. புலிகளும் கூறுகிறார்கள். இந்திய அமைதிப்படை எங்களையும், முஸ்லிம்களையும் ஈழத்தில் ஈவிரக்கமற்றுக் கொன்றன் என்று குறைந்தபட்சம் வழக்கமாக குறைப்பாயே, அதையாவது செய்தாயா? மாறாக மத்திய அரசின் மதிய உணவு எச்சிலுக்கு வாலாட்டிச் சென்றாய்! அந்நேரம் 'காஷ்மீரைக் காப்போம்' என்று காஷ்மீரத்துப் பார்ப்பானுக்கு காலத்தை விரயமாக்கி தீவிரமாயிருந்தாய்.

M.G.R. உயிருடனிருந்தபோது ரகசிய புலனாய்வு I.G. பார்ப்பன மோகன் தாஸ் உடன் சேர்ந்து அகதியாய் வந்த என் தமிழினம் மீது தாக்குதலை தமிழ் மண்ணிலேயே நடத்தி கால் இல்லாத தளபதி கிட்டுவை வீட்டுச் சிறையில் வைத்து நிராயுதபாணியாக்கியபோது நீ வாய் திறக்கவில்லை. மாறாக ராமஜென்மபூமி என்று புதிய போர்வை போர்த்தி பூணுலை நீ விட்டுக்கொண்டு, கூட்டம் போட்டு, மைக்செட்க்காரனுடன் மட்டும் (கூட்டம் வராததால்) பேசிவிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் என்று துதிபாடி தினசரிகளில் போட்டு மார்தட்டிய மாவிரனல்லவா நீ!

அதுகூட வேண்டாம், அகதி முகாம்களில் அடைபட்டு அனுதினமும் 58பைசா ரேஷனில் அல்லலுற்ற தமிழினத்தை மண்டபம் உட்பட பல முகாம்களில் மரண ஓலமிட்டவர்களை குறைந்தது 10 ஆண்டுகளில் ஒருமுறைகூட சென்று பார்க்க நினைக்காத துரோகியல்லவா நீ! இங்கே சொறியக்கூட சொரனையற்று சொறிநாய்போல் திரிந்துவிட்டு அணிசேரா நாடுகள் பற்றிப் பேசுவது அயோக்கியத்தனம். ஏதோ பலரும் சொல்கிறார்களே என்பதற்காக சில வெளிநாட்டு முகாம் கூறி முகஸ்துதி பாடி பகல் வேஷம் போடும் பட்டரய்யா நீ!

இலங்கை ஜனாதிபதியே என்னை அழைத்து, எனது செலவை ஏற்று இலங்கையில் இந்திய ராணுவ வெறித்தனத்தைக் காண நான் சென்ற விமானத்தைப் பறக்கவிட்டு திரும்ப அழைத்து உச்சநீதிமன்ற கண்டனத்துக்கு ஆளானார் பூட்டாசிங். பின்னர் என்னைக் கோர்ட் அனுமதித்தபோது இந்தியாவிலிருந்து இலங்கை சென்ற ஒரே தேசியவாதி நான் மட்டுமே. ஜெயவர்த்தனாவிடம் நான் செய்த உதவிகளை, என் செய்திகளை உன் துதிபாடி தினசரிகள் வெளியிட்டதா? ஊரோடு மாரடிக்கும் உலுத்தர் கூட்டமல்லவா நீ! உண்மை பேசினால் உனக்கு உயிரே போய்விடுமே!

33. "நாம் பிறந்த நாட்டில் ஹிந்துக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், பாரபட்சங்கள், ஓரவஞ்சனைகள், அநீதி ஆகியவை குறித்து ஏராளமான உதாரணங்கள் உண்டு. ஒரு சில உதாரணங்களே உங்கள் முன் சமர்ப்பித்திருக்கிறேம்."

இதுவரை என்ன உதாரணங்கள் என்று பொது அறிவு உள்ளவர்களே சொல்லுங்கள். ஏதாவது ஒன்று கீழ்வெண்மணிச் சம்பவம்போல் உண்டா? விழுப்புரத்தை சொன்னாரா? மண்டைக்காட்டைச் சொன்னாரா? திண்டுக்கல், ஜபல்பூர், கோவை, பீவண்டி, மீரட், டாடாபாத், சூரத், குஜராத், பஞ்சாப், உ.பி, டெல்லி இதில் ஏதாவது ஒன்ரைச் சுட்டிக் காட்டினாரா? இதுவரை இவர் கூறியது தமிழகத்தில் நடந்த ஓரிரு சம்பவங்களே! இதைக் கூறிவிட்டு, ஏதோ இந்துஸ்தானுக்கே ஆபத்து என்கிறார். நீ கேட்கும் இந்துஸ்தான் எது ஐயரே? ஆப்கானிஸ்தான் எல்லை வரை, பாகிஸ்தான் உட்பட சிலோன் மாலத்தீவு எல்லாவற்றிற்கும் ஆபத்துதான். அது குறித்து கவலைப்பட வேண்டியவர்கள் முஸ்லிம் மக்களேயன்றி நீ அல்ல!

அவன் விழித்துக்கொள்ளாதவாறு நீ மகாரி பாடுகிறாய், உனக்கு நன்றாகத் தெரியும் நாட்டில் நடைபெறும் கலவரங்களுக்கு உன் இனம் தான் காரணம் என்று உன் தாழ்வு மனப்பான்மை - தேசிய வேடம்போட்டு மறைக்கிறாய். அநீதி - கொடுமை - அக்கிரமம் - பாகுபாடு - பாரபட்சம் - ஓரவஞ்சனை என்று கூவுகிராய்! இந்துவை 'ஹிந்து' என்றே எழுதுவாய். அதில் கவனமாக இருப்பாய்!

உன் துரோக முறைகளைக் கேள்! ராஜாஜி தூண்டிவிட காமராஜ் நாடாரை தூண்டிவிட்டு, முடிசூடா முக்குலத்து மன்னர் - அப்பழுக்கற்ற அரசியல் தங்கம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மீது கொலைவழக்கு - சிரையடைப்பு - முதுகுளத்தூர் கலவரம். பாவம் அந்தப் புண்ணிய ஜீவன் சாகக் காரணம் உன் RSS சதிவேலைதான். இது எனக்குத்தான் தெரியும். அடுத்து காமராஜர் நாடார் இனம், அது ஐயரைவிடத் தாழ்ந்த இனம் என்று, அக்ராசனராய் இருந்த அவருடைய டெல்லி வீட்டையே தீயிட்டுக் கொளுத்தினீர்கள். அதற்கு போலீஸ் ஆதாரம் உண்டு. வன்னியர் இனத்தை ஒடுக்கியதால் அவர்களும் உனக்கு ஆகாதவர். ஏகமாய் ஒரு கோடி பேர் வாழும் அரிஜனங்கள் உனக்கு எதிரி. தமிழகத்தின் மேற்குப்பகுதி - கொங்கு இனத்திலுள்ள 108 கூட்டமும் உனக்கு எதிரி. அதனால் தான் உன் மாதிரி ஐயர் தலைமையில் எந்த சீரும் செய்யாத கவுண்டர் இனம் - தனக்கென பன்னூற்றாண்டாய் "அருமைக்காரர் அல்லது சீர்க்காரர்" என்று ஒரு பிரிவே வைத்து மங்கள காரியமாற்றுகிறார்கள்.

ஆக, தமிழத்து மலைமக்கள், தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்கள், நாடார்கள், முக்குலத்தோர், கவுண்டர்கள், மிஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், விஸ்வகர்மாக்கள், முதலியார் மற்றும் அரசியல் கட்சிகள் - யாருமே உன்னை மதிப்பதில்லை. பாரதீய ஜனதாவின் தலைவர் அத்வானியே கூறிவிட்டார், தமிழகத்தில் தன் கட்சி முளைக்காது என்று ஆக, இங்கு நீங்கள் 0.2 சதவிதமே, விணாய் நீ வாழத் தினமும் 10% மக்களை இந்தியாவெங்கும் சாகடிக்கிறாய்! நாடாருக்கு எதிராய் தேவர்- தேவருக்கு எதிராய் ஹரிஜனங்கள். உன் அமைப்பை ஒழித்தால், நாடு நாடாகும். இல்லை காடாகும். அந்த நல்ல எண்ணத்தில் ஏற்பட்டதே 'ஜிஹாத் அமைப்பு.'

34. "1000 ஆண்டுகள் போராட்டம் நடத்தி அந்நியர்களிடமிருந்து இந்நாட்டை மீட்டோம் (பின் ஏனய்யா போராட்டம்?) இன்று பல முனைகளிலிருந்து (?) ஆபத்து (?) சூழ்கிறது. வெளிப்பகை, உட்பகை என இதை இரண்டாகப் பிரிக்கலாம்."

வெளிப்பகை பற்றிக் கவலைப்பட வேண்டியது அரசு. உள்பகை உன் ஒருவனை சிறையிலடைத்தால் பிரச்சினை இராது! வடநாட்டில் பால்தாக்ரே, அத்வானி, வாஜ்பாய், சிந்தியா, 5 சங்கராச்சாரி- இவர்களை சான்பிராந் ஸிஸ்கோ தீவிலுள்ள அல்கட்ராஸ் சிறையில் ஆயுள் முழுவதும் அடைக்கப் படவேண்டும். இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமலர், தினமணி, துக்ளக், மணியனின் மசாலாக்கள், ஆர்கனைஸர், ஆனந்தவிகடன், போஸ்ட் - இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள விஷக்கிருமி உற்பத்திகளை ஒழித்தால் உள்ளே பகையாவது மண்ணாங்கட்டியாவது! இதை விட்டுவிட்டு ஐயர் உள்பகைவர் என்று இதனடியில் ஆன்மீகம் பேசுகிறார்.

35."இந்துக்களிடையே ஒற்றுமை இல்லை. ஒழுக்கமில்லை, தேசிய உணர்வு இல்லை, தியாக மனப்பான்மையும் பலருடன் இணைந்து செயல்படும் மனப்பக்குவமில்லை. இந்தக் குறைபாடு நம் முதல் எதிரி."

ஏனய்யரே! நீ ஆயிரம் வருடம் இந்த நொண்டிப்பகைவர்களுடன் இனைந்துதானே போராடியதாகச் சொன்னாய்! சுதந்திரம் வேறு வாங்கியதாகச் சொன்னாய்! ஆயிரம் வருட டிரெயினிங் உனக்கு பழகிய ஒன்றுதானே! இதை வைத்தே மீதி ஏதோ போராட்டம், புலக்கடை என்று புலம்புகிறாயே! அதை நடத்துவதை விட்டுவிட்டு சாக்கடையை சந்தன ஆறாக்குவேன் என்று வேதாந்தம் பேசுகிறாயே! சரியான மனநோயாளியய்யா நீ! அகண்ட பாரதம் அவசியம் பெறுவோம். அதுவரை உனக்கு அருகிலேயே சென்னை- 10 (கீழ்ப்பாக்கம்) உள்ளது. போய் நல்ல டாக்டரைப் பார். செலவை ஜிஹாத் கமிட்டி பார்த்துக்கொள்ளும்.

" இந்துக்களிடையே ஒற்றுமை இல்லை" இதற்கு காரணம் யார்? வந்தேரி நாடோடி நீயே! முதலில் அந்த 5 சங்கராச்சாரிகளையும் ஒன்றாகக் கூட்டி ஒரே மேடையில் அமர்த்திக்காட்டு பார்ப்போம்? ஆன்மீகவாதிகளே கடித்துக் குதறும்போது, அப்பாவி மக்களிடம் எப்படி ஐயரே ஒற்றுமை வரும்?

கட்டுப்பாடு இல்லை; ஒழுக்கம் இல்லை; இதற்கு யார் காரணம்? மதவாதிகள்! அவர்களை மூடராக்கியது நீ! இஸ்லாமிய மார்க்கத்தில் பார்! என்ன ஒரு ஒழுங்கு - ராணுவக் கட்டுப்பாட்டைப் போல்! குடிப்பதை தெய்வ செயலாக்கியது நீ! விபச்சாரம் கூட விலைமதிப்பற்ற செயலாக - இன்றும்கூட ஒரிசாவில் தேவதாசி முறை!

தேசிய உணர்வு இல்லை என்கிறாய். தேசமே இல்லாதவனுக்கு அது எப்படி வரும்? "தேசியம்" என்பதே கடந்த 40 ஆண்டுச் சொல்தானே1 அது உன்ணை மறைக்க நீ கற்றுத் தந்த ஒரு கிரிமினல் வார்த்தை. உலகில் எங்குமே இல்லாத வார்த்தை. ஒரு அமெருக்கனைப் பார்த்தோ - ருஷ்யனைப் பார்த்தோ நீ அமெரிக்கனாக இரு; அமெரிக்கப் பொருளையே வாங்கு என்றோ, நீ ருஷ்யனாக இரு; ருஷ்யப் பொருளையே வாங்கு என்றோ கூறுவது இல்லை. நம் நாட்டில் மட்டுமே இந்தியனாக இரு; இந்தியப் பொருளையே வாங்கு என்று கூறும் புலமை ஒரு கேவலம்.

ஏனய்யா ராம கோபாலய்யரே! உன்னைப் பார்த்து, ராவணன் மகனாகவே இரு; ராவணப் பெயரே சொல்லுன்னா அல்லது நான் இராவணனின் மகனேதான் என்று திரும்பத் திரும்பக் கூறுவது பிறப்பைச் சந்தேகிப்பது - அதைவிடக் கேவலம், மறைமுகமாக தாயின் கற்பையே சந்தேகிப்பது போன்றது. அதைப்போல் இருக்கிறது நீ கூறும் இந்துவாக இரு- நீ இந்து தேசியம் என்பதெல்லாம். இனிமேலாவது அவைகளைக் கொஞ்சம் விட்டுத் தொலையா!

தியாக மனப்பான்மையும், பலருடன் இணைந்து செயல்படும் பக்குவமும் இல்லை என்கிறாய். எப்படி வரும்? யார் யாருக்காகத் தியாகம் செய்வது? யாருடன் யார் சேர்ந்து இடங்குவது? இவைகளுக்கு ஒரு மாஸ்டர் பிளான் தயார் செய்யேன்! கடந்த பல ஆண்டுகளாய் தேர்தலின்றி நீயே தலைவன் நீ (பார்ப்பான்) தலைவனாக மற்றவர்கள் ஏன் தியாகம் செய்ய வேண்டும்? உனது பூணுலை நீ தியாகம் செய் எல்லாம் சரியாகிவிடும். இல்லையேல். தி.க.வின் விளக்கம் எங்களுக்கும் சரியென்றுபடிகிறது. அதை அறுப்பது RESTORING HUMAN RIGHT - மனித உரிமை மீட்பு. நீ அதை அணிவது என்னைத் தாழ்ந்தவன் எனத் குறிப்பது. எனவே தேசநலன் கருதி அதை அறுக்க வேண்டும். இதை உயர்நீதிமன்றம் ஏற்று தஞ்சை வழக்குக்கு இடைக்கால தடை விதித்தது தி.க. வுக்கு முதல் வெற்றி.

"ஹரிஜனங்களின் ஒரு பிரிவினரான (பள்ளர்) ஜான் பாண்டியன்" என்கிறாய். உன் பிரித்தாளும் சூழ்ச்சி இது. உனக்கு ஆபத்து என்றால் நீயே பிரித்தாள்கிறாய். ஆனால் எழுதுவது மட்டும் "ஒரு குலம் - ஒரு இனம்" என்கிறாய்! ஐயரே! இந்த இந்தியாவில் கடைசி முஸ்லிம் உள்ளவரை உன் சூதுமது வெல்லாது.

நாங்கள் மதமாற்றம் செய்வதில்லை; அடிமைகளை விடுதலைப்படுத்துகிறோம்; We are not Converting; We are liberating; உன்னால் தாழ்த்தப்பட்டவனை சமத்துவமாக உயர்த்துகிறோம். பன்னெடுங்காலமாக ஒடுக்கப்பட்டிருந்த அவர்களை, மனித நேயம் என்னும் மருந்து இட்டு மனமகிழ அழைக்கின்றோம். வேத விலங்கினை உடைத்து விடுதலை அளிக்கின்றோம்.

இதை ஏன் செய்கின்றோம்? நீ சொல்லியபடி ஹிந்துக்களிடையே ஒற்றுமை இல்லை (காரணம் தீண்டாமை எனும் பேய்); கட்டுப்பாடு இல்லை (காரணம் தலைவனில்லை - பொது விதிகள் இல்லை); ஒழுக்கம் இல்லை; தீண்டாமையும் - ஜாதிபேதங்கள் எனும் சாபக்கேடுகளும்! இவைகளைக்களைவதற்கு சட்டரீதியான முடிவோ சம்பிரதாய விதிகளோ இல்லை. தீண்டாமைக்குத் தடையிருந்தும் நடைமுறையில் பயனில்லை. கடந்த 50 ஆண்டுகளில் ஹரிஜன சகோதரிகள் தான் அதிகமாகக் கற்பழிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்த வெட்கக்கேட்டை பாராளுமன்றத்தில் உள்துறை மந்திரியே புள்ளிவிபரத்தோடு சொல்கிறார். நீயும் ஒத்துக்கொள்கிறாய்.

இது உன்னால் உண்டாக்கப்பட்டு வினியோகிக்கப்பட்ட விஷம். இதை நீதான் அருந்தியாக வேண்டும். இந்தியா உருப்பட வேண்டுமானால் பார்ப்பனர்கள் அனைவரும் தம் சொந்த நாட்டிற்கு போய்விட வேண்டும். இல்லை, போனால் போகிறதென்று அந்தமானில் இவர்களை ஒதுக்கினால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போகும். இல்லை, நிச்சயம் எமது சமூகம் ஒரு பெரும்விலை கொடுத்தபின் இதே விபரீத முடிவுக்கு வரும். அதுவரை உன்மாதிரி அற்பனின் ஆர்ப்பாட்டம் ஓயாது.

36. "30- 4- 88 தினமலர் பத்திரிக்கையில், 'தமிழ்நாடு பஞ்சாப் ஆக மாறுமா?-' என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகி உள்ளது. அதுபோலவே, ஹிந்து நாளேடு - ஜூனியர் விகடன் இதழில் "முந்திரிக் காட்டில் பயங்கரவாதிகள்" என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது."

ஐயரே! தினமலர், இந்து, ஜூனியர் விகடன் இவைகள் என்ன 'வகியா' இறைத்தூதா? புளுகும் உனது பச்சோந்திக் கூட்டம்தானே! இவைகல்தான் 'பிரபாகரன் சாவு - அஸ்தி கரைப்பு' என்றதோடு மட்டுமல்லாமல் "முதலில் சொன்னது நான் தான்" என்று தனக்குத்தானே புகழ்ந்துகொண்டன! இன்று என்னய்யா ஆயிற்று? அவைகள் வெட்கங்கெட்ட - சூடு, சொரணையற்ற ஏடுகள் என்பது சிறு குழந்தைக்கும் தெரியுமே.

கடந்த 20 வருடமாய், "இதோ பாகிஸ்தான் போர்' என்றும் "போர் மூளுமா" என்றும் மாதம் தவறாது தலையங்கம் தீட்டி அரிப்பை அடக்கிக்கொள்ளாவிட்டால் அவைகளுல்லிப் பைத்தியமே பிடித்துவிடும். உனக்கும் அதுதானே சப்ஜெக்ட்-கொள்கை-கூச்சல் எல்லாமே! இதைப்போய் ஆதாரமாக்கியுள்ளாயே! உனது ஈனபுத்தியை என்னென்று சொல்வது?

37. "தெற்கே டீகோகார்ஷியா தீவில் அமெரிக்கா கப்பற் படைத்தளம் அமைத்துள்ளது. வடக்கே(?) ஆப்கானிஸ்தானில் ரஷ்யப்படை நிற்கிறது. பாகிஸ்தானிடம் நவீன போர்விமானமும் அணுகுண்டும் உள்ளது. நம் இந்தியாவுக்குச் சொந்தமான பல லட்சம் சதுர (?) மைல்களை சீனா பிடித்துள்ளது. அருணாசல பிரதேசத்தில் முக்கியமான (?) பகுதிகளை சீனா 1988ல் ஆக்கிரமித்துள்ளது. இவைகள் வெளிநாட்டு அபாயங்கள்."

நல்ல Black Mail ஐயரே! கூந்தல் உள்ளவன் அள்ளி முடிகிறான். நீ குடுமி உள்ளவன், குரைத்து ஆவதென்ன? நீ சொல்வது எப்படியிருக்கிறது தெரியுமா? வித்தை காட்டுபவன், கூட்டத்தைச் சேர்த்தப்பின்; அவனுடைய ஆளையே ரத்தக்கலரில் உமிழச்சொல்லி பணம் தாருங்கள், இல்லாவிட்டால் உங்களுக்கும் வாயிலிருந்து ரத்தம் வரும் என்று ஏமாற்றிக் காசு பறிப்பானே! அதைப்போல் உள்ளது.

"சந்திரன் தலைக்கு மேல் உள்ளது; சூரியன் சூடாக உள்ளது; கடல் கொந்தளிக்கிறது; அரபுநாடு பாலைவனம் ஆகிவிட்டது; அடுத்த வீட்டில் கறி சாப்பிடுகிறான்; பக்கத்து வீட்டில் பாயா சாப்பிடுகிறான்; இந்து மதத்துக்கு ஆபத்து; இந்துஸ்தானத்துக்கு ஆபத்து; அய்யய்யோ கஜினி-கோரி கொள்ளையடித்து விட்டனர்; இந்தியாவின் கக்கூஸிலிருந்த கற்களை காலிஸ்தான்காரன் கருமம் பிடித்த ஆண்டில் பிடித்த ஆண்டில் பீடை பிடித்த தேதியில் கொள்ளையடித்து விட்டான்; பறக்கும் தட்டிலிருந்து வந்து அழகிய பெண்களை படிக்கையறைக்குத் தூக்கிப்போய்விட்டார்கள்; தார்மீக தர்மம், பூஜை, புனஸ்காரம், யோகம், தெருப்புழுதிகள் அழிகின்றன; காரணம், சீனாவில் சிறுத்தை குட்டி போட்டு விட்டது; அரபுக்காரன் வீட்டில் பூனை குட்டி போட்டுவிட்டது. அய்யய்யோ ஆபத்து! ஆயிரம் ஆண்டு காப்பாற்றிய கழுதைக்கு ஆபத்து! இந்துக்களே, என் (பார்ப்பான்) தலைமையில் ஒன்று திரளுங்கள்; என்னைத் தலைவனாக்கி - சங்கராச்சாரியை செயலாளராக்கி விட்டு நீங்கள் போராடுங்கள்; ஊருக்கெல்லாம் மனைவி இருக்கிறது; எங்களுக்கு வேண்டாமா? போப் ஆண்டவர் வருகிறார்! ஐயய்யோ! தொழுநோய் இல்லம் திறக்கிறார்; இதனால் தொன்றுதொட்டு வரும் தொழுநோய் ஒழித்தால் அருணகிரிநாதரின் அப்பன், பாட்டன் பெயரைச் சொல்லி யார் பிச்சை எடுப்பார் என்று பிதற்றுவது போலுள்ளது.

தெனாலிராமனாவது அறிவோடு செய்ததாக நம்பவைத்தீர். உனக்கு அதுவும் இல்லை ஐயரே! சீனா ஆக்கிரமிப்பு நேரு (பார்ப்பனர்) செய்த முட்டாள்தனத்தால் தானே! தலாய்லாமா விஷயத்தில் தலையிட்டதால் அது நடந்தது. அவரது மகளால் நடந்தது பாகிஸ்தான் - பங்களாதேஷ் யுத்தம். அருணாசலபிரதேசத்தில் பல லட்சம் சதுர மைல்கள் ஆக்கிரமிப்பு நடந்தபோது பிரதமர் யார்? ராஜீவ் (பார்ப்பனர்)- ராணுவ மந்திரி யார்? K.Cபந்த் (பார்ப்பனர்)- ஜனாதிபதி வெங்கட்ராமன் (பார்ப்பனர்)- வெளியுறவு மந்திரி நரசிம்மராவ் (பார்ப்பனர்).

நமது ராணுவத்தை இலங்கைக்கு ஏன் அணுப்பினாய் - புடுங்கவா? உனது வாதம் சரியென்றாலும் கூட நேருவால் பல லட்சம் - சாஸ்திரியால் பல லட்சம்- இந்திராவால் பல லட்சம் சதுர மைல்களை இழந்தோம். போதாக்குறைக்கு கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தார் இந்திரா. அப்போது நீ என்ன கூறினாய்? இந்திராவும் ஜெயவர்த்தனேயும் ஒரே இனம் ; மூக்கைப் பார்! நீண்டிருக்கும் என்றாய். உன் பார்ப்பன ஏடுகளும் துதிபாடின.

ஜெயலலிதா (பார்ப்பனத்தி) ராஜீவுக்கு அத்தை மகள் ஆகிறது என்று ஆராய்ச்சி செய்தாய். ஜானகியும் பார்ப்பனத்தி- ஜால்ரா அடித்தாய். ஆக, பார்ப்பனர்களால்தான் இந்தியா பல லட்சம் சதுர மைல்களை இழந்தது. இனியும் இழக்காதிருக்க, பார்ப்பானை நாடு கடத்தினால் எல்லாம் சரியாகிவிடும்.

38."நேபாளத்துக்குள் 250 லாரிகளில் நவீன ரக ஆயுதங்களை சீனா அனுப்பியுள்ளது."

நேபாளம் இந்து நாடு- புண்ணிய பூமி - புலக்கடை என்று புகழ்ந்து கூறுய சங்கராச்சாரியும் நீயும் அங்கு சென்று கூடிக் குலாவினீர்கள். இன்று பார்! யார் துரோகி என்று! அடுத்த பதிலையும் படி! அடுத்து அந்தமானுக்கு போவதற்கு தயாராக இரு!

39. "நமது நாட்டுக்குல்ளேயே அமெரிக்க-ரஷ்ய- சீன-பாகிஸ்தான் உளவாளிகள் உண்டு. தக்க நேரத்தில் உல்நாட்டுப் போர் துவங்க உதவுவார்கள்."

ஐயருக்கு ஞாபக மறதி! கூமர் நாராயணன் உட்பட 7 பார்ப்பனர்கள் வெறும் 10 அமெரிக்க டாலருக்குஅ கூட ராணுவ ரகசியம் விற்றத்னால் தார்மீக பொறுப்பெற்று பதவி விலகினர். முன்னால் பிரதமர் ராஜீவின் தனிச்செயலர் அலெக்ஸாண்டர். பின்னர் லண்டன் தூதுவர் பதவி- இன்று தமிழக ஆளுனர். கைது செய்யப்பட்ட கூமர் நாராயணன் கோஷ்டி குளுகுளு ஹோட்டலில்; இதுபோன்று 13 முறை நடைபெற்றதற்கு பார்ப்பனரே கையாள்.

முன்னாள் ராணுவ தளபதி சங்கட்ஜி (பார்ப்பனர்) தான் போபர்ஸ் ஊழலுக்கு உடந்தை; இன்று நாடகமாடி ஊட்டியில் உல்லாச வாழ்வு!

எங்கலைப் பார்த்து தேசத்துரோகி என்று சொல்வதற்கு உனக்கு என்ன தகுதி இருக்கிறது?

இந்து- முஸ்லிம் ஒற்றுமை வேண்டும் என்றதற்காகக் காந்தியாரைச் சுட்டுக்கொன்ற கூட்டமல்லவா நீ! அவரைக் கொன்றது 1/2 டஜன் RSS பார்ப்பனர்கள் என்பது எவ்வளவு உண்மை என்பதைப் படித்துப்பார்!

இந்து - முஸ்லிம் ஒற்றுமையின் மூலம் சுதந்திரத்திற்கான போராட்டத்தை நடத்த வேண்டும் என்ற காந்தியாரின் கொள்கையை RSS கூட்டம் ஆரம்பகாலத்தில் இருந்தே கடுமையாக எதிர்த்து வந்தது என்பதை மறுக்க முடியாது.

காந்தியார் இந்துக்களை கோழையாக்கிவிட்டார் என்று அவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். காங்கிரசுக்குள்ளே காந்தியார் எதிர்ப்பு உணர்வை ஏற்படுத்தும் முயற்சிகளில் இடைவிடாது ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.

RSSபார்ப்பனக் கூடாரம் காந்தியார் மீது எப்படிப் பகைமை கொண்டிருந்தது என்பதை பியாரிலால் (காந்தியின் செயலர்) தனது நூலில் கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார்;

"இந்து ராஷ்டிரம் அமைய வேண்டும் என்ற முரட்டுத்தனமான கூட்டம் மராட்டிய மாநிலத்தில் இருந்தது. அவர்கள் பார்ப்பனப் பிற்போக்காளர்கள். காந்தியாருக்கு எதிராக 25 ஆண்டுகாலம் இடைவிடாத பிரச்சாரத்தை அவர்கள் செய்து வந்தனர். காந்திஜியின் செல்வாக்குவளர்வது- அவர்களுக்கு விரக்தியை உண்டாக்கியது. இந்தக்கூட்டம் தான் 1934ல் புனேயில் காந்திஜி மீது வெடிக்குண்டு வீச முயற்சிசெய்தது. அப்போது காந்திஜி தீண்டாமை எதிர்ப்புப் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார்.

இப்போது அவர்கள் காந்தியை கொலை செய்திருக்கிற திட்டம்- அவர்களால் மிகவும் திட்டமிடப்பட்ட ஒன்றாகும். அதற்கு சரியான இளைஞரை தேடிப்பிடித்து அதற்கான பயிற்சிகலைக் கொடுத்து திட்டமிட்டு இதனைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் காலில் போட்டிருக்கும் ஷுக்களுக்குள் காந்தி, நேரு உட்பட பல காங்கிரஸ் தலவர்களின் படம் இருக்கும். அந்தப்படத்தை வைத்து-துப்பாக்கியால் சுட்டு, பயிற்சி பெறுவது அவர்கள் வழக்கம்" என்று பியர்லால் மிகத்தெளிவாக தனது நூலில் எழுதியிருக்கிரார். (பக்கம் 751)

காந்தியார், பார்ப்பனர்களின் திட்டமிட்ட சதியால் படுகொலை செய்யப்பட்ட அந்த நேரத்தில்- மராட்டிய மக்கள் எப்படிப்பட்ட உணர்வுகளைக் கொண்டிருந்தார்கள் என்பதை புரிந்துகொண்டால் கூட்டத்தின் பார்ப்பனத் தன்மையினை தெளிவாகவே அடையாளம் கண்டுகொள்ளமுடியும்.

மராட்டிய மண்ணில்- காந்தியார் கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி வந்தவுடன் பார்ப்பனர்களுக்கு எதிராக பார்ப்பனரல்லாத மக்கள் வீறுகொண்டு எழுந்தார்கள்.

கொலை செய்த 'கோட்சே'வுக்கும்- தங்களுக்கும் ஒரு சம்பத்தமும் கிடையாது என்று R.S.S. காரர்கள் சாதிக்க முயன்ராலும், மராட்டிய மக்களுக்கு அந்த மண்ணிலே உருவான இயக்கத்தின் பின்னனிகள் புரியாதா? எனவே RSS காரர்களுக்கு எதிராக மட்டுமல்ல- பார்ப்பனர்களுக்கு எதிராகவே- மராட்டிய பார்ப்பனரல்லாத சமுதாயம் கொதித்து எழுந்தது!

தமிழ்நாட்டுப் பார்ப்பன ஏடுகள் இந்தச் செய்திகலை எல்லாம் அப்போது திட்டமிட்டு இருட்டடிப்பு செய்துவிட்டன.

மராட்டிய மாநிலத்திலே மிகப் பெரிய கொந்தளிப்பு எழுந்த அந்தக் காலக்கட்டத்திலே அந்த மாநிலத்தில் உள்துறை அமைச்சராக இருந்தவர்- துவாரகா பிரசாத் மிஸ்ரா! அவரும் ஒரு பார்ப்பனர்தான்.

அப்போது, மத்திய அரசின் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் பட்டேல், அவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான இவர்- அன்றைய காங்கிடஸ் கட்சியிலே மிகப் பெரிய புள்ளி!

இவர் " LIVING AN ERS" என்ற தலைப்பில் தனது சுய சரிதையை எழுதியிருக்கிரார். அது இரண்டு பகுதிகளாக வெளிவந்திருக்கிறது. (விகாஸ் பதிப்பகத்தின் வெளியீடு)

காந்தியார் கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி வந்தவுடன் மாராட்டிய மாநிலத்திலே RSS பார்ப்பனர்களுக்கு எதிராக நடந்த மிகப்பெரிய கலவரத்தை அவர் தனது சுயசரிதையின் இரண்டாவது தொகுப்பில் விவரித்திருக்கிறார்.

RSS காரர்களை கைது செய்து கலவரத்தை அடக்குவதற்கு உத்தரவுகளைப் பிறப்பித்தவர் என்ற முறையில் அவருடைய கருத்துக்கு மிக முக்கியத்துவம் உண்டு.

நான் RSS பற்றி சில ஆதாரபூர்வமான தகவல்களை வெளியிட்டு சில உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். காரணம் இந்தப் பிரச்சினையில் எனக்கு நேரடியான தொடர்பு உண்டு.

காந்தியார் கொலையில் ஒரு அரை டஜன் மராட்டியப் பார்ப்பனர்களுக்கு பங்கு உண்டு; அதன் காரணமாக ஏராளமான பார்ப்பனர்கள் கடும் விலைகொடுக்கு வேண்டியதானது. மக்கள் தொகையில் 4 சதவீத பேர் மட்டுமே உள்ள பார்ப்பனர்கள் மராட்டியத்தில் எல்லா துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அந்தக் காலத்தில் மகாராஷ்டிரர்கள் என்று சொன்னாலே அது பார்ப்பனர்களைத்தான் குறிக்கும். பெரும்பாலன பார்ப்பனரல்லாத மக்கள் 'மராத்தா' என்று அழைக்கப்பட்டனர். தேசத்தந்தை காந்தியடிகளை கோட்சே சுட்டுக்கொன்ற செய்தி பரவியவுடன் பார்ப்பனரல்லாத மக்கள் ஆத்திரம் கொண்டனர். பார்ப்பனர்களுக்கு எதிராக திரண்டு எழுந்தனர்.

அப்போது RSS தலைவர் 'சர் சங் சாலக்' எம்.எஸ்.கோல்வார்க்கர் சென்னையில் இருந்தார். அங்குதான் அவருக்கு இந்தச் செய்தி கிடைத்தது. உடனே அவர் RSS தலைமை அலுவலகம் இருக்கும் இடமான நாக்பூருக்கு விரைந்தார். தலைமை அலுவலகத்தில் கோல்வார்க்கர், நிர்வாகக்குழு கூட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார் என்பதை கேள்விப்பட்ட பார்ப்பனரல்லாதவர்கல் அந்த அலுவலகத்தை சுற்றி சூழ்ந்து கொண்டுவிட்டனர். அலுவலகக் கட்டிடத்தையே தீ வைத்து கொளுத்த திட்டமிட்டனர். போலிஸ் ஐ.ஜி உடனே என்னுடைய அலுவலத்துக்கு விரைந்து வந்தார். அலுவலகத்துக்குள்ளே இருக்கும் 40 பேரும் தீவைத்துக் கொளுத்தப்பட்டு விடுவார்கள் என்றார்.

RSSகாரர்களின் சிலர் எனக்கு நண்பர்களாக இருந்தாலும் அரசியலில் எனக்கு எதிரிகளாகவே இருந்தனர். பல வகுப்புவெறி பார்ப்பனர்கள் என்னைத் தீர்த்துக்கட்டப் போவதாக பல கொலைமிரட்டல் கடிதங்களையும் எழுதினார். இருந்தாலும் அந்தப் பகுதியின் உள்துறை அமைச்சர் என்ற பொறுப்பை ஏற்றிருக்கும் நான் எனது கடுமையான அரசியல் எதிரிகளாக இருந்தாலும் அவர்களை சாக விட்டுவிடக்கூடாது. எனவே RSSகாரர்களை கைது செய்வதன் மூலம்தான் பார்ப்பனரல்லாத மக்களிடையே அமைதியை ஏற்படுத்த முடியும் என்று கருதி அவர்களைக் கைது செய்ய உத்தரவிட்டேன்.

கோல்வாக்கரும் அவரது சகாக்களும் கைது செய்யப்பட்டு நாக்பூர் சிறைக்கு அப்போதுதான் கொண்டுபோய் இருப்பார்கள். அப்போது எனக்கு இந்துமகா சபைத் தலைவர் எல்.வி.பரஞ்சிபேயிடமிருந்து டெலிபோன் வருகிறது. ஒரு பொதுக் கூட்ட மேடையிலே என்னோடு மோதியவர் இவர். "ஒரு பெரிய கூட்டம் என் வீட்டை சூழ்ந்துகொண்டு தாக்குகிறது; என்னை காப்பாற்றுங்கள்" என்று டெலிபோனில் அவர் சொன்னார். நீங்கள் உயிர் பிழைக்க வேண்டுமானால் அதற்கு இப்போது பாதுக்காப்பான ஒரே இடம் நாக்பூர் சிறைதான் என்று சொல்லி அவரைக் கைது செய்ய உத்தரவிட்டேன்.

பிறகு நான், காந்தியடிகளின் அஸ்தியை நர்மதை ஆற்றில் கரைப்பதற்கு டில்லிக்கு சென்றுவிட்டேன். அந்த நேரத்தில் நாக்பூரில் பார்ப்பனரல்லாதாரின் எதிர்ப்புக் கிளர்ச்சி உச்ச கட்டத்திற்குப் போய்விட்டது. உடனே புறப்பட்டு வருமாறு எனக்கு அவசரச் செய்தி வந்தது. நாக்பூருக்கு சென்றபோது இதற்குமுன் எப்போதும் நடந்திராத அளவுக்கு கலவரங்கள் நடந்துகொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியுற்றேன்.

காந்தியடிகளைப் பார்ப்பனர்கள் கொலை செய்துவிட்டார்களே என்ற ஆத்திரத்தில் பார்ப்பனர்களின் வீடுகள் தாக்கப்பட்டன. பார்ப்பனரின் கல்வி நிலையங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. பார்ப்பன நிறுவனமான ஜோஷி உயர் நிலைப்பள்ளி தீயில் எரிந்தபோது, தீயை அணைக்க வந்த தீயணைக்கும் படை வர முடியாமல் பார்ப்பனரல்லாத மக்கள் கூட்டத்தால் திருப்பி விரட்டப்பட்டது; அதற்குப்பின் கண்டதும் சுடும் உத்தரவு போலிசாருக்குப் பிறப்பிக்கப்பட்ட பிறகுதான் நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்தது.

பார்ப்பனர்களுக்கு எதிராகத் திரண்ட பார்ப்பனரல்லாதார்களில் காங்கிரஸ்காரர்களே மிக அதிகமாக இருந்தனர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்த பலரும் இந்த யுத்தத்தில் இறங்கினர். கலவரத்தை ஒட்டி கைது செய்யப்பட்டவர்களில் 100க்கும் அதிகமானவர்கள் காங்கிரஸ்காரர்கள்!!

காந்தியடிகள் கொலையைத் தொடர்ந்து - பார்ப்பனர்களுக்கு எதிர்ப்புத் தீவிரமானது. நாக்பூர், பேரார் ஆகிய இடங்களில் காங்கிரசார் மாநாடு கூட்டினர். அங்கே பேசிய பேச்சு - ரகசிய புலனாய்வுத் துறை மூலம் எனக்குக் கிடைத்தது. "காந்தியாரைக் கொலை செய்தது ஒரு பார்ப்பனர். எனவே இந்தப் பகுதியின் நிர்வாகப் பொறுப்பு எந்தப் பார்ப்பனரிடமும் இருக்கக்கூடாது. மத்திய அரசிலே பார்ப்பன அமைச்சர்கள் இருக்கிறார்கள். இது காங்கிரஸ் கட்சிக்கே மிகப்பெரிய சவாலாகும்" என்று அந்தக் கூட்டத்திலே காங்கிரசார் பேசினர்.

தொடர்ந்து பிப்ரவரி 4ம் தேதி RSS தடை செய்யப்பட்டது.

நாட்டின் பல பகுதிகளில்RSSகாரர்கள் வன்முறையில் இறங்கி கலவரத்தை உருவாக்கிவருகிரார்கள். அரசு இதைத் தடுப்பதற்காக அந்த அமைப்பை சட்டவிரோதமாக அறிவிக்கிறது" என்று தடை உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.

தடையை எதிர்த்து கிளர்ச்சிகள் நடத்துமாறு கோல்வாக்கர் RSS காரர்களுக்கு கடிதம் எழுதினார். RSSகாரர்களும் ஆங்காங்கே கிளர்ச்சிகளை நடத்தினார். அதே நேரத்தில் அன்றாடம் பார்ப்பனர் எதிர்ப்புக் கூட்டங்களும் நடந்து கொண்டே இருந்தன. கோல்வாக்கரைத் தூக்கில் போடு என்ற முழக்கங்கள் வீதிகள் முழுவதும் எதிரொலித்தன.

ஒரு பக்கம் RSS காரர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தாலும் - இன்னொரு பக்கம் கோர்வாக்கர் அரசாங்கத்திடம் மனு போட்டுக்கொண்டே இருந்தனர். உள்துறை அமைச்சர் பட்டேலுக்கும் கோல்வாக்கருக்கும் கடிதப் போக்குவரத்துக்கள் நடந்தன. அவ்வப்போது கைதான RSS காரர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் தடை நீக்கம் செய்யப்படவில்லை." - இவ்வாறு அன்றைய சூழ்நிலையை துவாரகா பிரசாத் மிஸ்ரா தனது சுயசரிதையில் படம்பிடித்துக் காட்டுகிறார்!

இந்தக் கருத்துக்கள் விளக்குகின்ற உண்மைகள் என்ன? காந்தியார் கொலையில் அரை டஜன் RSS பார்ப்பனர்கள் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்பதே!

இன்னும் சரித்திரம் வேண்டுமா ஐயரே?

அன்று தொட்டு இன்று வரை நாட்டில் துப்பாக்கிச்சூடு என்பது மலிந்து சிந்துக்கும் இந்துக்கும் தகராறாகி முடிவில் தினம் 5 இந்துக்கள் வீதம் சீக்கியன் எமனுலகு அனுப்புகின்றான். RSS வாடை இன்று பஞ்சாபில் இல்லை. அங்கு இருந்து குடிபெயரும் பார்ப்பான் கும்பகோணம் வர தமிழகம் பஞ்சாபாக மாறுகிறது - காரணம் பார்ப்பனரே!

பிறகு கடைசி 20வது பக்கத்தில் சித்தாந்தம் பேசுகிறாய். மகாந் சித்தர் என்று வேதாந்தம் பேசி - திராவிட, ஆரிய வாதத்தை ஒழிப்போம் என்கிறாய் (அப்போதுதான் நீ எங்களவனில் கலக்க முடியும்). அதைக் கட்டுக்கதை என்கிறாய்! முடிவில், பாரதம் - ஹிந்துஸ்தாந் ஹிந்துவுக்கு ஹிந்து பூமி- ஹிந்து ராஷ்டிரம் என்கிறாய்!

இந்தியா, "ஹிந்து ராஷ்டிரம்" ஆக வேண்டும் என்று கூறும் ஐயரே! உலகில் இருந்த ஒரே இந்து ராஜ்ஜியத்தின் அலங்கோலத்தை உங்களவரே கூறுவதைப் பாரும்! இந்திய வரலாற்றில் இதுவரை முஸ்லிம் அல்லாத எந்த மதவாதியின் ஆட்சியும் 30 ஆண்டுகளுக்குமேல் நீடித்ததே இல்லை. இந்த வரலாற்று உண்மைகூட புரியாது வாயைக் கிழித்துக்கொண்டுள்ளீரே ஐயரே!

"ஜனநாயகம் கோரும் கிள்ர்ச்சி, மன்னராட்சியைக் குறிவைத்து தாக்கியது. இது முன்னெப்போதும் நடந்திராத விஷயம் காத்மண்டுவில் தடிக்கி விழுந்தால் மன்னர் குடும்பத்தை கேலி செய்யும் கார்ட்டுன்கள் ஒரு கோஷம்; பம்பா தேவி ஹாய் ஹாய், வீநெந்திரா பை பை! (பம்ஃபா தேவி ஒழிக, வீரேந்திரா வெளியேறு) அரசி ஐஸ்வர்யா தேவியை ஏன் பம்ஃபா தேவி என்கிறார்கள்? மக்கள் தரும் விளக்கம் இது 'பம்ஃபா தேவி என்ர பெயரில் நிறைய ரகசிய பாங்க் கணக்கு வைக்கப்பட்டிருக்கிறது. அது அரசியின் புனைப்பெயர்.

பிலிப்பைந்சின் ஊழல் ராணி இமெல்டா மார்க்கோஸ் போன்ற ஒரு இமேஜ் அரசிக்கு உண்டு என்பது சரிதான். அரசிதான் 'சமாஜிக சேவா சமன்வய பரிஷத்' என்ர அமைப்பின் தலைவி இதன் அனுமதியில்லாமல் எந்தத் தொழில் அமைப்போ, சமூக அமைப்போ உருவாகமுடியாது. உண்மையில் நேபாளத்தை ஆளுவது அரசிதான் என்றே மக்கள் நம்புகிறார்கள். மன்னரின் வாய் பூட்டப்பட்டு, சாவி அரசி கையில் உள்ள கார்ட்டூன்களை எல்லா இடங்களிலும் பார்க்கலாம். சமீப நாட்களில் இந்த அரச தம்பதியை மிஸ்டர் அன் மிஸஸ் சொஸஸ்கு (ருமேனியாக் கொடுங்கோலர்) என்று குறிப்பிடும் கார்ட்டூன்களும் முளைத்தன.

பல ஊழல்களில் மன்னர் குடும்பத்தினர் பெயர் அடிபட்டது போதைப் பொருள் வியாபாரம், கடத்தல், அந்நியச் செலவாணி மீறல் என்று இப்படி ஊழல்களையெல்லாம் அம்பலப்படுத்த உதவியவர் மன்னரால் அரண்மனைச் சலுகைகள் பறிக்கப்பட்டு பிரிட்டனில் வசிக்கும் மன்னரின் சகோதரரான தீரேந்திரா என்று சொல்லப்படுகிறது.

உலகின் ஒரே இந்து ராஜ்யத்தை ஆளுகிற நபர்களின் அந்தஸ்து என்ன கதி ஆகியிருக்கிறது என்பதற்கு அருமையான எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம் நடந்தது. காத்மாண்டுவில் ஒரு பெரிய விளம்பர போர்டில் ஆர்பாட்டக்காரர் ஒருவர் ஏறினார். அதில் இருந்த அரசு முத்திரையை அடித்து உடைத்தார். இதை போலிஸ்காரர்கள் பார்த்துக்கொண்டே நின்றார்கள்." நன்றி இந்தியா டுடே ஏப்.21-மே5, 1990

மதச்சார்பற்ற இந்தியாவை ராம.கோபலனும் அவன் எடுபிடிகளும் 'ஹிந்துஸ்தான்' என்றால்- பஞ்சாபி கேட்கும் காலிஸ்தான் நியாயமே! பிறகு தேவர்கள் தேவர்ஸ்தான், பறையர் பறஸ்தான், கவுண்டர் கவுண்டர்ஸ்தான், முஸ்லிம்களுக்கு என்ன கபர்ஸ்தானா (இடுகாடா)? இந்த நிலையை தவிர்க்கவே 'ஜிஹாத் அமைப்பு.'

மதச்சார்பற்ற நாடு என்பதே ஏமாற்றுவேலை. இந்தியாவின் மிக உயர்ந்த பரிசு 'தர்மவீர சக்ரா' அப்படி என்றால் என்ன என்று எனது அமெரிக்க நண்பர் கேட்டப்போது தர்மன் என்ற ஒருவன் மனைவியை வைத்து சூதாடினான். அதுவும் 5 பேருக்குப் பத்தினி திரெளபதி எனக் கூறும்போது கூனிப் போகிறேன். அடுத்து 'அர்ச்சுனா' அவார்டு! அர்ச்சுணன் யார்? ஐந்து ஷேர் ஹோல்டரில் (Share Holder) அவனும் ஒருவன். சூத்திரன் - ஏகலைவன் - வில்வித்தையைக் கற்றுக் கொண்டதால்- அவனுடைய கட்டைவிரலை குருதட்சணையாக கேட்டு வர்ணாசிரமப்படி நடந்துகொண்ட பார்ப்பான் 'துரோணாச்சாரி' பெயரில் விருது! இதுவா மதசார்பற்ற நாடு? திரிசூலன் விமான நிலையம், ஆரியப்பட்டா ராக்கெட் இப்படி எதிலும் கலப்படமாகும் 'பார்ப்பானீயம்' ஒழியும்வரை இந்நாட்டை நேசிக்க மனம் வராது.

இந்தியாவின் 'அரசியல் சாசன சிற்பி' ஒரு அரிஜனர் என்பதற்காகவே அந்த மாபெரும் மனிதர் டாக்டர் பாபா சாகிப் அம்பேத்காரை இதுவரை மூடிமறைத்தீர்கள். இன்று அவர் இறந்து 34 ஆண்டுகள் கழித்து அவருடைய படத்தை வி.பி.சிங் பாராளுமன்ரத்தில் திறந்து வைத்தார். 13.4.1990ல் அவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கினார்கள். எத்தனை காலன்கடந்த செயல் இது! அவரும் வீராமாய் சுதந்திரத்திற்கு போராடினார். ஆனால் அன்று அவரை RSS வெறுத்தது. இன்று அவருக்கு நூற்றாண்டு விழா! உடனே தாழ்த்தப்பட்ட இனத்தின் மீது RSS க்கு பாசம் (?) வருகிறது.

டாக்டர் அம்பேத்கர் இவர்களைப்பற்றி என்ன கூறினார்? 'இந்துமதப்புதிர்' எனும் நூலில் ராமனைப் பற்றியும் சம்புகன் என்ற தாழ்த்தப்பட்டவனை, வர்ணாசிரம தர்மத்தை மீறி, சூத்திரனாகிய அவன் தவம் செய்த காரணத்தினால் ஒரு பார்ப்பானின் மகன் இறந்துவிட்டதாக எவ்வித நியாயமுமின்றி ராமன் சம்புகனை படுகொலை செய்த பாவத்தைப் பற்றியும், கிருஷ்ணன் செய்த அக்கிரமங்கள், அநியாயங்கள் பற்றியும் எழுதிய அந்த நூலை மராட்டிய மாநில அரசே வெளியிட்டதை பார்ப்பனர்கள் தடை செய்யக் கோரியும் பலன் இன்றிப் போனது. அவர் இந்து மதத்தின் மானக்கேடான விலங்கிலிருந்து வெளியேறி, விடுதலைப் பெற்று 14.10.1956ல் பல லட்சம் மக்களுடன் புத்த மதத்திற்கு மதம் மாறினார். 15.10.1956 அன்று நாக்பூரில் பல லட்சம் மக்களிடையே பேசியதை 'பிரபுபாரத்' இதழ் (அக் 27, 1956ல்) வெளியிட்டது. "Why go for Convertion" - "மதமாற்றம் ஏன்?" எனும் தலைப்பில் பேசி இப்போது நூலாகவே வெளிவந்துள்ளது. (D.S.A 324வது தெரு, வெங்கடேஸாபுரம் புது காலனி, அம்பேத்கர் கல்லூரி சாலை, சென்னை)

டாக்டர் அம்பேத்கர் இந்து மதத்தின் இழிகுணங்களை அதன் மூலம் தோலுரித்துக் காட்டுகிறார்-

" இந்நாட்டில் தொழுநோயாளிக்கு இருக்கும் மரியாதை கூட அரிஜன மக்களுக்கு இல்லை." பக்கம் 22

"அரிஜனங்களிலிருந்து இஸ்லாம், கிரிஸ்துவராக மாறியவர்க்குக் கூட சமத்துவம் கிடைக்கிறது." பக்கம் 22
"இஸ்லாம், கிறிஸ்துவம் மனிதாபிமானத்தைத் தம் மதங்களின் மூலாதாரமாகக் கருதுகின்றன. ஒருவரும் மற்றவரை அவமதிக்கக்கூடாது. சமத்துவமின்றி யாரையும் நடத்தக்கூடாது. சமத்துவமின்றி யாரையும் நடத்தக்கூடாது. மனிதாபிமானமே இம்மதங்கள்." பக்கம் 23

" இவ்வித போதனைகள் இந்து மதத்தில் இல்லை. ஒரு மனிதனின் மனிதாபிமான உணர்வுக்கு மதிப்பளிக்காத மதத்தால் என்ன பயன்? அதில் தொடர்வதில் பலன் என்ன? பக்கம் 23

"இந்த இந்துக்கள் மிகக் கொடுமையான மனிதர்கள். அவர்களுடைய சரிசனையும் வெளிக்காரியங்களும் இரு மாறுப்பட்ட துருவங்கள். அவர்கள் நாவிலே ராமனையும், கையில் கூர்வாளையும் வைத்திருப்பார்கள். யோகியைப்போல் பேசி கொலைகாரனைவிட கோரமாய் நடப்பார்கள்." பக்கம் 24

"பண்டைய மதம் என்பதால், ஒருவன் அம்மதத்தில் தொற்றிக்கொண்டிருக்கவேண்டும் என்று ஒரு முட்டாள் மட்டுமே சொல்லமுடியும். அறிவுஜீவி இதை ஏற்க மாட்டான். நீங்கள் வாழும் சூழ்நிலையிலேயே வாழுங்கள் என்பது விலங்குகளுக்கு பொருந்தும். மனிதனுக்குப் பொருந்தாது. மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள வேறுபாடு, மனிதன் மேன்பாடு அடையக்கூடியவன்; ஆனால், விலங்கு அப்படிப்பட்டதல்ல, மாற்றமில்லாது மேம்பாட்டை உண்டாக்க முடியாது. மத மாற்றம் ஒரு மேம்பாடு." பக்கம் 35

"இருக்கின்ற் சுத்ந்திரத்தைப் பயன்படுத்தி அரிஜனங்களின் இளைய தலைமுறையினர் தங்களை விடுவித்துக் கொள்ளாவிட்டால் (இந்துமத சங்கிலி விலங்கை உடைக்காவிட்டால்) எதிர்காலத்தில் இவன் கயவன், சுயநலவாதி, அடிமை என்று இம்மண்ணில் பழிக்கப்படுவர்." பக்கம் 34

"இறைவன் எங்கும் எதிலும் உள்ளான் என்பார்கள். ஆனால் மிருகத்தைவிட கேவலமாய் மனிதனை நடத்துவார்கள். இந்த இந்துக்களுடன் சேர்ந்திருக்காதீர்கள். இவர்கள் மிகக் கொடிய வஞ்சனையாளர்கள். எறும்பிற்கு சர்க்கரை உணவிடுவர். ஆனால், தாழ்குடிமகன் தண்ணிர் குடிக்க எடுக்க தடைவிதிப்பர். இவர்களால் உங்கள் தன்மானத்தை இழந்தீர்கள்." பக்கம் 24
"இவர்களிலிருந்து விடுபட ஒரே வழி உங்களை பின்னிப் பிணைந்துள்ள இந்துமத சங்கிலியை அறுத்து எறிந்துவிட்டு வெளியேறுவது ஒன்றே சிறந்த வழி என்று நான் உறுதியாகக் கூற முடியும்." பக்கம் 25

"சட்டப் பாதுகாப்பு வீண்; அது என்னவெனில், ஒரு சிறைக்கைதி சங்கிலிகளிலிருந்து விடுபடுகிறான்." பக்கம் 26

"மகார் இனத்திலும் தீண்டாமை உண்டு என்று இந்து துவேஷிகள் கூறுவர்; அதைக் கற்றுக்தந்தது யார்? கற்பித்தவன் குற்றவாளியே ஒழிய கற்றுக்கொண்டவன் அல்ல!" பக்கம் 29

"இந்துமத விலங்கை அறுத்தெறிவது அவசரமானது - அவசியமானது." பக்கம் 28

"தீண்டத்தகாத மக்களின் தீண்டாமை ஒழிய மதமாற்றமே மாபெரும் மருந்து." பக்கம் 39

"சாதி ஒழியாது; கொடிய விஷம் அமிர்தமாகாது." பக்கம் 39

"சமபந்தி போஜனம், கலப்புத் திருமணங்களால் தாழ்வு ஒழியாது." பக்கம் 39

"இந்து மதம் உங்கள் முன்னேற்றத்துக்கு பல திசைகளிலும் முட்டுக்கட்டையாய் உள்ளது; உங்கள் எண்ணச் சுதந்திரத்தை மூட்டைகட்டி முடக்கிப்போட்டு உங்களை நிரந்தர அடிமையாக்கிவிட்டது; வெளியுலகில் கூட நீங்கள் அடிமைகளாய் சித்தரிக்கப்படுகிறீர்கள்; நிங்கள் சுதந்திரம் பெற கட்டாயம் மதம் மாற வேண்டும்." பக்கம் 28

இதைப்போல் லட்சக்கணக்காண கருத்துக்களை கருத்துக்களை டாக்டர் அம்பேத்கர் கூறியுள்ளார். இதனால் தான் பார்ப்பனர்கள் அவரை இத்தனை காலமாகப் புறக்கணித்து பாரத ரத்னாவை நிறுத்தி வைத்திருந்தனர்.

இந்து மதக் கோட்பாடுகள் மிகப் புனிதமானவையாம்! போற்றத்தகுந்தவையாம்! இஸ்லாம், கிறிஸ்துவ மதங்கள் மோசமானவையாம்! அதனால்தான் அம்பேத்கர் இதில் ஏதாவது ஒன்றில் சேராமல் புத்த மதத்தில் சேர்ந்தாராம்! புத்தமதம், புனிதமான (?) இந்து மதத்தின் கிளை மதமாம். அம்பேத்கர் இப்படியெல்லாம் சொன்னதாக ராம. கோபாலப் பார்ப்பனர் அறிக்கை விடுகிறார். அதை, "பிரபாகரன் மாத்தையாவால் சுட்டுக் கொலை; மிஸ்டர் அந்துமணி மலம் தின்கிறார்; காரணம், மகாவிஷ்னு வராக அவதாரத்தில் அதக் தின்றார் என்றும், எனவே மக்களும் அதைக் கடைப்பிடித்து ஈசனின் வாசலுக்குச் செல்ல வேண்டும் என்றும் ஒரு நீண்ட பேட்டியளித்தார்" இப்படிப்பட்ட உண்மையான செய்திகளை மட்டுமே வெளியிடும் தினமல(ம்)ர் மட்டுமே வெளியிட்டு இ(ஈ)ன புத்தியைக் காட்டுகிறது.

இப்போது அம்பேத்கருக்கு நூற்றாண்டு விழா என்றதும் குல்லூகப்பட்டர்களும் காகப்பட்டர்களும் கூடிச் சேர்ந்து கொண்டு உன்னை ஏமாற்றத் திட்டம் தீட்டி விட்டார்கள்.

தாழ்த்தப்பட்ட இனமே! இனியும் ஏமாறாதே!! நீ தாழ்ந்தவனல்ல! தரங்கெட்ட்வர்களால் தாழ்த்தப்பட்டவன்! உன் விடுதலை பள்ளிவாசலிலும், சர்ச்சிலும், புத்த ஆலயத்திலும், சீக்கிய குருதுவாராவிலும், பெரியாரின் பாசறையிலும் மட்டுமே உண்டு.

உன் இழிநிலை ஒழிய எதில் சேர வேண்டும்? தலீத் முஸ்லிம் விடுதலை இயக்கத்துக்கு உடனே எழுது உன்னை தக்கப் பாதுகாப்போடு சேர்த்து விடுகிறேன். உன்னயும் மனிதமாக- சகல கெளரவம் உள்ள ஸம மரியாதை உள்ள சகோதரனாய் வாழ வைக்க எங்கள் வாழ்வையே அர்ப்பணித்து கோடான கோடி முஸ்லிம்களும் காத்துள்ளோம்.

எங்களுக்கு நாடகம் போடத் தெரியாது; நடிப்பதற்கும் தெரியாது; "உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது - கடவுள் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவர் - மந்திரம் பார்ப்பனருக்குக் கட்டுப்பட்டது" என்று ராம கோபாலப் பார்ப்பனர்கள் சொல்வதைப் போல் எங்களுக்குச் சொல்லத் தெரியாது; பள்ளிவாசலுக்குள் வராதே - குர்ஆன் ஓதாதே - நீ வந்தால், தொட்டால் தீட்டு என்று எங்களுக்குச் சொல்லத் தெரியாது.

சமத்துவமாய் நடந்துக் கொள்ளவும் - எல்லோரையும் சமத்துவமாய் நடத்தவுமே நாங்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளோம்.

உன்னை அடிமைப்படுத்திய ராம. கோபால வம்சத்தை எட்டித்தள்ளி விட்டு - உன்னைப் பிணைத்திருக்கின்ற சாதீயச் சங்கிலிகளை உடைத்து எறிந்து விட்டு - சாத்திரச் சகதியில் இருந்து விடுப்பட்டு சந்தனக் காற்றை நுகர்வதற்கு - சாந்தி, சமாதானம், சகோதரத்துவம், சமத்துவம் பெறுவதற்கு வா என உன்னை அன்போடு அழைக்கின்றேன்.

தவறு செய்வது பார்ப்பான்; பழிப்போடுவது முஸ்லிம்கள் மீது!

இது மதச்சார்பற்ற நாடு; இங்கு -

"ஹிந்துஸ்தான் லீவர் லிமிடெட்"
"ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ்"
"ஹிந்துஸ்தான் டெலிபிரிண்டர்ஸ்"
"ஹிந்து நாளிதழ்"


இப்படி மதவெறியைத் தூண்டக் கூடிய பெயர்களைக் கொண்ட நிறுவனங்கள் ஏராளம்!

மேலும், முன்னாள் மத்திய அமைச்சர் T.T. கிருஷ்ணமாச்சாரி மகன் T.T.K வாசுவுக்குச் சொந்தமான நிறுவனம் "பிரிட்டானியா பிஸ்கட் கம்பெனி."

"பிரிட்டானியா" என்றால், பிரிட்டிஷ் அரசு - பிரிட்டனின் நேசன் எனப் பொருள்; நம் பகையாளி வெள்ளையன் பெயரால் குழந்தை உணவு தயாரிப்பது தவறு இல்லை என்றால், நம் பங்காளி "பாகிஸ்தான்" பெயர் வைப்பதும் குற்றமில்லைதானே!

தமிழர் - முஸ்லிம் ஒற்றுமை!

"முக்குலத்துச் சிங்கம்" - "தேவர் திருமகனார்" முத்துராமலிங்கத் தேவருக்கு சிறுவயதில் தாய்ப் பால் தந்தது ஒரு முஸ்லிம் மாதுதான் என்பதனை தேவர்குல மக்கள் அனைவரும் அறிந்த ஒன்று.

ஒரு பார்ப்பனப் பெண்ணுக்கு இப்படிப்பட்ட பாசம் வருமா? இருந்தாலும் பார்ப்பனர்களுடைய ஆகம அனுஷ்டானங்கள் தான் ஏற்குமா?

இதிலிருந்து முஸ்லிம்களின் நேச நெஞ்சத்தைப் புரிந்துக் கொள்ளமுடியும்!

ஒரு முஸ்லிமுக்கு எதிரியே கிடையாது. அவன் உலக ஜீவன்களை நேசிப்பவன்; பார்ப்பனர்களைப் போல் உயர்வு - தாழ்வு கருதமாட்டான்; இதனால் தான் அவன் பார்ப்பானுக்கு ஆகாதவனான்.

தாழ்த்தப்பட்டோர் - முஸ்லிம் ஒற்றுமை!

நான் ஒரு அரிஜனனுடன் ஒரே தட்டில் உணவு உண்ணத் தயார்! சங்கராச்சாரி சக்கிலியனுடன் ஒரே தட்டில் உண்ணத் தயாரா?

நான், உன்னால் பிரிந்து வைக்கப்பட்ட எந்தத் தாழ்குடியிலும் பெண்ணெடுத்து வாழத் தயார்!

பெண் கொடுக்கவும் எங்களவர் தயார்! இதே சங்கரமடத்தவர் தயாரா?

இவைகளுக்கு விடைக் கொண்டுவரட்டும் ராம. கோபால பார்ப்பனர்கள்; பின்னர் யோசிப்போம்- இவனுடன் நேசமாய் வாழ்வது குறித்து; அதுவரை பார்ப்பானை விரட்டிக்கொண்டிருப்போம்! இந்தப் பெரும் பணியினை முடிக்கும் வரை -

ஜிஹாத் அமைப்பும்
கிறிஸ்துவ அமைப்பும்
தலீத் இயக்கங்களும்
தேவர் பேரவையும்
வன்னியர் பேரவையும்
சீக்கிய, பெளத்த அமைப்புகளும்
ஏனைய தமிழர் அமைப்புகளும்


ஒன்றாய்க் கூடி, ஒருமைப்பாடு காப்போம்

அதற்காக மரணத்தையும் ஏற்போம்!!

அர்ப்பணம் : ஆரியரின் அறியாமைக்கு

உரிமை : மதம் மாறுவோர்க்கும் - மாறியோர்க்கும்

சமர்ப்பணம் : காஷ்மீர் புலிகளுக்கு

*** முற்றும்***