Subscribe:

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

அந்த 24 மணி நேரம்....



மலேசியாவிற்கு பண்ணாட்டு பகுத்தறிவு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அண்ணன் திருமா அவர்கள்

வருகைதரும் செய்தி தோழர் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் மூலமாக அறியபெற்றேன்...




இதனை நான் இங்குள்ள நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டவுடன் நான் எதிர்ப்பார்க்காத வண்ணமாக அண்ணன் திருமா அவர்களை சபாவிற்க்கு அழையுங்கள் அவரை சந்திக்க அவரது உரையை நேரடியாக

செவிமடுக்க இங்குள்ள தமிழ் மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் என சொன்னார்கள்... நானும் அண்ணன் திருமா அவர்களை நேரில் சந்தித்து பல வருடங்கள் ஆகிவிட்டது ஆகவே என் மனதிலும் ஆர்வம் மேலோங்கியது.


உடணடியாக அண்ணன் திருமா அவர்களை தோழர் இராஜேந்திரன் அவர்களின் அலைபேசி வாயிலாக தொடர்புகொண்டுவிபரத்தை சொன்னேன்... அண்ணன் அவர்கள் தான் பிப்ரவரி ஒன்றாம் திகதியே தமிழகம் வந்தாக வேண்டும் ஜனவரி 31 தேதி வரை கோலாலம்பூரில் நிகழ்சிகள் இருப்பதை சொன்னார்... இருப்பினும் சில மணிநேரங்களில் தொடர்புகொள்வதாக சொல்லி அலைபேசியை துண்டித்தார்... நான் ஏமாற்றத்துடன் இருந்தபோது அண்ணனிடம் இருந்து அழைப்பு வந்தது என்னிடம் அண்ணன் அவர்கள் வேங்கை நான் அவசியம் வருகிறேன் நான் தமிழகம் திரும்வேண்டிய நாளை இரண்டாம் திகதியாக மாற்றியுள்ளேன் என்றார் நான் மகிழ்வுடன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளுக்கு ஆலோசனை வழங்க துவங்கினேன்...


சரியாக பிரவரி ஒன்றாம் நாள் காலை சுமார் 9.30. மணியளவில் கோத்தாகினபாலு உள்நாட்டு விமான நிலையத்திற்கு தோழர்கள் அப்துல்லத்தீப் தோழர் முஸ்தபா போன்ற ஏராளமாநோருடன் வந்து அண்ணன் திருமா அவர்களின் வருகைக்காக காத்திருந்தோம்... என்னுடன் அண்ணனை வரவேற்க வந்திருந்த அனைவரும்னே தமிழக தொடர்பில் பெரியஅளவில் ஈர்ப்பில்லாதவர்கள்தான்இருப்பினும் அண்ணன் அவர்களை வரவேற்க அவர்கள் காட்டிய ஆர்வம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது...


சரியாக காலை மணி சுமார் 9.55 க்கு விமானம் தரை இறங்கியது... மனதிற்குள் இனம்புரியாத உணர்வுகள் ஒரு மக்கள் தலைவனை எந்நேரமும் ஆயிரக்கணக்கான மக்களுடனே பயணிக்கும் ஒரு தலைவனை சுமார் ஏழாண்டுகளுக்குப் பிறகு சந்திக்க போகிறோம் என்கிற எதிர்ப்பார்ப்பு...


முதலில் என் கண்ணில் பட்டவர் தோழர் ஆளூர் ஷாநவாஸ் அவரையும் தொடர்ந்து தோழர் அப்துல்லாஹ் பிறகு அண்ணன் முகமது யூசுப் இவர்கள் அனைவருமே என்னை நோக்கி கையசைத்த வண்ணமாக வந்தனர் அவர்களுக்கு பின்னால் எந்த விதமான பகட்டும் இல்லாமல் பந்தாவும் இல்லாமல் என் அண்ணன் திருமா வந்தார்... நான் ஒரு நிமிடம் திகைத்தே போனேன்...காரணம் அவ்வாறாக அண்ணன் திருமா அவர்களை அந்த இடத்தில் நான் எதிர்பார்க்கவில்லை...!!!


மத்திய மாநில அரசுகளை தனது வீரியமான செயல்களால் உரைவீச்சால் உண்டு இல்லை என ஆக்கும் அண்ணன் திருமா இவ்வளவு எளிமையாக இனிமையாக வருவார் என உண்மையாகவே நான் எதிர்ப்பார்க்கவில்லை...


நான் தமிழக தலைவர்கள் பலருடனும் நெருக்கமாக பழகி இருக்கிறேன் ஆனால் அண்ணன் திருமா அவர்களை சந்தித்தபோது என் குடும்பத்தில் ஒருவரை சந்திப்பதாகவே உணர்ந்தேன்.... நலம் விசாரிப்புகள் முடிந்து அண்ணன் அவர்களையும் தோழர்களையும் அழைத்துகொண்டு விமானநிலையம் அருகில் இருக்கும் தோழர் ஒருவரின் உணவகத்திற்கு சென்று சிற்றுண்டிகளை முடித்தோம்...


என் அருகில் அமர்ந்திருந்த அண்ணன் திருமா சில நாட்களுக்கு முன்பாக அவர் கலந்துகொண்ட தலைவர் ஷஹீத் பழனிபாபா அவர்களின் நினைவேந்தல் நாள் நிகழ்சிகள் பற்றி கேட்டார் அது சம்மந்தமாக தமிழக ஏடுகளில் வெளியான செய்திகளை சொன்னேன்அன்றை தினம் அண்ணன் அவர்களின் பேச்சு ஏற்ப்படுத்தியுள்ள அதிர்வுகளை சொன்னேன் அமைதியாக கேட்டுகொண்டார்...


இடையிடையே எதார்த்தமான நண்பர்கள் போல என்னையும் தோழர் ஷாநவாஸ் மற்றும் அப்துல்லாஹவையும் கேலியாக பேசியும் அண்ணன் அந்த இடத்தை கலகலப்பாக்கினார்...


என் பெயருக்கு முன்னாள் ஒட்டியுள்ள "வேங்கை"க்கான விளக்கத்தை தோழர் ஷாநவாஸ் அண்ணன் திருமா அவர்களிடம் சொல்லியபோது

அண்ணன் அவர்கள் வியப்பாக என்னை பார்த்தார்... தலைவர் பாபா அவர்களை பற்றிய நினைவுகள் அவ்விடத்தையுமே ஆக்கிரமித்தது...


அதன் பிறகு அண்ணன் திருமா உட்பட்ட அனைவரையும் அன்பு தோழர் அப்துல்லத்தீப் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த இல்லத்திற்கு சென்றோம்

இடைவிடாத பயணங்கள் மற்றும் நிகழ்சிகளால் சற்று சோவாக காணப்பட்ட அண்ணன் திருமா மற்றும் தோழர்களிடம் அன்றை நிகழ்சிகளை பற்றி சொல்லிவிட்டு ஓய்வெடுக்க சொன்னேன்... அனைவரும் சற்று அயர்ந்தனர்...


நானும் தோழர் அப்துல்லத்தீப் மற்றும் நூர்முஹமது போண்டவர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதித்து முழுமைபடுத்தினோம்...


அன்றைய மதியம் உணவுக்குப்பிறகு இங்குள்ள முக்கிய சமுதாய பிரமுகர்களுடன் கலந்துரையாடல் அண்ணன் திருமா அவர்கள் தங்கி இருந்த இல்லத்திலேயே ஏற்பாடாகி இருந்தது நிகழ்ச்சிக்கு சில மணி நேரம் முன்பாகவே நான் அமர்ந்திருந்த வரவேற்ப்பு அறைக்கு அண்ணன் வந்தார் நான் ஏன் அண்ணா இன்னும் கொஞ்ச நேரம் உறங்கி இருக்கலாமே என கேட்டேன்போதிய ஓய்வு கிடைத்து விட்டதாக அண்ணன் சொன்னார் அதன் பிறகு அண்ணன் அவர்களின் வெகு அருகாமையில் அமர்ந்துபல்வேறு விளக்கங்கள் பெறக்கூடிய வாய்ப்பு எனக்கு கிட்டியது...


பிரமுகர்கள் வரவில் உணவு பரிமாறப்பட்டது அண்ணன் சைவ உணவுதான் உண்பார் என்பதால் அவருக்கென தோழர் ஜமால் அவர்கள் வீட்டில் சமைத்து எடுத்து வந்திருந்தார்... நான் அண்ணன் அவர்களின் அருகில் அமர்ந்து உணவருந்தினேன்.... உணவு சற்று அதிகமாக இருந்ததால் என்னால் முடிக்க முடியவில்லை பகுதி உணவுடன் நான் கை கழுவ எழுந்தேன் அண்ணன் திருமா அவர்கள் உணவை இப்படி விரயம் செய்யாதீர்கள் இந்த உணவு கிடைக்காமல்தான் பல்லாயிரக்கணக்கான மக்கள் வாடுகிறார்கள் உட்கார்ந்து உணவை முடியுங்கள்என உரிமையுடன் சொன்னார்... "இதைத்தானே இஸ்லாமும் சொல்கிறது" நான் வழுகட்டாயமாக உண்டு முடித்தேன்...


அதன் பிறகு வந்திருந்த பிரமுகர்களுடன் ஆரோக்கியமான விசயங்கள் குறித்து கலந்துரையாடினார் அண்ணன்அவர்களின் அரசியல் பொதுத்தளம் சமூகம் சார்ந்த பக்குவபட்ட கேள்விகளுக்கும் சில பக்குவமில்லாத கேள்விகளுக்கும் அமைதியாக பொறுமையாக அண்ணன் திருமா அவர்கள் விளக்கமளித்தது அவர் மீது எனக்கிருந்த அன்பையும் மரியாதையும்

இரட்டிப்பாகியது... தமிழக அரசியல் கூடங்குளம் அணுமின்நிலையம் போன்ற பல நிலைகள் குறித்து அண்ணன் விளக்கமாக சொன்னார் அதில் வியப்பான சில உண்மைகளும் இருந்ததை உணர்ந்தேன்... மகிழ்ந்தேன்...


அன்று மாலை "இன்றைய தமிழினம்" கருத்தரங்கம் சிறப்பாக நடந்தேறியது அங்கு வந்திருந்த பெரும்பாலான மக்கள் அண்ணன் அவர்களின் பேச்சை ஆர்வமாக செவிமடுத்தது ஆச்சரியமாக இருந்தது நானும் முதன் முறையாக அண்ணன் அவர்களின் அரசியல் கலப்பில்லாத பேச்சை கேட்டேன்... நிகழ்ச்சி நூறு சதவிகிதம் வெற்றி என்கிற நிறைவை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின்

சிரிப்பில் என்னால் உணர முடிந்தது... நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் அண்ணன் திருமா அவர்களுடன் புகைபடம் எடுத்துகொள்ள மிகுந்த ஆர்வம் காட்டினர் அனைவருடனும் அண்ணன் அவர்கள் முகமலர்ச்சியுடன் படம் பிடித்துகொண்டார்...


அன்றிரவு அண்ணன் திருமா அண்ணன் யூசுப் அன்பு தோழர்கள் ஆளூர் ஷாநவாஸ் அப்துல்லாஹ் ஆகியோருடனே நானும் தங்கினேன் அதிகாலையில் எழுந்து அண்ணன் அவர்களுக்காக காலை உணவு தயாரிக்க எனது உணவகத்திற்கு சென்றேன் எனது உணவகத்தில் காலை உணவை முடித்துகொண்டு அங்கிருந்தே விமானநிலையம் செல்வதாக ஏற்பாடு...


சரியாக பிப்ரவரி காலை 8.40 மணிக்கு அண்ணன் உள்ளிட்ட தோழர்களுடன் தோழர் அப்துல்லத்தீப் எனது உணவகம் வந்தார் உணவகத்தில் உணவருந்திகொண்டிருந்த தமிழர்கள் அண்ணன் அவர்களை அடையாளம் கண்டுகொண்டு அவருடன் கைகுலுக்கி மகிழ்ந்தார்கள்... நான் தயாரித்த உணவை சுவைத்து உண்ட அண்ணன் அவர்கள் என்னை பாராட்டினார்கள் தோழர் ஆளூர் ஷாநவாஸ் வேங்கை நீங்க புரோட்டா போடுவதை நான் பார்க்கணும் என்றார் அண்ணன் திருமா அவர்களும் ஆமாம் போடுங்க பார்க்கணும் என்றார் நான் புரோட்டா போட்டேன் அண்ணன் சிரித்துக்கொண்டே ரசித்தார்...


பயண நேரம் நெருங்கி விட்டதால் புறப்பட்ட தயாராகினார்கள் தோழர் அப்துல்லத்தீப் அண்ணன் மற்றும் தோழர்களை அழைத்துகொண்டு

விமானம்நிலையம் நோக்கி பயணித்தார் நான் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்தேன்... அப்போது சரியாக மணி காலை 9.௦30 விமானநிலையத்தில் அண்ணன் என்னுடன் ஒரு உடன்பிறந்த சகோதரனை போல சில அறிவுரைகளை வழங்கினார் சிறப்பான அருமையான மக்கள் இவற்றை சந்திக்க நீங்களே காரணம் என அகமகிழ்ந்து அண்ணன் என்னை வாழ்த்தினார் உங்களுடன் இன்னும் சில நாட்கள் தங்க முடியாமல் போனதுதான் வருத்தம் என்றார்... ஆம் எனக்கும் எனக்கு மட்டுமல்ல அண்ணனை முதன்முறையாக

பார்த்து பழகியவர்களுக்கும் அந்த வருத்தம் ஏற்ப்பட்டதை அவர்களே பிறகு என்னுடன் பகிர்ந்துகொண்டார்கள்...


சரியாக காலை மணி 9.55. விமான நிலைய ஒலிபெருக்கி இறுதி அழைப்பை விடுத்தது... அண்ணன் என்னை ஆரத்தழுவி விடைபெற்றார்நானும் கையசைத்து விடைகொடுத்தேன்...அண்ணன் அவர்களின் தலை மறையும் வரை அவர் சென்ற பாதையை பார்த்துகொண்டிருந்தேன்...

அப்போதுதான் கவனித்தேன் எனது விழிகளின் ஓரத்தில் ஈரம்... சரியாக 24 மணிநேரம் அண்ணன் திருமா அண்ணன் யூசுப் அன்பு தோழர் ஆளூர் ஷாநவாஸ் அன்பு தோழர் அப்துல்லாஹ் ஆகியோருடன் பயணித்த அனுபவம் புதுமையல்ல... பெருமையல்ல...உணவுபூர்வமான ஒருங்கிணைப்பின் அடித்தளம்...


இப்போதும் ஏன் செவிகளில் சிறுத்தைகளின் கொள்கைபாடல் ஒலிக்கிறது....

"தாயை போன்றவர் எங்கள் தலைவன் திருமா... இவரைப்போல வேறெதுவும் வருமா" ஆம் உண்மையான வரிகள்....






வியாழன், 2 பிப்ரவரி, 2012

எழுச்சித்தலைவர் திருமா அவர்களை முதல்வராக்குவோம்.... வேங்கைஇப்ராஹீம் பேச்சு...

மலேசியாவில் கடந்த ஜனவரி 29,30.31 ஆகிய நாட்களில் தமிழர் தன்மான இயக்கம்ஏற்பாடு செய்திருந்த பண்ணாட்டு பகுத்தறிவு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சிதலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் மலேசியா வந்திருந்தார்.

தகவலரிந்து மலேசியாவின் தீவு மாநிலமான சபா வாழ் தமிழின மக்கள் திருமா அவர்களை தங்கள் மாநிலத்திற்கு வருமாறும் தாங்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்வில் உரையாற்றுமாறும் அழைப்புவிடுத்தனர்.அழைப்பினை ஏற்றுக்கொண்ட திருமா அவர்கள் சபா மாநிலத்திற்கு கடந்த பிப்ரவரி 1 ம் தேதி வருகை புரிந்தார்.

அன்று மாலை சபா இந்தியர் சங்க கட்டிட விழா மண்டபத்தில் நடைபெற்ற
"இன்றையதமிழினம்" என்கிற தலைப்பிலான கருத்தரங்கில் கலந்துகொண்டு எழுச்சியுரையாற்றினார்.

அக்கருத்தரங்கில் கலந்துகொண்டு அறிமுகவுரையாற்றிய வேங்கைஇப்ராஹீம் பேசியதாவது....

அன்பிற்கினிய சபா வாழ் இனிய தமிழின மக்களே... நமது மலேசிய திருநாட்டிற்கு தமிழகத்தில் இருந்து பல்வேறு கட்சிகளையும் சார்ந்த தலைவர்கள் எழுத்தாளர்கள், கவிஞர்கள், நடிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வருகை புரிந்துள்ளனர் ஆனால் இன்றைக்கு நாங்கள் உங்களுக்கு அறிமுகம் செய்யவிற்பவர் இவற்றை எல்லாம் உள்ளடக்கிய ஒரு பயங்கரவாதி...! ஒரு தீவிரவாதி...! ஒரு வன்முறையாளர்...!

ஆம் என்ன என் தமிழினமே அதிர்ச்சியாக இருக்கிறதா...? இதில் அதிர்ச்சிக்கு எதுவும் இல்லை ஏனெனில் இந்த உலகம் புரட்சியாளர்களையும் மக்களுக்காக வீரியமாக ஆதிக்க சக்திகளை எதிர்த்து போராடக்கூடியவர்களையும் இப்படிதானே வகை படுத்துகிறது...

உதாரணமா
இந்திய திருநாட்டின் விடுதலைக்கான போராட்டத்தில் தலைமை
ஏற்று வழிநடத்திய தேசபிதா அண்ணல் காந்தியடிகளை அன்றைக்கு ஆங்கிலேயன் பயங்கரவாதியாகதான் பார்த்தான்தனது கறுப்பின மக்களின் விடுதலைக்காக போராடிய நெல்சன் மண்டேலா அவர்களை தீவிரவாதியாகஅடையாளபடுத்திதான்இருபதாண்டுகளுக்கும் மேலாக சிறையிலடைத்தனர். ஈராக்கிய மக்களின் உரிமைகளை விட்டுகொடுக்காத மாவீரன் சதாம் ஹுசைனை அமெரிக்க ஏகாதிபத்தியம் இப்படியாக வகைபடுத்திதான் தூக்கிலிட்டு படுகொலை செய்தது.


ஆக அந்த வகையில் உலகின் எந்த மூலையிலும் தமிழனுக்கு ஒரு ஆபத்தென்றால் புயலாக களம்புகும் அண்ணன் திருமா அவர்களும் பயங்கரவாதிதான் தீவிரவாதிதான் வன்முறையாலர்தான் என்பதிலே நாங்கள்
பெருமையோடு அறிமுகம் செய்கிறோம்...

ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் வாழ்வுரிமைக்காக போராடிவரும் அண்ணன் திருமா இந்த வருடம் தனது ஐம்பதாவது வயதை நிறைவு செய்யவிற்க்கிறார். தனது கடந்த முப்பதாண்டுகால பொதுவாழ்க்கையில் தனக்கென அவர் எதையும் சேர்க்கவில்லை தனிமனித வாழ்க்கைக்கு தேவையான எதையுமே அவர் விரும்பவில்லை அண்ணன் திருமா அவர்கள்இந்த விஷயத்தை இந்த மேடையில் நான் உங்களுடன் பகிர்ந்துகொள்வதை விரும்புவார்களா மாட்டார்களா என எனக்கு தெரியவில்லை.இருப்பினும் அண்ணன் அவர்களின் அன்பு தம்பி என்கிற முறையில் எனக்குள்ள உரிமையின் அடிப்படையில் சொல்கிறேன்ஐம்பது வயதை நெருங்கிவிட்ட அண்ணன் இன்னும் திருமணம்கூட செய்துகொள்ளாமல் ஒரு நாளில் 24 மணி நேரத்தில்
சுமார் 20 மணிநேரம் மக்களுக்காக உழைக்கிறார்... அப்படிப்பட்ட மகத்தான மக்கள் போராளியைதான் இன்றைக்கு நாம் நமது சபா மாநிலத்திற்கு அழைத்து பெருமைபட்டிருக்கிறோம்...

அமைப்பற்ற மக்களை அமைப்பாக்கினார் அரசியல் வழிகாட்டினார் எத்துனை பெரிய தோல்விகளையும் தைரியத்துடன் எதிர்கொள்ளும் வல்லமை அவருக்குண்டு... எத்துனை பெரிய வெற்றிகளையும் இலகுவாக ஏற்றுகொள்ளும் பக்குவமும் அவருக்குண்டு... ஆதாயத்தை மட்டுமே அடிப்படையாக கொண்ட தமிழக அரசியலில் மக்களின் ஜீவாதாரத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இயக்கம் கட்டியவர் அண்ணன் திருமா...

கடந்த 1994 ம் ஜூலை மாதம் 7 என் தலைவர் ஷஹீத் பழனிபாபா அவர்களுடன் எனது பிறந்த பூமியான இளையான்குடியில்முதல் மேடை ஏறியபோது எத்தகைய மகிழ்வும் பெருமையும் என் மனதில் விதைந்ததோ அதேபோல உணர்வை அண்ணன் திருமா அவர்களுடன் நான் பங்கேற்றுள்ள இந்த சிறப்புவாய்ந்த முதல் மேடையிலும் நான் பெறுகிறேன்...

இங்கு உரையாற்றிய நண்பர்கள் சொன்னார்கள் தமிழ் உலகின் பல்வேறுபகுதிகளும் அழிந்துவருகிறதுதமிழினம் அழிக்கபட்டு வருகிறது... தமிழர்களின் கலாச்சாரம் ஒழிக்கப்பட்டு வருகிறது என்றெல்லாம் ஆதங்கபட்டார்கள் உண்மைதான் மறுக்கவில்லை ஆனால் எங்கு வேண்டுமானாலும் என்னவேண்டுமானாலும் தமிழனுக்கு தமிழ் மொழிக்கு
தீங்கு ஏற்ப்படலாம் தமிழ்நாட்டில் தாய் தமிழகத்தில் தமிழையும் தமிழனையும் தமிழனின் கலாச்சாரத்தையும் எந்த கொம்பனாலும் அசைத்துவிட முடியாது காரணம் என் தாய்தமிழ் மண்ணில்தானே என் அண்ணன் திருமா இருக்கிறார்... எந்த மூலையில் தமிழினம் பாதிக்கப்பட்டாலும் உடணடியாக உணர்வோடு எந்தவிதமான ஆதாய நோக்கமும் இல்லாமல் களம்காணும்
என் அண்ணன் திருமா அவர்கள் வாழக்கூடிய தாய்தமிழ் பூமியில் தமிழையும் தமிழனையும் எவன் அழிக்க நினைத்தாலும் அவன் அழிக்கபடுவான்....

என் அண்ணன் திருமா அவர்களே... இதுநாள் வரையிலும் எந்த தமிழக அரசியல்தலைவனையும் அழைத்து அழகுபார்க்காத என் சபா வாழ் தமிழினம் உங்களை அழைத்து இன்றைக்கு வரலாற்று சிறப்புமிக்க இந்த கருத்தரங்கை
நிகழ்த்திகொண்டிருக்கிறது என்றால் இங்குள்ள என் தமிழ் மக்களிடம் சாதி இல்லை மதம் இல்லை முரண்பாடு இல்லை மனித குளத்தில் ஏற்றத்தாழ்வு இல்லை... என் தலைவர் பாபா அவர்கள் அடிக்கடி சொல்வதைபோல நாங்கள் அனைவருமே இனத்தால் திராவிடர்கள் வம்சாவளியால் இந்தியர்கள் மொழியால் தமிழர்கள் ஏற்றுக்கொண்ட வழிமுறைகளில்தான் மாறுபட்டவர்கள்... இன்றைக்கு இந்த அரங்கம் எதிர்பார்த்தயும்விட நிறைந்துள்ளது என்றால் காரணம் எங்களிடம் எம் மக்களிடம் எஞ்சியிருப்பது தமிழன் என்கிற ஒற்றைவரிதான் என்பதை பெருமையுடன் அறியத்தருகிறேன்...

இப்படியான சிறப்புவாய்ந்த இந்த உள்ளரங்கில் நின்று நான் சொல்கிறேன் இன்றைக்கு சிதம்பரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக விசிகவின்
தலைவராக வருகை தந்துள்ள நீங்கள் அடுத்து மீண்டும் இதே சபா மாநிலத்திற்கு வரவேண்டும் எங்களை எல்லாம் சந்தித்து தமிழுனர்வை ஊட்டவேண்டும் ஆனால் சிதம்பரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக அல்ல... விசிகவின் தலைவராக மட்டுமல்ல... தமிழ்நாட்டின் முதலமைச்சராக வரவேண்டும் இதை என் ஏக இறையவனிடம் இருகரமேந்தி பிரார்த்திக்கிறேன்...

நீங்கள் தமிழினத்தின் தலைமைபீட பொறுப்பை ஏற்க்கும்போதுதான் உலக தமிழினம் ஒன்றுபடும் உரிமைகள் காக்கப்படும்கச்சதீவு மீட்கப்படும் தனித் தமிழீழமும் மலரும்...

இந்த வார்த்தைகளை மேடையளங்காரதிர்க்காக நான் சொல்லவில்லை உணர்வோடு உண்மையோடு சொல்கிறேன்அதற்காக புலம் பெயர்ந்துவாழும் எம்மை போன்ற தமிழர்கள் சிறுத்தைகளுக்கு என்றைக்குமே ஆதரவாக இருப்போம்என உறுதிகூருகிறேன்... என பேசினார்