Subscribe:

புதன், 9 மார்ச், 2011

மரண அறிவிப்பு


 
 
ஆதாரம்: திர்மிதீ, ரியாளுஸ்ஸாலின்: 514
--
ஒருவர் வபாத்தாகி (மரணம்) விட்டதாக வைத்துக் கொள்ளுங்கள். அவரது ஜனாஸா பற்றி புகழ்ந்தே பேசுங்கள். இறந்தவர் நல்லவரோ இல்லையோ அவர் வாழ்ந்த காலத்தில் செய்த நன்மைகளைப் பற்றி மட்டுமே பேசுங்கள். எவ்வளவு கெட்டவராக இருந்தாலும், அவர் தன் வாழ்வில் நான்கு நன்மையாவது செய்திருப்பார். அதைப் பற்றி மட்டும் பேசுங்கள...். ஒருவேளை அவர் செய்த நன்மைகள் எதுவும் உங்களுக்குத் தெரியாமல்,  தீமைகள் மட்டுமே தெரிந்திருந்தால் அதுபற்றி நீங்கள் பேசவே வேண்டாம். ஏன் தெரியுமா? நபிகள் நாயகத்தின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தைக் கேளுங்கள்.
ஒருமுறை நபிகள் நாயகத்தின் தோழர்கள் சிலர் இறந்து போன ஒருவர் வீட்டில் அமர்ந்து அவரைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அந்நேரத்தில் அங்கு வந்த நாயகம், அவருக்கு சுவனம் (சொர்க்கம்) கட்டாயமாகி விட்டது. நீங்கள் யாரை சொர்க்கத்திற்கு தகுதியானவர் எனக் கூறுகிறீர்களோ, அவரை அல்லாஹ் சொர்க்கத்திற்கு அனுப்பி விடுகிறான். யாரை நரகத்திற்கு தகுதியானவர் எனக் கூறுகிறீர்களோ, அவரை நரகத்திற்கு அனுப்பி விடுவான், என்றார். வாழ்ந்த போது கெட்டவராக வாழ்ந்த ஒருவர், இறப்பிற்கு பின்னாவது நற்கதி பெறட்டுமே என்ற எண்ணம் நமக்கு வர வேண்டும் என்ற அர்த்தத்திலேயே நாயகம் அப்படி சொன்னார். இறந்தவர் நமக்கு வேண்டியவராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் இறப்பிற்கு பிறகாவது அவர் சொர்க்கம்செல்லட்டும் என்ற உணர்வு நமக்கு வர வேண்டும்

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்(03:185)


எந்த ஆன்மாவும் (முன்னரே) ...எழுதப்பட்டிருக்கும் தவணைக்கு இணங்க, அல்லாஹ்வின் அனுமதியின்றி, மரணிப்பதில்லை.(03:145)


நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே.(04:178)


உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம்; எனவே நம்மை எவரும் மிகைக்க முடியாது(56:60)
32:11.


"உங்கள் மீது நியமிக்கப்பட்டிருக்கும், "மலக்குல் மவ்து" தாம் உங்கள் உயிரைக் கைப்பற்றுவார் - பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் மீள்விக்கப்படுவீர்கள்" என்று (நபியே!) நீர் கூறும்.(32:11)


உங்களில் ஒருவருக்கு மரணம் வந்துவிடுமானால், நம் அமரர்கள் அவர் ஆத்மாவை எடுத்துக் கொள்கிறார்கள் - அவர்கள் (தம் கடமையில்) தவறுவதில்லை(06:61)





கருத்துகள் இல்லை: