Subscribe:

திங்கள், 14 மே, 2012

அன்பு தம்பி ஆஜம் அவர்களுக்கு...

அன்பு தம்பி ஆஜமிர்க்கு இனிய ஸலாதுடனும் துஆக்களுடனும்... உன் அண்ணன் வேங்கை எழுதுகிறேன்... நலமா என்றுகூட உன்னை கேட்கமுடியாத கையறுபட்ட நிலையில்தான் இக்கடிதத்தை தொடர்கிறேன்...

உனக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை... கருவில் உன்னை காத்து வளர்த்திட்ட அன்னை...இன்று கல்லறையில்... நீயோ... விடை தெரியாத சிறை கொட்டடியில்... இழப்புகளை மட்டுமே தொடரும் உன் இதயம்...எத்துனை வலியோடிருக்கும்... 

சகோதரா... நீசத்தியத்திற்க்காக சிறைபட்டாய்... சதிவலையில் பிணைக்கப்பட்டாய்...உன்னைப்போல எத்தனை ஆஜம்கள்... தாய் ஜீனத்தம்மாள்போல எத்துனை தாய்மார்கள்... நினைக்கையில் எங்கள் இதயம் வலிக்கிறது... 

கலங்காதே சகோதரா... இறையவன் எடுத்துகொண்டது அவனுக்கு உறியதைதானே...இன்று தாய் ஜீனத்தம்மாள்... இறையவன் நாடினால் நாளை நாமும்கூட... இழப்புகளை ஏற்கும் மனம் எவருக்கும் கிடையாது...இருப்பினும் ஏற்றுதானே ஆகவேண்டும்... 

ஆனால்...சத்தியமாய்... உரைக்கிறேன்...சத்தமிட்டு உரைக்கிறேன்... என் இறையவன் மீது நான் கொண்ட ஈமானின் வலிமையுடன் உரைக்கிறேன்... உன்னைப்போல உள்ளே வாடும் உன்னைப்போல இழப்புகளால் வாடும்... சகோதரனின் விடியல் வெகுதூரமில்லை... சாத்தியமாகும் வரை எதுவுமே பாரமில்லை... 

அநியாயம் செய்தவனெல்லாம் இன்று அதிகாரவர்க்கமாய் இருக்கும்போது... மக்களை சுரண்டியவனெல்லாம் இன்று சுகபோகமாய் இருக்கும்போது பாவமறியாத உன்னை போன்ற ஆஜம்கள் மட்டுமே ஏன் சிறையில் வாடவேண்டும்... சிறைபட்டாய்...தகப்பனை இழந்தாய்... வாழ்கையின் இனிமையை இழந்தாய்... இதோ இன்று ஈன்ற அன்னையை இழந்தாய்... 

இழப்பு..இழப்பு...இழப்பு...எத்துனை இழப்புகள்... இதனை நினைக்கும்போது எங்கள் இதயங்களில் எரிமலை பிழம்புகள்... இறையவன் நாட்டத்தால் இன்று நாடே உனக்கான விடுதலை முழக்கத்துடன் களமாடுகிறது... எமக்குள் நம்பிக்கை உரம்கூடுகிறது... 

சத்தியம் சத்தியமாய் சாகாது... சத்தியம் சத்தியமாய் சாகாது... சத்தியம் நிச்சயமாய் வென்றே தீரும்...
சிறையில் உண்னுள் எரியும் நெருப்பு இன்று எங்களை சுடுகிறது... உண்ணும் உணவும் பருகும் நீரும்கூட கேள்விகளை கேட்கிறது... காரணம் நானும் ஒரு தாய்க்கு மகன்தானே... நானும் மனைவிக்கு கணவன்தானே... நானும் பிள்ளைகளின் தகப்பன்தானே... உன்நிலையில் நானிருந்தால் ...

ஆம் இந்த கேள்விதான் எம்மை சுட்டெரிக்கிறது... ஆளுவோருக்கும் மனித மனம்தானே அதனால்தான் அந்த நம்பிக்கையில்தான் உன்னிலையினை உரக்க சொல்கிறோம்... தமிழ் உறவுகளின் 
உணமையான உணர்வுகளுடன் இணைந்து சொல்கிறோம்... 

சகோதரா... உன் கண்ணீர்தான் இறுதியானதாக இருக்க வேண்டும்... இனி ஒரு ஆஜம் கண்ணீர்விடக்கூடாது... உன்னை மீட்பது எமது கடமை... அதற்காக உன்னிடம் நாங்கள் கேட்பது அதற்காக உன்னிடம் நாங்கள் எதிர்பார்ப்பது... அல்லாஹுவிடம் எங்களின் வீரியம் குன்றாத காரியமாற்றிட துஆ... நாளை மறுமை நாளில் மஹ்ஷரில் நாம் இணைந்து நிற்கும்போது எமக்காக சுவனகதவுகள் திறக்க வேண்டும் என்கிற துஆ... 

இறையவன் நாடினால்... இம்மையில் உன்னை மகிழ்ச்சியுடன் சந்திப்பேன்...இல்லையெனில்மறுமையில் உனக்காக வாதிட்ட மனநிறைவுடன் சந்திப்பேன்... 

உன் விடியலின் வெளிச்சத்தை தேடி உன் சகோதரன் மீண்டும் இனிய ஸலாத்துடன்... 
வேங்கை.சு.செ.இப்ராஹீம் 


ஞாயிறு, 13 மே, 2012

சங்கைமிகு சமுதாய சொந்தங்களே...



கண்ணியமும் சங்கையுமிகு சமுதாய சொந்தங்களே...
அனைவர் மீதும் ஏக இறையவனின் சாந்தியும் சமாதானமும் பொழியபடட்டுமாக...

தமிழகத்தில் பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான  அப்பாவி முஸ்லிம்கள் 
சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடுவது அனைவரும் அறிந்ததே...
இவர்களில் பலர் கடுமையான நோய்களுக்கு ஆளாகி வேதனைபட்டுவருவது மிக மிக வருததறிக்குறியது. சிறைத்துறை குறைந்தபட்ச மனிதாபிமானத்தையும் இவர்களுக்கு வழங்க மறுக்கிறது. பெரும் பொருளாதார சிரமங்களுக்கிடையே இவர்களுக்கான வழக்குகள் வாதிடப்பட்டு நீதிக்காக காத்திருக்கும் இம்மக்களுக்காக இவர்களின் அவல நிலையை அரசுக்கு எடுத்து சொல்லும் முகமாக "இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்" மாநிலம் தழுவிய ஒற்றைக்கொரிக்கை தொடர் பொதுக்கூட்டங்களை நடத்தி வருவதும் நீங்கள் அறிந்ததே. 

சிறைபட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களுக்காக இஸ்லாமிய இயக்கங்கள் மட்டுமே வாதிட்டால் அது ஒரு சார்புநிலையாக அறியப்படும் ஆகவே இந்த அநீதி மாற்று சமூக மக்களாலும் கவனிக்கப்பட வேண்டும் மாற்று சமூக மக்களாலும் பேசப்பட்ட வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில் இக்கூட்டங்கள் பல்வேறு தரப்பினரையும் அத்துடன் சிறைவாசிகளின் விடுதலைக்காக தொடர்ந்து போராடிவரும் இஸ்லாமிய அமைப்புகளையும் ஒரே போது மேடையில் விடுதலைக்கான முழக்கங்களை எழுப்பிட செய்துவருகிறது இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்.

முதலில் திருப்பூர் அடுத்து கோவை என மக்களை அரசின் கவனத்தை ஈர்க்கும் வண்ணமாக திரட்டியது இன்றைக்கு பலராலும் குறிப்பாக தமிழ் தேசிய தளத்தில் முக்கிய வாதக்கருவாக சிறைவாசிகளின் விடுதலை முன்னெடுக்கபடுகிறது. அதற்க்கான உதாரணம்தான் ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் வரும் மே 27 அன்று காஞ்சி மக்கள் மன்றத்தின் கிளை துவக்க விழா  சிறைவாசிகள் விடுதலைக்கான கவன ஈர்ப்பு பொதுக்கூட்டமாக நடைபெறவுள்ளது. 

அதற்கும் முன்னதாக வரும் மே 19 அன்று திருச்சியில் நடைபெறவுள்ள விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் அரசியல் எழுச்சி மாநாட்டில் முன்னாள் மத்திய அமைச்சரும் லோக்ஜன சக்தி கட்சி தலைவருமான தோழர் ராம் விலாஸ் பாஸ்வான் அவர்கள் முன்னிலையில் சிறைவாசிகளின் விடுதலை கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றப்படவுள்ளது. மே 20 அன்று சென்னை மெரீனா கடற்கரையில் மே பதினேழு இயக்கம் நடத்தும் இலங்கை இன அழிப்பை நினைவுகூரும் நிகழ்விலும் இக்கோரிக்கை முன் மொழியபடவுள்ளது...

இவை எப்படி சாத்தியமானது ஆம் நமது சமூக மக்களின் எழுச்சியும் சிறைவாசிகளின் விடுதலை விசயத்தில் மக்கள் காட்டிடும்  ஆர்வமும் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் அமைத்துவரும் பொது மேடையும்தான் காரணம்.  இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் சிறைவாசிகளின் நிலையை வெகுஜன மக்களும் பேசினால்தான் ஒரு விடியல் பிறக்கும் என எண்ணியது ஊடகங்கள் மற்றும் அதிகாரவர்க்கம் மேற்கொண்ட பிரச்சாரங்கள் அனைத்து சிறைவாசிகளையுமே தீவிரவாதிகளாக மதவாதிகளாகதான் மாற்று சமூக மக்களை அறிய செய்திருந்தது. அந்த முடைநாற்ற பிரச்சாரங்கள் இந்து முறியடிக்கப்பட்டுள்ளது. அரசியல் கலவாது அமைப்புகள் சாராது இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் முயற்சித்த இம்முயற்சி அல்லாஹுவின் அளப்பரிய கருணையினால் மாபெரும் வெற்றிகளை குவித்து வருகிறது. இருப்பினும்  மக்களை திரட்டுவது பொதுக்கூட்டங்கள் நடத்துவது மட்டும் நமது வெற்றியல்ல என்றைக்கு சிறையில் வாடிடும் அப்பாவிகள் விடுதலையடைகிறார்களோ அதுதான் அன்றைக்குத்தான் நமது முழுமையான வெற்றி... 

சமுதாய சொந்தங்களே... இதோ மற்றவர்கள் சிறைவாசிகளின் விடுதலைக்காக போராட களம்கண்டுவிட்டார்கள் அதற்காக துவங்கியவர்கள் முடங்கிவிடக்கூடாது. ஆகையினால்தான் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் தொடர்ந்து கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. இதுவரை நடத்துள்ள திருப்பூர் கோவை ஆகிய பொதுக்கூட்டங்களுக்கு இயக்கத்தின் நிர்வாகிகள் எவரிடமும் பணம் வசூலிக்கவில்லை அவர்களாகவே சொந்த பணத்தை வைத்துதான் நிகழ்வுகளை நடத்தினார்கள்...  இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் உமர்கயான் மரியாதைக்குறிய வகையில் வழக்கறிஞர் தொழில் செய்து வருபவர் பொருளாதாரத்தில் பெரிய ஜாம்புவாநெல்லாம் இல்லை. அதேபோல்தான் தோழர் நாசதீன் அண்ணன் வீரர் அப்துல்லாஹ் தம்பி சதீஸ் போன்றவர்களும் இப்படிப்பட்ட பொருளாதார இக்கட்டான சூழலில் தொடர் பொதுக்கூட்டங்களையும் விட்டுவிட முடியாத கட்டாயம் இவர்களுக்கு உண்டு. 

மேற் சொல்லப்பட்ட கூட்டங்களுக்கு அடுத்து மேலப்பாளையம்,இராமநாதபுரம்,திருச்சி என நமது செயல் திட்டம் நீண்ட பட்டியலாக இருக்கிறது சிறைவாசிகளின் விடுதலைக்காக நாம் அல்லாஹுவின் உதவியுடன் எத்தகைய தியாகங்களையும் செய்திட தயாராக இருக்கிறோம்.ஆனால் பெரும் சவாலாக முன்னிற்கும் பொருளாதாரத்திற்கு என்ன செய்வது? 

அன்பு சொந்தங்களே... நான் என் சிறிய வயது முதல் பல்வேறு அமைப்புகளில் பயணித்தவன் இருப்பினும் ஒரு போதும் நான் யாரிடமும் பண வசூலுக்காக சென்று நின்றதில்லை என் சக்திக்கு தக்கவாறு உதவிகளை செய்துவிட்டு இருந்துவிடுவேன். வறுமையின் காரணமாக மருத்துவ உதவிகள் வேண்டுவோருக்கு என் நண்பர்கள் மூலமாக உதவி கிடக்க முயற்சித்து இருக்கிறேன்.

 ஆனால் இன்று முதன்  முறையாக உங்களிடம் நமது சமுதாய சொந்தங்களின் விடுதலைக்காக உதவி கேட்கிறேன். பொருளாதார சிரமத்தால் இப்போராட்டம்  தடைபட்டுவிடுமோ என்கிற அச்சம் என்னை மட்டுமல்லாது தம்பி உமர்கயான் போன்றவர்களுக்கும் வந்துவிட்டத்தை என்னால் உணர முடிகிறது. தொடர் கூட்டங்களுக்கு திட்டமிட்டபோதே நாம் ஒரு விசயத்தில் தெளிவாக இருந்தோம் யாரிடமும் குறிப்பாக சிறைவாசிகள் சம்மந்தபட்டவர்களிடம் இருந்து ஒரு ரூபாய் கூட பெறக்கூடாது என்பதில் இதுவரை அல்லாஹு அந்த திட்டத்தில் இருந்து அம்மை அடிபிரள செய்யவில்லை.இனி மேலும் இந்த கண்ணியத்தை நீட்டித்து தர வேண்டும். 

சாதாரணமாக மிக எளிமையாக ஒரு பொதுக்கூட்டம் நடத்த வேண்டுமானாலும் குறைந்தபட்சம் ரூபாய் 50 செலவாகிறது இந்நிலையில் நாம் செல்ல வேண்டிய தூரங்கள் இன்னும் அதிகமாக இருக்கிறது இப்போராட்டம் எவரையும் முன்னிலைபடுத்தவோ எந்த இயக்கத்தையும் வளர்க்கவோ இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. முழுக்க முழுக்க அப்பாவிகளின் விடுதலை மட்டுமே ஒரே குறிக்கோள்.ஆகவே மனிதநேய சமுதாய சொந்தங்களே சிறைபட்டுள்ள நமது சொந்தங்களை மீட்க்க உங்களிடம் உரிமையுடன் உதவிகோருகிறேன். உங்களால் தரப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் உரிய கணக்குகள் ஆதாரங்களுடன் காண்பிக்கப்படும். அல்லாஹ் கண்காணிக்கிறான் என்கிற அச்சத்துடன் அவை செலவிடப்படும். சமுதாயத்திற்காக நன்மைக்காக அளவில்லாமல் உதவிடும் நீங்கள் வாழ்க்கையை தேடிக்கொண்டிருக்கும் நமது சொந்தங்களின் விடியலுக்காகவும் உதவிடுவீர்கள் என நம்புகிறேன். 

அல்லாஹுவிர்க்காக உதவிடுங்கள் அல்லாஹ் ஈருலகிலும் நமக்கான வெற்றிகளை தருவான்... 

உங்களின் பங்களிப்பை இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்க நிர்வாகிகளை 0091-9944112879, 0091-9944713816 ஆகிய அலைபேசிகளில் தொடர்புகொண்டு பதிவிடவும்...

உண்மையுடனும்...உணர்வுடனும்....உரிமையுடனும்... உங்களின் உதவிக்காக 
என்றும் உங்கள் சகோதரன்  
வேங்கை.சு.செ.இப்ராஹீம் 

புதன், 9 மே, 2012

சகோதரர் சுவைர் மீரான் அவர்களுக்கு...

அன்பிற்கினிய சமுதாய சொந்தங்களுக்கு இனிய ஸலாம்... துஆ...

நான் கீற்று இணையதளத்தில் எழுதி இருந்த "பள்ளிவாசல் இடிப்பும்... ராஜபக்சேவின் கொழுப்பும்"
என்கிற கட்டுரைக்கு மறுப்பளித்து ஜப்னா முஸ்லிம் {www.jefnamuslim.com} என்கிற இணையத்தின் 
வழியாக சகோதரர் சுவைர் மீரான் என்பவர் பதிவிட்டு இருக்கிறார்,,, அவரது பதிவில் 
புலிகள் இயக்கம் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்திய இழப்ப்புகள் என்கிற பெயரில் என்னை கடுமையான 
வார்த்தைகளால் தாக்கி எழுதி இருக்கிறார்... 

தாக்கப்பட்டது இறைவனின் இல்லம்... ஒரு முஸ்லிமாக உலகில் எங்கு முஸ்லிம்களுக்கு அநீதி இலைக்கபட்டாளும் எம்மை போன்றோரின் இதயம் கனப்பது இயற்க்கை... அந்த அடிப்படையில் 
இலங்கையில் சிறுபான்மை இனமாக வாழக்கூடிய எம்மக்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாவும் 
வாழவேண்டுமென நினைப்பது தவாறான செயலாக இருக்க முடியாது... தம்புள்ள பள்ளிவாசல் 
தாக்குதல் சம்பவத்திற்கு தமிழகத்தில் கண்டங்களை பதிவு செய்த அனைவரையும் நீலிக்கண்ணீர் 
வடிக்கும் முதலைகள் என்கிறார் சகோதரர்... தமிழகத்தில் இருக்கக்கூடிய இஸ்லாமிய இயக்கங்கள் 
ஆரம்பகாலங்களில் எத்துனை அடக்குமுறைகளை சந்தித்து அரசுகளின் பொய் வழக்குகளை சந்தித்து
சிறைவாசங்களை சந்தித்து இன்றைக்கு சமுதாய உரிமைகளுக்கு சட்டம் இயற்றப்படும் அவைகளிலும் தடம் பதித்துள்ளார்கள் என்பது எல்லாம் தெரிந்த கட்டுரையாளருக்கு தெரியாமலிருக்க வாய்ப்பில்லை... அப்படிப்பட்ட போராளிகளை இவர் நீலிகண்ணீர் வடிக்கும் முதலைகள் என்கிறார்... 

நான் பெயர்தாங்கி முஸ்லிமா இல்லை பெயருக்குறிய முஸ்லிமா என்பதை பற்றிய ஆராச்சியிலும் ஈடுபட்டுள்ளார்... மகிழ்ச்சி... 

சகோதரா... உங்கள் நாட்டு அதிபரின் உருவபொம்மை எரிக்கபட்டதும் கொடி எரிக்கப்பட்டதும் உங்களுக்கு வருத்தமளிக்களாம் ஆனால் இடிக்கப்பட்டது நமது இறையவனின் இல்லம் அந்த சம்பவத்திற்கு முன்னாள் நீங்கள் குறிபிட்டுள்ள சம்பவங்கள் எமக்கு பெரிதாக தெரியவில்லை... 

புலிகளை ஒழிக்கிறோம் என்கிற பெயரில் அங்குள்ள தமிழர்களை முழுமையாக கொண்டோலித்த கொடுமை வேறு யாருக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதுதான் எம்மை போன்றவர்களின் விருப்பம்... 
உங்களுடைய வார்த்தைகளுக்கு முழுமையாக எம்மால் பதில் அழிக்க முடியும் ஆனால் அதில் எம் சமூகத்தின் மரியாதை அடங்கியுள்ளது... நீங்கள் எப்படி ஒரு நாட்டில் சிறுபான்மைகளாக வாழ்கிறீர்களோ அதேபோல்தான் நாங்களும் இந்திய நாட்டில் சிறுபன்மைகளாக வாழ்கிறோம் எண்ணூறு ஆண்டுகாலம் இந்நாட்டை ஆண்ட எம்மக்கள் இன்றைக்கும் அடிப்படை உரிமைகளுக்காக போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்... இந்நிலை எமது அண்டையில்  வாழக்கூடியவர்களுக்கு வந்துவிடக்கூடாது என்பதுதான் எமது நோக்கம்... பழையவற்ற தோண்டிக் கொண்டிருந்தால் பலன் எதுவும் கிடைக்கபோவதில்லை... 

மேலும் சகோதரர் சுவைர் மீரான் என்னை புலிகளின் ஆதரவாளன் இல்லை இல்லை புலிகளின் இயக்கத்தை சார்ந்தவனாகவே அடையாளபடுத்திட முனைந்துள்ளார்... சகோதரா... நாங்கள் வாதிடுவது வாழ்க்கையை இழந்துவிட்ட தமிழ் மக்களுக்காக புலிகளுக்காக அல்ல என்பதை இதை போன்று இன்னும் ஆயிரமாயிரம் கட்டுரைகள் வெளியிட்டாலும் உங்களால் மறைக்கமுடியாது... 

நான் எனது கட்டுரையில் பல பொய்களை சொல்லியிருக்கிறேன் எனகுறிபிடும் சகோதரர் எனது கட்டுரையின் முழுமையான வடிவத்தை முழுதுமாக படிக்காமல் அவசரகோலத்தில் பதில் கொடுத்துள்ளார்... அதைபற்றிய கவலைகள் எமக்கில்லை... காரணம் இதை போன்று எவ்வளவோ விமர்சனங்களை கண்டவர்கள் நாங்கள்... 

இறுதியாக சகோதரருக்கு நான் சொல்லிகொள்வது தமிழகத்தில் நாங்கள் தமிழ் உறவுகளுடன் இணைந்து களமாடககூடிய இனிமையான காலமிது அதன்மூலமாக தமிழ் மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே வலிமையான உறவை மேம்படுத்திட முனையும் எம்மை எந்த சக்திகளாலும் முடக்கிவிட முடியாது... உண்மையான நேர்மையான அனைத்து காரியங்களுக்கும் அல்லாஹு நிச்சயமாக வெற்றியை தருவான்... 

வஸ்ஸலாம் 
துஆக்களுடன்...
வேங்கை.சு.செ.இப்ராஹீம்