Subscribe:

திங்கள், 2 ஏப்ரல், 2012

சிறைவாசிகள் விடுதலைக்கான தொடர் கூட்டங்களும்... நோக்கங்களும்...


அன்பிற்கினிய உறவுகளே... அனைவர் மீதும் ஏக இறையவனின் சாந்தியும் சமாதானமும் பொழியபடட்டுமாக....

கோவை உள்ளிட்ட தமிழக சிறைகளில் பல்லாண்டுகாலமாக நீதிக்குப்புறம்பாக சிறைவைக்கப்பட்டுள்ள
முஸ்லிம்கள் உட்பட மற்ற சமூக அப்பாவி சிறைவாசிகளையும் அரசியல் சிறைவாசிகளையும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் பேரறிஞர் அண்ணா
பிறந்தநாளில் விடுதலை செய்திட கோரிக்கைவிடுத்து அரசின் கவனத்தை சிறைவாசிகளின் பக்கம் ஈர்க்கும் முகமாக
தொடர்பொதுக்கூட்டங்கள் கருத்தரங்கங்கள் பேரணிகள் என ஜனநாயக வழியில் போராட முனைந்துள்ளோம்...

முஸ்லிம் சிறைவாசிகள் என்றாளே அவர்கள் தீவிரவாதிகள் குண்டுவைத்தவர்கள் கொலைகாரர்கள்
இப்படியாக பல்வேறு அடைமொழிகளை வைத்து மற்ற சமூக மக்களின் அனுதாபத்தையோ கருணையையோ
சிறைவாசிகள் பெறமுடியாத வண்ணமாக ஆதிக்க வெறிபிடித்த ஊடகங்களும் மத வெறி பிடித்த அதிகாரிகளும்
பொய் செய்திகளை வெகுஜன மக்களிடம் விதைத்துள்ளார்கள்... அந்த பொய் பிரச்சாரத்தை முறியடித்து
அதவரே இளைக்காத அப்பாவிகள் பல்லாண்டுகாலமாக எவ்வாறு சிறைகளில் வாடிவருகிறார்கள்...
அவர்களை இருந்தும் இழந்துள்ள அவர்களின் குடும்பத்தார் எவ்வளவு வேதனைகளை அனுபவித்து வருகிறார்கள்
என்பதை எல்லாம் மனித நேயம் கொண்ட மக்களுக்கு விளங்க செய்திட வேண்டியே இப்பிரச்சனையை நாம்
பொதுவான தமிழ் தளத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்...

அதன் துவக்கம்தான் கடந்த மார்ச் 30 தேதி திருப்பூரில் மிக எழுச்சியுடன் நடந்தேறியது...ஒரு குறுகிய வட்டத்தில்
பயணித்தே பழகபட்ட இஸ்லாமிய சமூகம் முதன் முறையாக இஸ்லாமிய இயக்க பிரதிநிதிகளுடன் இன்றைய
காலகட்டத்தில் பல்வேறு மக்கள் போராட்டங்களை முன்னின்று நடத்தி வரும் அய்யா கொளத்தூர் மணி தோழர் தியாகு
அய்யா பேராசிரியர் தீரன் போன்றவர்கள் எழுப்பிய விடுதலை முழக்கங்களை வியப்புடன் பார்த்தார்கள்...முஸ்லிம்கள்
அல்லாத மக்கள் திருப்பூர் முழக்கத்தின் அடிப்படையை ஆராய துவங்கினார்கள்... நமது நோக்கத்தின் உண்மைநிலையையும்
சிறைவாசிகளின் விடுதலையின் முக்கியத்துவததையும் இன்றைக்கு முஸ்லிம்களைவிட அதிகமாக மற்ற சமூக
தளங்கள் விவாதித்து வருகின்றன...

ஆம்
இதைதான் நாங்கள் எதிர்நோக்கினோம்... சிறைவாசிகளின் விடுதலை என்பது ஒரு சமுதாயம் சார்ந்த பிரச்சனையல்ல
இது மனிதநேயம் சார்ந்த விசயம் என்பதைத்தான் வெகுஜன மக்களுக்கு கொண்டு செல்ல முற்பட்டோம்...அதிலே அல்லாஹ்
மகத்தான வெற்றியை தந்துள்ளான்...

இன்றைக்கு சிறைவாசிகளின் விடுதலைக்கான போராட்டங்களை எங்கள் பகுதியில் நடத்துகிறோம் என பல்வேறு பகுதிகளில்
இருந்தும் முதல் நிகழ்வை வெற்றிகரமாக ஒருங்கிணைத்த சகோதரர் உமர்கயானுக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்தவண்ணமாக
இருக்கிறது... அடுத்த ஆகஸ்ட்டு மாதம் வரை நாம் திட்டமிட்டுள்ளபடி இப்போராட்டங்களை தமிழகத்தில் நிகழ்த்திட
எல்லாவகைகளிலும் மனிதநேய கதவுகள் திறக்கப்பட்டுள்ளது...

இறையவன் நாடினால் இம்மாத இறுதிக்குள் கோவையில் கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது... இம்முயற்ச்சிகளுக்கு
உந்துதல் சக்தியாக இருந்து அக்கறையுடன் முதல்நிகழ்வின் ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணித்துவந்த
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்கள் கோவை நிகழ்வில்
கலந்துகொண்டு விடுதலை முழக்கமிடுவார்...

இந்த தருணத்தில் சில கசப்பான நிகழ்வுகளையும் அனைவரின் பார்வைக்கு சமர்பிக்க வேண்டிய கட்டாயம்
ஏற்பட்டுள்ளது... காரணம் எமது நோக்கம் சுய எதிர்பார்ப்பில்லாத தூயநோக்கம் சிறைவாசிகளின் விடியலை
காணவேண்டும் என்பதை தவிர எமக்கு வேறு எண்ணங்கள் இல்லை... பொருளாதார தேவைகள் இல்லாத மனிதர்களே
இருக்கமுடியாது...அதற்க்கான வழியாக சிறைவாசிகளின் விடுதலையை நாங்கள் பயன்படுத்த முற்பட்டால்
அதனைவிட அருவருக்கத்தக்க நிலை வேறெதுவும் இருக்கமுடியாது... இன்றைக்கு முதல் நிகழ்வை நிகழ்த்திய
சகோ.உமர்கயான் அந்நிகழ்வை நடத்திட எவ்வளவு சிரமங்களை எதிர்கொண்டார் என்பது எங்களுக்குத்தான் தெரியும்...
இருப்பினும் அந்த சிரமங்கள் அனைத்துமே சிறைவாசிகளின் குடும்பத்தினரின் நம்பிக்கைக்கு முன்னாள்
அவர்களின் துஆக்களுக்கு முன்னாள் எங்களுக்கு பெரிதாக தெரியவில்லை... ஆகையினால்தான் அடுத்த நிகழ்வை பற்றி
அதற்க்கான பணிகளை துவங்குவது பற்றி சகோ.உமர்கயான் விவாதிக்க துவங்கிவிட்டார்...

இம்முயற்சிகளை தடுக்க சிலர் திட்டமிட்டுள்ளார்கள்... சூழ்சிகளை முயற்சிக்கிறார்கள்... சூழ்ச்சிகாரனுகெல்லாம்
மிகப்பெரிய சூழ்ச்சிகாரன் அல்லாஹ் நாங்கள் அவனிடமே சூழ்சிகளை முறியடிக்கும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டோம்...

இம்முயற்சிகள் எம்மை முன்னிலை படுத்திகொள்ளவோ அல்லது சகோ.உமர்கயான் அவர்களின் அமைப்பை
முன்ன்லை படுத்திகொள்ளவோ அல்ல... எம்மை போன்றோர் சமுதாய அமைப்புகளின் ஒருங்கிணைப்பை
விரும்புகிறவர்கள்... சிதறிக்கிடக்கும் நமது வலிமையை ஒருமுகபடுத்தி சமூகம் இழந்துள்ள அனைத்தையும்
மீட்டெடுக்க வேண்டும் என்கிற நிலையில் தீவிரமாக பயணிப்பவர்கள்...இப்போது நீங்கள் கேட்கலாம் அப்படியானால்
எதற்கு "இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்" மக்கள் பிரச்னையை பொது தளத்திற்கு இட்டுசெல்ல
ஒரு அறிமுகம் வேண்டும் அதற்காகத்தான் இந்த இயக்கம்...

அநீதியாக சிறைபட்ட பலரை விடுவிக்க சட்டரீதியாக சமூகரீதியாக களம்கண்டவர் சமூகப்புரட்சியாளர் ஷஹீத் பழனிபாபா
தனக்கு எதிராக அடக்குமுறைகள் கட்டவில்க்கபட்டபோதும் அவற்றை துணிவுடன் எதிர்கொண்டு தனிமனிதனாக
வென்றுகாட்டியவர் தலைவர் பாபா அவர் நிகழ்திகாட்டிய செயல்கள்தான் எங்களின் செயல்திட்டம்... சிறைபட்ட
அப்பாவிகளை மீட்க்க தலைவர் பாபா எவ்வாறெல்லாம் முயற்சிப்பார் என்பதை அருகில் இருந்து கண்டவர்கள் நாங்கள்...

இறுதியாக உரக்க சொல்கிறோம்... உணர்வுடன் சொல்கிறோம்... உறுதியாக சொல்கிறோம்... இம்முயற்சிகளில்
எங்கள் நோக்கம்...ஒரே வரிதான் "மறுமை வாழ்க்கையின் வெற்றி"

எத்துனை தடைகள் வந்தாலும் அவற்றை தகர்த்தெறியும் ஆற்றலை அல்லாஹ் எமக்குதருவான்... அந்த
நம்பிக்கையின் அடிப்படையில் இத்தகைய தடைகள் எல்லாம் எமது கால் செருப்புகளுக்கு சமம்...