Subscribe:

வியாழன், 26 மே, 2011

இசைக்கும் நீரோக்கள்... கவிஞர் அமீர் அப்பாஸ்

பூட்டுக்கள் மாற்றியது...

சாவிகள் மாற்றியது...

சிறைச்சாலைகள் மாறவில்லை..!


ஆட்சி மாறியது...

காட்சிகள் மாறியது...

அவலங்கள் மாறவில்லை...!


வேட்டி மாறி சேலையானது...

வேதனை மாறவில்லை..!


ஹரிஜன் மாறி'தலித்' ஆனது..!

தீண்டாமை மாறவில்லை..!


உடைக்க முடியவில்லை

உள்ளத்தில் நீண்டிருக்கும்உத்தபுரச் சுவர்கள்..!
ஊரேஎரிந்த போதும் பிடில்வாசித்த

நீரோவிர்க்கு நன்றி..!

மேலும் பற்ற வைக்காதபெருந்தன்மைக்காக..!

கருத்துகள் இல்லை: