Subscribe:

புதன், 16 பிப்ரவரி, 2011

சனநாயகம் வென்றது... சர்வாதிகாரம் வீழ்ந்தது...


நாகரீகத்தை நானிலதிர்க்கு
கற்றுத்தந்த
நைல் சமவெளியில்
இன்று
புரட்சி பூபாளத்தின் எழுச்சி நீரூற்று...

அடக்கியாண்ட ஆணவம்
அடங்கிப்போனது...
அரக்கத்தனத்தின் அகம்பாவம்
அலறி ஓடியது...

தஹ்ரீர் சதுக்கத்தில் எழும்பிய
போராளி மக்களின் முழக்கம்
சர்வாதிகாரத்தை
வேரோடு வீழ்த்தியது...


அல்லாஹு அக்பர்...அல்லாஹு அக்பர்...
எகிப்திய வீதிகளில்
மக்களின் எழுச்சி முழக்கம்...
அரபகத்தின் எதிரிகளுக்கு-இனி
என்றும் இல்லை உறக்கம்...

சர்வாதிகாரம் வாழ்ந்ததாய்
சரித்திரம் இல்லை
அதனை மீண்டும் எழுதிக்காட்டி
உலக பயங்கரவாததிற்கு
எச்சரிக்கை மணியடித்த
எகிப்திய மக்களுக்கு
எழுச்சிகரமான வாழ்த்துக்கள்...

இன்ஷாஅல்லாஹ்
இஹ்வான்களின் இனிய கட்டமைப்பில்
இனி வரும் விடியல்கள்
எகிப்திய மக்களுக்கு
வெளிச்சத்தை தரட்டும்...

கருத்துகள் இல்லை: