Subscribe:

புதன், 5 ஜனவரி, 2011

ஜனவரி 28 வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களின் அரசியல் எழுச்சி ந...



ஜனவரி 28
தனிமனித ராணுவமாய்... வீரத்தின் விளைநிலமாய்... பாசிஸ்ட்டுகளின் சிம்ம சொப்பனமாய்...
வாழும் வரை மாவீரனாக வாழ்ந்து உறங்கி கிடந்த சமூகத்திற்கு உணர்வூட்டிய சமுதாய தந்தை ஷஹீத் பழனிபாபா அவர்கள் படுகொலை செய்யப்பட்ட நாள்...


Palani Baba
சமுதாயதந்தை ஷஹீத் பழனிபாபா அவர்களுடன்
தலைவர் கே.எம்.சரீப்
பழனிபாபா மறக்கபடகூடிய பெயரா..? நாம் வாழும் இந்த சமகாலத்தில் வாழ்ந்த தன்னிகரற்ற மாபெரும் தலைவர் பழனிபாபா... அந்த மாவீரனைi

மண்ணோடு மண்ணாக்கிவிட்டால் இந்த முஸ்லிம் சமுதாயத்தை
மண்டியிட வைத்துவிடலாம் என்று மனப்பால் குடித்த கயவர்கள்
கோடாலியால் குடலை கிழித்து கொலை செய்தார்கள்...

சாவை தன் சட்டைப்பைக்குள் வைத்துகொண்டு நடமாடிய எங்கள்
தலைவன் ஒரு காபீரின் கைகளால் நான் வெட்டுப்பட்டு சாகக்கூடிய
வாய்ப்பை எனக்கு தா என்று ஏக இறையவனிடம் கையேந்தி துஆ செய்தவர்...
அல்லாஹ் அவரின் துஆவை அங்கீகரித்து தனது அர்ஷின் நிழலில் இடம் கொடுத்துள்ளான்.

தலைவர் பாபா அடிக்கடி பல மேடைகளில் சொல்வார் என் கதையை முடித்துவிட்டால்
எனது சமுதாயத்தை வேரறுத்துவிடலாம் என் எண்ணிகொண்டிருக்கும் எத்தர்களே
ஒரு பழனிபாபாவை மட்டுமே அதுவும் என் இறைவன் நாடினால் வெட்டி சாய்க்கமுடியும்...
ஆனால் நான் புதைக்கப்படும் இடத்திலிருந்து ஓராயிரம் பழனிபாபாக்களை என் அல்லாஹு
முளைத்து எழச்செய்வான்...

ஆம் அந்த மாபெரும் தலைவனை அடுத்த தலைமுறைக்கும் அறிமுகபடுத்த வேண்டும்
என்கிற நோக்கோடு தலைவர் ஷஹீத் பழனிபாபா அவர்களின் லட்சியங்களை வென்றெடுக்க
உரிமைகள் மறுக்கபட்ட ஆண்ட சமுதாயத்தின் அடிமை விலங்கை உடைக்க... நமது தொப்புள்கொடி
உறவுகளான தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் பூரண விடுதலையை சுவைக்கசெய்ய புறப்பட்டிருக்கும்
ஜனநாயக ஆயுதம் "மக்கள் ஜனநாயக கட்சி" ஆண்டு தோறும் ஜனவரி 28ம் தேதியை
வஞ்சிக்கப்பட்ட சமூக மக்களின் அரசியல் எழுச்சி நாளாக நடைமுறை படுத்திவருகிறது.

ஷஹீத் பழனிபாபா அவர்கள் விதைககபட்டுள்ள புதுஆயக்குடியில் மக்கள் பிரளயம்
சங்கமிக்க வேண்டும்.
வஞ்சிக்கப்பட்டோர் வாழவேண்டும்... வாய்ப்பு மறுக்கப்பட்டோர் ஆழவேண்டும்...
என்கிற அடங்க மறுக்கும் ஆர்பரிப்பு உணர்வோடு அலைகடலும் வெட்கி தலைகுனியும்
வண்ணமாக மக்களின் ஆழிப்பேரலை ஆயக்குடியை சூழ வேண்டும் ஆட்சியாளர்களின்
அடிமனதுவரை உரிமை மறுக்கப்பட்ட சமூகங்கள் ஒன்றினைந்துவிட்டது கிலியை ஏற்படுத்த வேண்டும்...

ஆகவே சமுதாய மக்களே... சகோதர சமுதாய மக்களே... நாம் இணைய வேண்டும்
ஒன்றிணைந்து உரிமைகளை வெல்ல வேண்டுமென லட்சிய முழக்கங்களை தனது
வாழ் நாளெல்லாம் முழங்கிவந்த தலைவர் பழனிபாபா எனும் வீரம் விதைககபட்டுள்ள
வீரத்தின் விளைநிலமாம் பழனி புதுஆயக்குடி நோக்கி அணிவகுக்க தயாராகுங்கள்...

எல்லா எழுச்சிகரமான செயல்களுக்கும் பொருளாதாரம் ஒன்றே மிகப் பெரிய பின்னடைவு
வாகனங்களின் வாடகை பெட்ரோல் டீசல் விலை உயர்வால் விண்ணை முட்டுகிறது...
எத்தனையோ கட்சிகளின் பொதுகூட்டங்களுக்கு மாநாடுகளுக்கு வாரி வழங்கிடும் நீங்கள்
அடுத்த தலைமுறைக்கான தொலைநோக்கு வெற்றியை அடிபடையாககொண்டு நடத்தப்படும்
"வஞ்சிக்கப்பட்ட சமூக மக்களின் அரசியல் எழுச்சி நாள்" வெற்றிபெற உங்கள் கரங்களின்
உதவியை கருணையோடு நீளசெயுங்கள்...

உங்கள் உதவிகளை உங்கள் பங்களிப்பை
MAKKAL JANANAYAGA KATCHI - A/C. No. 388901010023108,
UNION BANK OF INDIA,
PUDUKKOTTAI, TAMILNADU 622001.
என்கிற வங்கி கணக்கிற்க்கோ அல்லது
K.M.SHARIFF
A/C No. 611401500433,
ICICI BANK LTD,
PUDUKKOTTAI 622001 TAMILNADU.
என்கிற வங்கி கணக்கிற்க்கோ அனுப்பி தாருங்கள் என அன்புடன் கேட்டுகொள்கிறது
மக்கள் ஜனநாயக கட்சி

"என் சமூக மக்களே ஒரு வேலை நான் மரணித்துவிட்டால் உங்களுடன்
நான் இல்லையென கலங்காதீர்கள்.... கவலை கொள்ளாதீர்கள் உங்களோடு
என்றுமே அல்லாஹு ரப்புலாலமீன் இருப்பான்" ஷஹீத் பழனிபாபா

எல்லோருக்கும் பொதுவான இறையவன் நாடினால்.. எழுச்சிகரமான ஜனவரி 28ல்
ஆயக்குடியில் சந்த்திப்போம்... உரிமையுடன் அழைக்கிறது...
மக்கள் ஜனநாயக கட்சி

கருத்துகள் இல்லை: