Subscribe:

செவ்வாய், 12 ஜூன், 2012

சமூக தீமைகளின் உறைவிடம்...

காவல்துறையின் கட்டுபாட்டுடன் வரிசையில் நின்று வாழ்கையை விலைகொடுத்து வீணாகும் அப்பாவி குடிமகன்கள் 



இஸ்லாம் மனிதனை மனிதனாக வாழ வழி சொல்கிறது... உலகத்தின் எந்தவகையான துயரங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் இஸ்லாத்தில் தீர்வுகள் உண்டு... ஏற்றத்தாழ்வு இல்லாத மனிதகுலத்தை சமைத்திடவே உலக முஸ்லிம்களின் ஒப்பற்ற ஒரே தலைவர் எம்பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் உலகிற்கு அனுப்பபட்டார்கள்... 

ஆம்... இஸ்லாம் உலகத்தின் அழகிய முன்மாதிரி... முஸ்லிம்கள் உலக மக்களுக்கு முன்னோடி... சகிப்புதன்மையும் சகோதரத்துவமும் இங்கிருந்துதான் ஆரம்பம் ஆகிறது... ஒழுக்கம் ஒழுங்குமுறையான குடும்பம் இதுதான் மனிதனை மகத்தானவனாக்கும்... 

இன்றைக்கு முஸ்லிம்களிடையே புரையோடிப் போயிருந்த பல சமூக சீர்கேடுகளை இஸ்லாமிய அமைப்புகள் தொடர் பரப்புரைகள் மூலமாக சீர்படுத்தி இருக்கிறார்கள் என்றால் அது மிகையல்ல... இஸ்லாமியை அமைப்புகள் தர்பியா என்கிற தன்னொழுக்க பயிற்சி முகாம்களின் வாயிலாக தங்களது தொண்டர்களை  சமூகசீர் கேடுகளில் அதாவது வட்டி,வரதட்சணை,மது,சூது, விபச்சாரம் போன்றவற்றில் இருந்து மீட்டிருக்கிறார்கள்... 

ஆனால்... இன்றைக்கும் நாம் செய்யத்தவறிய மிகப்பெரிய ஒரு விசயம் இருக்கிறது... சமூக தீமைகளின் உறைவிடமாக திகழும் மது... இன்றைக்கு பல முஸ்லிம் இளைஞர்களையும் சீரழித்து வருகிறது... பல ஊர்களில் டாஸ்மாக் கடைகளின் அன்றாட வாடிக்கையாளர்களில் அதிகமானோர் முஸ்லிம்கள் என்றால் நமக்கு அதிர்ச்சி ஏற்ப்படாமல் இருக்குமா...? ஒரு சமூக தீமைக்கு எதிர்கால தலைமுறையே பலியாகி வருகிறது அதனை நாம் கண்டும் காணாமல் இருப்பது மிகப்பெரிய குற்றமல்லவா... இப்பெரிய தீமையில் இருந்து முஸ்லிம்களை மீட்பது போலவே மற்ற சமூகத்து இளைஞர்களையும் மீட்க்க வேண்டியது நமது கடமை... 

இந்த உலகின் பல நாடுகளில் தங்களது மக்களின் பின்னடைவுக்கும் குடும்பவியல் சீரழிவிற்க்கும்  காரணமான மதுவை அரசே மக்களுக்கு விநியோகம் செய்கிறது... அதற்க்கு தமிழகமும் விதிவிளக்கல்ல... அரசின் வருவாய்க்கு மக்கள் மடிவது எப்படி நியாயமாகும்... அப்படிப்பட்ட வருவாயை ஏற்ப்படுத்தி அரசு எவருக்கு நன்மை செய்யபோகிறது... ஒரு நாட்டில் கல்விக்கூடங்கள் அதிகரித்தால் கல்வியாளர்கள் அதிகரிப்பார்கள்... அந்நாடு பொருளாதாரத்திலும்  பல்வேறு துறைகளிலும் முன்னேறும் ஆனால் மாறாக சாராயக்கடைகள் வீதிக்கு வீதி திறக்கபட்டால் குடிகாரர்கள்தானே அதிகரிப்பார்கள்... அத்தகையை குடிகாரகளால் நாட்டுக்கு என்ன நன்மை...? 

அண்மையில் அய்யா தமிழருவி மணியன் அவர்களின் தலைமையிலான  காந்திய மக்கள் இயக்கம்   
மது  ஒழிப்பு மாநாடு ஒன்றை சிறப்பாக நடத்தினார்கள்... அரசுக்கு மது ஒழிப்பால் ஏற்ப்படக்கூடிய பொருளாதார இழப்பை சரி செய்வதற்கான விளக்க அறிக்கையையும் சமர்ப்பித்தார்கள்... இவற்றால் மட்டும் இதுபோன்ற மாநாடுகள் மற்றும் பொதுக் கூட்டங்களால் மட்டும் இந்த சமூக தீமையை நாம் ஒழித்துவிட முடியுமா நிச்சயமாக முடியாது... 

அரசு எந்த காலத்திலும் மதுக்கடைகளை முடக்காது... ஆக அரசை இந்த விவகாரத்தில் எவர் ஆட்சியில் இருந்தாலும் மக்களுக்கு ஆதரவான நிலைக்கு வர செய்ய இயலாது... எத்துனை குடும்பங்கள் சீரழிந்து இந்த மதுவால் சின்னாபின்னமாகி போகிறது... குடும்பத்தை வழிநடத்தக்கூடிய குடும்பத்தலைவன் குடிகாரனாக இருந்தால் அந்த குடும்பமே சீரழிகிறதே... இது மிகப்பெரிய கொடுமையல்லவா... 

பல ஊர்களில் பள்ளிகள் வழிபாட்டு தளங்கள் இவற்றுக்கு அருகில் மதுக்கடைகள்... இப்படியான மதுகடைகளை அகற்றி வேறொரு இடத்தில் நிறுவவேண்டும் என்றுதான் நம்மால் போராட்டம் நடத்த முடிகிறது அரசும் அகற்றி வேறு இடத்தில் கடைகளை திறக்கிறது... காரணம் அரசுக்கு மதுகடைகளை மாற்று இடங்களுக்கு கொண்டு செல்வதால் எந்தவிதமான இழப்பும் இல்லை... ஏனெனில் எத்தனை மைல்களுக்கு அப்பால் மதுகடைகள் இருந்தாலும் சென்று வாங்கி அருந்தி மகிழ நமது குடிமகன்கள் தயார்... 

இதனை தடுக்க வேண்டும் அதற்க்கு என்ன வழி...? மக்களை இந்த சமூகதீமை அரக்கனிடம் இருந்து மீட்க்க வேண்டும் அதற்க்கு என்ன வழி...? இந்த பூனைக்கு யார் மணி கட்டுவது? 

ஆம் இதற்க்கு முஸ்லிம்கள் தான் முன்முயற்சி எடுக்க வேண்டும்... இஸ்லாமிய இயக்கங்கள்தான் இதற்க்கான பணிகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்... ஒரு தீமையை நாம் களையெடுக்க வேண்டுமானால் அதற்க்கான ஆணிவேரை முதலில் பிடுங்கி ஏறிய வேண்டும்... மதுக்கடைகளை பொறுத்தவரை யார் அதற்க்கான ஆணிவேர் அப்பாவிகளான அடித்தட்டு மக்கள் அவர்களுக்கு முதலில் இந்த தீமையின் கொடுமையை விளங்க செய்ய வேண்டும்... குடிகாரர்கள் குறைந்துவிட்டால் மதுகடைகள் குறைந்துவிடும்... மதுகடைகள் குறைந்துவிட்டால் அரசு பொருளாதார மீட்ப்பிற்க்கு வேறு வழிகளை தேடியாக வேண்டும் அப்படி மாற்று தளங்கள் உருவாகும் பொது முழுமையாக மதுவிலக்கு அறிமுகமாகும்... 

ஆக எப்படி குடிக்கு அடிமையாகிவிட்டவனை மாற்றுவது... வெறும் பொதுக்கூட்டங்கள்,துண்டு பிரசுரங்கள் பயிற்சி முகாம்கள் இவற்றால் மட்டும் இது சாத்தியமாகாது... மாறாக இப்போது எப்படி ஒவ்வொரு ஊர்களிலும் இஸ்லாமிய அமைப்புகள் தங்களுக்கான பள்ளிவாசல்களை கட்டி தொழுது வருகிறார்களோ... அதேபோல இனி ஒவ்வொரு ஊரிலும் போதைப் புழங்கிகள் மறுவாழ்வு இல்லங்களை திறக்க வேண்டும்... நல்ல சிறப்பான மனோதத்துவ நிபுணர்களை கொண்டு தொடர்ந்து குடிக்கு அடிமையாகி வாழ்க்கையை சூனியமாக்கி கொண்டுள்ள அனைத்து தரப்பினரையும் கண்டறிந்தது அவர்களுக்கு கவுன்சிலிங் என்கிற தன்முனைப்பை தந்தாள் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இழந்த மகிழ்ச்சியை மீண்டும் பெரும்... இந்த மது பெரியவர்களை மட்டுமில்லாது இப்போது மாணவர்களையும் ஏன் இன்னும் சொல்லபோனால் இளம் பெண்களையும் கூட விட்டுவைக்கவில்லை... குடிப்பது என்பது இப்போது ஒரு "பேஷன்" ஆகிவருகிறது இந்தநிலை நீடித்தால் எதிர்கால தலைமுறை முற்றிலுமாக சீரழிந்துவிடும்... அதனை தடுக்க வேண்டியது அனைவரின் கடமை...

இஸ்லாமிய இயக்கங்கள் இந்த விவகாரத்தை முன்னிலை படுத்தினால் அனைத்துதரப்பு மக்களின் அன்பும் மரியாதையும் கிடைக்கும்... இதுவும் ஒருவகை தாவா தானே...

சமூகதீமைகளின் உறைவிடமான மது அரக்கனை அழிக்க முன்வருவார்களா...? 

எதிர்பார்ப்புடனும்... சமூக பொறுப்புடனும்...
வேங்கை.சு.செ.இப்ராஹீம் 

கருத்துகள் இல்லை: