Subscribe:

வியாழன், 2 பிப்ரவரி, 2012

எழுச்சித்தலைவர் திருமா அவர்களை முதல்வராக்குவோம்.... வேங்கைஇப்ராஹீம் பேச்சு...

மலேசியாவில் கடந்த ஜனவரி 29,30.31 ஆகிய நாட்களில் தமிழர் தன்மான இயக்கம்ஏற்பாடு செய்திருந்த பண்ணாட்டு பகுத்தறிவு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சிதலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் மலேசியா வந்திருந்தார்.

தகவலரிந்து மலேசியாவின் தீவு மாநிலமான சபா வாழ் தமிழின மக்கள் திருமா அவர்களை தங்கள் மாநிலத்திற்கு வருமாறும் தாங்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்வில் உரையாற்றுமாறும் அழைப்புவிடுத்தனர்.அழைப்பினை ஏற்றுக்கொண்ட திருமா அவர்கள் சபா மாநிலத்திற்கு கடந்த பிப்ரவரி 1 ம் தேதி வருகை புரிந்தார்.

அன்று மாலை சபா இந்தியர் சங்க கட்டிட விழா மண்டபத்தில் நடைபெற்ற
"இன்றையதமிழினம்" என்கிற தலைப்பிலான கருத்தரங்கில் கலந்துகொண்டு எழுச்சியுரையாற்றினார்.

அக்கருத்தரங்கில் கலந்துகொண்டு அறிமுகவுரையாற்றிய வேங்கைஇப்ராஹீம் பேசியதாவது....

அன்பிற்கினிய சபா வாழ் இனிய தமிழின மக்களே... நமது மலேசிய திருநாட்டிற்கு தமிழகத்தில் இருந்து பல்வேறு கட்சிகளையும் சார்ந்த தலைவர்கள் எழுத்தாளர்கள், கவிஞர்கள், நடிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வருகை புரிந்துள்ளனர் ஆனால் இன்றைக்கு நாங்கள் உங்களுக்கு அறிமுகம் செய்யவிற்பவர் இவற்றை எல்லாம் உள்ளடக்கிய ஒரு பயங்கரவாதி...! ஒரு தீவிரவாதி...! ஒரு வன்முறையாளர்...!

ஆம் என்ன என் தமிழினமே அதிர்ச்சியாக இருக்கிறதா...? இதில் அதிர்ச்சிக்கு எதுவும் இல்லை ஏனெனில் இந்த உலகம் புரட்சியாளர்களையும் மக்களுக்காக வீரியமாக ஆதிக்க சக்திகளை எதிர்த்து போராடக்கூடியவர்களையும் இப்படிதானே வகை படுத்துகிறது...

உதாரணமா
இந்திய திருநாட்டின் விடுதலைக்கான போராட்டத்தில் தலைமை
ஏற்று வழிநடத்திய தேசபிதா அண்ணல் காந்தியடிகளை அன்றைக்கு ஆங்கிலேயன் பயங்கரவாதியாகதான் பார்த்தான்தனது கறுப்பின மக்களின் விடுதலைக்காக போராடிய நெல்சன் மண்டேலா அவர்களை தீவிரவாதியாகஅடையாளபடுத்திதான்இருபதாண்டுகளுக்கும் மேலாக சிறையிலடைத்தனர். ஈராக்கிய மக்களின் உரிமைகளை விட்டுகொடுக்காத மாவீரன் சதாம் ஹுசைனை அமெரிக்க ஏகாதிபத்தியம் இப்படியாக வகைபடுத்திதான் தூக்கிலிட்டு படுகொலை செய்தது.


ஆக அந்த வகையில் உலகின் எந்த மூலையிலும் தமிழனுக்கு ஒரு ஆபத்தென்றால் புயலாக களம்புகும் அண்ணன் திருமா அவர்களும் பயங்கரவாதிதான் தீவிரவாதிதான் வன்முறையாலர்தான் என்பதிலே நாங்கள்
பெருமையோடு அறிமுகம் செய்கிறோம்...

ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் வாழ்வுரிமைக்காக போராடிவரும் அண்ணன் திருமா இந்த வருடம் தனது ஐம்பதாவது வயதை நிறைவு செய்யவிற்க்கிறார். தனது கடந்த முப்பதாண்டுகால பொதுவாழ்க்கையில் தனக்கென அவர் எதையும் சேர்க்கவில்லை தனிமனித வாழ்க்கைக்கு தேவையான எதையுமே அவர் விரும்பவில்லை அண்ணன் திருமா அவர்கள்இந்த விஷயத்தை இந்த மேடையில் நான் உங்களுடன் பகிர்ந்துகொள்வதை விரும்புவார்களா மாட்டார்களா என எனக்கு தெரியவில்லை.இருப்பினும் அண்ணன் அவர்களின் அன்பு தம்பி என்கிற முறையில் எனக்குள்ள உரிமையின் அடிப்படையில் சொல்கிறேன்ஐம்பது வயதை நெருங்கிவிட்ட அண்ணன் இன்னும் திருமணம்கூட செய்துகொள்ளாமல் ஒரு நாளில் 24 மணி நேரத்தில்
சுமார் 20 மணிநேரம் மக்களுக்காக உழைக்கிறார்... அப்படிப்பட்ட மகத்தான மக்கள் போராளியைதான் இன்றைக்கு நாம் நமது சபா மாநிலத்திற்கு அழைத்து பெருமைபட்டிருக்கிறோம்...

அமைப்பற்ற மக்களை அமைப்பாக்கினார் அரசியல் வழிகாட்டினார் எத்துனை பெரிய தோல்விகளையும் தைரியத்துடன் எதிர்கொள்ளும் வல்லமை அவருக்குண்டு... எத்துனை பெரிய வெற்றிகளையும் இலகுவாக ஏற்றுகொள்ளும் பக்குவமும் அவருக்குண்டு... ஆதாயத்தை மட்டுமே அடிப்படையாக கொண்ட தமிழக அரசியலில் மக்களின் ஜீவாதாரத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இயக்கம் கட்டியவர் அண்ணன் திருமா...

கடந்த 1994 ம் ஜூலை மாதம் 7 என் தலைவர் ஷஹீத் பழனிபாபா அவர்களுடன் எனது பிறந்த பூமியான இளையான்குடியில்முதல் மேடை ஏறியபோது எத்தகைய மகிழ்வும் பெருமையும் என் மனதில் விதைந்ததோ அதேபோல உணர்வை அண்ணன் திருமா அவர்களுடன் நான் பங்கேற்றுள்ள இந்த சிறப்புவாய்ந்த முதல் மேடையிலும் நான் பெறுகிறேன்...

இங்கு உரையாற்றிய நண்பர்கள் சொன்னார்கள் தமிழ் உலகின் பல்வேறுபகுதிகளும் அழிந்துவருகிறதுதமிழினம் அழிக்கபட்டு வருகிறது... தமிழர்களின் கலாச்சாரம் ஒழிக்கப்பட்டு வருகிறது என்றெல்லாம் ஆதங்கபட்டார்கள் உண்மைதான் மறுக்கவில்லை ஆனால் எங்கு வேண்டுமானாலும் என்னவேண்டுமானாலும் தமிழனுக்கு தமிழ் மொழிக்கு
தீங்கு ஏற்ப்படலாம் தமிழ்நாட்டில் தாய் தமிழகத்தில் தமிழையும் தமிழனையும் தமிழனின் கலாச்சாரத்தையும் எந்த கொம்பனாலும் அசைத்துவிட முடியாது காரணம் என் தாய்தமிழ் மண்ணில்தானே என் அண்ணன் திருமா இருக்கிறார்... எந்த மூலையில் தமிழினம் பாதிக்கப்பட்டாலும் உடணடியாக உணர்வோடு எந்தவிதமான ஆதாய நோக்கமும் இல்லாமல் களம்காணும்
என் அண்ணன் திருமா அவர்கள் வாழக்கூடிய தாய்தமிழ் பூமியில் தமிழையும் தமிழனையும் எவன் அழிக்க நினைத்தாலும் அவன் அழிக்கபடுவான்....

என் அண்ணன் திருமா அவர்களே... இதுநாள் வரையிலும் எந்த தமிழக அரசியல்தலைவனையும் அழைத்து அழகுபார்க்காத என் சபா வாழ் தமிழினம் உங்களை அழைத்து இன்றைக்கு வரலாற்று சிறப்புமிக்க இந்த கருத்தரங்கை
நிகழ்த்திகொண்டிருக்கிறது என்றால் இங்குள்ள என் தமிழ் மக்களிடம் சாதி இல்லை மதம் இல்லை முரண்பாடு இல்லை மனித குளத்தில் ஏற்றத்தாழ்வு இல்லை... என் தலைவர் பாபா அவர்கள் அடிக்கடி சொல்வதைபோல நாங்கள் அனைவருமே இனத்தால் திராவிடர்கள் வம்சாவளியால் இந்தியர்கள் மொழியால் தமிழர்கள் ஏற்றுக்கொண்ட வழிமுறைகளில்தான் மாறுபட்டவர்கள்... இன்றைக்கு இந்த அரங்கம் எதிர்பார்த்தயும்விட நிறைந்துள்ளது என்றால் காரணம் எங்களிடம் எம் மக்களிடம் எஞ்சியிருப்பது தமிழன் என்கிற ஒற்றைவரிதான் என்பதை பெருமையுடன் அறியத்தருகிறேன்...

இப்படியான சிறப்புவாய்ந்த இந்த உள்ளரங்கில் நின்று நான் சொல்கிறேன் இன்றைக்கு சிதம்பரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக விசிகவின்
தலைவராக வருகை தந்துள்ள நீங்கள் அடுத்து மீண்டும் இதே சபா மாநிலத்திற்கு வரவேண்டும் எங்களை எல்லாம் சந்தித்து தமிழுனர்வை ஊட்டவேண்டும் ஆனால் சிதம்பரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக அல்ல... விசிகவின் தலைவராக மட்டுமல்ல... தமிழ்நாட்டின் முதலமைச்சராக வரவேண்டும் இதை என் ஏக இறையவனிடம் இருகரமேந்தி பிரார்த்திக்கிறேன்...

நீங்கள் தமிழினத்தின் தலைமைபீட பொறுப்பை ஏற்க்கும்போதுதான் உலக தமிழினம் ஒன்றுபடும் உரிமைகள் காக்கப்படும்கச்சதீவு மீட்கப்படும் தனித் தமிழீழமும் மலரும்...

இந்த வார்த்தைகளை மேடையளங்காரதிர்க்காக நான் சொல்லவில்லை உணர்வோடு உண்மையோடு சொல்கிறேன்அதற்காக புலம் பெயர்ந்துவாழும் எம்மை போன்ற தமிழர்கள் சிறுத்தைகளுக்கு என்றைக்குமே ஆதரவாக இருப்போம்என உறுதிகூருகிறேன்... என பேசினார்

2 கருத்துகள்:

சே.ரெ.பட்டணம் மணி சொன்னது…

இந்த நூற்றாண்டின் இணையற்ற தலித்தின மக்களின் தலைவர் என்று என் தலைவர் எழுச்சித்தமிழர் திருமா அவர்களை முதன் முதல் சந்தித்த போது நான் கூறினேன்.பிறகு சில ஆண்டுகள் கழிந்து துபாயில் என் தலைமையில் நடந்த ஒரு விழாவில் .இந்த நூற்றாண்டின் தமிழின மக்களின் தலைவராக நீங்கள் வருவீர்கள் .எங்களின் உண்மையான ,புரட்சித் தலைவர் நீங்கள் தான் என்று பேசினேன்.அவரை வைத்துக் கொண்டு பேசினேன் இன்றது உண்மையாகிக் கொண்டு வருகிறது.நன்றி .மலேலிய தமிழ் உறவுகளுக்கும்.அன்பு வேங்கை.இப்ராஹீம் அவர்களுக்கும் .விறைவில் வரலாறு நம்மை பதிவு செய்யும்.அன்று நம்மினத்திற்கு விடிவு பிறக்கும்../

சே.ரெ.பட்டணம் மணி சொன்னது…

இந்த நூற்றாண்டின் இணையற்ற தலித்தின மக்களின் தலைவர் என்று என் தலைவர் எழுச்சித்தமிழர் திருமா அவர்களை முதன் முதல் சந்தித்த போது நான் கூறினேன்.பிறகு சில ஆண்டுகள் கழிந்து துபாயில் என் தலைமையில் நடந்த ஒரு விழாவில் .இந்த நூற்றாண்டின் தமிழின மக்களின் தலைவராக நீங்கள் வருவீர்கள் .எங்களின் உண்மையான ,புரட்சித் தலைவர் நீங்கள் தான் என்று பேசினேன்.அவரை வைத்துக் கொண்டு பேசினேன் இன்றது உண்மையாகிக் கொண்டு வருகிறது.நன்றி .மலேலிய தமிழ் உறவுகளுக்கும்.அன்பு வேங்கை.இப்ராஹீம் அவர்களுக்கும் .விறைவில் வரலாறு நம்மை பதிவு செய்யும்.அன்று நம்மினத்திற்கு விடிவு பிறக்கும்../