Subscribe:

திங்கள், 24 ஜனவரி, 2011

ஜனவரி 28 ஆயக்குடி அதிரட்டும்...



ஜனவரி 28 சமுதாயதந்தை ஷஹீத் பழனிபாபா
அவர்கள் ஷஹீதான நாள்...
இந்நாளை ஒவ்வொரு ஆண்டும்
வஞ்சிக்கப்பட்ட சமூக மக்களின் அரசியல் எழுச்சி நாளாக
நடைமுறைபடுத்தி வருகிறது சகோதரர் கே.எம்.சரீப் அவர்கள்
தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி.
இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் ஜனவரி 28 அன்று
மக்கள் ஜனநாயக கட்சி ஷஹீத் பழனிபாபா அவர்களின்
நினைவேந்தல் நிகழ்ச்சியை வெகு விமர்சையாக ஏற்பாடு
செய்து வருகிறது.
வஞ்சிக்கப்பட்ட சமூக மக்களின் அரசியல் எழுச்சி நாளாக
கடைபிடிக்கப்படும் இந்நாளில் சிந்தனையை தூண்டும்
இரண்டு நூல்களையும் மக்கள் ஜனநாயக கட்சி வெளியிடுகிறது.

இந்நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
தோழர் சீமான் அவர்களும் பாபுலர் பிரண்ட் ஆப் இந்தியாவின்
அகில இந்திய துணைத்தலைவர் சகோதரர் முஹம்மது அலி ஜின்னா
ஆகியோர் உட்பட பல்வேறு சமுதாயங்களை சார்ந்த பிரபல தலைவர்கள்
கலந்துகொண்டு சிறப்புரையாற்ற இருக்கிறார்கள்...

நிகழ்விற்கு ஷஹீத் பழனிபாபா அவர்களின் தாய்மாமாவும்
மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில துணைத்தலைவருமான பெரியவர்
அப்துல் ரஹ்மான் (எ) சின்னதம்பி ராவுத்தர் அவர்கள்
தலைமை ஏற்கிறார்கள்.

கடந்த ஏழாண்டு காலமாக பெரும் சிரத்தைஎடுத்து பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் அரசியல் கெடுபிடிகளுக்கு மத்தியில்
பல விமர்சனகளுக்கு மத்தியில் மனம் தளராமல் தொடர்ந்து
ஷஹீத் பழனிபாபா அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியை
வஞ்சிக்கப்பட்ட சமூக மக்களின் அரசியல் எழுச்சி நாளாக நடதிவருவதன் மூலமாக அனைத்துதரப்பு மக்கள் மத்தியிலும் தலைவர் ஷஹீத் பழனிபாபா
அவர்களின் புரட்சிகரமான சிந்தனைகளை விதைத்துவரும்
மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் சகோதரர் கே.எம்.சரீப் அவர்கள் நிறைவுரையாற்றுகிறார்.

சமுதாய சொந்தங்களே ஷஹீத் பழனிபாபா தனது வாழ்நாள் முழுவதையும்
சமுதாயத்திற்காக அர்ப்பணித்து பல்வேறு அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல்
இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு மட்டுமின்றி ஏனைய ஒடுக்கப்பட்ட குறிப்பாக தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்காகவும் சுமார் 238 சிறை சென்றவர்.
3 தேச பாதுகாப்பு சட்டம், 1 தடா சட்டமென பாய்ந்துவந்த பயங்கரவாத தடை சட்டங்களை தனது அறிவுகூர்மையால் உடைதெறிந்தவர்.

இன்றைய சமுதாய இளையர்களுக்கு அவரின் வீரியமிக்க சமுதாய செயல்களை கற்றுகொடுக்க வேண்டியது அவசியம்.அதற்காகவே இந்நிகழ்வு நடத்தபடுகிறது.இதில் அரசியல் இயக்கம் பாகுபாடில்லாமல் அனைவரும் பெரும் திரளாக கலந்துகொண்டு பாபா அவர்களின் சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுக்க இன்ஷாஅல்லாஹ் தயாராவோம் ஜனவரி 28 புதுஆயக்குடி நோக்கி புறப்படுவோம்...


( நிகழ்ச்சி பற்றிய மேல் விபரங்களுக்கு மக்கள் ஜனநாயக கட்சியின் கொள்கைபரப்பு செயலாளர் சகோதரர் A.K.N.ஷாஜஹான் அவர்களை 9865063734 என்கிற அலைபேசியில் தொடர்புகொள்ளலாம்)
ஆயக்குடி அதிரட்டும்... திண்டுக்கல் மாவட்டம் தினரட்டும்...
நன்றி;mjktn.blogspot.com

கருத்துகள் இல்லை: