Subscribe:

ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

அத்துணை இன்னல்களுக்கும் தீர்வு அரசியல் அதிகார வென்றெடுப்பே... வேங்கைஇப்ராஹீம் பேச்சு...

வேங்கை சு.செ.இப்ராஹீம் உரையாற்றுகிறார்...

திரண்ட மக்கள் திரளில் ஒரு பகுதி...
செப்டம்பர் 29ம் தேதி தேனி மாவட்டம் கம்பம் நகர இந்திய தேசிய லீக் கட்சியின் சமுதாய எழுச்சி பொதுக்கூட்டம்
அக்கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சகோ.இப்ராஹீம் உஸ்மானி அவர்கள் தலைமையில் நடைபெற்றது 
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட வேங்கை சு.செ.இப்ராஹீம் அவர்களின் உரையில் இருந்து...

இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம்கள் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் மட்டுமல்ல உலககெங்கிலும் பயங்கரவாததிற்கு எதிராக போராடவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்... அதற்க்கு சரியான சான்றுதான் அண்மைய அமெரிக்க இணையதள குறும்படம்... ஆம் என் சமுதாய சொந்தங்களே நமது ஒப்பற்ற ஒரே தலைவர் அண்ணல் நபிகள் நாயகத்தை இழிவாக சித்தரித்து அமெரிக்க ஆதரவுடன் படமெடுத்த யூதநாயை கண்டித்து இப்போது நாம் உலகமெங்கும் ஆர்பாட்டங்கள் பேரணிகள் என்று வீரியமாக நடத்தி வருகிறோம்... இதில் நமது தமிழக முஸ்லிம்கள் நெஞ்சை நிமிர்த்திகொள்ளுங்கள் காரணம் உலக வல்லரசான அமெரிக்காவின் துணைதூதரகத்தை உலகிலேயே இயங்கவிடாமல் செய்த பெருமையை சென்னையில் நமது சகோதரர்கள் நமக்கு தந்திருக்கிறார்கள்... 

சமுதாய சொந்தங்களே... இந்த அமெரிக்க படத்தின் மூலமாக முஸ்லிம்களுக்கு எதிரான சர்வதேச பயங்கரவாததிற்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் திட்டமிடுகிறது என்பதை நாம் உணரதவறககூடாது... ஆம் செல்வசெழிப்பாக திகழ்ந்த ஈராக் இன்றைக்கு எந்த நிலையில் உள்ளது அங்குள்ள நமது சகோதரிகள் தங்கள் பிள்ளைகளின் உணவு மருத்துவதிற்க்காகாக தங்கள் உடல் உறுப்புகளை விற்று வாழக்கூடிய அவலம் இதனை யார் ஏற்படுத்தியது...? உலகை அச்சுறுத்தக்கூடிய ஆயுதங்களை பாரசீக சிங்கமென ஈராக்கை ஆட்சிபுரிந்த அதிபர் சதாம் ஹுசைன் பதுக்கிவைத்துள்ளார் என்கிற பொய் கதையை புனைந்து உலக பயங்கரவாதி அமேரிக்கா ஈராக்கின் மீது தாக்குதல் நடத்தினான்... அதிபர் சதாம் ஹுசைன் அவர்களின் பல் இடுக்குகளில் கூட ஆயுதங்களை தேடிய அமேரிக்கா முடிவில் உலக முஸ்லிம்கள் அனைவரும் தியாகப்பெருநாள் கொண்டாட்டங்களில் இருந்தபோது சதாம் ஹுசைன் அவர்களை தூக்கிலிட்டு கொலை செய்தான்... ஆம் அவனது நோக்கம் நச்சு ஆயுதங்களை கலைவதல்ல தனக்கு அடிபணிய மறுக்கும் சதாம் ஹுசைனை அழிப்பதே... அதில் வெற்றியும் கண்டான் இன்று அவனது காலனியின் கீழ் ஈராக் செல்வம் கொழித்த அந்த இஸ்லாமிய பூமி இன்று பசியாலும் பஞ்சத்தாலும்... 

செப்டம்பர் பதினொன்று அமெரிக்க இரட்டைகோபுர தாக்குதலை காரணமாக காட்டி ஒசாமா பின் லேடனை பிடிக்க வேண்டும் என்கிற போர்வையில் தாலிபான்களை ஒழிக்க வேண்டுமென்கிற பொய்மையில் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தான்... அந்த சிறிய இஸ்லாமிய தேசத்தை சிதைத்து கைப்பற்றினான்... லிபியா வீரத்தின் விலைநிலமாக திகழ்ந்த கர்னல் கடாபியை ஒரு நாயை அடித்துகொல்வது போல அந்நாட்டின் சொந்த மக்களை கொண்டே கொலை செய்தான்... இன்றைக்கு அவனது அடிமை அரசாங்கம் அங்கு... அடுத்து அவனது இலக்கு சிரியா...ஈரான் என தொடர்கிறது... இந்த அயோக்கியத்தனங்களை போது சமூகம் தட்டிகேட்டுவிடக்கூடாது என்பதினால் உலக முஸ்லிம்களின் மீது பயங்கராவாத முத்திரையை குத்திட அமெரிக்கன் செய்திட்ட  சதிதான் நபிகள் நாயகம் அவர்கள் பற்றிய படம்... 

அப்படத்தை முதலில் ஆங்கில மொழியில் வெளியிட்டது யூதூப் அது அவர்கள் எதிர்பார்த்த அளவில் முஸ்லிம்களிடம் செல்லவில்லை என்பதனால் உடணடியாக அரபு மொழியில் மொழிமாற்றம் செய்து இணையத்தில் உலவவிட்டனர்... அவர்கள் எதிர்பார்த்து போலவே அரபுதேச மக்களிடம் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது அப்படம் தங்கள் தலைவரை இழிவுபடுத்திய அச்செயலை கண்டித்து போராடிவரும் முஸ்லிம்களை போது சமூகத்தளங்களில் பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் வேலைகளை அமெரிக்க ஏகாதிபத்தியம் இன்று செய்து வருகிறது... பேடித்தனமாக சிறிய இஸ்லாமிய தேசங்களை நாசபடுத்திவரும் அமெரிக்க ஆண்மை இருந்தால் அவனுக்கு எதிராக உலக வல்லரசாக உருவாகிவரும் சீனாவின் மீது தாக்குதல் தொடுக்கவேண்டும்... மாறாக வலிமைகுன்றிய இஸ்லாமிய தேசங்களின் வளங்களை அழிப்பதன் மூலமாக உலக முஸ்லிம்களை ஒழிக்க திட்டமிடுகிறான்... அல்லாஹுவின் பாதையில் பயணிக்கும் இஸ்லாமிய சமுதாயம் இந்த அயோக்கியத்தனங்களை எல்லாம் தவிடு பொடியாக்கும்... 

நமது இந்தியதேசத்தை பொறுத்தவரை சங்கபரிவாரங்கள் மட்டுமே முஸ்லிம்களுக்கு எதிரான நிலையில் இல்லை... அனைத்து அதிகாரவர்க்கமுமே முஸ்லிம்களுக்கு எதிர்நிளைபாட்டில் தான் இருக்கிறார்கள்... கடந்த அய்யாவின் ஆட்சிகாலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அனைத்துமே அம்மாவிற்கு பிடிக்கவில்லை... சுமார் ஆயிரம்கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு சென்னையின் மையப்பகுதியில் கம்பீரமாக காட்சியளிக்கும் தலைமை செயலக கட்டிடம் இப்போது பாம்புகளும் பல்லிகளும் குடியிருக்கும் கூடாரமாகிபோனது ஏன்? அது அய்யாவின் இலட்சியகனவாக கட்டப்பட்டது ஆகையினால் அம்மாவிற்கு பிடிக்கவில்லை இன்று ஆயிரம்கோடி அனாமத்தானது... வரலாற்று சிறப்புமிக்க அறிவுகளஞ்சியமாக உருவானது அண்ணா நூற்றாண்டு விழா நூலகம்... இன்று இல்லை காரணம் அய்யாவினால் உருவாக்கப்பட்டது அம்மாவிற்கு பிடிக்கவில்லை ஆகவே இப்போது நூலகம் இல்லை... ஏழை எளிய மக்களின் சுகாதார சொர்க்கமாக உருவானது கலைஞர் காப்பிட்டு திட்டம் அய்யா உருவாக்கினார் என்பதினால் அம்மாவிற்கு பிடிக்கவில்லை அத்திட்டம் இப்போது நடைமுறையில் இல்லை... ஆக இப்படியாக அய்யா ஆட்சியில் கொண்டுவரப்பட்ட எதுவுமே அம்மாவுக்கு பிடிக்கவில்லை... அதனால் அய்யாவினால் சிறையிளடைக்கபட்டு பல்லாண்டுகாலமாக வாடும் அப்பாவி முஸ்லிம்கள் அம்மாவினால் விடுவிக்கபடுவார்கள் என முழுமையாக நம்பினோம்... கடந்த வருட நோன்பு பெருநாளைக்கூட நாங்கள் மகிழ்ச்சியாக எதிர்பார்க்கவில்லை மாறாக செப்டம்பர் பதினைந்தைதான் எதிர்பார்த்தோம் ஆனால் ஏமாற்றமடைந்தோம்... ஒரு உண்மை விளங்கியது முஸ்லிம்களின் பிரச்சனை என்றால் அய்யாவானாலும் அம்மாவானாலும் அனைவரின் நிலைபாடும் ஒன்றுதான்... 

இன்று நமது சமூக விடியலுக்காக போராட வீரியமான பல்வேறு அமைப்புகள் உண்டு... ஆம்புலன்ஸ் அர்பணிப்புகள்... இரத்தனதான நிகழ்வுகள்... ஆர்பாட்டங்கள்...பேரணிகள்..பொதுக்கூட்டங்கள்...மாநாடுகள் என களமாடும் சமுதாய அமைப்புகளின் நிலைகளில் நமக்கு மிகுந்த மரியாதை உண்டு... ஆனால் இவற்றால் நாம் எந்த இலக்கை அடைந்துள்ளோம்... சிந்தித்து பாருங்கள்... ஒன்றுமில்லை... இவற்றில் எதுவுமே செய்யாமல் எப்படி மற்ற சமூக மக்களால் சுமூகமாக வாழமுடிகிறது? சிந்தித்து பாருங்கள்... ஆம் அவர்களிடம் உள்ள அரசியல் தெளிவு நம்மிடம் இல்லை... இன்றைக்கு நமது சமூகத்திற்கு தேவை அரசியல் அதிகாரம்... அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதன் மூலமாக மட்டுமே நம்மால் அடுத்த தலைமுறை சமுதாயத்திற்கு விடியலை உருவாக்கிட முடியும்... ஆகவே என் இனமான உறவுகளே... நீங்கள் எந்த அமைப்புகளில் வேண்டுமானாலும் பங்காற்றுங்கள்... எந்த கொடியை வேண்டுமானாலும் தூக்கிபிடியுங்கள்...எந்த கொள்கையில் வேண்டுமானாலும் நிலையாக இருங்கள்... ஆனால் ஒன்றை மட்டும் உங்கள் தலைமைகளிடம் வலியுறுத்துங்கள் ஆம்... எங்களுக்கு அரசியலை கற்றுத்தாருங்கள்... எங்களை அமைப்பாக்குங்கள்...அரசியல் படுத்துங்கள் என்பதை வலியுறுத்துங்கள்... அரசியல் அதிகாரத்தை பெறாதவரை நாம் தீவிரவாதிகளாகத்தான் அதிகாரவர்க்கத்தால் ஊடகங்களால் வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்க்கபடுவோம்... வெங்காய வியாபாரிகள்கூட வெளிநாட்டு உளவாளிகளாக உருவாக்கபடுவோம்... 

தமிழ் தேசத்தில் காங்கிரஸ் அரசை வீழ்த்தி இன்றைக்கு திராவிட ஆட்சி உருவாகிட காரணமாக திகழ்ந்தவர் கண்ணியதலைவர் காயிதே மில்லத் அவர்கள்... அவரைவிடவா ஒரு அரசியல் ஆசான் நமக்கு வேண்டும்? அவரை படித்தாலே நமது சமூகம் அதிகாரத்தை இன்ஷாஅல்லாஹ் வெல்லும்... சமூகப்புரட்சியாளர் ஷஹீத் பழனிபாபா எத்தகைய தூரநோக்கு திட்டத்துடன் அரசியல் களமாடினர்... அதனைவிடவா ஒரு வீரிய திட்டமிடல்  நமக்கு வேண்டும்... அவற்றை படித்தாலே இன்ஷாஅல்லாஹ் நாம் அடுத்த இலக்கை அடைந்துவிட முடியும்... அரசியல்படுவோம்...அமைப்பாய் திரள்வோம்...அதிகாரம் வெல்வோம்... 



கருத்துகள் இல்லை: