Subscribe:

திங்கள், 28 மார்ச், 2011

இளையான்குடி டைம் டிரஸ்டின் வட்டியில்லா அழகிய கடன் திட்டம்...


கந்து வட்டி கொடுமையிலிருந்து இளையான்குடி மக்களை, குறிப்பாக பெண்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற நல்ல நோக்கில், டிரஸ்டின் நிறுவனர் அல்ஹாஜ் முசாபர் அப்துல் ரஹ்மான் அவர்களின் பெரும் முயற்சியால் கீழக்கரை சீனாதானா அறக்கட்டளையின் உதவியுடன் தொடங்கப்பட்டதே ‘டைம் டிரஸ்டின் அழகிய கடன் திட்டம்’. இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து இதன் பொறுப்பாளர்களாக இருந்து செயல்படும் கல்லூரிப் பேராசிரியர் டாக்டர் எம்.இ. செய்யது உசேன் மற்றும் இளையான்குடி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜனாப் ஏ.இ. ஜான் முகம்மது அவர்களும் இது பற்றி கூறியதாவது:


கடந்த 2010 ஆண்டு நவம்பர் 27 ம் தேதி டைம் டிரஸ்டால் தொடங்கப்பட்ட அழகிய கடன் திட்டத்தின் மூலம் முதல் முறையாக 28 ஏழை எளியவர்களுக்கு ரூபாய் 5000 (ஐந்து ஆயிரம்) வீதம் கடன் வழங்கப்பட்டது. கடந்த 15.03.2011 அன்று நடந்த விழாவில் கீழக்கரை கொடை வள்ளல் அல்ஹாஜ் சீனாதானா எனும் செய்யது அப்துல் காதர் அவர்கள் கலந்து கொண்டு 12 ஏழை எளியவர்களுக்கு ரூபாய் 5000 வீதம் கடனை வழங்கினார்.


இதுவரை டைம் டிரஸ்டால் மொத்தம் 40 ஏழை எளியவர்களுக்கு அழகிய கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 31 பேர் பெண்கள் மற்றும் 9 பேர் ஆண்கள். பெண்களில் பலர் கந்து வட்டிகாரரிடம் பணம் கடன் வாங்கி தினந்தோறும் வட்டி கட்டி வருபவர்களாக இருந்தார்கள். டைம் டிரஸ்டின் மூலம் அழகிய கடன் பெற்று கந்து வட்டியிலிருந்து மீண்டுள்ளார்கள்.கடன் பெற்றவர்கள் மாதம் ரூபாய் 500 வீதம் 10 மாதங்களில் தங்கள் கடனைத் திரும்ப செலுத்திவிட வெண்டும். அவ்வாறு முறையாக செலுத்தியவர்களுக்கு கூடுதலாக கடன் வழங்கப்படும்.


மேலும், டிரஸ்ட் மூலம் கடன் பெற்றவர்கள் முறையாக தவறாமல் பணத்தைத் திரும்ப செலுத்தி வருகின்றார்கள்;. இந்த முயற்சி நல்ல ஒரு தொடக்கமாகும். இன்ஷா அல்லாஹ் இத்திட்டத்தை முறைப்படுத்தி, சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு கொண்டுவரவும், இன்னும் சிறப்பான முறையில் விரிவு படுத்தவும் வேண்டிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். , டைம் டிரஸ்டின் அழகிய கடன் திட்டத்தின் பொறுப்பாளர்களாகிய டாக்டர் செய்யது உசேன் மற்றும் ஜான் முஹம்மது ஆகியோர் கூறினார்.


நன்றி;இளையான்குடி சர்கிள் இணையம்

கருத்துகள் இல்லை: