Subscribe:

புதன், 27 ஏப்ரல், 2011

பயணம் திரைப்படம்... இது விமர்சனம் அல்ல மீளாய்வு...




பயணம் திரைப்படம் போதிக்கும் நீதி, பின்வருமாறு.
இஸ்லாமியர்கள் எனப்படுபவர்கள்:-
1) தீவிரவாதிகள்.
2) குறுரமானவர்கள்


3) வன்முறையில் அழுத்தமான நம்பிக்கை கொண்டவர்கள்.

4) பாகிஸ்தானைத் தங்கள் தாய்நாடாகக் கருதுபவர்கள்.
5) இந்தியா தங்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என்று நம்புபவர்கள்.
6) கடத்தல்காரர்கள், கொலைக்கு அஞ்சாதவர்கள்.
7) இஸ்லாமியர்களுக்கே எதிரானவர்கள்.
8) புனித நூலில் அல்ல, புனிதப் போர்களில் நம்பிக்கை கொண்டவர்கள்.
9) இந்தியாவை அழிக்க, சதாசர்வகாலமும் திட்டமிட்டு வருபவர்கள்.

சரி, இவர்களை என்ன செய்யலாம்? அதற்கும் படத்தில் சுலபத் தீர்வுகள் உள்ளன.

1) இவர்களிடம் இரக்கம் காட்டிப் பயனில்லை.
2) தீவிரவாதி என்று தெரியவந்தால் போதும், சுட்டுவிடலாம்.
3) கமாண்டோ படைகளுக்கு கூடுதல் அதிகாரம் தரவேண்டும்.
4) தேசத்தைத் துண்டாடும், ஊறு விளைவிக்கும் சக்திகளை உடனடியாக அகற்றவேண்டும். இது அரசாங்கத்தின் கடமை.
5) பத்திரிகை, தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்கள் அரசாங்கத்துடன் ஒத்துழைக்கவேண்டும். அரசையும் தேச ஒற்றுமையையும் பலவீனப்படுத்தும் செய்திகளை இவர்கள் வெளியிடக்கூடாது. ('அரசாங்கத்துக்காக இல்லாவிட்டாலும், நம் நாட்டுக்காக' என்கிறார் கமாண்டோ நாகார்ஜுனா).
சென்னையில் இருந்து புது தில்லி செல்லும் ஒரு விமானத்தைத் தீவிரவாதிகள் (என்றால், இஸ்லாமியர்கள்) கடத்துகிறார்கள். தலைவர் யூசுஃப் கானை விடுதலை செய் என்பது அவர்கள் முதல் கோரிக்கை. நூறு கோடி ரூபாய் பணம் என்பது இரண்டாவது கோரிக்கை. பிறகு, எங்களுக்குப் பணம் வேண்டாம் அது ஹராம் என்று மறுத்துவிட்டு, தங்கள் தலைவரை மட்டும் கோருகிறது கடத்தல் கும்பல். பணம் ஹராம். ஆனால், கொலை, சாதாரணமாம்.
சிக்கிக்கொண்டிருக்கும் பயணிகளை மீட்டு, கடத்தல்காரர்களை எப்படி இந்திய கமாண்டோ முறியடிக்கிறது என்பது மிச்சக் கதை. உள்துறைச் செயலராக பிரகாஷ் ராஜ். கமாண்டோவாக நாகார்ஜுனா. தேசப்புற்று, ச்சே தேசப்பற்று நோயால் நாடி, நரம்புகள் வீங்கி, துடித்து, ஆர்ப்பரித்து எழும் மெய்யான இந்திய வீரர். அதி பயங்கர அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடும் தீவிரவாதியான யூசுஃப் கானின் குழுவினரை லடாக்கில் என்கவுண்டர் பண்ணிவிட்டு, யூசுஃபை மட்டும் கைது செய்து செய்த மாவீரர் இவர். இத்தனை கஷ்டப்பட்டு சிறை பிடித்தவரை சும்மா விட்டுவிடமுடியுமா? எனவே, நாகார்ஜுனா கடத்தல்காரர்களை அழித்து, பயணிகளை மீட்கிறார்.

இந்தப் படத்தில் ஓர் அக்கிரகார அம்மாஞ்சி வருகிறார். அவருடைய குணாம்சங்கள் கீழ்வருமாறு.
1) வைதீகப் பற்று மிக்கவன்.
2) பழி, பாவம் அறியாதவன்.
3) பாதகச் செயல்களைக் கேள்வியுற்றாலே நடுநடுங்கும் அளவுக்கு நேர்மையானவன்.
4) அசடு.
5) அப்பாவி.

படத்தில் ஒரு பாதிரியாரும் இடம்பெறுகிறார்.
1) இறை ஊழியத்துக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டவர்.
2) ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தைக் காட்டக்கூடியவர்.
3) மற்றவர்களுக்காக உயிர் தியாகம் செய்ய முன்வருபவர்.
4) தன் எதிரிகளுக்கும் கருணையைப் பரிசாகத் தருபவர்.

முற்போக்காளர் என்று அறியப்படுபவர் ஒருவரும் இப்படத்தில் வருகிறார். அவர் இயல்புகள்.

1) காந்தி, கார்ல் மார்க்ஸ் இருவரையும் வாசித்தவர். இருவராலும் (அதெப்படி?) ஈர்க்கப்பட்டவர்.
2) பொலிவியா குறித்தும் நாத்திகம் குறித்தும் சில வரிகள் பேசுகிறார்.
3) 'ஹைதரபாத் போய் பார், அங்கே முஸ்லிம்கள் எவ்வளவு அழகாக வாழ்கிறார்கள். நீங்கள் மட்டும் ஏன் இப்படி?' என்று கடத்தல்காரரிடம் கேள்வி கேட்கிறார்.
4) குண்டடிப்பட்டுச் சாகிறார்.
காலம் காலமாக தமிழ் சினிமா சென்றுகொண்டிருக்கும் அதே பாதையில் மற்றுமொரு அப்பட்டமான Stereotype பயணம். ஓர் இஸ்லாமியரை அப்பாவியாகவும், ஒரு பிராமணரை தீவிரவாதியாகவும், ஒரு முற்போக்காளரை நிஜமான முற்போக்காளராகவும் எப்போது தமிழ் சினிமா காட்டப்போகிறது?

படம் எடுக்கப்பட்ட விதம் ஹாலிவுட்டை நினைவுபடுத்துகிறதோ இல்லையோ, படத்தின் கதையமைப்பில் அப்பட்ட ஹாலிவுட் பாதிப்பு. வார்னர் பிரதர்ஸ் இப்படத்தை எடுத்திருந்தாலும் இப்படித்தான் எடுத்திருப்பார்கள். இஸ்லாமியர்கள் விமானம் கடத்துவார்கள். இஸ்லாமியர்கள் அணுகுண்டு தயாரிப்பார்கள். இறுதியில், இஸ்லாமியர்கள் கொல்லப்படுவார்கள். இவர்களை மன்னியும் பிதாவே என்று ஒரு பாதிரி கைகளை வானத்துக்கு உயர்த்துவார். லாங் ஷாட்டில் வானத்தைக் காட்டி படத்தை முடிப்பார்கள்.
ஆனால், ஹாலிவுட்டையும் மிஞ்சும் சில காட்சிகள் பயணத்தில் இடம்பெறுகின்றன. ஓர் இஸ்லாமிய குழந்தையிடம், தீவிரவாதி வெடிமருந்து பொட்டலத்தைப் புன்னகையுடன் பரிசளிக்கிறான். குரூரத்தின் உச்சம் இது.
இறுதிக் காட்சியில் இஸ்லாமியர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு, அவர்கள் உடல் போர்த்தப்பட்டிருந்த நிலையில், லாங் ஷாட்டில் நால்வரின் இஸ்லாமியப் பெயர்களையும் பளிச்சிடுகிறார்கள். படம் பார்த்துவிட்டு வெளியில் எழுந்து வரும்போது, படத்தின் அடிநாத ஹைலைட்டை மறந்துவிடக்கூடாது என்பதற்காக.
ஒரு சாதாரண பொழுதுபோக்குப் படத்தை, பொழுதுபோக்குப் படமாக மட்டும் பார்க்கமுடியாதா என்னும் கேள்வியை வழக்கம் போல் பலரும் எழுப்புகிறார்கள்.

அவர்களுக்கு சில வார்தைகள்.

நாங்கள் ஏன் இவ்வாறு செய்கிறோம் என்பதற்குக் கடத்தல்காரர்கள் சில நியாயங்களை முன்வைக்கிறார்கள்.
1) காஷ்மிர்.
2) குஜராத்.
3) பாபர் மசூதி இடிப்பு.
காஷ்மிர் பற்றி ஓரிடத்தில் மட்டும அதுவும் மிகவும் மேம்போக்காக ஒரு வசனம். 'குஜராத்', 'மோடி' என்னும் வார்த்தைகளை அந்தத் தீவிரவாதியால் பிரயோகிக்கமுடியவில்லை. கொய்ங் என்று சத்தம் மட்டும் வருகிறது. 'பாபர் மசூதி' என்னும் பெயர் வரும்போதும் இதே சத்தம்தான்.
இது அநியாயம் இல்லையா? ஏன் தீவிரவாதிகளிடம் இரக்கம் காட்டக்கூடாது என்பதற்கான காரணத்தையும், என்கவுண்டர் ஏன் அவசியம் என்பதையும் ஒரு கமாண்டோ நீட்டி முழக்கிச் சொல்வார்.

ஆனால், காஷ்மீரையும், குஜராத்தையும் பாபர் மசூதியையும் மோடியையும் பற்றி ஒரு வார்த்தைகூட யாராலும் பேசமுடியாது. இந்தக் கட்டுப்பெட்டித்தனமான, அயோக்கியத்தனமான, பிற்போக்குத்தனமான ஒரு களத்தில்தான் தமிழ் சினிமா இதுநாள் வரை இயங்கிக்கொண்டிருக்கிறது. பயணம் அதே பாதையில், புது வேகத்துடன், த்ரில்லர் என்னும் அடையாளத்துடன் முன்னேறிச் சென்றிருக்கிறது, அவ்வளவுதான். ஏற்கெனவே பொதுப்புத்தியில் பரவிக்கிடக்கும் இஸ்லாமிய எதிர்ப்பு கருத்தாக்கங்ளை மீண்டும் ஒருமுறை வலுப்படுத்தியிருக்கிறது பயணம்.
பயணங்கள் முடிவதில்லை.

நன்றி; மருதன்

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

சீமானும்... மோடியும்...









இயக்குனர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...


தாயக விடுதலை போராட்டத்தில் நசுக்கப்பட்டு முள்வேலி முகாம்களில்


சித்திரவதைக்குள்ளாகி வரும் நமது தமிழீழ சொந்தங்களின் உரிமைக்கு மறுமலர்ச்சிக்கு உரக்க குரல்கொடுத்து பரிசாக இரண்டு தேசபாதுகாப்பு சட்ட சிறைகளை பெற்றவர்... குறுகிய காலத்தில் தமிழக மக்களின் குறிப்பாக இளைஞர்களின் அபிமானத்தை பெற்றவர்.சீமான் வருகைக்கு பிறகு தமிழ் தேசிய அரசியல் முழக்கம் புத்துயிர் பெற்றது என்பதை மறுக்க இயலாது.



மாற்றத்தை விரும்பிய மக்களும் தமிழுனர்வாளர்களும் சீமானை சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்றார்கள்... அவரது வீரியமிக்க உரைகள் உணர்வற்றவனையும் உசுப்பேத்தியது. அவர் செல்கிற இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது. அவரைசுற்றி எப்போதுமே உணர்வுமிக்க இளையர் பட்டாளம் அணிவகுத்தது.



பகுத்தறிவை தமிழனுக்கு போதித்த தந்தை பெரியாரின் பேரன் நான் என சீமான் முழங்கியதை தமிழ் சமூகம் ரசித்தது. தமிழர்கள் சீமானிடம் ஒரு மாற்று அரசியலை எதிர்பார்த்தார்கள் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் சீமானின் அரசியலுக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் ஏற்பட்டது.


சீமானின் நாம் தமிழர் கட்சி புதிய எழுச்சியை ஏற்படுத்தும் என நடுநிலையாளர்கள் காத்திருந்தனர்.ஆனால் சீமான் ஈழதமிழர்களுக்கு துரோகம் விளைத்த காங்கிரசையும் அதனுடன் கூட்டணிகொண்டுள்ளதிமுகவையும் கருவறுக்க அதிமுக கூட்டணிக்கு ஆதரவு நிலையென அறிவித்தார். அப்போதே தமிழுனர்வாளர்களும் மாற்றத்தை விரும்பிய மக்களும் சீமானின் இந்த அரசியல் சறுக்கலை கண்டு கவலைகொண்டனர். திமுகவிற்கு மாற்றாக அதிமுக என்கிற சீமானின் கோஷம் மக்களிடம் பெரும் விவாதத்தையே விதைத்தது.



வலியபோய் சீமான் அதிமுக அணிக்கு ஆதரவு என அறிவித்தும் அதிமுக அவரை சீண்டவில்லை என்பது ஊர் அறியாத ரகசியமல்ல... சீமான் அதிமுக ஆதரவு நிலையெடுக்க மிகப்பெரிய தூண்டுகோலாக இருந்த மதிமுக அதிமுகவின் தலைமையால் உதாசீனபடுத்தப்பட்டது. மதிமுக தேர்தலில் போட்டியிடும் நிலையையே தவிர்க்க வேண்டியதாகிவிட்டது. உடணடியாக சீமான் சொன்னார் நாங்கள் அதிமுகவிற்கு ஒட்டுகேட்கபோவதில்லை திமுக காங்கிரஸ் அணிக்கு எதிராவே ஒட்டுகேட்கபோகிறோம். இந்த வார்த்தைகள்


ஆரம்ப கல்வி பயிலும் ஐந்துவயது பிள்ளைக்கும் நகைப்பைத்தான் தந்தது.



அதன் பிறகு காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளில் மட்டுமே பரப்புரை செய்து காங்கிரசை நாம் தமிழர் கட்சி வீழ்த்தும் என்றார். அதன்படி தேர்தல் பரப்புரையும் மேற்கொண்டார். அவரது ஈழதமிழ் மக்களின் நிலைகுறித்த


விளக்கமும் தமிழக மீனவர்கள் சிங்கள ராணுவத்தால் பட்டுவரும் அவலமும் நிச்சயமாக மக்களை காங்கிரசுக்கு எதிராக வாக்களிக்க தூண்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை...


தேர்தல் பரப்புரையின் இறுதிகட்டத்தில் பெரியாரின் பேரன் என தன்னை அடையாளபடுத்திய சீமான் ஈழ மக்களின் அணைத்து துயரங்களுக்கும் காரணமான காங்கிரசையும் அதன் கூட்டணியையும் வீழ்த்தியே தீருவேன் என வீரம் பேசிய சீமான் பரப்புரையினூடே நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தியா நாட்டின் அசிங்க அடையாளமான நரேந்திரமோடியை வானளாவ புகழ்ந்துள்ளார். ஏப்ரல் 24 தேதியிட்ட குமுதம் ரிப்போர்ட்டர் இதழின் தனது நேர்காணலிலும் அவர் மோடியை பாராட்ட தவறவில்லை. கடந்த சில காலமாக தமிழக முஸ்லிம் அமைப்புகளின் நிகழ்வுகளில் கலந்துகொண்டு குஜராத் கலவரத்தையும் அங்கு முஸ்லிம்கள் கருவருக்கப்பட்டதையும் பேசிவந்த சீமான் திடீரென மோடிக்கு பாசவலை வீசுவதுதான் நமக்கு சந்தேகத்தை வலுக்க செய்கிறது.



நரேந்திரமோடி மிருகங்களைவிட கேவலமான பிறவி என்பதை நாடே அறியும். அவன் தாய் பாலுக்குப் பதிலாக மனித மாமிசத்தை தின்று வளந்தவன் என்பதை குஜராத்தில் நடந்த கலவரங்களின்போது மோடி திடமாகவே பதிவு செய்தான்.



மோடியின் ஆட்சியில் குஜராத் பலவகைகளிலும் முன்னேறி உள்ளதாம் இருக்கலாம் ஆனால் அந்த முன்னேற்றத்தில் அடித்தளத்தில் முஸ்லிம்கள் கொன்று புதைக்கப்பட்ட உண்மையை சீமானுக்கு யாரும் சொல்லவில்லையா...?



சாயிராஹ் என்கிற நிறைமாத கர்பிணியான என் சகோதரி மோடியின் வகையறாக்களால் ஈவிரக்கம் இல்லாமல் கற்பழிக்கப்பட்டு அவளது வயிற்றைகீறி உள்ளே உயிர்வாழ்ந்த சிசுவை வெளியில் எடுத்து எரியும் நெருப்பில் எரிந்து மகிழ்ந்தார்களே... அந்த நயவஞ்சகன் மோடியையா பெரியாரின் பேரன் புகழ்வது...!!!



இந்திய நாட்டின் உச்சநீதிமன்றம் மோடியை நவீன நீரோ மன்னன் என வர்ணித்ததே ரோமாபுரி நகரம் பற்றி எரிந்துகொண்டிருந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துகொண்டிருந்தானாம் அந்த வேலையைத்தான் மோடி


குஜராத்தில் மூவாயிரம் அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டபோது பல லட்சகணக்கான முஸ்லிம்களின் சொத்துகள் சூறையாடபட்டபோது செய்துகொண்டிருந்தான் என இந்திய உச்சநீதிமன்றம் சொன்னது அந்த மோடியைத்தான்...




இராமன் என்கிற ஆடு மாடுகளை மேய்ப்பதை தொழிலாக கொண்ட தலித் சமூக சகோதரன் சற்று இளைப்பாற ஒரு கூரைகொட்டகையில் அமர்ந்தான் அந்த கொட்டகை மேல்சாதிகாரனுக்கு சொந்தமானது என்கிற ஒரே காரணத்திற்க்காக சகோதரன் இராமன் கட்டிவைக்கப்பட்டு கல்லால் அடித்துக்கொல்லப்பட்டதும் குஜராத்தில்தான் இதே மோடியின் ஆட்சிகாலத்தில்தான் இப்படியாக மக்கள் நேசிக்கும் மோடியைத்தான்


இலங்கையில் புலிகளால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட துயரங்களுக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன் என சொன்ன சீமான் புகழ்ந்துள்ளார்.



சீமான் அவர்களே ஏன் இந்த கொள்கை பின்னடைவு... ஏன் இந்த முரண்பாடு... ராஜபக்சே எந்தளவிற்கு கொடுமைகாரனோ அதைவிட ஆயிரம் மடங்கு கொடுமைகாரன் நரேந்திரமோடி அவனை தவிர உதாரணம் காட்ட உங்களுக்கு வேறு முதலமைச்சரே கிடைக்கவில்லையா...?




ஒரு வாதத்திற்கு நரேந்திரமோடியை மண்ணை நேசிக்கும் தலைவன் என்பதை ஏற்றுகொள்வதாக வைத்துகொண்டு உங்களிடம் ஒன்றை கேட்கிறேன் முஸ்லிம்களை வேரறுத்து மோடி மண்ணையும் மக்களையும் நேசிக்கும் தலைவன் என்றால்... எங்கே சிங்கள மக்களின் உரிமைகள் பங்கிடபட்டுவிடுமோ என அஞ்சி நமது தமிழ் சொந்தங்களை வெடிகுண்டுகளின் கோரபசிக்கு இரையாக்கி வெற்றிகளிப்பில் திளைத்துள்ள


அயோக்கியன் ராஜபக்சேவை சிங்கள மண்ணையும் சிங்கள மக்களையும் நேசிக்கும் மகத்தான தலைவன் என யாரும் சொனால் பொங்கிவரும் உங்கள் ரத்தம் சுண்டிவிடுமா...?



சீமான் அவர்களே உங்கள் பின்னால் எந்த சுயநல சிந்தனையும் இல்லாமல் தமிழர்களின் வாழ்வியல் மாற்றத்திற்காக அணிவகுக்கும் உங்கள் அன்பு நாம் தமிழர்களுக்கு நீங்கள் எந்த பாதையை காட்டப் போகிறீர்கள்... உங்களிடம் இருந்து வீரியமான தமிழ் தேசியத்தை அரசியல் மாற்றுகளத்தை எதிர்பார்க்கும் தமிழர்களில் நானும் ஒருவன்...




நரேந்திரமோடி என்கிற ஒற்றைவரி நீங்கள் தமிழனுக்காக சிறைபட்டு தமிழர்களின் மனதில் அமர்ந்திருந்த சிம்மாசனத்தை அசைக்கவே செய்துள்ளது...












ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

இஸ்லாம் இல்லாத உலகம்-ஒரு தொலை நோக்குப் பார்வை!(டாக்டர் எ.பீ. முகம்மது அலி, பிஎச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ)


மேற்கத்திய ஏகாதிபத்திய உலகத்தால் இஸ்லாமியரும், இஸ்லாமிய அரசுகளும் சோதனைக்கு ஆளாகி உள்ளனர் என்று இஸ்லாமியர் என்னுவது இயற்கையே! மேலை நாட்டவர் இஸ்லாத்தினை வெறுப்புடனும், விநோதமாகவும், பழைமை வாத கொள்கை கொண்டதாகவும் நோக்குகின்றனர். ஆனால் அந்த இஸ்லாம் இல்லாத உலகம் எப்படி இருக்கும் என்று ஒரு தொலை நோக்குப் பார்வையினை மக்களுக்கு சற்று புரிய வைக்கலாம் என எண்ணுகிறேன்.எந்த இஸ்லாத்தினை வெறுக்கிறார்களோ அந்த இஸ்லாம் தான் எந்த மதமும் இல்லாத அளவிற்கு 1400 ஆண்டுகளுக்குள் 150 கோடி மக்களை தன் பால் உலகத்தில் ஈர்த்துள்ளது என்றால் மிகையாகாது. கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து இருபதாம் நூற்றாண்டு வரை ரஷ்யாவினை தலைமையிடமாகக் கொண்ட கிழக்கு ஆர்த்தோடக்ஸ் கிறித்துவ மதத்திற்கும், மேற்கத்திய ரோமன் கத்தோலிக கிறித்துவத்திற்கும், இஸ்லாத்திற்கும் ஆட்சி அமைப்பதில் நீண்ட நெடு போர்கள் நடந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. ஆனால் இஸ்லாம் இல்லாவிட்டால் அந்தப் போர்கள் இரண்டு பிரிவு கிறித்துவர்களுக்குமிடையே தான் ஏற்பட்டு இருக்குமென்றும் வரலாற்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.குர் ஆணின் முன்னோடியாக தவ்ராத் மற்றும் இன்ஜில் வேதத்தினை அல்லாஹ் சுபுஹானத்தாலா இறக்கி வைத்தான். அந்த மூன்று பிரிவுகளுக்குமிடையே மத சம்பந்தமான எந்த போர்களும்; நடைபெறவில்லை. ஆனால் யார் ஆட்சி செய்வது என்ற போட்டியில் தான் போர்கள் நடந்தன. முதலில் யூத மதத்திற்கும், கிறித்துவ மதத்திற்கும் என்ன வேறுபாடு என்று பார்க்கலாம்:1) கிறித்துவர்கள் யேசுவை பழைய டெஸ்டாமென்ட்டில் கூறப்பட்டுள்ள இறை தூதர் என்கிறார்கள். ஆனால் யூதர்கள் கிறித்துவர்களை மிகவும் பழைமை வாதி சாமியார்கள் என்று கருதுகிறார்கள்.2) பழைய டெஸ்ட்டாமென்ட்டில் யூதர்களின் தூதர் தனக்கு வந்த வகியினை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் என்று சொல்கிறது. இறை தூதர் மறு பிறவி யேசு எடுப்பது பழைய வேதத்தில் சொல்லவில்லை.3) யேசுவின் சிலுவையில் அறைந்து மரித்த தியாகத்தால் மனித இனம் காக்கப் பட்டது என்ற கிருத்துவ கொள்கையினை யூதர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. நன்னடத்தை மூலமே மனித இனம் காக்கப்படும் என்று யூதர்கள் நம்புகிறார்கள்.4) மொத்தத்தில் யூதர்களின் ஓரிறைக் கொள்கையினை கையிலெடுத்து அதனைக் களங்கப் படுத்தி யூதர்களை பிரித்தாலும் முயற்சியில் கிருத்துவர்கள் ஈடுபடுகிறார்கள் என்று யூதர்கள் குற்றம் சுமத்துகிறார்கள்.முஸ்லிம்கள் கோலோட்சிய ஸ்பெயினில் வாழ்ந்த வரலாற்று இடைப்பட்ட காலத்திய(மெடீவல்) பிளாசபர் மெயினோனிடஸ், ‘நாஸரேனியைச் சார்ந்த ஜீசஸ் டோரா(தவ்ரத்) வேதத்தினை திரித்துக் கூறி யூத இனத்தினை அழிக்க முயற்சி செய்தார்’ எனக் கூறியுள்ளார். ஆனால் இஸ்லாம் இரண்டு மதங்களுக்கு இடையே ஒரு நடுநிலைக் கொள்கையுடன் மூஸாவும், மரியம்(அலை) அவர்களுக்குப் பிறந்த ஈசா(அலை) அவர்களும் அல்லாஹ் சுபுஹானத்தாலாவின் இறைத் தூதர்களே என்று புனிதக் குர்ஆன் 19ஆவது அத்தியாத்தில் உறுதியாக சொல்லியுள்ளது. இரு மதத்தினவரையும் வேதத்தின் மக்களாக கருதுகின்றனர்(பீப்பிள ஆப் தி புக்).முஸ்லிம் அரசர்களால் கைப்பற்றிய நாடுகளின் பிரஜைகளை வாள் கொண்டு வலுக் கட்டாயமாக இஸ்லாத்திற்கு மாற்றியதாக ஒரு தவறான எண்ணம் இருந்து வருகிறது. அதற்கு கீழ்கண்ட முஸ்லிம் அல்லாத அறிஞர்களின் கூற்றினை வைத்து மறுக்கலாம்:1) ‘முஸ்லிம் சொசைட்டீஸ்’ என்ற நூலை எழுதிய புரோபாப்பிடஸ் அதனை மறுத்துக் கூறும் போது, “பலரும் எதிர்பார்ப்பிற்கு எதிராக அரேபிய அரசர்களால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் அனைத்து மக்களையும் இஸ்லாத்திற்கு மாற்றும் திட்டமோ அல்லது அவர்களை அடிமை போல நடத்தும் திட்டமேதுமில்லை’ சொல்கிறார்.2) ‘ஸ்டெடி ஆப் ஹிஸ்ட்ரி’(வரலாற்றுப் பாடம்) என்ற நூலை எழுதிய உலகில் சிறந்த வரலாற்று ஆசிரியர், ‘இஸ்லாமிய மார்க்கத்தினைப் பரப்ப வன்முறையினை பயன்படுத்தினார்கள் என்பதினை முதலில் மறுக்க வேண்டும்’ என்ற ஆனித்தரமாக சொல்லியுள்ளார்.3) அமெரிக்காவிலுள்ள கொலம்பியா பல்பலைக் கழக பேராசிரியர் ரிச்சர்டு பிலியன்ட், ‘இஸ்லாமிய முதல் நூற்றாண்டில் அரேபியர் அல்லாத மக்கள் இஸ்லாமிய மார்க்கத்திற்க மாறியது மிகவும் மெதுவாக இருந்தது. உமயத் இன மன்னன் கி.பி.661ஆம் ஆண்டு வாக்கில் ஆட்சி செய்த போது முஸ்லிம் அல்லாதோர் மதம் மாறியது வெறும் 10 சதவீதம் தான். மக்கள் ஓரிறை கொள்கையின் பால் ஈர்க்கப்பட்டே இஸ்லாத்தினைத் தழுவினார்கள். அப்பாஸிட் இன ஆட்சியில் 40 சதவீத மக்களே இஸ்லாத்தினை தழுவியவர்களாக இருந்தார்கள். புனித புத்தகத்தின் மக்கள் என்று கூறப்படும் யூதர்களும், கிறித்துவர்களும் தங்கள் மத கோட்பாடுகளை எந்தவித இடையூறுமின்றி கடைப் பிடித்து வந்தார்கள் என்று நோக்கும் போது இஸ்லாமிய ஆட்சி கட்டாய மத மாற்றத்திற்க எதிரானது என்று காட்டுகிறது’ என்று சொல்லியுள்ளார்.ஆகவே இஸ்லாமியர் ஆட்சி இல்லையென்றால் யார் வல்லவர் என்ற காலத்தில் மற்ற மத மன்னர்கள் அந்த இடங்களை கைப்பற்றி அந்த மன்னர்களின் மதத்திற்கு அவர்களைக் கட்டாய மதமாற்றம் செய்திருப்பார்கள் அல்லவா?ஓட்டமன் சாம்ராஜ்யத்தில் மெஜாரிட்டியான பால்க்கன் பகுதி மக்கள் கிறித்துவ மதத்தினை தழுவியே வந்தார்கள். அப்பாஸிட் கலிபாக்கள் காலத்தில் ஐரோப்பியாவில் ஸ்பெயினிலிருந்து ஆசியாவில் கிழக்குப் பகுதி வரையில் ஆட்சி செய்தார்கள். அந்த, அந்தப் பகுதி பல மத பிரிவுகளைச் சார்ந்த சிந்தனையாளர்கள், மத அறிஞர்கள், அறிவு ஜீவிகள் ஆகியோர்களை இணைத்து பல் வேறு மக்களின் பண்பாடு நாகரீகம், மொழி, கலை, வரலாறுகளை இணைத்து ஆட்சி செய்ததால் இஸ்லாமியர் அல்லாத மக்களை வெகுவாக கவர்நது ஆட்சி செய்ய முடிந்தது. எல்லா மக்களையும் அனைத்து இஸ்லாமியர் ஆட்சி செய்ததால் மக்கள் இஸ்லாமிய ஆட்சி முறையினை விரும்பி ஏற்றுக் கொணடனர்.அப்பாஸிட் கலிபாக்கள் முஸ்லிம் அல்லாத மக்களை கட்டாயமாக இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாற்றினார்கள் என்றால் அந்த அப்பாஸிட் ஆட்சியினை கி.பி. 1300 ஆம் நூற்றாண்டில் சூறையாடிய மங்கோலிய ஆட்சிக்குப் பின்னர் சிரியா மக்கள் பழையபடி ஏன் கிறித்துவ மதத்திற்கோ அல்லது ஈரானிய மக்கள் முன்பிருந்த சொராஸ்ட்டிரிய மதத்திற்கோ மாறவில்லை என்ற கேள்வி எழாமலில்லை என்று வரலாற்று ஆசிரியர்கள் கேள்வி கேட்காமலில்லையே!! அதன் பின்பு ஐரோப்பிய அரசுகளின் காலனி ஆதிக்கத்திலும், அமெரிக்கா-ரஷ்யா பனிப்போரிலும், இரண்டு உலகப் போருக்குப் பின்னரும் இஸ்லாமிய மக்கள் எரியும் சாம்பலிலிருந்து புனித புத்தகத்தின் மக்கள் என்கிற யூத மதத்தினையும், ஈரானின் சொராஸ்ட்டிரய மதத்தினையும், சீனாவின் கன்பூசியானிஸம், புத்தமதம், ஹிந்து மதத்தினை விடவும் ஆர்த்தெழுந்து கிளம்பிய பீனிக்ஸ் பறவையாக 150 கோடி மக்களாக இன்று உலகெங்கும் இருக்கின்றனரே! புpன் எப்படி வந்தது அவ்வளவு பெரிய மக்கள் தொகை இஸ்லாமிய மார்க்கத்திற்கு?கலிபா உமர்(ரலி)அவர்கள் படை ஜெரூசலத்தினைக் கி.பி.637ஆம் ஆண்டில் கைப்பற்றிய பின்னர் உமர் அவர்களே நேரடியாக அங்கே வருகை தந்தார்கள். அப்போது இஸ்லாமிய படைகள் கட்டுக்; கோப்பாக கடமை, கண்ணியம் காத்து எந்தவித கொலை, கொள்ளை, சூறையாடுதலில் ஈடுபடவில்லை. உமர் அவர்கள் ஜெரூசலத்தின் கிறித்துவ தலைமைக் குருக்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில், ‘தேவாலயம் இடிப்பதோ, அதனைக் கைப்பற்றுவதோ கூடாது, அல்லது தேவாலயப் பொருட்கள் சூறையாடக்கூடாது, அங்குள்ள மக்களை கட்டாய மதமாற்றம் செய்ய கொடுமை செய்யக்கூடாது’ என்பதாகும்.அது மட்டுமா? ரோமானியர் ஆட்சியின் கீழ் பாழடிக்கப்பட்ட யூதர்கள் ஆலயம், இஸ்லாய மார்க்கத்திற்கும் புனித சின்னமாக இருப்பதால் அந்த ஆலயம் சீரமைக்கப்பட்டு 500 ஆண்டுகளுக்குப் பின்பு முதல்தடவையாக யூதர்கள் வழிபட உமர் அவர்கள் மத சகிப்புத்தன்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கினார்கள் என்றும் வரலாறு கூறுகின்றது.அதற்கு நேர்மாறாக இஸ்லாமியரியடமிருந்து ஜெரூசலத்தினைக் கைப்பற்றப் புறப்பட்ட கிறித்துவ சிலுவைப் படையினர் செய்த அட்டூழியங்கள் சொல்ல வார்த்தையில்லையே என்றே கூறலாம். சுpல மாதங்களுக்கு முன்பு ஒரு சகோதரர் சிலுவைப் போராட்டங்கள் பற்றி தான் தெரிந்து கொள்ள யாரும் விளக்குவார்களா என்று சமுதாய வெப்பில் கேட்டிருந்தார். ஆகவே அனைத்து சகோதரர்களும் தெரிந்து கொள்வது இந்தத்தருணத்தின் சரியாக இருக்கும் என நம்புகிறேன். ரோமப் போப்பாண்டவர் இரண்டாம் அர்பன் கி.பி. 1095 உத்திரவிற்கிணங்க ஜெரூசலத்தின கைப்பற்றியபோது முஸ்லிம் படைகளுடன் யூதர்களும் கிறித்துவர்களுக்கு எதிராக போரிட்டார்கள் என்றால் முஸ்லிம்கள் எந்தளவிற்கு வேற்று மதத்தினரை பெருந்தன்மையுடன் நடத்தினார்கள் என்பது கீழ்க்கண்ட சம்பவங்கள் மூலம் புலனாகவும் என நம்புகிறேன்.ஜெரூசலத்தினை 1099ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ந்தேதி கைப்பற்றி அங்கிருந்த ஆண், பெண், குழந்தைகள், முதியோர் என்று பாராது 60,000 பேர்களை கொன்று குவித்தனர். கத்தோலிக்க என்சைக்கிலோ பீடியாவில்(அகராதி), ‘கிறித்துவர்கள் ஜெரூசலத்தில் எல்லாப் பக்கத்pலிருந்தும் நுழைந்து அங்குள்ள மக்களை வயது வித்தியாசமில்லாது கொன்றனர்’ என்று சொல்கிறது.குருசேடில் பங்குபெற்ற, சார்ட்டரைச் சார்ந்த ஒரு கிறித்துவ வீரர், புல்ச்சர் எழுதிய கடிதத்தில், ‘நீங்கள் ஜெரூசலத்தில் கிறித்துவ படைகள் நுழையும் சமயத்தில் இருந்திருந்தால் உங்களுடைய கனுக்காலளவிற்க அங்குள்ள மக்களின் ரத்தம் தோய்ந்திருக்கும்’என்கிறார். இஸ்லாமியர் கி.பி.637ஆம் ஆண்டில் ஜெரூசலத்தில் வெற்றியுடன் நுழைந்து, போர்க் கைதிகளை மதித்து, வேற்று மதத்தினரையும் கண்ணியத்துடன் நடத்தினார்கள் என்று விளங்கவில்லையா? ஆனால் ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும், லிபியாவிலும் மேற்கத்திய படைகள் குண்டு மாரி பொழிந்த போது அப்பாவி மக்கள் கொல்லப்படவில்லையா? 31.3.2011ந்தேதி ஆப்கான் ஜனாதிபதி கர்சாய் கூட வெறுத்துப்போய் கீழ்வாறு கூறியிருப்பதாக செய்திகள் சொல்கின்றன.“கடந்த மூன்று வருடங்களில் அமெரிக்கா கூட்டுப் படையினர் அப்பாவி மக்களை காட்டுமிரான்டித்தனமாக கொல்கிறது”. அவர் சொன்னது கண்கெட்டதும் சூரிய நமஸ்காரம் செய்வது போல உங்களுக்குத் தோனவில்லையா?இரண்டாம் சிலுவை யுத்தத்தில் இஸ்லாமிய கமாண்டர், சலாவுதீன் முஸ்லிம் படைகளை ஒன்று திரட்டி ஆக்ரோசமாக போரிட்டு ஜெரூசலத்தினை மீட்டார். அப்போது கூட கிறித்துவ தேவாலயத்திற்கோ அல்லது கிறித்துவ மக்களுக்கோ எந்தவித சேதமோ, உயிரிழைப்போ இல்லையே! ஆனால் ஈராக் போரில் புனிதமாக கருதும் கர்பலா கூட குண்டு வீச்சிலிருந்து தப்பபில்லையே அது ஏன்?அதன் பின்பு மூன்றாம் ஜெரூசலத்தினைக் கைப்பற்ற கிறித்துவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. அங்கே போகும் வழியில் இங்கிலாந்து அரசர் ரிச்சர்டு பைசான்டியன் சாம்ராஜ்யத்திருந்த ஏக்கர் என்ற இடத்தினை முற்றுகையிட்டது. அங்கிருந்த முஸ்லிம்களைப் பார்த்து , ‘நீங்கள் சரணடைந்தால் உங்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும்’ என்றார். அந்த ஏமாற்றுப் பேச்சினைக் கேட்டு முஸ்லிம்கள் சரணடைந்தார்கள். ஆனால் அந்த ரத்த பசி கொண்ட ரிச்சர்டின் படையினர் அனைத்து முஸ்லிம்களையும் கொன்று குவித்தனர். அதன் பின்பு ஜெரூசல முற்றுகையினை முஸ்லிம்கள் வெற்றிகரமாக முறியடித்தனர். இருந்தாலும் முஸ்லிம் கமாண்டர் பெரிய மனதுடன் ஜெரூசலத்தில் கிறித்துவர்கள் புனித யாத்திரை செல்ல அனுமதியளித்தார்.நான்காவது சிலுவை யுத்தத்தில் கிறித்துவர்களின் கோபம் கிரேக்க தேசத்தின் பைசான்டின் ஆட்சியாளர்கள் மீது திரும்பி அவர்களின் தலைநகரான கான்ஸ்ட்டான்நோபிளை சூறையாடினார்கள். அந்த யுத்தம் தான் கிழக்கே உள்ள கிரேக்க ஆர்த்தோடக்ஸ் கிறித்துவர்களுக்கும், மேற்கே உள்ள ரோமன் கத்தோலிக்க கிறித்துவர்களுக்கும் குரோதத்தின ஏற்படுத்தியதின மூலம் கண்ணியமான முஸ்லிம்களுக்கு வெற்றியினைத் தேடித்தந்தது. 2001ஆம் ஆண்டு போப் ஜான்பால் ருமேனியா நாட்டிற்கு வருகை தந்தபோது நான்காம் சிலுவை யுத்தத்தில் கிரேக்க நாட்டின் கான்ஸ்ட்டாண்டினநோபிலில் செய்த அட்டூழியங்களுக்கு வருத்தம் தெரிவித்தார் என்பதிலிருந்து கிறித்துவர்கள் எவ்வளவு கொடுமையில் மற்ற சமூகத்தினரிடம் ஈடுபட்டிருப்பார்கள் என்று புரியவில்லையா? ஆகவே தான் இஸ்லாம் இல்லையென்றால் மேற்கத்திய ரோமன் கல்தோலிக கிறித்துவர்களுக்கும், கிழக்கே இருக்கும் ஆர்த்தோடக்ஸ் கிறித்துவர்களுக்கும் போர்கள் ஏற்பட்டு பல நாசவேலைகளில் ஈடுபட்டிருப்பார்கள் என்பது உலக வரலாறாக தெரியவில்லையா?2008ஆம் ஆண்டு நடந்த அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் ஒரு முஸ்லிம் தகப்பனாருக்கு மகனாராக பிறந்தார் ஓபாமா என்பதிற்காக குடியரசு கட்சியின் வேட்பாளரான ஜான் மெக்கெய்ன் ஆதரவு பாதிரியார் ராட் பாஸ்லே, ‘கிறிஸ்டோபர் கொலம்பஸ் 1492 ஆம் ஆண்டு தன் உலகப் பயணத்தினை பல நாடுகளை கண்டறிய புறப்பட்டார் என்பதோடு முஸ்லிம்கள் இருக்கும் இடங்களைக் கணடறிந்து அவர்களை தோற்கடிக்கவே தனது பயணத்தினை மேற்கொண்டார்’ என சொன்னது எவ்வளவு பெரிய குரோத மனப்பான்மை முஸ்லிம்கள் மீது அவர் மனதில் இருந்தது என்பது தெரிகிறதல்லவா?ஐரோப்பிய முஸ்லிம்களும் மதசார்பற்ற நிலையும்: பிரான்ஸ் நாட்டிலே கடுமையான மத சார்பற்ற கொள்கையினை கடைப்பிடிப்பதால் பெரிய மைனாரிட்டியாக வாழும் முஸ்லிம்களுடன் மோதல் ஏற்படுகின்றது. உதாரணத்திற்கு தனது அங்க அவையங்களை மறைக்கவும், அன்னிய ஆண்களின் கழுகுப் பார்வையிலிருந்து தங்களைப் பாது காக்கவும் தான் ஹிஜாபினை பெண்கள் அணிகிறார். ஆனால் அதனை அணியக்கூடாது என்ற சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்ன நியாயம்? அதனை எல்லா பிரான்ஸ் மக்களும் ஆதரிக்கிறார்களா என்றால் இல்லையே! அங்குள்ள தலைமை கிறித்துவ குரு(கார்டினல்) ஜீன் லூயிஸ் சொல்லும்போது, பலமொழி, இனம், நாகரீகம், பண்பாடு என்று வாழும் உலகத்தில் தனது இறைவனின் கட்டளைக்கு இடம் கொடுத்து அதனை முஸ்லிம்கள் செயலாற்றி வருகிறார்கள். அதனில் ஏன் தலையிட வேண்டும் எனக் கேட்டிருக்கிறார். அது போல டேனிஸ் நாட்டு கேலி சித்திரக்காரர் ஒருவர் ரஸூலல்லா பற்றி ஒரு கேலி சித்திரம் வெளியிட்டதால் இஸ்லாமிய உலகில் கொந்தளிப்பு ஏற்பட்டது நினைவிருக்கும். அதற்கு மதசார்பற்ற மற்ற டேனிஸ் மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனரல்லவா? ஆகவே இஸ்லாத்தினை சிலர் எதிர்ப்பதின் மூலம் இஸ்லாத்தின் முக்கியத்தினை அவர்களும் உணர்ந்திருக்கிறார்கள் என்பதினைத் தானே இது எடுத்துக் காட்டுகிறது.ரஷ்யாவில் மிகப்பெரிய மைனாரிட்டியாக இஸ்லாமியர் உள்ளனர். அவர்கள் அனைவரும் கி.பி. பதிமூன்றாம் ஆண்டில் படையெடுத்த துருக்கிய இனத்தவரின் வாரிசுகள். கம்யூனிஸ புரட்சிக்குப் பின்னர் இஸ்லாமியருக்கு ஒரு சோதனை காலமாக மாறியது. கம்யூனிஸ முக்கிய தலைவரான முஸ்லிம் மார்க்கத்தினைச் சார்ந்த சுல்த்தான் கலிவி முஸ்லிம்கள் கம்யூனிஸ்ட் என்ற ஒரு அமைப்பினை ஏற்படுத்த முயன்றார். ஆனால் அப்போதிருந்து சர்வாதிகாரி ஸ்டாலின் அதனை எற்காது முஸ்லிம்களுக்கு கம்யூனி;ட் கட்சியிலும், அரசிலும் முக்கிய பங்கு கொடுப்பது நின்று விட்டது. அதன் தொடர்கதை தான் புடின் ஆட்சி பீடத்தில் ஏறியதும் சுயாட்சி உரிமை கேட்ட செசன்யா முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடந்தது. ரஷ்யா ஒரு முக்கிய வீட்டோ உரிமை கொண்ட ஐ.நா உறுப்பினர். ஈராக் அந்த நாட்டுடன் ராணுவ ஒப்பந்தமும் செய்திருந்தது. ஆனால் ஐ.நா. சபையில் ஈராக் மீது தடைகொண்டு வரும்போதோ அல்லது லிபியா மீது தடைகொண்டு வந்து அமெரிக்கா-மேற்கத்திய நாடுகள் நடவடிக்கை எடுக்கும் போதோ ஏன் அந்த வீட்டோ பவரை சீனாவுடன் சேர்ந்து உபயோகித்து தடுக்கவில்லையே ஏன் என்று முஸ்லிம்கள் மனதில் எழாமலில்லையே!! வெள்ளம் தலைக்கு மேலே போன பின்பு இப்போதுதான் ரஷ்யாவின் வெளி விவகார மந்திரி செர்கு லாரன்ஸ் லிபியாவின் உள் விவகாரத்தினை அந்த நாட்டு மக்கள் தான தீர்த்துக் கொள்ள வேண்டும். அதற்குப் பதிலாக வெளிநாட்டவர் தலையிடுவது சரியல்ல என்று ஒப்புக்குச் சப்பைக் கட்டியுள்ளார். ஆகவே இஸ்லாமியர் உலகில் யார் உண்மையானர் இப்போதாவது தெரிந்து கொண்டால் நல்லது தானே! இஸ்லாமும்-இந்தியாவும்: 1) முஸ்லிம்கள் வியாபாரிகளாக இந்திhவின் தெற்குப் பகுதியில் குடியேறினார்கள். கி.பி. 612ஆம் ஆண்டு ரஸூலல்லா உயிருடன் இருக்கும் போது கேரளாவில் கொடுங்களூரில் ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டது. அது இன்றும் அடையாளச் சின்னமாக உள்ளது.2) வுட இந்தியாவில் மத்திய ஆசியாவிலிருந்து படையெடுத்து வந்தவர்கள் குடியேறினார்கள்.அவ்வாறு வந்த முஸ்லிம்கள் இஸ்லாமிய நாகரீகத்தினை, ஹிந்து நாகரீகத்துடள் இணைத்து ஒரு பெரிய சாம்ராஜ்யத்தினை ஏற்படுத்தினார்கள் என்ற பெருமை நிலைத்து இருக்கிறதல்லவா? ஆனால் சுதந்திர போராட்ட காலங்களில் தலைவர்களிடையே ஏற்பட்ட கருத்து பேறுபாடினை அறிந்த ஆங்கிலேய அரசு தனது பிரித்தாலும் கொள்கையின் மூலம் தூபம் போட்டு இந்தியாவின் துணை கண்டம் இரண்டு நாடாக 1947ஆம் ஆண்டு பிரிந்தது.இஸ்லாமியர் இந்தியாவில் காலடி எடுத்து வைக்காவிடில் இணைந்த முகலாய கலாட்சாரம் வெளி உலகிற்குத் தெரிந்திராது. உதாரணத்திற்கு உலகில் ஏழு அதிசயங்களில் முதலாவதான தாஜ் மஹால் உலக கட்டிடக்கலைக்கு அரிய பொக்கிஷமாக உருவாகியிருக்காது..புல மன்னர்கள், குரு நில மன்னர்கள், ஜமீன்கள், சமஸ்தானங்கள் ஆகிய இந்திய அரசியல் அமைப்பில் பிரிந்து ஒருவருக்கொருவர் சண்டையிட்டு மாண்டதினை தடுத்து ஒரு முகலாய சாம்ராஜ்யம் அக்பர் காலத்தில் அமைந்திருக்காது.அரேபிய, பாரசீக, துருக்கி, ஹிந்துஸ்தானியினை இணைத்து இந்தியாவில் ஒரு புது மொழியான உருது மொழி உருவாகியிராது.புல உயர் ஜாதியினரால் ஒதுக்கப்பட்டு, கீழ்த்தரமாக சமுதாயத்தில் நடத்தப்பட்ட தலித்களுக்கு சமத்துவம், சகோதர உரிமை வழங்கியது இஸ்லாம் தானே. அதனால் தான் இன்று கூட இந்தியாவில் இஸ்லாமியர் ஆட்சியில்லாவிட்டாலும் தலித் மக்கள் இஸ்லாமிய மார்க்கத்தினை தழுவுகிறார்கள். இந்தியாவின் வானசாஸ்திரம், கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்குதல் போன்ற கணித கலையினை உலக மக்களுக்கு இஸ்லாம் எடுத்துச் சொல்லவில்லையா? ஆகவே இஸ்லாம் தான் இந்தியாவிற்கு வெளி உலகில் பெரிய அளவு முகவரியினைக் காட்டியுள்ளது என்பதினை யாரும் மறுக்க முடியாது.இஸ்லாமும்-சீனாவும்: சீனாவில் இன்;;று 14 சதவீத பெரிய மைனாரிட்டி சமூகமாக இஸ்லாமியர் வாழ்கின்றனர். கலிபா உமர்(ரலி அவர்கள் காலத்தில், ‘சீனம் சென்றும் சேர்க்க நல்லறிவை’ என்ற ரஸூலல்லாவின் வாக்குப்படி சீனாவில் இஸ்லாம் காலடி வைத்தது. அப்போது சீனாவினை ஆட்சி செய்த தேங்க் இன மன்னர் கேன்டன் என்ற இடத்தில் ஒரு பள்ளிவாசல் கட்ட அனுமதியளித்தார். அந்தப்பள்ளி இன்றும் உள்ளது. இஸ்லாமிய மார்க்கம் சீனாவின் கன்பூசிய ஓரிறைக் கொள்கைக்கு ஒத்துப்போனதால் இஸ்லாமியர்களுக்கென்று தனி குடியமைப்பு ஏற்படுத்திக் கொடுத்தார். ஆகவே அரேபிய, பாரசீக மக்கள் பெரும் அளவில் அந்த குடியிருப்பிற்கு வந்தார்கள். அவர்களை ஹூய் இனத்தவர் என அழைக்கப்பட்டார்கள். அவர்கள் சீன கலாட்சாரத்துடன் இஸ்லாமிய கோட்பாடுகளுடன் நடந்து கொண்டனர். ஆகவே அவர்களை சீனர்கள் ஆதரவுடன் நடத்தினார்கள். மற்றவர்கள் மேற்குப் பகுதியில் வசிக்கும் விகூர் இனத்தவர். அவர்கள் பூர்வீகம் துருக்கியாகும். அவர்கள் சீனக் கலாட்சாரத்தில் சேராமல் தனி பண்பாடுகளுடன் நடந்து கொண்டனர். ஆகவே சீனர்கள் அவர்களை எப்போதுமே சந்தேகக் கண்ணுடன் நோக்கினார்கள். இஸ்லாமியர் கப்பல் வணிகக்கலையில் சிறந்து விளங்கியதால் அவர்கள் மூலம் தங்கள் பொருட்களை மேலை நாடுகளுக்கு அனுப்பவும், வெளிநாடுகளிலிருந்து பொருள்களை இறக்குமதி செய்யவும் கற்றுக் கொண்டார்கள். 13ஆம் நூற்றாண்டில் சாங் இன ஆட்சியில் துறைமுக டைரக்டர் ஜெனரலாக ஒரு முஸ்லிம் இருந்திருக்கிறார். தங்கள் பொருட்களை உள்ளூர் மார்க்கெட்டிலேயே வாணிபம் செய்த சீனர்கள் இஸ்லாமியர் உதவியால் வெளி நாடுகளில் தங்கள் வர்த்தக உறவை ஏற்படுத்தினார்கள். அது மட்டுமல்ல, சீனாவில் அறிவுப் புரட்சியினை ஏற்படுத்தியதே இஸ்லாமியர் என்கிறது வரலாறு. சீன மொழியில் இஸ்லாமிய படைப்புகள் ஏற்பட்டன. சீன மொழியில் முதன் முதலில் யூசுப் மா டிக்ஸின் என்ற சீனர் அரேபிய மொழியிலிருந்து திருக்குர்ஆனை மொழி பெயர்த்தார். அறுவறுப்பான ஜந்துக்களை உணவாக உண்ட சீனர்களுக்க ஹலால் உணவினை உண்ணும் பழக்கத்தினை கற்றுத்தந்தனர். நான் 1979ஆம் ஆண்டு என் தந்தையினை மலேசியாவில் காண செல்லும் வழியில் சிங்கப்பூர் சென்றேன். அங்கே ஒரு சீன ஹோட்டலில் நாம் விஷ ஜந்து எனச் சொல்லும் நட்டுவாக்கிளி என்ற கருந்தேல்களை கூண்டுக்குள் வைத்திருந்தனர். சிங்கப்பூரில் வாழ்ந்த எனது கல்லூரி தோழன் சாலி மரைக்கானிடம் அது எதற்காக வைத்திருக்கிறார்கள் என்றேன். அவன் சீனர்கள் அவைகளை விரும்பி சாப்பிடுவதாகச் சொன்னார். அவைகளை தமிழ்நாடுக்காரர்கள் கொண்டு வந்து விற்பதாகவும் சொன்னார். ஆனால் 2001ஆம் ஆண்டு நான் அமெரிக்காவில் உள்ள சன்னிவேலுக்குச் செல்லும்போது அங்கே ஒரு சீன ஹோட்டலுக்கு எனது மருமகன் கூட்டிச்சென்றார். அங்கே என்ன ஆச்சரியம் காபாத்துல்லா சரீபு, மதினா படங்கள், ஆயத்துல் குர்சி, அல்ஹம்து சூரா ஆகியவை பெரிய அளவில் மாட்டப்பட்டு ஹலால் உணவு என்றும் எழுதப்பட்டிருந்தது. அந்த ஹோட்டலில் வேலை பார்ப்பவர் அத்தனை பேர்களம் சீன முஸ்லிம்களே. அந்த ஹோட்டலில் அமெரிக்கர்களும் விரும்பி வந்து சாப்பிடுகிறார்கள். இது எதனைக் காட்டுகிறது என்றால் இஸ்லாம் உணவில் ஒரு புரட்சி ஏற்படுத்தி ஹலால்-ஹராம் என்ற வேறுபாடுகளையும் சீன மக்களுக்குப் போதித்து அவர்களை மனிதர்களாக ஆக்கியுள்ளது ஆச்சரியம்தானே!இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்காவின் கை ஓங்கியது. அதன் விளைவுதான் உலகில் பல கோடியிலிருந்த யூதர்களைக் கொண்டு வந்து பாலஸ்தீனர் நாட்டில் குடியேற்றி தினமும் அங்கே இஸ்லாமியர் மத்தியில் பதட்டம் எற்படுகிறது. இஸ்ரேயிலில் யூதர்கள் குடியேற்றியதிற்கு கூட்டுப்படை நாடுகள் சொன்ன காரணம் என்ன தெரியுமா? யூதர்கள் ‘ஹாலோகாஸ்ட்டில்’ பாதிக்கப்பட்டவர்கள் என்று அனுதாபம் காட்டியது. ஆனால் யூதர்களை இஸ்லாமியரா வேட்டையாடினார்கள் இல்லையே! ஐரோப்பிய ஜெர்மானிய ஹிட்லர் தானே வேட்டையாடியதாக கூறப்பட்டது. ஆகவே அங்கு சென்று அவர்களை குடியமர்த்தியிருக்கலாமே என்று உலக இஸ்லாமியரும், தினந்தோறும் அப்பாவி பாலஸ்தீனர் படும்பாட்டை பார்த்த நடுநிலையாளர்களும் கேட்காமலில்லைN!ய!இஸ்லாமியர் இல்லையென்றால் உலகில் பல்வேறு மத, இன போராளிகளுடன் அமெரிக்காக் கூட்டுப்படை போர் தொடுக்க நேர்ந்திருக்கும். ஏனென்றால் தனக்கு பிடிக்காத அரசுகளை பணமும், பொருளும், ஆயுதமும் கொடுத்து கவிழ்ப்பதும், அதையும் மீறிப் போனால் மக்களைக் காக்கிறேன், ஜனநாயகத்தினை நிலை நிறுத்துகிறேன் என்ற போர்வையில்; தனது ஆயுத பலத்தினை காட்டுவதுமாக இருக்கிறது. அதற்கு உதாரணங்களை வருடங்கள்-பாதிக்கப்பட்ட நாடுகள் வாரியாக கீழே பார்க்கலாம்:கோரியா(1950)இரான்(1953)குவாட்டமாலா(1954)காஸ்டா ரிகா(1955)சிரியா(1957)இந்தோனேசியா(1958)டோமனிக் ரெபப்ளிக்(1960)பெரு(1960)ஈக்குவாடர்(1960)காங்கோ(1960)வியட்நாம்(1961-1973)கீயூபா(1961)பிரேசில்(1964)சிலி(1972)அங்கோலா(1975)நிராகுவே(1980)லெபனான்(1982)கிரேடனடா(1983)பனாமா(1989)ஈராக்(1991)(2003)சோமாலி(1993)போஸ்னியா(1994)கொசாவா(1999)ஆப்கானிஸ்தான்(2001) கடைசியாக லிபியா(2011).மேற்கோள் காட்டிய பட்டியல்படி இஸ்லாமியர் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகள் அமெரிக்கா ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது விளங்குகிறது தானே. சுமிப காலங்களில் இஸ்லாமியர் மனதில் மிகந்த கசப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆகவே அமெரிக்கா மற்றும் மேலை நாடுகள் கடந்த கால இஸ்லாமிய ஆட்சியின் சகிப்புத்தன்னை, மற்றவர்களை மதிக்கும் குணம், மக்களை மாக்களாக கருதாது சகோதர்களாக கருதும் மனப்பான்மை, சாந்தி, சமாதானம் போன்று நடந்து கொண்டு போருக்கும், ஆட்சிகளைக் கவிழ்க்கும் முயற்சிகளுக்கும், தனிமனித உரிமை மீறலுக்கும் செலவிடும் பணத்தினை தங்கள் நாடுகளுக்கும், இல்லாத நாடுகளின் கல்வி, சுகாதாரம், சுற்றுப்புற சூழல், வேலைவாய்ப்பு, தொழிற்சாலை, குடிதண்ணீர், ரோடு வசதிபோன்றவைகளுக்கு செலவிட்டால் எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கு நல் வாழ்வினைக் கொடுப்பதோடு அனைத்து தேச மக்களும் வாயார வாழ்த்துவார்கள் என்றால் சரிதானே சொந்தங்களே!

நன்றி:www.ilaiyangudi.org

திங்கள், 11 ஏப்ரல், 2011

பெரியோர்களே... தாய்மார்களே... ( இது அணைத்து தமிழ் மக்களுக்காகவும்)


பெரியோர்களே... தாய்மார்களே... வாக்காளப் பெருங்குடிமக்களே...

கடந்த இருபது தினங்களுக்கு மேலாக தமிழக மக்கள் அன்றாடம் கேட்டுவந்த

வார்த்தைகள் இன்று (ஏப்ரல்11) பிற்பகலுடன் ஒரு நிறைவுக்கு வந்துள்ளது...

இனி இதுபோன்ற வார்த்தைகளை கேட்க சில ஆண்டுகள் ஆகலாம்...


தமிழ்நாடு தனது 16 வது சட்டப்பேரவைக்கான தேர்தலை வரும் ஏப்ரல்13ம் தேதி சந்திக்க உள்ளது.அடுத்த ஐந்தாண்டுகள் தமிழ்நாட்டை ஆளப்போகும் ஆட்சியாளரை தேர்வுசெய்ய வாக்களிக்கும் தகுதி பெற்ற சுமார் நான்கு கோடியே ஐம்பத்தொன்பது லட்ச தமிழக வாக்காளர்கள் தயாராக உள்ளனர்.


பொதுவாக தமிழக தேர்தல் களம் எப்போதுமே ஏதாவது ஒரு ஆதரவு அலை அல்லது எதிர்ப்பு அலைஅல்லது அனுதாப அலை இவற்றுடந்தான் நடந்தேறும்.ஆனால் இந்த 2011 ஆண்டின் சட்டப்பேரவை தேர்தல் இதுபோன்று எந்த அலையும் இல்லாமல் நடந்தேரப்போவதுதான் அதிசயம்.


இந்த தேர்தல்கால பரப்புரைகளில் ஆளும் கட்சியான திமுகவிற்கு எதிராக ஸ்பெக்ட்ரம் 2 ஜி அலைகற்றை ஒதுக்கீட்டு இமாலய ஊழல் எதிர்க்கட்சி அதிமுக கூட்டணியினரால் மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது.

திமுக கடந்தகால அதிமுக ஆட்சிகால அவலங்களை மீண்டும் மக்களுக்கு நினைவூட்டியது. இதுவெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் இந்த சட்டப்பேரவை தேர்தலில் கதாநாயகனாக வலம்வந்தது இரு பிரதான கட்சிகளின் தேர்தல் அறிக்கைதான்.


திமுக தங்களின் கடந்த ஐந்தாண்டுகால இலவச திட்டங்களை சாதனைகளாக மக்களிடம் சொன்னது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய இலவச திட்டங்களோடு புதிதாக சில இலவசங்களும் வழங்குவதாக உறுதியளித்துள்ளது. திமுக கொடுத்துள்ள வாக்குறுதிகளை அப்படியே அச்சுபிசகாமல் இரட்டிப்பாக அதிமுக தேர்தல் அறிக்கை பிரகடனபடுத்தியது.


ஆக ஊழல்கள் மக்களுக்கு செய்யப்பட்டுள்ள துரோகங்கள் ஆகியவற்றை இரு கூட்டணிகளுமே இலவசங்கள் எனும் அறிவிப்பின் மூலமாக தமிழர்களின் மறதி நோயை சாதகமாக பயன்படுத்தி ஆட்சியை பிடித்துவிடலாம் என்கிற தெம்புடனேயே தேர்தல் களத்தில் நிற்கிறார்கள்.


மக்கள் ஊழலுக்கு எதிராக வாக்களிக்கப் போகிறார்களா...? இலவசங்களுக்கு ஆதரவாக வாக்களிக்கப் போகிறார்களா...? சுமார் நாலரை கோடி தமிழக மக்கள் மீண்டும் திமுகவே ஆட்சியில் தொடர வாய்ப்பளிக்கப் போகிறார்களா...? அல்லது செல்வி ஜெயலலிதா அவர்களை மீண்டுமொருமுறை ஆட்சியில் அமரவைக்கப் போகிறார்களா...? இதுதான் இன்றைக்கு தமிழக வீதிகளில் விவாதிக்கப்படும் பிரதான கேள்வி... இதற்க்கான பதிலை வரும் மே13 சொல்லும்.


வாக்களிபிற்கு இன்னும் சில மணிநேரங்களே உள்ள இந்த தருணத்தில் எமது இந்த கட்டுரை வெளிவருவதன் நோக்கம் கட்டுரையின் முடிவில் நீங்களே உணர்வீர்கள்...


கடந்த 1991 முதல் இன்றைய 2011 வரை தமிழகம் இருபது ஆண்டுகளில் நான்கு சட்டப்பேரவை தேர்தல்களை சந்தித்துள்ளது. அதில் இரண்டு முறை திமுகவும் இரண்டுமுறை அதிமுகவும் ஆட்சியில் இருந்துள்ளனர். சம அளவில் தமிழகத்தை ஆண்டுள்ள இந்த இரண்டு பிரதான கட்சிகளின் கடந்த கால ஆட்சியை சற்று கவனிக்க வேண்டும்.


1991ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அமரர் ராஜீவ்காந்தி அவர்களின்

மரணம் அனுதாப அலையாய் தமிழகத்தை சூழ்ந்தது. அந்த அனுதாப அலையில் திமுக இருந்த இடம் தெரியாமல் போனது... அதிமுக அமரர் எம்ஜிஆர் அவர்களின் மறைவுக்குப் பிறகு செல்வி ஜெயலலிதா அவர்களின் தலைமையில் மீண்டும் ஆட்சியில் அமர்ந்தது. மக்கள் ஜெ அவர்கள் எம்ஜிஆர் அவர்களின் ஆட்சிக்காலத்தை முறையை அமலாகுவார் என எதிர்பார்த்தனர்.


ஆனால் அவரோ தமிழக மக்களின் நலனைவிட அவரது தோழி குடும்பத்தினரின் நலனில்தான் அதிகமான அக்கறை செலுத்தினார். முதல்வராக பதவியில் இருப்பது ஜெயலலிதாவா அல்லது அவர் உயிர் தோழி சசிகலாவா... என மக்கள் குழப்பமடைந்தனர். இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்றுஜெ அவர்கள் சசிகலா அவர்களின் உறவுக்கார சுதாகரனை சுவிகாரப் புத்திரனாக தத்தெடுத்தார்அதோடுமட்டும் நில்லாமல் உடணடியாக அமரர் சிவாஜிகணேசன் அவர்களின் குடும்பத்தில் தனது சுவிகாரப்புத்திரனுக்கு மணம்முடித்தார். அதுவும் சாதாரணமாக அல்ல இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் டயானா திருமணதிற்கு சற்றும் குறைவில்லாமல் ஆடம்பரமாக நடத்தினார்.


திருமண ஊர்வலத்தில் தனது தோழியுடன் வீதி உலா வந்த அந்த அற்புதமான காட்சியை பத்திரிகைகள் நகைகடையே வீதி உலாவந்ததாக புளகாங்கிதப்பட்டு எழுதினார்கள்... ஒரு முதல் மந்திரி எப்படியெல்லாம் ஆணவமாக அகங்காரமாக நடந்துகொள்ள முடியும் என்பதற்கு ஜெயலலிதா முன்னுதாரனமானார்.மக்களின் பசி விலைவாசி ஏற்றம் அத்தியாவசிய பொருள்களின் தட்டுப்பாடு இவற்றை எல்லாம் கவனிக்க நேரமில்லாமல் போகும் அளவிற்கு தனக்கும் தனது தோழி குடும்பத்திற்கும் இந்தியா முழுவதும் சொத்துகளை வாங்கிகுவிக்க தொடங்கினார். மக்களின் எதிர்ப்பு அலை வீச துவங்கியது மரணபடுக்கையில் இருந்த திமுக மீண்டும் வீறுகொண்டு எழுந்தது.


1996ல் அடுத்த சட்டப்பேரவை தேர்தலை தமிழக மக்கள் சந்தித்தார்கள் அந்த தேர்தலில் முழுக்க முழுக்க ஜெயலலிதா எதிர்ப்பு அலையால் மிகப்பெரிய வெற்றியை திமுக பெற்றது. அந்த தேர்தலில் முதல்வராக இருந்த ஜெயலலிதாவே தோல்வியடைந்தார். மீண்டும் முதல்வராக கலைஞர் பொறுப்பேற்றார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முன்னாள் முதல்வர் உட்பட பல அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் சில வழக்குகள் இன்னும்கூட நிலுவையில் உள்ளது.


பல நல்ல திட்டங்கள் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. மேலைநாடுகளுக்கு இணையான மேம்பாலங்கள்உழவர்சந்தை கட்டிடங்கள் பெரியார் சமத்துவபுர வீடுகள் என பட்டியல் நீண்டது. ஆட்சிக்காலத்தின் மத்திய பகுதியில் வழக்கம்போல மக்களை விலைவாசி உயர்வும் சாதிகலவரங்களும் ரௌடிகளின் கட்டபஞ்சாயத்து கொடுமைகளும் வெகுவாக தாக்க ஆரம்பித்தது. அப்போதுதான் மக்கள் உணர ஆரம்பித்தார்கள் திமுகவின்

திட்டங்கள் அனைத்துமே சிமெண்டை அடிபடையாகவைதே உள்ளதே என்ன காரணம் என மக்கள் ஆராய துவங்கினார்கள்...


அப்போதுதான் அதில் நடந்துள்ள ஊழல்கள் வெளிவந்தது. ஆம் மீண்டுமொரு ஆட்சி மாற்றத்தை நோக்கி மக்கள் நகர ஆரம்பித்தார்கள். அப்போதைய திமுகவின் ஆட்சிகாலம் தமிழகத்தின் "பொற்க்காலம்" என திமுகவால் பறைசாற்றப்பட்டது. ஆனால் அதனை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை அதனை திமுக 2001 தேர்தலில் உணர்ந்தது.


மீண்டுமொரு ஆட்சி மாற்றத்தை தமிழகம் சந்தித்தது அதிமுக மீண்டும் ஆட்சியில் அமர்ந்தது அந்த தேர்தலில் போட்டியிடும் தகுதிகூட பெற முடியாத செல்வி ஜெயலலிதா அவர்கள் முதல்வராக பொறுப்பேற்றார். தன்னை சிறையில் அடைத்த கருணாநிதியை தானும் சிறையில் அடைத்தே தீர வேண்டும் என்கிற பழிவாங்கும் உணர்ச்சிக்கு உருவம் கொடுத்து ஒரு நள்ளிரவு நேரத்தில் கருணாநிதி அவர்களின் படுக்கையறைக்கே சென்று

காவல்துறையினரை கைது செய்யவைத்தார். வழக்கம்போல திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அரசுத்தரப்பில் பல ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.


ஆட்சிகாலத்தில் ஊழலையும் உடன்பிறவா சகோதரியின் நலனையுமே முன்னெடுத்த ஜெ இம்முறை மக்களை மனவேதனைகுள்ளாக்கும் பல அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டு மனித உரிமை மீறலை நடத்திகாட்டினார். மதமாற்ற தடை சட்டம் சிறுபான்மையின மக்களை அச்சுறுத்தியது. எஸ்மா... டெஸ்மா... போன்ற சட்டங்கள் அரசு ஊழியர்களை பழிவாங்கியது... மக்களின் சராசரியான வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.

தமிழக மக்கள் சீ...சீ.. இந்த பழம் புளிக்கும் என்கிற மனநிலைக்கு மறுபடியும் வந்தார்கள்... மீண்டுமொரு ஆட்சிமாற்றம் 2006ல் நடைபெற்ற தேர்தலில் திமுக மக்களால் மீண்டும் ஆட்சி பொறுப்பை பெற்றது.

இதற்க்கு முன் எப்போதும் இல்லாத அளவில் மக்களுக்கு திமுக கொடுத்த இலவச வாக்குறுதிகளை நிறைவேற்றியது..இனி திமுகவின் ஆட்சியை ஜெ அல்ல வேறு யாராலும் அசைக்க முடியாது என திமுகவினர் மட்டுமல்ல மக்களே பல இடங்களில் பேசினார்கள்... அட ஊழல் இல்லாமல் ஒரு ஆட்சியா...? என இந்தியாவே வியந்து பார்த்த வேளையில்தான்

ஸ்பெக்ட்ரம் 2 ஜி என மக்களுக்கு புரியாத மொழியில் எழுதி பார்க்க முடியாத தொகையில் ஊழல் வெளிச்சத்திற்கு வந்தது. அதோடு அடுத்த தேர்தலும் வந்துவிட்டது. இந்த முறை மக்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை இதுவரை யாராலும் துல்லியமாக கணிக்க முடியவில்லை.


மக்களே... அடுத்த ஐந்தாண்டுகள் யாரை ஆட்சியில் அமரவைக்க போகிறீர்கள்...? மீண்டுமொரு ஆட்சி மாற்றமா...?அல்லது இலவசங்களை வாரிவழங்கிய திமுக ஆட்சியையே மீண்டும் தொடர செய்ய போகிறீர்களா...?

ஒன்றை நினைவில்கொள்ளுங்கள் இவர்களில் (திமுக,அதிமுக)ஊழலில் சளைத்தவர்கள் இல்லை...

அதிமுக ஆட்சிக்கு வந்தாலும் சரி... திமுகவே தொடர்ந்தாலும் சரி... உங்கள் நிலை மாறப்போவதில்லை...தமிழகத்தில் பாலாரும் தேனாறும் ஓடப்போவதில்லை... ஏன் குறைந்தபட்சம் நியாயமான காவிரி ஆறுகூட ஓடப்போவதில்லை... வாக்களிப்பது நமது ஜனநாயக உரிமை கடமை... அதறக்கா வாக்களியுங்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள் ஆனால் எதையும் எதிர்பார்த்து ஏமாந்துவிடாதீர்கள்...


ஏனெனில் இப்போதுள்ள எந்த ஆட்சியாளர்களாலும் நீங்கள் விரும்பும் ஆட்சியை தர முடியாது. நமது நாட்டின் அரசியல் கட்டமைப்பு அப்படியாக பழக்கப்பட்டுவிட்டது.புனிதமயமான ஆட்சிமுறை இன்று பணமயமாகி விட்டது ஒரு கட்சியில் ஒரு வேட்பாளர் சீட் பெறவே பல லட்சங்களை அந்த கட்சி தலைமைக்கு கப்பம் கட்ட வேண்டியுள்ளது... அவர் வெற்றி பெற்று பதவிக்கு வந்தால் கட்டிய கப்பத்தை மீட்க்கதான் போராடுவார் மாறாக உங்களை உங்கள் நிலையை மாற்ற போராடுவார் என நீங்கள் நம்புவது தவறு என்பதை உணருங்கள்...


இந்த இரண்டு பிரதான கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள இலவசங்களை மட்டுமே கவனத்தில் கொண்ட நீங்கள் உங்களின் சமூக,பொருளாதார, கல்வி மேம்பாடுகள் குறித்து ஏதேனும் சொல்லப்பட்டுள்ளதா என்பதை

. அரசுடமையாக்கப் படவேண்டிய கல்விக்கூடங்களும் மருத்துவமனைகளும் இங்கு தனியார்மயமாகி உள்ளது.அறவே ஒழிக்கப்படவேண்டிய சாரயகடைகள் "டாஸ்மாக்" என்கிற பெயரில் தமிழகம் முழுவதும் வீதிக்கு வீதி அரசே நடத்துகிறது... ஒரு ஆட்சியில் கல்விக்கூடங்கள் பொது உடமையாக்கப்பட்டு வளர்ந்திருந்தால்கல்வியார்கள் உருவாகி இருப்பார்கள்... தொழிற்சாலைகள் உருவாகி இருந்தால் வேளை இல்லா நிலை மாறி மக்கள் வறுமை கோட்டை கடந்து இருப்பார்கள்... இவைகள் எல்லாம் நடக்காத நமது நாட்டில் மதுகடைகள் பெருகி உள்ளது... ஒரு சமூக சீரழிவு நடந்து வருகிறது... குடிக்கு அடிமையாகி வாழ்கையை தமிழர்கள் தொலைத்து ஆய்வறிக்கையில் 13 வயது பள்ளி மாணவன்கூட மதுவுக்கு அடிமையாகிறான் என சொல்லப்பட்டுள்ளது.

இது சமூக கலாசாரத்தின் பின்னடைவு இல்லையா...


மதுகடைகளை ஒழிப்போம் என இவர்கள் சொல்லவில்லை... கல்வியை பொது உடமையாக்குவோம் என இவர்கள் சொல்லவில்லை... தொழிற்சாலைகளை உருவாக்குவோம் என இவர்கள் சொல்லவில்லை... சமூக பொருளாதார முன்னேற்றத்தை முன்னெடுப்போம் என இவர்கள் சொல்லவில்லை... கிரைண்டரையும் மிக்சியையும் இலவசமாக தருவோம்

என்றவர்கள் அதனை மக்களே வாங்ககூடிய பொருளாதார சூழலை ஏன் உருவாக்க முன்வரவில்லை...


மக்களே... இப்போதாவது உணருங்கள் எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் உங்கள் நிலை உயர போவதில்லை... இருந்தாலும் வாக்களியுங்கள் அது நமது ஜனநாயக உரிமை... கடமை... ஆனால் வாக்களிக்கும்போது இதுவே எங்களுக்கு எந்த நன்மையையும் கொடுக்காத அரசியல்வாதிகளுக்கு நாங்கள் அளிக்கும் கடைசி வாக்கு... என்கிற உறுதியான எண்ணத்துடன் வாக்களியுங்கள்... ஆம் ஆட்சி மாற்றங்களால் எந்த காட்சியும் மாறப் போவதில்லை...

இதற்கெல்லாம் ஒரே தீர்வு அரசியல் மாற்றம்தான்... அடுத்த ஐந்தாண்டுகள் அரசியல் மாற்றத்திற்கான பயிற்சிகாலம்...அந்த பயிற்சியில் தேர்ச்சி பெற்ற மக்களாக உருவாக்குங்கள்...


2016ல் தமிழகம் ஒரு சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும் அதே வேளையில் தமிழகம் சமூக ஒருங்கிணைப்பின் மூலமாக அரசியல் மாற்றத்தையும் சந்திதேதீரும்...