Subscribe:

புதன், 27 ஜூன், 2012

பழனிபாபா-வாசிக்கபடவேண்டிய வரலாறு...


சமூகப்புரட்சியாளர் ஷஹீத் பழனிபாபா 
பழனிபாபா-வாசிக்கபடவேண்டிய வரலாறு...


பழனிபாபா
எண்பதுகளின் துவக்கத்திலிருந்து தொண்ணூறுகளின் மத்தி வரை ஆளும் வர்கதிர்க்கும் அடக்குமுறையாளர்களுக்கும் தூக்கம் கெடுத்த சிம்மசொப்பனம்...

தனக்கென பெரிய அமைப்பில்லை தனியான அலுவலகமில்லை...  பின்பற்றி வரக்கூடிய தொண்டர்படையில்லை... சொந்த சமுதாயதிற்க்குள்ளும் பெரியளவில் ஆதரவில்லை... எந்தவிதமான அதிகாரபதவியும் இல்லை... ஆனால் மேற்குறிபிட்ட அனைத்தும் இருப்பவர்களால் சாதிக்க முடியாத பலவற்றை சாதித்த தனிமனித இராணுவம்தான் பழனிபாபா... 

கண்ணியதலைவர் காயிதேமில்லத் அவர்களின் மறைவிற்குப் பிறகு தமிழகத்தின் இஸ்லாமிய சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளை உரிமைகளை அரசுக்கு கொண்டு செல்லக்கூடிய வீரியமான தலைமை வெற்றிடமாகிபோனபோது... முஸ்லிம்களுக்கு எதிராக சங்கபரிவாரங்கள் தங்களது கட்டுகதைகளை கட்டவிழ்த்துவிட்டபோது தட்டிகேட்க யாருமே இல்லையா என்கிற ஏக்க பொருமல்கள் சமுதாய சாமானிய மக்களிடம் பரவிவந்தபோது தனது வீரியமான வீரமான உரைகளால் தமிழக முஸ்லிம்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு தைரியமூட்டியவர் பழனிபாபா...

நாங்கள் கைபர் போலன்  கணவாய் வழியாக ஆடுமாடுகளை ஒட்டிக்கொண்டு இந்திய தேசத்திற்குள் அத்துமீறி நுழைந்தக்கூட்டமல்ல... இந்த மண்ணின் மைந்தர்கள்... ஆரிய அடிமைதுவதில் இருந்து எம்மக்களை மீட்டெடுக்க இஸ்லாம் என்கிற மார்க்கத்தைத்தான் நாங்கள் இறக்குமதி செய்துகொண்டோம் மாறாக நாங்களே இறக்குமதி செய்யப்பட்ட மக்கள் அல்ல... என வீரியமாக முழங்கி இஸ்லாமியமக்களின் இந்தியபற்றை பறைசாற்றியவர் பழனிபாபா... செல்வசெலிப்பான குடும்பத்தில் பிறந்திட்டபோதும் தன்னை சுற்றி நடக்கும் அநீதிகண்டு வெகுண்டெழுந்து சுகபோக வாழ்க்கையை துறந்தவர் இவற்றுக்கெல்லாம் யார்காரணம்... முஸ்லிம்களுக்கு எதிராக பின்னப்படும் சதிவலைகளுக்கு சொந்தகாரர்கள் யார் என்பதை துல்லியமாக கண்டறிந்து களமாடினர் பழனிபாபா... 

ஆம் பார்ப்பனீயம் மட்டுமே முஸ்லிம்களுக்கு எதிரி ஆரியம் மட்டுமே முஸ்லிம்களை இந்தியநாட்டின் வெகுஜன மக்களிடமிருந்து பிரித்தாலக்கூடிய சூழ்ச்சிகளை முன்னெடுக்கிறது என்பதை பாமரமக்களும் அறியும்வண்ணம் அழகாக தனது பாணியில் எடுத்துரைத்தார்... விளைவு பார்ப்பனர்கள் தவிர்த்து தமிழர்கள் பழனிபாபாவை ஏற்றுகொள்ள துவங்கினார்கள்... தந்தை பெரியார் மீதுகொண்ட பற்றால் அறிஞர் அண்ணாவின் கொள்கைகளில் கொண்ட ஈர்ப்பால் தன்னை அறிவிக்கபடாத திமுக பேச்சாளராகவே ஆரம்பகாலத்தில் அடையாளபடுத்திகொண்டார் பழனிபாபா... கலைஞர் கருணாநிதியின் தலைமைத்துவம் முஸ்லிம்களை கில்லுகீரையாக பயன்படுத்துகிறது என்பதை அறிந்து திமுகவின் துரோகத்தை அன்றே முழங்கி அமரர் எம்ஜிஆரின் அதிமுகவிற்கு ஆதரவானார்... ஆரம்பகாலத்தில் அமரர் எம்ஜிஆரால் பெரிதும் மதிக்கபட்டவர்களில் பழனிபாபா அவர்களுக்கு தனி இடமுண்டு... அமரர் எம்ஜிஆர் அவர்களுக்கு திமுகவினால் ஏற்ப்பட்ட பல சோதனைகளில் இருந்து விடுபட பழனிபாபா உதவினார் என்பது மறைக்கமுடியாத உண்மை... ஒரு கட்டத்தில் அமரர் எம்ஜிஆர் தனது ஆரிய விசுவாசத்தை வெளிக்காட்ட துவங்கினார் சென்னை ஈகா திரையரங்க சாலையில் இந்து முன்னணியின் துவக்கவிழா நடைபெற்றது அப்போது பேசிய அமரர் எம்ஜிஆர் முஸ்லிம்களுக்கு முஸ்லிம் லீக் இருக்கும்போது இந்துக்களுக்கு இந்து முன்னணி அவசியம் என்றார்... அதனை வண்மையாக கண்டித்த பழனிபாபா எம்ஜிஆருடனான தனது உறவை முறித்துகொண்டார்...


தனது நாவன்மையின் மூலமாக அமரர் எம்ஜிஆரின் ஆற்றாமைகளை தமிழக மக்களிடம் தோலுரித்தார்... விளைவு அதிமுகவின் ஆட்சி அடக்குமுறைகளுக்கு பழனிபாபா பலவழிகளிலும் பழிவாங்கப்பட்டார் இருப்பினும் தனது நிலையில் மிக உறுதியாக களமாடினர்... எம்ஜிஆர் அவர்களே பழனிபாபா அவர்களின் செயல்களால் அச்சப்பட்ட காலங்களும் உண்டு... அந்த அச்சங்களின் காரணமாக பலமுறை பழனிபாபா பொய் வழக்குகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் அவருக்கு எதிராக வாய்ப்பூட்டு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன... அரசு அலுவலகங்களுக்குள் பழனிபாபா நுழைய அனுமதி மறுக்கப்பட்டது... எந்த சூழலிலும் தனது போர்க்குணத்தை இழக்காத பழனிபாபா எவருடனும் சமரசமில்லாத வீரத்தால் முஸ்லிம்கள் மட்டுமல்லாது ஏனைய பிற்ப்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகமக்களால் பெரிதும் ஈர்க்கபட்டார்... திமுகவின் துரோகம் அதிமுகவின் நம்பிக்கை மோசடி இவற்றை முறியடிக்க பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுடம் கைகோர்த்தார் அவ்வேளையில் அண்ணல் அம்பேத்கரையும் தந்தை பெரியாரையும் அரசியல் குறியீடாக கொண்டு களமிறங்கிய மருத்துவர் இராமதாஸ் பழனிபாபா அவர்களின் முழுமையான அன்பை பெற்றார்... 

மருத்துவர் இராமதாஸ் அவர்களால் முன் மொழியப்பட்ட தாழ்த்தப்பட்ட பிற்ப்படுத்தப்பட்ட மக்களின் அரசியல் பழனிபாபா அவர்களை வெகுவாக கவர்ந்தது... வடக்கே வன்னியர்கள்... தெற்க்கே தேவேந்திரர்கள்... பரவிவாழும் முஸ்லிம்கள் இணைந்தால் ஆட்சியையும் அதிகாரத்தையும் நம்மால் கைப்பற்ற முடியும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கொள்கை பிரகடனம் செய்தது பழனிபாபா அவர்களால்தான்... முன்னைவிடவும் வீரியமாக பாமகவின் வளர்ச்சிக்கு களமாடினர் பழனிபாபா பெருவாரியான முஸ்லிம்களும் தலித்துக்களும் பாமகவில் அங்கம்பெற காரணமே பழனிபாபா அவர்களின் எழுச்சிகரமான பரப்புரைகள்தான் என்பதை எவரும் மறுக்க முடியாது... 

பழனிபாபா தனது மார்க்கத்தில் தெளிவான நிலைபாடுகொண்டவர் எத்தகைய கடவுள் மறுப்பு கூட்டமானாலும் இஸ்லாத்தின் புனிதத்தன்மையை எடுத்து சொல்ல தயங்கியதில்லை... ஆனால் ஒரு குறுகிய வட்டத்திற்குள் தன்னையும் தனது சமூகத்தையும் அடைததுகொள்ள அவர் விரும்பவில்லை... நாம் வாழக்கூடிய நாட்டில் வெகுஜன மக்களுடன் கலந்து புரிந்துணர்வுடன் அதே  வேளையில் இஸ்லாமிய கோட்பாடுகளில் எவ்விதமான சமரசத்திற்கும் இடமில்லாமல் வாழ அரசியல் பொருளாதாரம் போன்ற துறைகளில் முக்கியத்துவம் பெறக்கூடிய வழிமுறைகளை கற்றுத்தந்தவர் பழனிபாபா... 

சமஷ்கிருத மொழியின் முகமூடியில் பார்ப்பனர் இல்லாத மக்கள் எப்படியெல்லாம் கீழ்த்தரமாக நடத்தபடுகிறார்கள் பிராமணர்களால் பிறப்பால் வளர்ப்பால் அசிங்கபடுத்தபடுகிறார்கள் என்பதையெல்லாம் பட்டியலிட்டு பகிரங்கபடுத்தியவர் பழனிபாபா என்பது மறைக்கப்பட்ட உண்மை... தாழ்த்தப்பட்ட சமூகமக்களின் விடுதலைக்காக அவர்களது மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக எந்தவிதமான எதிர்பார்ப்புமில்லாமல் செயல்பட்ட பழனிபாபா அவர்களால் ஈர்க்கபட்டுதான் ஜான்பாண்டியன் பசுபதி பாண்டியன் போன்றோரெல்லாம் பாமகவில் இணைந்தார்கள்... வழக்கபடியே பாமகவும் பழனிபாபா அவர்களுக்கு இல்லை இல்லை முஸ்லிம்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு துரோகம் இழைத்தது எப்போதும் இல்லாத வகையில் பழனிபாபா கவலைகொண்டார் காரணம் பாமகவை திமுக அதிமுகவைவிட அதிகமாக நம்பினார் பாமக நேரடியாகவே இந்துத்துவ சக்திகளுடன் நட்புகொண்டது பழனிபாபா அவர்களை கவலைக்குள்ளாகியது... 

மாற்று அரசியலை சிந்திக்கவேண்டிய கட்டாயத்திற்கு பழனிபாபா பாமகவினால் கொண்டுசெல்லப்பட்டார் அதற்க்கு தற்போதைய சாட்சியங்கள் நிறைய உண்டு... தேவைபட்டால் வெளிபடுத்துவோம்... தலித் மக்கள் ஆதிக்க சக்திகளால் தாழ்த்தபட்டார்கள் முஸ்லிம்கள் ஆதிக்க சக்திகளின் அச்சுறுத்தலால் தங்களை தாங்களே தாழ்த்திகொண்டார்கள்... ஆக தாழ்த்தப்பட்டவர்களும்... தாழ்த்திகொண்டவர்களும் ஒருங்கிணைந்தால் மட்டுமே இத்தகைய துரோகங்களை வென்றெடுக்க முடியும்... என்கிற தெளிவான மனநிலைக்கு பழனிபாபா வந்தார்... 

முஸ்லிம்களின் மிகப்பெரிய கட்டமைப்பான முஹல்லாஹ் ஜமாத்துக்களை கூட்டமைப்பாக உருவாக்கும் முயற்சிகளை முன்னெடுத்தார். அதே வேளையில் ஜான்பாண்டியன் பசுபதி பாண்டியன் போன்றவர்கள் மூலமாக தலித் மக்களை ஒருங்கிணைக்கவும் செயல்திட்டங்களை வகுத்தார்... ஒவ்வொரு ஊருக்கும் தானே தனிமனிதனாக சென்றார் முஸ்லிம்களின் முஹல்லாஹ் ஜமாஅத் நிர்வாகிகளை சந்தித்தார் தனது திட்டங்களை சொன்னார்... ஏற்றுகொண்டார்கள் இணைந்து களமாட தயாரானார்கள்... தலித் மக்களை சந்தித்தார் இழிநிலை நீங்க சிறப்பான செயல்திட்டங்களை சொன்னார் தலித் மக்கள் பழனிபாபா அவர்களின் பின்னால் அணிவகுக்க தயாரானார்கள்... தேர்தல் அரசியலை புறக்கணித்து தீவிரமாக மக்கள் விடுதலைக்காக களமாடிய திருமாவளவன் பழனிபாபா அவர்களின் கவனத்தை ஈர்த்தார் அவரையும் அழைத்து ஆலோசனைகளை மேற்கொண்டார்... வெண்ணை திரட்டு வந்தது ஆனால் பழனிபாபா என்கிற தாளி சமூகவிரோதிகளால் உடைக்கப்பட்டது.... 

ஆம்... ஒடுக்கப்பட்டோரும் ஒதுக்கபட்டோரும் ஒருங்கிணைத்து அதிகாரத்தை வென்றெடுப்போம் என்கிற சமூகப்புரட்சியாளர் பழனிபாபா அவர்களின் கோஷம் ஆதிக்க சக்திகளின் உறக்கத்தை கெடுத்தது... பழனிபாபா என்கிற மாமனிதன் தனிமனித போராளி படுகொலைசெய்யபட்டார்... சுமார் 238 வழக்குகள் 136 கைதுகள் 124 சிறைகள் இவற்றை எல்லாம் கடந்து மக்களின் உரிமைகளுக்காக கடைசி நிமிடம் வரை குரல்கொடுத்த ஒருமாவீரன் கொடாளிகளால் குடல்சரிக்கபட்டு கொல்லப்பட்டார்... தடா வழக்குகளில் சிறைபடுத்தபடாமலேயே வழக்கை தவிடுபொடியாக்கிய வரலாறு பழனிபாபா என்கிற ஆளுமையற்ற அதிகாரமற்ற ஒரு தனிமனிதனால் மட்டுமே சாத்தியமானது... காரணம் பழனிபாபா என்றால் சத்தியம் உண்மை நேர்மை..
.
பழனிபாபா என்கிற தனிமனிதனை ஒழித்துவிட்டால் சாதியம் தழைதோங்குவதற்கான தடை அகற்றப்பட்டுவிடும்... முஸ்லிம்கள் முடங்கிவிடுவார்கள்... என்று மனப்பால் குடித்த கயவர்கள் இன்றைக்கு கலங்கிபோய் நிற்கிறார்கள்... காரணம் ஒரு பழனிபாபா வை கொலைசெய்தார்கள்.... ஆனால் அவர் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான பழனிபாபாக்கள் முளைத்து வந்துவிட்டார்கள்... 

படைத்தவனை மட்டுமே வணங்கு... படைப்புகளை வணங்காதே... எல்லாமும் கடவுள் என்று நீ சொல்கிறாய்...எல்லாமும் கடவுளுடையது என்று நான் சொல்கிறேன்... இப்போது என் உண்மைகளை நீ உணராவிட்டாலும்... நாளை உணர்வாய்... என்று உரக்க சொன்ன பழனிபாபா அவர்களின் வார்த்தைகள்தான் இன்றைக்கு முஸ்லிம் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர்களின் ஜீவ முழக்கம்... இனத்தால் திராவிடர்கள்... மொழியால் தமிழர்கள்... தேசத்தால் இந்தியர்கள்... ஏற்றுக்கொண்ட மார்க்கத்தால் மட்டுமே நாங்கள் முஸ்லிமகள்... இது பழனிபாபா அவர்களின் கொள்கை பிரகடனம்... ஏற்க்கமறுப்பது அறீவீனம்... 

மனிதனை மனிதனாக மாற்ற முயற்சித்த தனத்தை பெரியாரை அடிமைவிலங்கை உடைக்க அரும்பாடுபட்ட அண்ணல் அம்பேத்கரை வாசித்த தமிழர்கள் பழனிபாபா என்கிற வரலாறையும் வாசிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.... 


வேங்கை.சு.செ.இப்ராஹீம் 

செவ்வாய், 12 ஜூன், 2012

சமூக தீமைகளின் உறைவிடம்...

காவல்துறையின் கட்டுபாட்டுடன் வரிசையில் நின்று வாழ்கையை விலைகொடுத்து வீணாகும் அப்பாவி குடிமகன்கள் 



இஸ்லாம் மனிதனை மனிதனாக வாழ வழி சொல்கிறது... உலகத்தின் எந்தவகையான துயரங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் இஸ்லாத்தில் தீர்வுகள் உண்டு... ஏற்றத்தாழ்வு இல்லாத மனிதகுலத்தை சமைத்திடவே உலக முஸ்லிம்களின் ஒப்பற்ற ஒரே தலைவர் எம்பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் உலகிற்கு அனுப்பபட்டார்கள்... 

ஆம்... இஸ்லாம் உலகத்தின் அழகிய முன்மாதிரி... முஸ்லிம்கள் உலக மக்களுக்கு முன்னோடி... சகிப்புதன்மையும் சகோதரத்துவமும் இங்கிருந்துதான் ஆரம்பம் ஆகிறது... ஒழுக்கம் ஒழுங்குமுறையான குடும்பம் இதுதான் மனிதனை மகத்தானவனாக்கும்... 

இன்றைக்கு முஸ்லிம்களிடையே புரையோடிப் போயிருந்த பல சமூக சீர்கேடுகளை இஸ்லாமிய அமைப்புகள் தொடர் பரப்புரைகள் மூலமாக சீர்படுத்தி இருக்கிறார்கள் என்றால் அது மிகையல்ல... இஸ்லாமியை அமைப்புகள் தர்பியா என்கிற தன்னொழுக்க பயிற்சி முகாம்களின் வாயிலாக தங்களது தொண்டர்களை  சமூகசீர் கேடுகளில் அதாவது வட்டி,வரதட்சணை,மது,சூது, விபச்சாரம் போன்றவற்றில் இருந்து மீட்டிருக்கிறார்கள்... 

ஆனால்... இன்றைக்கும் நாம் செய்யத்தவறிய மிகப்பெரிய ஒரு விசயம் இருக்கிறது... சமூக தீமைகளின் உறைவிடமாக திகழும் மது... இன்றைக்கு பல முஸ்லிம் இளைஞர்களையும் சீரழித்து வருகிறது... பல ஊர்களில் டாஸ்மாக் கடைகளின் அன்றாட வாடிக்கையாளர்களில் அதிகமானோர் முஸ்லிம்கள் என்றால் நமக்கு அதிர்ச்சி ஏற்ப்படாமல் இருக்குமா...? ஒரு சமூக தீமைக்கு எதிர்கால தலைமுறையே பலியாகி வருகிறது அதனை நாம் கண்டும் காணாமல் இருப்பது மிகப்பெரிய குற்றமல்லவா... இப்பெரிய தீமையில் இருந்து முஸ்லிம்களை மீட்பது போலவே மற்ற சமூகத்து இளைஞர்களையும் மீட்க்க வேண்டியது நமது கடமை... 

இந்த உலகின் பல நாடுகளில் தங்களது மக்களின் பின்னடைவுக்கும் குடும்பவியல் சீரழிவிற்க்கும்  காரணமான மதுவை அரசே மக்களுக்கு விநியோகம் செய்கிறது... அதற்க்கு தமிழகமும் விதிவிளக்கல்ல... அரசின் வருவாய்க்கு மக்கள் மடிவது எப்படி நியாயமாகும்... அப்படிப்பட்ட வருவாயை ஏற்ப்படுத்தி அரசு எவருக்கு நன்மை செய்யபோகிறது... ஒரு நாட்டில் கல்விக்கூடங்கள் அதிகரித்தால் கல்வியாளர்கள் அதிகரிப்பார்கள்... அந்நாடு பொருளாதாரத்திலும்  பல்வேறு துறைகளிலும் முன்னேறும் ஆனால் மாறாக சாராயக்கடைகள் வீதிக்கு வீதி திறக்கபட்டால் குடிகாரர்கள்தானே அதிகரிப்பார்கள்... அத்தகையை குடிகாரகளால் நாட்டுக்கு என்ன நன்மை...? 

அண்மையில் அய்யா தமிழருவி மணியன் அவர்களின் தலைமையிலான  காந்திய மக்கள் இயக்கம்   
மது  ஒழிப்பு மாநாடு ஒன்றை சிறப்பாக நடத்தினார்கள்... அரசுக்கு மது ஒழிப்பால் ஏற்ப்படக்கூடிய பொருளாதார இழப்பை சரி செய்வதற்கான விளக்க அறிக்கையையும் சமர்ப்பித்தார்கள்... இவற்றால் மட்டும் இதுபோன்ற மாநாடுகள் மற்றும் பொதுக் கூட்டங்களால் மட்டும் இந்த சமூக தீமையை நாம் ஒழித்துவிட முடியுமா நிச்சயமாக முடியாது... 

அரசு எந்த காலத்திலும் மதுக்கடைகளை முடக்காது... ஆக அரசை இந்த விவகாரத்தில் எவர் ஆட்சியில் இருந்தாலும் மக்களுக்கு ஆதரவான நிலைக்கு வர செய்ய இயலாது... எத்துனை குடும்பங்கள் சீரழிந்து இந்த மதுவால் சின்னாபின்னமாகி போகிறது... குடும்பத்தை வழிநடத்தக்கூடிய குடும்பத்தலைவன் குடிகாரனாக இருந்தால் அந்த குடும்பமே சீரழிகிறதே... இது மிகப்பெரிய கொடுமையல்லவா... 

பல ஊர்களில் பள்ளிகள் வழிபாட்டு தளங்கள் இவற்றுக்கு அருகில் மதுக்கடைகள்... இப்படியான மதுகடைகளை அகற்றி வேறொரு இடத்தில் நிறுவவேண்டும் என்றுதான் நம்மால் போராட்டம் நடத்த முடிகிறது அரசும் அகற்றி வேறு இடத்தில் கடைகளை திறக்கிறது... காரணம் அரசுக்கு மதுகடைகளை மாற்று இடங்களுக்கு கொண்டு செல்வதால் எந்தவிதமான இழப்பும் இல்லை... ஏனெனில் எத்தனை மைல்களுக்கு அப்பால் மதுகடைகள் இருந்தாலும் சென்று வாங்கி அருந்தி மகிழ நமது குடிமகன்கள் தயார்... 

இதனை தடுக்க வேண்டும் அதற்க்கு என்ன வழி...? மக்களை இந்த சமூகதீமை அரக்கனிடம் இருந்து மீட்க்க வேண்டும் அதற்க்கு என்ன வழி...? இந்த பூனைக்கு யார் மணி கட்டுவது? 

ஆம் இதற்க்கு முஸ்லிம்கள் தான் முன்முயற்சி எடுக்க வேண்டும்... இஸ்லாமிய இயக்கங்கள்தான் இதற்க்கான பணிகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்... ஒரு தீமையை நாம் களையெடுக்க வேண்டுமானால் அதற்க்கான ஆணிவேரை முதலில் பிடுங்கி ஏறிய வேண்டும்... மதுக்கடைகளை பொறுத்தவரை யார் அதற்க்கான ஆணிவேர் அப்பாவிகளான அடித்தட்டு மக்கள் அவர்களுக்கு முதலில் இந்த தீமையின் கொடுமையை விளங்க செய்ய வேண்டும்... குடிகாரர்கள் குறைந்துவிட்டால் மதுகடைகள் குறைந்துவிடும்... மதுகடைகள் குறைந்துவிட்டால் அரசு பொருளாதார மீட்ப்பிற்க்கு வேறு வழிகளை தேடியாக வேண்டும் அப்படி மாற்று தளங்கள் உருவாகும் பொது முழுமையாக மதுவிலக்கு அறிமுகமாகும்... 

ஆக எப்படி குடிக்கு அடிமையாகிவிட்டவனை மாற்றுவது... வெறும் பொதுக்கூட்டங்கள்,துண்டு பிரசுரங்கள் பயிற்சி முகாம்கள் இவற்றால் மட்டும் இது சாத்தியமாகாது... மாறாக இப்போது எப்படி ஒவ்வொரு ஊர்களிலும் இஸ்லாமிய அமைப்புகள் தங்களுக்கான பள்ளிவாசல்களை கட்டி தொழுது வருகிறார்களோ... அதேபோல இனி ஒவ்வொரு ஊரிலும் போதைப் புழங்கிகள் மறுவாழ்வு இல்லங்களை திறக்க வேண்டும்... நல்ல சிறப்பான மனோதத்துவ நிபுணர்களை கொண்டு தொடர்ந்து குடிக்கு அடிமையாகி வாழ்க்கையை சூனியமாக்கி கொண்டுள்ள அனைத்து தரப்பினரையும் கண்டறிந்தது அவர்களுக்கு கவுன்சிலிங் என்கிற தன்முனைப்பை தந்தாள் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இழந்த மகிழ்ச்சியை மீண்டும் பெரும்... இந்த மது பெரியவர்களை மட்டுமில்லாது இப்போது மாணவர்களையும் ஏன் இன்னும் சொல்லபோனால் இளம் பெண்களையும் கூட விட்டுவைக்கவில்லை... குடிப்பது என்பது இப்போது ஒரு "பேஷன்" ஆகிவருகிறது இந்தநிலை நீடித்தால் எதிர்கால தலைமுறை முற்றிலுமாக சீரழிந்துவிடும்... அதனை தடுக்க வேண்டியது அனைவரின் கடமை...

இஸ்லாமிய இயக்கங்கள் இந்த விவகாரத்தை முன்னிலை படுத்தினால் அனைத்துதரப்பு மக்களின் அன்பும் மரியாதையும் கிடைக்கும்... இதுவும் ஒருவகை தாவா தானே...

சமூகதீமைகளின் உறைவிடமான மது அரக்கனை அழிக்க முன்வருவார்களா...? 

எதிர்பார்ப்புடனும்... சமூக பொறுப்புடனும்...
வேங்கை.சு.செ.இப்ராஹீம் 

வியாழன், 7 ஜூன், 2012

சிறைகளின் செங்கற்கள்... உமர்கயான்.சே

உமர்கயான் .சே 






சிறைகளின்
செங்கற்க்களில்


மனித உரிமைகளும்
பூசிமெழுகப்பட்டவையே.....


பூட்டிய கம்பிகளுக்குள்
புதைக்கப்பட்ட உனர்வுகள்


பாரா "ஊசார்"
காவலர்களின் ஓசை
இருட்டைக் கிழித்து வரும்.....

மனித கழிவுகளை
மனிதன் அகற்றக்கூடாது
காகிதச் சட்டங்கள்,.....

இங்கே எங்களின்
விடிவே..!
மூத்திர சட்டியின்
முகத்தில்தான்.....!

விடிவுக்கு இங்கே
விடியல் இல்லை
விதிகளுக்கிங்கே இடமில்லை...
வருடங்கள்
வறட்சியாய் போகும்...

தண்டனைக்கு பின்தான்
விசாரனைகள்.....
குருகிய இடத்தில்
கூனியாய் சட்டங்கள்...

செவ்வாய் கிழமைகள்
மனு[ஆ]நீதிநாள்
மனுக்கள் இங்கே குப்பையில்

துரையிடம் என்னட..?
"ரிப்போர்ட்"
கொடுவாள் மீசைகளின்
கொடுமைகள்....

எல்லா நாட்களிலும்
எங்கள் விடுதலையை
எதிர்ப்பார்த்த ஏக்கங்கள்....

நரகம் எப்படி இருக்கும்..?
சிறைச் சாலையின்
மதில்களுக்குள்
ஒருமுறை வந்துபாருங்கள்..

எங்களுக்கு
வசந்தங்கள்
வசப்படவில்லை...

வசந்தங்கள்
வழி விடும்

சிறைகதவுகள்
தெறிக்கும்
மக்கள் புரட்சியில்...

உமர்கயான்.சே




திங்கள், 4 ஜூன், 2012

பிறந்த நாள் கொண்டாடும் பெரியவரே...



பிறந்த நாள் கொண்டாடும் பெரியவரே...நீர் 
பிறந்தது ஏனோ எங்களுக்கு புரியலையே... 

காலம்போன காலத்துல சக்கரவண்டி உபயோகத்துல...
கோலாகல கொண்டாட்டம் தேவைதானா...

தமிழனுக்கு டிவி கொடுத்து ஒத்தரூபாய்க்கு அரிசிகொடுத்து
தானமா நிலம்கொடுத்து அட ஓசியில வீடும் கட்டிகொடுத்து...

ஓட்டுவாங்க முடியலையே பெரியவரே... அதன்
உள்ளர்த்தம் உணர்ந்தீறா பெரியவரே...

தாய்மொழிக்கு செம்மொழியாய் பெருமை சேர்த்து
கனிமொழியையும் கவிதைபாட வச்சு பெருமைப்பட்டு...

கருஞ்சட்டை பெரியாரின் கைபிடித்து காஞ்சியாரை அப்படியே காப்பியடித்து
எம்ஜிஆரை கழகத்தைவிட்டு கழட்டிவிட்டு... ஏமாளி தொண்டனை வயிற்றில் அடித்துவிட்டு...

கட்டுமரமாய் நானிருப்பேன் என கதைவிட்டு...
நட்டநடு ரோட்டில் தமிழனை நிறுத்திவிட்டு...

ஒய்யாரமாய் கோட்டையிலே இன்னும் கொடிநாட்டலாம்
மன்பால் குடித்த மஞ்சள் துண்டு முனிவரே...

தொப்புள்கொடி உறவெல்லாம் தூரத்திலே துடிதுடித்து மாண்டபோது பெரியவரே...
மயக்கதிலா நீர் இருந்தீர் பெரியவரே... மகளை சிறைக்கதவு மூடியதும்

துடித்து கண்ணீர் வடித்த பெரியவரே... நடித்து மக்களை ஏமாற்றிய கலைஞரே...
மத்திய சிறைகளில் உம்மால் இடஒதுக்கீடு பெற்ற என் சகோதரனை என்றாவது-

எண்ணியதுண்டா பெரியவரே... அவர்களின் துன்பம் இன்று உம்மை சுட்டெரிக்கிறதே
சுயமரியாதை இழந்துவிட்டு அரைவேக்காடாய் ஆகிவிட்ட பெரியவரே...

இன்னும் எத்துனை ஆண்டுகள் வேண்டுமானாலும் வாழுங்கள் பெரியவரே...
ஆனால் இனியொருமுறை தமிழனாய் மட்டும் பிறககாதீர் பெரியவரே...

தமிழர்களின் மனசாட்சியாய்...
வேங்கை.சு.செ.இப்ராஹீம்