Subscribe:

செவ்வாய், 25 ஜனவரி, 2011

கரும்புலியே கவலை இல்லாமல் கண்ணுறங்கு...


முத்துகுமரா-நீ
தமிழனின் வீரம்...தமிழினத்தின் மானம்...
தமிழீழத்தின் வானம்...என்றும்
தமிழனின் மனம் மறக்குமா உன் தியாகம்...

இதயம் இரும்பாலானோரை இளகவைக்க
உன்னையே நீ நெருப்பு பிழம்பாக்கினாய்...
கருகிய உன் உடலை காணவைத்து
எங்களை ரணமாக்கினாய்...

கண்முன்னே நம்மினம் கருவருக்கபட்டது கண்டு
கைபிசைந்து நின்ற எங்களை இதயம் பிசைய வைத்தவனே...
உணர்வு ஊனமுற்ற தமிழனையும்
எழுந்து நடக்க வைத்தவனே...

உன் உடலைத்தான் நாங்கள் இழந்திருக்கிறோம்
உன் உணர்வுகளை கனவுகளை லட்சியங்களை
லட்சக்கணக்கான முத்துகுமார்கள் ஏந்திநிற்கிறார்கள்...
லட்சிய முழக்கத்துடன் சேர்ந்திருக்கிறார்கள்...

முள்வேலி முகாமினிலே நம் தாய்
உணவில்லாமல் தவிக்கிறாள்...நம்
சகோதரி அழுதிடும் குழந்தைக்கு பால் இல்லாமல் தவிக்கிறாள்...
கவலைதோய்ந்த நம் சகோதரன் இயலாமையால் தவிக்கிறான்...


ஆட்டம்போடும் சிங்கள கூட்டத்திற்கு-நம்
சிங்ககூட்டம் அடிகொடுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை
நாம் இழந்தது யுத்ததைதானே தவிர களத்தை இல்லை...
நிச்சயம் தமிழினம் வெல்லும்... தமிழ்ழீழம் மலரும்...
கரும்புலியே நீ கவலை இல்லாமல் கண்ணுறங்கு...
சிறுத்தைகளின் தலைவனிங்கே சிம்மசொப்பணமாய் சிங்களவனுக்கு
சீக்கிரம் விடியல் பிறக்கும் ஈழத்தில் தமிழன் கொடிபறக்கும்...
கரும்புலியே நீ கவலை இல்லாமல் கண்ணுறங்கு...

கருத்துகள் இல்லை: