Subscribe:

செவ்வாய், 18 ஜனவரி, 2011

தலைவா நீ ஒரு சகாப்தம்...


பழனிபாபா
உன்
பெயரை சொன்னாலே
எங்கள்
உதடுகளில் ஒட்டியுள்ள
உமிழ்நீரும் அனல் கக்கும்...
உணர்வற்றவனுக்கும்
உன்
பெச்சுகேட்டால் உயிர் துடிக்கும்...
வீரத்திற்கும் வீரம் கற்றுத்தந்த
விளைநிலம் நீ...
அடக்குமுறைகளையும் அடக்கிஆண்ட
மாவீரன் நீ...
அமைப்பாய் இல்லை அணிவகுக்க
படைகளும் இல்லை...
ஆனாலும் நீ
சாதித்தாய் எங்களுக்கு
ஜனநாயகத்தை போதித்தாய்...
சமுதாயத்தையே குடும்பமாக்கி
வாழ்ந்தவன் நீ...
சிறைகளை சிரித்த முகத்துடன்
வரவேற்றவன் நீ...
நீ நடத்திய பொதுக்கூட்டமெல்லாம்
எங்களுக்கு
பள்ளி பாடங்கள்...
தனிமனித ஆளுமையே
உன்
சிரம் இறைவனுக்கு தவிர
எவனுக்கும் தாழ்ந்தது இல்லை
நீ
எங்கள் தலைமுறைக்கான
வரலாறு...
ஆகையினால்தான்
மீண்டும் மீண்டும் உன்னை
வாசிக்கிறோம்...
உன்னைபோலவே
ஷஹீதை நேசிக்கிறோம்...
நீ
விதைத்து சென்ற விதைகள்
இன்ஷாஅல்லாஹ் முளைக்கும்
விருட்சமாய்...
என்றுமே
நீ
வாழ்வாய் எங்கள் மனங்களில்
சகாப்தமாய்....
என்றும் நீ கற்றுத்தந்த சமுதாய பாதையில்...
வேங்கை.சு.செ.இப்ராஹீம்

கருத்துகள் இல்லை: