Subscribe:

செவ்வாய், 15 நவம்பர், 2011

ஆட்சி மாற்றங்களும்... அரசியல் மாற்றமும்...

தமிழகம் பல்வேறு குணநலன்களை கொண்ட பல முதல்வர்களை ஆட்சிகட்டிலில் அமர்த்தி அழகு பார்த்துள்ளது...


அமரர் எம்.ஜி.ஆர் அவர்களுக்குப் பிறகு தமிழகத்தை ஆட்சி செய்த எந்த முதல்வரும் தொடர்ந்து இரண்டுமுறை வெற்றி பெற இயலவில்லை... அது ஏன்...? ஒவ்வொரு ஐந்தாண்டுகளும் கடந்த 1991 தமிழகம் ஆட்சி மாற்றத்தை


சந்த்திதே வந்துள்ளது... இதோ தற்போது இவ்வாண்டின் மத்தியில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தல் மூலமாக கடந்த ஐந்தாண்டுகள் ஆட்சியில் இருந்த கலைஞர் கருணாநிதி அவர்களின் தலைமையிலான திமுக வீழ்த்தப்பட்டுமீண்டும் செல்வி ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அதிமுக ஆட்சியில் அமர்ந்துள்ளது... திமுக அதிமுக என்று மாறி மாறி ஆட்சியில் அமரும் இவ்விரண்டு பிரதான திராவிட கட்சிகளுமே மக்களின் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் பெற தவறிவிட்டார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை...



மக்கள் மாற்றத்தை மட்டுமல்ல நல்லாட்சியையும் விரும்புகிறார்கள் என்பதை இவ்விரண்டு திராவிட கட்சிகளுமே உணரவில்லை அல்லது உணர மறுக்கிறார்கள்... அல்லது உணராததுபோல நடிக்கிறார்கள்...



அமரர் எம்ஜீஆர் மறைவிற்குப் பிறகு அவரது மனைவியார் மறைந்த ஜானகி அம்மையார் முதல்வரானார்... அவருக்கு பக்கபலமாக நாவலர் நெடுஞ்செழியன் ஆர்.எம்.வீரப்பன், கா.காளிமுத்து போன்றோர் இருந்தனர் அப்போதே அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக மேலவை உறுப்பினராக இருந்துவந்த செல்வி ஜெயலலிதா அதிமுகவை கைப்பற்ற பல முனைப்புகளைகாட்டினார் அப்போது அதிமுகவின் இளைய தலைவர்களாக தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவுடன் வலையவந்த எஸ்.திருநாவுக்கரசு மற்றும் சாத்தூர் இராமச்சந்திரன் போன்றோர் செல்வி ஜெயலலிதாவை ஆதரித்தனர்...



அதிமுக இரு வேறு பிரிவுகளாக செயல்பட ஆரம்பித்தது. தேர்தல் ஆணையம் அதிமுகவின் வெற்றி சின்னமான "இரட்டை இலை"சின்னத்தை முடக்கிவைத்தது... தொடர்ந்து நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக ஜா அணி ஜே அணி என இருபிரிவாக போட்டியிட்டது அத்தேர்தலில் ஜானகி அம்மையார் தலைமையிலான அதிமுக ஒரு இடத்தில்கூட வெற்றிபெற இயலாமல் படுதோல்வியடைந்தது... செல்வி ஜெயலலிதா தலைமையிலான அதிமுக சுமார் இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிகண்டு செல்வி ஜெயலலிதாவை மறுக்கமுடியாத அரசியல் தலைமையாக அடையாளப்படுத்தியது... கருணாநிதி அவர்களின் தலைமையிலான திமுக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆட்சியில் அமர்ந்தது கலைஞர் கருணாநிதி முதல்வரானார்...



அதன்பிறகு நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற தேர்தலின்போது பிரச்சாரதிற்க்காக தமிழகம் வந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு.இராஜீவ் காந்தி அவர்கள் படுகொலை செய்யபட்டார் அதன் தொடர்பில் சட்ட ஒழுங்கை காரணமாக கொண்டு திமுக ஆட்சி மத்தியரசால் கலைக்கப்பட்டது... பிறகு நாடாளுமன்ற தேர்தலோடு தமிழகம் சட்டமன்ற தேர்தலையும் சந்திக்ககூடிய சூழ்நிலை ஏற்பட்டது... தமிழகம் முழுமையாக வீசப்பட்ட இராஜீவ் காந்தி அவர்களுக்கான அனுதாப அலையால் செல்வி ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான ஒருங்கிணைந்த அதிமுக காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றியடைந்தது... திமுக வரலாறுகாணாத தோல்வியை தழுவியது...



மக்களின் மாற்றத்தைவிரும்பிய மனநிலையும் அமரர் இராஜீவ் காந்தி அவர்களின் மரணத்தால் ஏற்பட்ட அனுதாப அலையும் பெரும்பான்மை பலத்துடன் செல்வி ஜெயலலிதாவை முதல்வராக்கியது... ஊழல்... அராஜகம்... பழிவாங்கல்... என்பதற்கான முழு உதாரனங்களும் அம்மையார் ஆட்சியில்தான் மக்களுக்கு முழுமையாக உணர்த்தப்பட்டது... மக்களுக்கான எந்த திட்டங்களும் செயல்படுத்தபடாத நிலையில் அம்மையார் அவர்களின் தோழியின் குடும்பத்தார்களின் பிடியில் தமிழகம் முழுமையாக கொண்டு செல்லப்பட்டது... தோழியின் குடும்பதில் இருந்தே திடீரென ஒரு வளர்ப்புமகன் உதித்தார் உடணடியாக வளர்ப்புமகனுக்கு மறைந்த செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் குடும்பத்தில் இருந்து பெண் பார்த்து இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் டயானா ஆகியோரின் திருமணதிற்கு இணையாக திருமணமும் நடத்திவைக்கபட்டது. தமிழகத்தில் இருக்கும் பெரும்பான்மையான நகைகடைகளே தமிழகத்தின் வீதிகளுக்கு வீதி உலா வந்ததுபோல இருந்தது அம்மையார் அவர்களும் அவர்தம் தோழியாரும்


நடந்துவந்தது...



மக்களின் ஒருமித்த வெறுப்புணர்வும் அம்மையாரின் பக்கம் திரும்பியது அது மட்டுமில்லாது அதிமுகவை சார்ந்த அமைச்சர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை கடைபிடித்த அராஜகம் மக்களை ஆட்சி மாற்றத்திற்கான நிலைக்கு தள்ளியது. 1996 ல் தமிழகம் சட்டப்பேரவை தேர்தலை சந்தித்தது அதற்காகவே காத்திருந்தபோல மக்கள் அதிமுகவை படுதோல்வியடைய செய்து திமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினார்கள்... அத்தேர்தலில் அதிமுகவின் தலைவியாகிய அம்மையார் தான் போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலும் மக்களால் வீழ்த்தபட்டார்... அரியணை ஏறிய திமுக கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை கண்டறிந்து முன்னாள் முதல்வரான அம்மையார் ஜெயலலிதா உட்பட ஏறக்குறைய அவரது அமைச்சரவையில் அமைச்சர்களாக பாதையில் இருந்த அனைவருமே கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கபட்டனர்... அம்மையாரின் ஊழல் வழக்கில்


அவர் பயன்படுத்திய நூறு ஜோடி செருப்புகள்கூட சாட்ச்சிக்கு கொண்டுவரப்பட்டது...



பொறுப்பேற்ற திமுக அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிக்கைகள் மூலமாக மட்டுமே நடத்திகொண்டிருந்தது. அப்போதைய திமுக ஆட்சியில்தான் பல மேம்பாலங்கள் கட்டப்பட்டது சமத்துவபுர குடியமைப்புகள் கட்டப்பட்டது, உழவர் சந்தை கட்டிடங்கள் கட்டப்பட்டது...இதுதவிர மக்களுக்கான எத்தகைய அடிபடை வசதிகளும் முன்னெடுக்கப்படவில்லை. ஆக திமுக அரசும் மக்களின் வெறுப்பை சம்பாதிக்க வெகுநாட்கள் ஆகவில்லை... வழக்கம்போல திமுகவை சார்ந்தவர்களின் அடாவடித்தனமும் கட்டவில்க்கப்பட்டது. அத்தகைய சூழலை சாதகமாகி கொண்ட எதிர்கட்சிகள் மீண்டும் உயிர்பெற்றன... திமுக ஆட்சியில் நடந்துள்ள ஊழல்களை மக்கள் ஏய்ப்பு நிகழ்வுகளை மக்களுக்கு தெரியபடுத்தின... திமுக ஆட்சியில் போடப்பட்டு நடைமுறைபடுத்தபட்ட அனைத்து திட்டங்களுமே சிமென்ட்டை அடிபடையாக கொண்டு செயல்படுதபட்டவை என்பதை மக்கள் கவனிக்க துவங்கினார்கள்...அதில் நிகழ்ந்துள்ள ஊழலை மக்கள் உணர்ந்தார்கள் மீண்டுமொரு ஆட்சி மாற்றத்திற்கான மனநிலைக்கு மக்கள் இயல்பாகவே வந்தார்கள்...



2001 ல் சட்டப்பேரவை தேர்தல் மக்கள் மாற்றி வாக்களித்தார்கள் திமுக வீட்டுக்கு அனுப்பப்பட்டு மீண்டும் அதிமுக அரியணை ஏறியது... இயல்பாகவே பழிவாங்கல் நடவடிக்கைகளை பெரிதும் விரும்பும் ஜெயலலிதா அம்மையார் தன்னையும் தனது சகாக்களையும் சிறைவைத்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்து சிறையிலடைத்தார்... அப்போதைய


அதிமுக ஆட்சியிலும் மக்கள் நல பணிகள் எதுவுமே நிறைவேற்ற படவில்லை என்பதுதான் கவலைக்குறியது... இடையில் கடந்த ஆட்சியாளர்களால் அம்மையார் மீது போடப்பட்ட டான்சி வழக்கிற்காக சிலகாலம் முதல்வர் பதவியை துறந்தார் ஓ.பன்னீர் செல்வம் பொம்மை முதல்வரானார்.. ஆறுமாத காலத்திற்கு பிறகு மீண்டும் அம்மையாரே மீண்டும் முதல்வரானார்... ஆட்சிகள் மாறினாலும் மக்களின் நிலையில் எவ்விதமான மாதரமும் நிகழ்ந்துவிடவில்லை... அதே ஊழல்... அதே அராஜகம்... ஆடு,மாட்டு,கோழி பலியிட தடை சிறுபான்மை மக்களை அச்சுறுத்துவதர்க்காக மதமாற்ற தடை சட்டம், அரசு ஊழியர்களின் உரிமைகளை பறித்த எஸ்மா டெஸ்மா போன்ற அடக்குமுறைகள் தமிழுணர்வாலர்களின் மீது போடப்பட்ட பொடா சட்டம் இதுபோன்ற மக்கள் விரோதபோக்கை மட்டுமே அதிமுக ஆட்சி நிகழ்த்தியது... மீண்டுமொரு ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்பினார்கள்...



2006 ல் சட்டப்பேரவை தேர்தல் அதிமுக ஆட்சியை அகற்றியது சிறுபான்மையரசாக காங்கிரஸ்,பாமக,விசிக போன்ற கட்சிகளின் ஆதரவுடன் கலைஞர் கருணாநிதி மீண்டும் முதல்வராக்கப்பட்டார்... வரலாறு காணாத இலவசங்கள் வாரி இறைக்கப்பட்டது மக்களின் கவனத்தை இலவசங்களின்பால் திருப்பிவிட்டு ஊழல் வரலாற்றை திமுக விட்ட இடத்தில் இருந்து மீண்டும் தொடர்ந்தது... காவல்நிலையங்கள் திமுகவினரின் கட்டபஞ்சாயத்து கூடங்கலானது... மக்களின் சராசரியான இயல்பு வாழ்க்கை திமுக ரௌடிகளால் பெரிதும் பாதிக்கப்பட்டது... சாயாக்குடிக்க சல்லிகாசு இல்லாமல் இருந்த கிளை நிர்வாகிகளமுதல் கவுன்சிலர்கள் வரை ஸ்கார்பியோக்களில் வலம்வந்தார்கள்... ஊழல்களுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல உலக நாடுகளே ஆச்சரியப்படும் வகையில் திமுகவின் மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சராக பதவியில் இருந்த ஆ.ராசா 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைகற்றை ஒதுக்கீடு ஊழலில் கைது செய்யப்பட்டு இன்றுவரை ஜாமீனுக்காக போராடி வருகிறார்... இதுவரை இலைமறைக்காயாக இருந்து வந்த திமுகவின் குடும்ப அரசியல் இந்த ஆட்சிகாலத்தில் வெளிபடையானது... அனைத்துதுறைகளிலும் திமுகவின் கலைஞர் கருணாநிதியின் குடும்பம் கால்பதித்தது... பல தொழில் நிறுவனங்கள் இதனால் மிகப்பெரிய சரிவை சந்தித்தது... அத்துடன் மட்டுமில்லாது ஈழத்தில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது மத்திய அரசில் அங்கம் வகித்தும் தமிழர்களின் உயிரை பற்றி கவலைகொள்ளாத திமுக ஆட்சியை மக்கள் ரசிக்கவில்லை... கிராமப்புற காப்பிகடைகளில் இருந்து நகர்புற கணிணித் துறைவரை கருணாநிதியின் குடும்ப ஆதிக்கம் பெரியளவில் தாக்கத்தை விதைத்தது... அதன் விளைவு...



இதோ தமிழகத்தில் மீண்டுமொரு ஆட்சி மாற்றம்...!!!? கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக படுதோல்வியடைந்து முடிவுரை எழுதபட்டுவிட்டதாக தேர்தலுக்கு ஆறுமாத காலம் முன்புவரை பேசப்பட்ட அதிமுக எவரும் எதிர்பார்க்காத வகையில் அசுரபலத்துடன் வெற்றிகண்டது... திமுக மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டது... மக்களின் தேவைகளை உடணடியாக நிறைவேற்றுவேன்...இனி மக்கள் நிம்மதியாக வாழலாம் என அரியணை அமர்ந்ததும் செய்தி வெளியிட்ட அம்மையார் வழக்கமாக தனது பழிவாங்கும் நடவடிக்கைகளை துவங்கிவிட்டார்.. தவறு இளைத்தவர்கள் தண்டனை பெறவேண்டும் தண்டிக்கப்படவேண்டும்... இதில் மாற்றுக்கருத்தில்லை... அதே வேளையில் மக்களுக்கான திட்டங்களும் முடக்கபடுவது அதிமுக ஆட்சியின் ஆரம்பமே மக்களை வருத்தத்தில் தள்ளியுள்ளது என்பதை மறுக்க இயலாது... சமசீர் கல்வி திட்டத்தை தடுத்து சுமார் இரண்டுமாதகாலம் மாணவர்களின் கல்வி பாழடைந்தது.... சிறப்பான முறையில் ஏழைகளுக்கு நம்பிக்கையூட்டிய கலைஞர் காப்பீட்டு திட்டம் நிறுத்தபட்டவிட்டது... இப்படியாக சொல்லிகொண்டே போகும் வகையில்தான் மக்கள் மாற்றத்தை விரும்பி ஏற்றுக்கொண்ட அதிமுகவின் ஆட்சியையும் நடந்துவருகிறது...



ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு பிறகும் மக்கள் தங்களுக்கான நல்லாட்சியை தருவார்கள் என்கிற நம்பிக்கையில் திமுக மற்றும் அதிமுகவை அவர்களின் கடந்தகால ஊழல்களையும் அராஜகங்களையும் மறந்து மன்னித்து ஆட்சியில் அமரவைக்கிறார்கள்... மக்களின் எதிர்பார்ப்பு நாட்டில் பாலாரும் தேனாறும் ஓடவேண்டும் என்பதல்ல குறைந்தபட்சம் காவிரி ஆறாவது ஓடவேண்டும் என்பதுதான்..



அப்பாவி தமிழ் மக்களின் அறியாமைகளை பயன்படுத்திக்கொண்டு அரசியல் கட்சிகள் ஆட்சி அதிகாரத்தை தங்களின் வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள்... ஒவ்வொரு தேர்தலின்போதும் தங்களை ஒழுக்கசீலர்களாக காட்டிக்கொள்ளும் இவர்கள் ஆட்சியில் அமர்ந்தவுடன் ஊழல்களுக்கான அடுத்தகட்ட நகர்வுகளையும் பழிவாங்கல் நடவடிக்கைகளையும் மட்டுமே முன்னெடுக்கிறார்கள் தவிர எவருக்கும் தங்களுக்கு மீண்டுமொரு வாய்ப்பை தந்துள்ள மக்களுக்கு உழைக்கவேண்டும் என்கிற எண்ணமில்லை...






அதிமுக ஆட்சிகாலத்தில் ஊழல் புரிந்தவர்களாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் திமுக ஆட்சிக்கு வந்ததும் கட்சிதாவி மீண்டும் பதவி சுகம் அனுபவிக்கிறார்கள்... எப்படியாகினும் மக்கள் பழையவற்றை மறந்து மீண்டும் மீண்டும் நம்மைதான் தேர்வு செய்வார்கள் என்கிற மமதை இவர்களிடம் புரையோடி உள்ளது... ஆக ஆட்சி மாற்றங்களால் மக்களுக்கு எந்தவிதமான நன்மைகளும் ஏற்படபோவதில்லை என்கிற உண்மை நிலையை கடந்த இருபதாண்டுகால திமுக அதிமுக இரு கட்சிகளின் ஆட்சிகளின் மூலமாக


மக்கள் இனியாவது உணர வேண்டும்... ஆம் ஆட்சி மாற்றங்கள் ஒருபோதும் மக்களின் நிலையை மாறா செய்யாது மாறாக மக்கள் முன்னெடுக்க வேண்டியது "அரசியல் மாற்றம்" ஆம் அரசியலில் மாற்றம் ஏற்பட்டால்தான் அனைத்திலும் மாற்றம் ஏற்படும்...



இதுவரை மாறி மாறி மக்களை சுரண்டி வரும் அதிமுக திமுக இரண்டு கட்சிகளுமே தமிழக மக்களால் ஒதுக்கப்பட்ட வேண்டும்... மாற்றாக புதியவர்களின் அரசியல் தலைமை தமிழகத்தில் ஏற்பட்டாக வேண்டும்... நமது தமிழகத்திலேயே எததனையோ நல்ல சிறப்பான அரசியல் தலைமைகள் உண்டு அத்தகைய தலைமைகள் ஆதிக்க சக்திகளாலும் அதிகாரவர்கத்தினாலும் சாதிகளாலும் பொருளாதாரத்தாலும் அடக்குமுறைகளாலும் ஒதுக்கிவைக்கபட்டுல்லார்கள்... அவர்களை அடையாளம் காணவேண்டியது மக்களின் கடமை... சாமானிய மக்கள் நினைத்தால் மட்டுமே இத்தகைய மாற்றங்கள் சாத்தியமாகும்... நீங்கள் கேட்கலாம் சாமானியர்களால் எப்படி அதிகாரத்தில் உள்ளவர்களை மாற்றமுடியும் என்று... ஏன் முடியாது திருவாரூரில் இருந்து சென்னைக்கு பயணிக்க பயணசீட்டே வாங்க முடியாத நிலையில் இருந்த கலைஞர் கருணாநிதியால் எப்படி இன்று ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராகவும்


உலக கோடீஸ்வரர்களில் ஒருவராகவும் வரமுடிந்தது.... இதே சாமானிய மக்கள் அளித்த வாக்குகளாள்தானே... ஒரு சாதாரண நடிகையாக தனது வாழ்க்கையை துவங்கிய இன்றைய முதல்வர் செல்வி ஜெயலலிதா அம்மையார் அவர்களால் எப்படி இந்த நிலையை அடைய முடிந்தது இதே சாமானிய மக்கள் வாரிவழங்கிய வாக்குகளாள்தானே...



ஆக சாமானியர்கலாள்தான் கடந்தகால மாற்றங்கள் நடந்துள்ளது அந்த மாற்றம் மீண்டும் நடக்க வேண்டும் தமிழக மக்கள் மாற்று அரசியலை கட்டமைக்க நல்லவர்களை நாடாள செய்ய முன்வரவேண்டும்... அரசியல் மாற்றம் ஒன்றே அத்துணை பிரச்சனைகளுக்கும் நிவாரணம் என்பத தமிழ் சமூகம் உணரவேண்டும்...








புதன், 9 நவம்பர், 2011

நகர்மன்றம் முதல்... நாடாளுமன்றம் வரை...







தமிழகத்தின் உள்ளாட்சித்தேர்தல்கள் முடிவடைந்து புதிய உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள்
பதவி ஏற்றுவரும் தருவாயில் என் சமுதாயம் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் என்ன சாதித்துள்ளது...?
அதுதான் இந்த கட்டுரையின் கேள்வி..

கடந்த உள்ளாட்சி தேர்தலில் பெருவாரியான அரசியல் கட்சிகள் தனித்து போட்டியிட்டது
அதில் முஸ்லிம்களின் அரசியல் கட்சிகளும் அடக்கம்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு இராமநாதபுரம்,
ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் வெற்றிகண்ட மமக, திமுக கூட்டணியில் மூன்று தொகுத்களில்
திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டு படுதோல்வியடைந்த முஸ்லிம்லீக்... முதல் தேர்தல் என்றாலும்
தனித்தே களமிறங்கிய எஸ்.டி.பி.ஐ. ஆகிய அனைத்து கட்சிகளும் தனித்தே போட்டியிட்டது.

தமிழகத்தை பொறுத்தவரை இருக்கின்ற அனைத்து இஸ்லாமிய கட்சிகள் மற்றும் இயக்கங்கள் அனைத்துமே
தாங்கள்தான் ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களின் பிரதிநிதிகள் என பிரகட்டனபடுத்திகொண்டு சமுதாயத்தை பின்னோக்கி
அழைத்து செல்கிறார்கள் என்பதற்கு இந்த நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் சாட்சி...

மமக 600 இடங்களில் போட்டியிட்டு சுமார் 140 இடங்களில் வெற்றி கண்டுள்ளது... அந்த வெற்றியை அக்கட்சியின் அதிகாரபூர்வ
இணையதளமும் பத்திரிக்கையும் தொடர்ந்து எழுதி வருகிறது... அதேபோல முஸ்லிம்களின் அரசியல் தாய்ச்சபை என
வர்ணிக்கப்படும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சுமார் 390 இடங்களில் போட்டியிட்டு 115 இடங்களில் வென்றுள்ளது...
எஸ்.டி.பி.ஐ எனப்படும் சோசியல் டெமோக்ரடி பார்ட்டி ஆப் இந்தியா விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் கிருத்துவ இயக்கங்கள் ஆகியவற்றின் ஆதரவுடன் போட்டியிட்டு சுமார் 62 இடங்களில் வென்றி பெற்றுள்ளது... மாநகர மேயர் தேர்தலில் சென்னை மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐ இன்
வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளார்கள்...

இதுதவிர கோவை மாநகராட்சிக்கான மேயர் தேர்தலில் ஐக்கிய ஜமாஅத் வேட்பாளராக அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் தலித் இயக்கங்களின் ஆதவுடன் போட்டியிட்ட சகோ.அமீர் அல்தாப் முப்பதாயிரம் வாக்குகளுக்கு மேலாக பெற்று மூன்றாம் இடத்திற்கு வந்துள்ளார்....

மேலே குறிபிட்டபட்டிருப்பவைகள் கடந்த உள்ளாட்சித்தேர்தலில் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக தங்களை சொல்லிகொள்ளும் இஸ்லாமிய கட்சிகள் வாங்கி இருக்கும் வாக்கு விகிதம்... ஒவ்வொருவரும் தாங்கள் அளப்பரிய வெற்றிகண்டுள்ளதாக பெருமைபட்டுகொண்டிருக்கும் இந்த தருவாயில் இவைகள்
எவ்வளவு எவ்வளவு பெரிய அரசியல் பின்னடைவு என்பதை நாம் கவனிக்கவேண்டும்... அதேபோல பலம்பெரும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களை பின்னுக்குத்தள்ளி கோவை மாநகர மேயர் தேர்தலில் ஐக்கிய ஜமாஅத் வேட்பாளர் சகோ.அமீர் அல்தாப் அவர்களால் எப்படி மூன்றாம் இடத்தை பிடிக்க முடிந்தது என்பதையும் கவனிக்க வேண்டும்... கோவையை போல ஏன் மற்ற இடங்களில் நமது சமூக வேட்பாளர்களால் கவுரவமான வாக்குகள் வாங்க முடியவில்லை
இந்த தோல்விகளுக்கு யார் காரணம்...?

வேறு யாருமல்ல வேறு எந்த அரசியல் கட்சியும் அல்ல... நாம்தான் இத்தகைய பின்னடைவிற்கு காரணம் பல இடங்களில் முஸ்லிம்களின் தோல்விக்கு முஸ்லிம்களே காரணமாக இருப்பதை ஆய்வு செய்வது அவசியம்...
உதாரணமாக திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை பேரூராட்சி தலைவர் தேர்தலை குறிபிடலாம்... முத்துபேட்டை முஸ்லிம்கள் கணிசமாக வாழக்கூடிய பேரூர் முத்துபேட்டை முஸ்லிம்களின் வளர்ச்சி இன்றைக்கும் சங்பரிவார்களின்
தூக்கத்தை கெடுத்துவருகிறது என்பதை நாம் அறிவோம்... ஒவ்வொரு ஆண்டும் முத்துபேட்டையில் கலவரங்களை களமிறக்க சில கறுப்பாடுகள் அலைவதையும் முத்துபேட்டை முஸ்லிம்கள் நன்கு உணர்ந்தே உள்ளார்கள் இப்படியாக
எதிர்வினைகள் மிக்க முத்துபேட்டை பேரூராட்சியை முஸ்லிம்கள் கைப்பற்றி இருக்க வேண்டும் கைகூடி வந்த வெற்றியை முஸ்லிம்களே கோட்டைவிட்டுல்லார்கள்...

18 வார்டுகளை உள்ளடக்கிய முத்துபேட்டை பேரூராட்சியில் சுமார் 9 வார்டுகளில் முஸ்லிம்களும் எஞ்சியுள்ள 9 வார்டுகளில் மற்ற சமூக மக்களும் நிரம்பி வாழ்கிறார்கள்... இப்படி சமமாக மற்றவர்களும் வாழக்கூடிய முத்துபேட்டை பேரூராட்சித் தேர்தலில் மற்ற சமூக வேட்பாளர்கள் நால்வர் மட்டுமே களமிறங்கினார்கள் ஆனால் முஸ்லிம்கள் ஒன்பது வேட்பாளர்கள் களம்கண்டார்கள்...

பல அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும் போட்டியிட்டிருந்தாலும் எஸ்.டி.பி.ஐ வேட்பாளராக போட்டியிட்ட சகோ.அபூபக்கர் சித்தீக் சுமார் 1926 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளார் வெற்றிகண்ட அதிமுக வேட்பாளர் அருணாச்சலத்திற்கும் இரண்டாம் இடம் பெற்று தோல்விகண்ட சகோ.அபூபக்கர் சித்தீக் அவர்களுக்குமான
வாக்குவித்தியாசம் வெறும் 402 வாக்குகள்தான் ஆம் வெற்றிபெறவேண்டிய அபூபக்கர் சித்தீக் மற்ற முஸ்லிம் வேட்பாளர்களால் தோல்வியடைந்துள்ளார்... முஸ்லிம்களுக்கான அதிகாரத்தை பெறவேண்டி போராடிவரும் இஸ்லாமிய அமைப்புகள் கட்சிகள் இந்த தோல்வியை தவிர்த்திருக்கலாம் இல்லையா...? மற்ற முஸ்லிம் வேட்பாளர்களைவிடவும் அதிகமான வாக்குகள் வாங்கியுள்ள எஸ்.டி.பி.ஐ வேட்பாளரை இவர்கள் விரும்பி இருந்தால் பொது வேட்பாளராக நிறுத்தி வெற்றிபெற செய்திருக்கலாமே... ஏன் அப்படி செய்யவில்லை காரணம் இஸ்லாமிய இயக்கங்கள் மத்தியில் புரையோடியுள்ள ஈகோ தான்... முத்துபேட்டை தோல்வி ஒரு உதாரணம்தான் இதேபோல பல இடங்களில் முஸ்லிம்கள்
வெற்றி வாய்ப்பை சொந்த சமூகத்தினாலேயே இழந்துள்ளார்கள் என்பது கவனிக்கவேண்டிய கவலை...

இன்றைக்கு மூன்றாம் தரக்குடிமக்களாக முஸ்லிம்கள் அரசுகளால் அதிகாரிகளால் தரம்தாழ்த்தபட்டுவருகிறோம்... எத்தனை வலிமை இருந்தும் நம்மால் ஏன் பெரும் அதிகார பதவிகளை பெறமுடியவில்லை...? இந்த கேள்வி ஒவ்வொரு இஸ்லாமிய அமைப்புகளிலும் அங்கம் வகிக்கும் கடைநிலை முதல் உயர்நிலைவரை உள்ள உறுப்பினர்களும் தங்களை தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய தருணம் இது... முஸ்லிம்களின் வாக்குகளை இஸ்லாமிய கட்சிகளே பிரிப்பதால் யாருக்கு என்ன நன்மை விளைய போகிறது என்பதை உணரவேண்டுமில்லையா?

நம்மைவிட வலிமைகுரைந்தவர்கள் அதிகாரங்களை கைப்பற்ற முடிகிறது என்றால் நம்மிடமில்லாத ஒருங்கிணைப்பு அவர்களிடம் உள்ளதுதான்
காரணம் இந்த உண்மையை அறிந்தும் அறியாததுபோல செயல்பாடுகள் தொடருமேயானால் நாம் இன்னும் பின்னுக்கு
தள்ளபடுவதை தடுக்கமுடியாது...

அரசியல் என்பது மிக சமயோசிதமாக கையாளப்படவேண்டிய துறை அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தரக்கூடிய துறை... உரிமைகளை மீட்க்க போகிறோம் என்று மேடைதோறும் முழங்குவதால் மட்டும் எதையும் சாதிக்க முடியாது
இஸ்லாமிய இயக்கங்கள் வீறுகொண்டு எழுவதற்கு முன்பாக அதாவது 1995 முன்பாக இருந்த முஸ்லிம்களின் அரசியல் நிலை என்பது இன்று இஸ்லாமிய இயக்கங்களின் அபரிமிதமான வளர்ச்சிக்குப் பிறகு பின்தள்ளப்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது... தமிழக சட்டப்பேரவையில் சுமார் 20 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கவேண்டியது முஸ்லிம்களின் விகிதாச்சாரம் ஆனால் இப்போதைய உறுப்பினர்கள் வெறும் ஐவர் மட்டும் என்பது பின்னடைவில்லையா...?

ஆரம்ப காலத்தில் கண்ணியதலைவர் காயிதேமில்லத் போன்றவர்களால் அரசியல் கற்பிக்கப்பட்டது இப்போது நாம் அரசியலை கற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்... நாம் வாழக்கூடிய நாடு பல்வேறு சமூக மக்களையும் உள்ளடக்கிய கூட்டமைப்பு அதற்க்கேற்றவாருதான் முஸ்லிம்களின் அரசியல் நிலையும் அமையவேண்டும் அப்போதுதான் வெற்றிகள் நமக்காணதாகும் கண்ணியமான அரசியல்வாதிகளை அடையாளம்கண்டு
கூட்டணிகள் உருவாக வேண்டும் அதற்கும் முன்னதாக வீதிகொன்றாக பிரிந்துள்ள இஸ்லாமிய இயக்கங்கள் ஒருங்கிணைக்க படவேண்டும்... இவைகள் யாரால் சாத்தியமாகும் நிச்சயமாக அனைத்து அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் நினைத்தால் மட்டுமே இது சாத்தியமாகும்...

கடந்த உள்ளாட்சித் தேர்தல் களத்தில் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர்.தொல்.திருமாவளவன் அவர்களின் முயற்சியில் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு
உருவானது அது வெற்றிகண்டதா இல்லையா என்பது தேவையற்றது ஆனால் அதுபோன்ற கூட்டமைப்பு அவசரமான
அவசியம் என்பதை நாம் உணர்ந்தே ஆகவேண்டியது கட்டாயம்... விரல்விட்டு எண்ணக்கூடிய வகையிலான உறுப்பினர்களை வைத்துள்ள பாரதிய ஜனதா கட்சி மூன்று நகர் மன்றங்களை கைப்பற்றியுள்ளது ஆனால் லட்சோப லட்ச தொண்டர்களை கொண்ட இஸ்லாமிய கட்சிகள் ஒரு
நகர்மன்றத்தையோ குறிபிடும்படியான பேரூராட்சிகளையோ கைப்பற்ற முடியவில்லை ஏன்? சிந்திக்கவேண்டியது கட்டாயம் மட்டுமல்ல கடமையும்கூட...

தோழர்.திருமா உருவாக்கிய கூட்டமைப்பு சிறப்பானது வெற்றிக்கான காரணி.. அத்தகைய கூட்டமைப்பை முன்னெடுக்க வேண்டியது தமிழக முஸ்லிம்களின் முக்கிய அமைப்புகளான தமுமுக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்றவர்களின் கடமை... சமூகத்தின் மேம்பாட்டிற்காக மேற்கண்டவர்கள் செயலாற்றுவது உண்மையானால் தங்களுக்கான சுய விருப்பு வெறுப்புகளை விட்டுவிட்டு ஒருங்கிணைய வேண்டும்... அத்தகைய ஒருங்கிணைப்பின் மூலமாவே நமது பலம் பிரியாமல் வளமான வெற்றிகளை தரும்...

முஸ்லிம்களை பொறுத்தவரை வலிமையான கட்டமைப்பு முஹல்லாஹ் ஜமாத்துக்கள் ஆக முஹல்லாஹ் ஜமாத்துக்களும் இயக்கங்களும் ஒருங்கிணைத்து செயல்கண்டாலே கோவையில் சாதிக்க முடிந்ததை தமிழகம் முழுமையும் சாதிக்க முடியும்... ஆம் அந்த சாதனை நகர்மன்றங்களை மட்டுமல்ல நாடாளுமன்றத்தையுமே நம் வசமாக்கும்... இன்ஷாஅல்லாஹ்