Subscribe:

திங்கள், 4 ஜூன், 2012

பிறந்த நாள் கொண்டாடும் பெரியவரே...



பிறந்த நாள் கொண்டாடும் பெரியவரே...நீர் 
பிறந்தது ஏனோ எங்களுக்கு புரியலையே... 

காலம்போன காலத்துல சக்கரவண்டி உபயோகத்துல...
கோலாகல கொண்டாட்டம் தேவைதானா...

தமிழனுக்கு டிவி கொடுத்து ஒத்தரூபாய்க்கு அரிசிகொடுத்து
தானமா நிலம்கொடுத்து அட ஓசியில வீடும் கட்டிகொடுத்து...

ஓட்டுவாங்க முடியலையே பெரியவரே... அதன்
உள்ளர்த்தம் உணர்ந்தீறா பெரியவரே...

தாய்மொழிக்கு செம்மொழியாய் பெருமை சேர்த்து
கனிமொழியையும் கவிதைபாட வச்சு பெருமைப்பட்டு...

கருஞ்சட்டை பெரியாரின் கைபிடித்து காஞ்சியாரை அப்படியே காப்பியடித்து
எம்ஜிஆரை கழகத்தைவிட்டு கழட்டிவிட்டு... ஏமாளி தொண்டனை வயிற்றில் அடித்துவிட்டு...

கட்டுமரமாய் நானிருப்பேன் என கதைவிட்டு...
நட்டநடு ரோட்டில் தமிழனை நிறுத்திவிட்டு...

ஒய்யாரமாய் கோட்டையிலே இன்னும் கொடிநாட்டலாம்
மன்பால் குடித்த மஞ்சள் துண்டு முனிவரே...

தொப்புள்கொடி உறவெல்லாம் தூரத்திலே துடிதுடித்து மாண்டபோது பெரியவரே...
மயக்கதிலா நீர் இருந்தீர் பெரியவரே... மகளை சிறைக்கதவு மூடியதும்

துடித்து கண்ணீர் வடித்த பெரியவரே... நடித்து மக்களை ஏமாற்றிய கலைஞரே...
மத்திய சிறைகளில் உம்மால் இடஒதுக்கீடு பெற்ற என் சகோதரனை என்றாவது-

எண்ணியதுண்டா பெரியவரே... அவர்களின் துன்பம் இன்று உம்மை சுட்டெரிக்கிறதே
சுயமரியாதை இழந்துவிட்டு அரைவேக்காடாய் ஆகிவிட்ட பெரியவரே...

இன்னும் எத்துனை ஆண்டுகள் வேண்டுமானாலும் வாழுங்கள் பெரியவரே...
ஆனால் இனியொருமுறை தமிழனாய் மட்டும் பிறககாதீர் பெரியவரே...

தமிழர்களின் மனசாட்சியாய்...
வேங்கை.சு.செ.இப்ராஹீம்

கருத்துகள் இல்லை: